தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
குரானில் உள்ள மிகப் பெரிய ஓட்டை Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

குரானில் உள்ள மிகப் பெரிய ஓட்டை Empty குரானில் உள்ள மிகப் பெரிய ஓட்டை

Wed Dec 16, 2015 12:19 am
இயேசு கிறிஸ்து தன்னைத் தானே மேசியா என்று அறிமுகப்படுத்தவில்லை, அப்படிப்பட்ட அறிமுகத்தை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாதே, 

இஸ்ரவேல் மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட யோவான்ஸ்நானகன் முதன் முதலாக இயேசுவை மேசியாவாக உலகுக்கு அறிமுகம் செய்கிறார். அதுமாத்திரமல்ல இயேசு முழுக்காட்டப்படும் போது வானத்திலிருந்து தேவன் , எல்லா மக்களுக்கும் முன்பாக சத்தத்தை தொனிக்கப்பண்ணி இயேசுவை அறிமுகம் செய்கிறார், ஆக இது ஒரு மூலையில் நடந்த காரியமல்ல.

ஆதாரம் இதோடுகூட நிற்க வில்லை, இயேசுவின் சீஷர்கள் மூன்று பேர் மறுரூபமலையில் இயேசு வோடு இருக்கும் போது, பழைய ஏற்பாட்டில் வாழ்ந்த மோசேவும்,எலியாவும் எல்லோருக்கும் முன்பாக தோன்றி வரப்பொகிற மேசியா இயேசுவே என்பதை அங்கீகரிக்கும் வண்ணமும், அதே நேரத்தில் வானத்தில் இருந்து வந்த தேவனின் வார்த்தையும் இதை மீண்டும் ஒரு முறை அங்கீகரித்தது…. நமக்கு எவ்வளவு நிச்சயத்தைத் தருகிறது.

அதோடு கிறிஸ்துவின் அற்புதங்களும், அடையாளங்களும் அவரை மேசியா என்பதை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்களே…. 

இவ்வளவு ஆதாரங்கள் இருந்தாலும் இது மாத்திரமே போதுமானதல்ல என்பதை தேவன் அறிந்திருந்தார். அதனால் தான் தான் முன்னமே இயேசுவை அனுப்புவேன் என்று பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் முன்னக்கூடியே தீர்க்கதரிசனமாக உரைத்திருந்தார். ஆக இந்த தீர்க்க தரிசனத்தின் நிறைவேறுதலாக இயேசுவின் வாழ்க்கை இருந்தது.
அவரின் பிறப்பு, வளர்ப்பு, போதனை, மரணம் எல்லாம் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டிருந்தது….
கிறிஸ்துவின் வார்த்தைக்கு மக்கள் செவிகொடுக்கவே இவ்வளவு ஆதாரங்களை தேவன் கொடுத்திருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது…

இவ்வளவு ஆதாரங்களும் இருந்தாலும் சிலர் இயேசுவை நம்பவில்லை உண்மைதான்… ஆனால் அவர்கள் தாங்கள் நம்பாததற்கு எந்த காரணத்தையும் சொல்லமுடியாதபடி தேவனின் ஆதாரம் தெளிவாயுள்ளது…. யாரும் போக்கு சொல்ல முடியாது…… இப்பொழுது அவர்கள் கணக்குக்கொடுத்தாகவேண்டும்.

குர்ஆன் என்பது மற்ற வேதங்களெல்லாம் அழிந்து போனதால் கடைசியாகக் கொடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. 

இது உண்மையானால், 

இதற்கு முன் கொடுக்கப்பட்ட வேதத்தில் அல்லா, முகமது என்பவர் வரப்போகிறதை முன்கூட்டியே அறிவித்திருக்கிறாரா? அப்படியே அறிவித்தாலும் முகமது காலத்திற்கு முன்பதாக வாழ்ந்தவர்கள் அந்த தீர்க்கதரிசனத்திற்காக காத்திருந்தார்களா?

முகமது வந்தவுடன் முன் சொல்லப்பட்ட வார்த்தையின் நிறைவேறுதலாய் முகமதுவைப் பார்த்தார்களா? ஏனென்றால் இறைவனின் கடைசி தூதர் என்றால் அவர் முன்னமே அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இது சாதாரண மற்ற இறைதூதரை அனுப்புவது போல் அல்ல இது தானே கடைசி தூதர் என்று குர்ஆன் சொல்லுகிறது….. 

குறைந்தபட்சம் குர்ஆன் தான் கடைசி ஏற்பாடு என்பதையாவது முன்கூட்டியே அறிவித்திருக்கிறாரா அல்லா? அதுவும் இல்லை…..

எதற்கும் ஆதாரமே இல்லை…. ஆனால் ஒரு சிலர், சமீபத்தில் கிடைத்த சவக்கடல் சுருளையும், நாம் பயன்படுத்தும் பைபிள் வைத்தும், அதில் முகமதுவைக் குறித்துப் போடப்பட்டிருக்கிறது என்று சாதிக்கிறார்கள்…… இது உண்மையில்லை, 

ஆனால் கேள்வி என்ன வென்றால், முகமதுவுக்கு முன் காலத்தில் வாழ்ந்தவர்கள், தங்கள் வாயாலே, “இறைத்தூதர்களைக் குறித்து எங்கள் முன்னோர்கள் எந்த வார்த்தையையும், முன்னறிவிப்பையும் கூறவில்லை” என்று வெளிப்படையாகவே அறிக்கை செய்தனரே….(23:24) இதற்கு என்ன பதில் ….

அவர்கள் தானே இறைதூதரை ஏற்றுக்கொள்ள வேண்டும், அவர்களே எங்கள் முன்னோர்களின் வார்த்தையில் இறைதூதரைக் குறித்து எதும் சொல்லப்படவில்லை என்று சொன்னதற்கு, அந்த இறைதூதரோ, முகமதுவோ அல்லாவோ எந்த வசனத்தையும் சுட்டிக்காண்பிக்கவில்லையே…., ஆக எந்த் இறைதூதன் வந்தாலும் அது முன்னோர்களால் அறிவிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதை இந்த வசனங்கள் மூலம் தெளிவுபட அறியலாம்,,,,

முகமதுவைக் குறித்த எந்த தீர்க்க்தரிசனமும் அல்லா முன்னமே கொடுக்கவில்லை, ஒரு உதாரணத்திற்கு அவர் கொடுத்ததாகவே வைத்துக்கொண்டாலும் அவைகள் அழிந்து விட்டன என்று அல்லாவே சொல்லுகிறார், 

ஆக அழிந்து போகப்போகிற வேதத்தில் முகமதுவைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தால் அன்று வாழ்ந்தவர்களுக்கு முகமதுவை ஏற்றுக்கொள்ள எந்த ஆதாரமும் இல்லையே, 

இப்படி பல குழப்பங்களுக்கு பதிலே இல்ல…….

வேதம் எதைச்சொன்னாலும் ஆதாரத்துடன் சொல்லுகிறது…. அன்று வேத்த்தைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு முன்பாக தெளிவான ஆதாரத்தை தேவன் கொடுத்திருந்தார்………

எல்லாவற்றையும் சோதித்து நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்……..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

குரானில் உள்ள மிகப் பெரிய ஓட்டை Empty Re: குரானில் உள்ள மிகப் பெரிய ஓட்டை

Wed Dec 16, 2015 12:19 am
உலகத்தில் என்ன தான் எத்தனையோ மதங்கள் இருந்தாலும், இன்னமும் தேவன் உண்மையில் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் மக்களிடையே இருப்பதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.
ஆக தேவன் தன்னைக் குறித்தும், தன்னுடைய திட்டங்களையும் குறித்து வெளிப்படுத்த வேண்டுமென்றால், அதை மனிதர்கள் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் அதிகாரப்பூர்வமானதாகவும், உறுதிப்படுத்தப்பட்டவண்ணமும் இருக்க வேண்டும். 

இதன் அடிப்படையில் கர்த்தர் தன்னுடைய வெளிப்பாட்டை ஒரு மூலையில் எல்லோரும் சந்தேகப்படும்படியாக மோசேக்கு கொடுக்ககவில்லை. 
எல்லோரும் பார்க்கும் வண்ணம் தேவனே மோசேயோடு பேசினார். 

9. "அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்றார். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தருக்குச் சொன்னான்.

19. எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்". (யாத் 19)

"மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்”. (யாத் 20:19)

தேவன் மோசேயுடனும், மக்களுடனும் பேசினார், ..
என்ன ஒரு அற்புதமான சாட்சி....

குர்ஆனில், மக்கள் முகமதுவிடம் “ஜிப்ரியேல் தூதனை(வானவரை) எங்களோடு பேசச் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டனர்… ஏனென்றால் அவர்களுக்கு பலத்த சந்தேகம், அதனால் தான் அதை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்பினர். ஆனால் எந்த ஆதாரத்தையும் முகமதுவால் கொடுக்க முடியவில்லை அதற்கு பதிலாக, “நீங்கள் அழிந்து போவீர்கள்” என்று மிரட்ட ஆரம்பித்தார்.

இதே காரியத்தை யெகோவா தேவன் சரியாக அணுகுவதை வேதத்தில் பார்க்க முடியும், எங்கே மக்கள் சந்தேகப்படக்கூடாதே என்று முன்னமே மோசேயோடு நேரிடையாகவே மக்கள் முன் பேசினார். 

" 22. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்திலிருந்து உங்களோடே பேசினேன் என்று கண்டீர்கள்.
23. நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்…."

தேவன் ஆதாரப்பூர்வமாக தன்னையும், மோசேயையும் நிரூபித்த பின் தன்னுடைய கட்டளைகளை மக்களுக்கு தர ஆரம்பித்தார், இனி அவர்கள் போக்குச் சொல்ல இடமில்லை……

இப்படியாக தேவன் தன்னுடைய வேதத்தை சாட்சியாக கொடுத்தார்.

தேவன் எதையும் சாட்சியோடு சொல்லுகிறார், செய்கிறார் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

இத்தனை பேர் முன்பாக தெளிவாக தேவன் மோசேயிடம் பேசியிருக்கிறார், 

ஆனால் அல்லா ஏன் ஒரு மறைவில் அதை செய்ய வேண்டும்?

முகமதுவொடு ஜிப்ரியேல் பேசினதற்கு ஆதாரம் வேண்டுமே?

அடுத்த பதிவில், கிறிஸ்து தான் மேசியா எனபதற்கு என்ன அத்தாட்சியை தேவன் கொடுக்கப் போகிறார் என்று பார்ப்போம்? 
தேவன் மக்களிடம் நேரிடையாக பேசினாரா? அல்லது ஒரு மூலையில் யாருக்கும் தெரியாமல் ஒரு இறைதூதனிடம் சொல்லி அனுப்பினாரா? ........... 
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

குரானில் உள்ள மிகப் பெரிய ஓட்டை Empty Re: குரானில் உள்ள மிகப் பெரிய ஓட்டை

Wed Dec 16, 2015 12:20 am
முகமதுவிடம் ஜிப்ரியேல் தூதன் வந்து பேசினார் என்பதற்கு முகமதுவைத் தவிற வேறு எந்த சாட்சியும் இல்லை என்பதை பார்த்தோம். முகமதுவுக்கே தான் “கேட்பது” தேவனுடைய வெளிப்பாடா என்பதை அறியமுடியவில்லை..... ஆக முகமது என்பவர் ஒரு நபி என்பது நிரூபணம் ஆக வில்லை..... 

அநேகர் இந்த வார்த்தையை தவறாக புரிந்து கொண்டு குர்ஆன் இறைவேதம் என்று நிரூபிக்க வார்த்தைகளை இங்கு போடுகிறார்கள், நண்பர்களே இங்கு குர்ஆன் இறைவேதமா என்று பார்ப்பதற்கு முன் முகமது ஒரு நபியா என்பதை சிந்தித்தோம், ஆதாரம் இல்லை.... இறைதூதனாக இல்லாதவர் எப்படிப்பட்ட நன்னெறிக் கொள்கைகளையும், அறநெறிக் கொள்கைகளையும் எழுதிக்கொடுத்தாலும் அது வேதமாகாது,....வேண்டுமானால் அது ஒரு நல்ல புத்தகம் அவ்வளவே.......

அதற்காக குர்ஆனில், முறண்பாடு இல்லை, இலக்கணம் நன்றாக உள்ளது என்று சொன்னால் அது அறியாமையே. 

ஆனால் வேதாகமம் அப்படியில்லை, தேவன் மனுக்குலத்திற்கு ஒரு வெளிப்பாட்டை தரப்போகிறார் என்றால் அவர் எப்படிப்பட்ட ஆயத்தங்களைச் செய்கிறார் என்பதைப் பார்க்க போகிறோம்.

ஒரு வேதத்தை எப்படி மனிதனிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதை தேவன் ஆழகாகவும் 
நேர்த்தியாகவும் செய்திருக்கிறார். 

எப்படி?

1. முதலில் நான் தான் அகில உலகத்தையும் படைத்த ஒரே தேவன் என்று நிரூபித்தார்

2. தான் அனுப்புகிற மனிதன் தன்னுடைய தாசன் தான் என்பதை நிரூபித்தார்.

3. இறைத்தூதன் மூலமாய் நான் கொடுத்தது, 
என்னுடைய வெளிப்பாடே என்பதை நிரூபித்தார்.

மேற்கண்ட 3 காரியங்கள் இல்லாத ஒன்றை நாம் வேதமாக அங்கீகரிக்க வேண்டியதில்லை. இந்த அம்சங்கள் எதுவும் குர்ஆனிலோ வேறு எந்த மத, மார்க்கங்களிலோ கிடையாது, இது வேதாகமத்திற்கு மாத்திரமே பொறுந்தும் தனிச்சிறப்பு.….. விரிவாகப் பார்ப்போம்

தேவன் தன்னை தேவன் என்று நிரூபிக்க வெண்டுமா? இது வித்தியாசமாய் இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாய் நிரூபிக்க வேண்டும், இல்லாவிட்டால் சாத்தான் கூட மக்களிடம் சென்று நானும் தேவன் தான் என்று அறிமுகமாகிவிடுவான். 

இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமைப் பட்டிருந்தது ஒரு விதத்தில் நன்மைக்கே....இதில் தேவசெயல் அடங்கியிருக்கிறதை நாமறிவோம். அதாவது, இஸ்ரவேலர் தேவனை ஏற்றுக்கொள்வதற்காகவும், மற்ற பல ஜாதி மக்கள் ஒரே தேவனாகிய யெகோவாவை விசுவாசிப்பதற்காகவும், இந்த அடிமைத் தனத்தை தேவன் பயன்படுத்திக் கொண்டார். 

அங்கே எல்லா மக்களுக்கும் முன்பாக அற்புதங்களையும், பல வித அடையாளங்களையும் செய்து அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். இந்த சம்பவம் ஒரு மூலையில் நடந்த காரியமல்ல... எகிப்தில் ஒன்று நடந்தால் அது அன்று பரவியிருந்த எல்லா நாடுகளுக்கும் எளிதில் எட்டிவிடும், அன்றைக்கு எகிப்து தான் உலகின் வல்லரசு.

“நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என் அடையாளங்களையும், நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும், உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படிக்கும், “நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படிக்கும்”, நான் அவன் இருதயத்தையும் அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் என்றார்”. (யாத் 10:2) 

நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறிவார்கள் (யாத் 14:18)

இதன் மூலம் யெகோவா ஒரே தேவனே, வானத்தையும் பூயையும் படைத்தவர் என்பதை ஜனங்கள் அறிந்து கொண்டார்கள். இவர்கள் மாத்திரமல்ல எகிப்திலிருந்தவர்களும் தெரிந்து கொண்டார்கள், அதனால் தான் இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு போகும் போது பல எகிப்தியர்களும் இவர்களோடு சென்றனர் (யாத் 13:38). 

மேலும் இந்த அற்புதங்களையும், அடையாளங்களையும் தேவன் தன் தாசன் மோசே மூலமாகவே செய்ததினால் “மேசே” உண்மையிலே ஒரு இறைதூதன் தான் என்பதையும், ஜனங்கள் சந்தேகத்திற்கிடமின்றி நம்பினார்கள். 

“கர்த்தர் எகிப்தியரில் செய்த அந்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டார்கள்; அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்”. (யாத் 14:31)

முதலில் தேவன், தான் அகில உலகத்தையும் படைத்தவர் என்பதை நிரூபித்தார், அடுத்து மோசே இறைதூதன் தான் என்பதையும் நிரூபித்தாயிற்று.

தேவன் நினைத்தது நடந்தது. தேவன் தன்னுடைய கட்டளைகளை கொடுப்பதற்கு முன் நடந்த சம்பவங்கள் இவை….. தன்னுடைய வெளிப்பாட்டை கொடுப்பதற்கு முன் அதை கொடுக்கிறவரையும்(மோசே), பெற்றுக்கொள்ளப் போகிறவர்களையும் தேவன் எவ்வளவு அழகாக ஆயத்தப்படுத்தியுள்ளார் …. பார்த்தீர்களா?

இதையெல்லாம் செய்தபின் தேவன், தன்னுடைய வெளிப்பாட்டை கொடுப்பதற்கு ஆயத்தமானார். ஆனால் முகமுதுவுக்கு, யாருக்கும் தெரியாமல் கொடுத்தது போலில்லாமல் எல்லா ஜனங்களுக்கு முன்பாகவே தேவன் மோசேயோடு பேச ஆயத்தமானார். 

இதற்காக தேவன் ஒரு கூட்ட ஜனத்தை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. ஏதோ ஒரு ஆபிரகாமுக்கோ, யாக்கோபுக்கோ மாத்திரம், தன்னுடைய வேதத்தை எழுதிக்கொடுத்திருந்தால் அவர்களை யாரும் நம்பியிருக்க முடியாது, அவர்கள் சொல்லுவது பொய் என்றும் சொல்லிவிடலாம். இதை எல்லாம் நன்குணர்ந்த தேவன்; பல லட்சம் மக்களுக்கு முன்பாக தன்னுடைய வேதத்தை கொடுத்தால் யாரும் பொய் என்றோ, இல்லை என்றோ போக்கு சொல்ல முடியாதே, என்பதை அறிந்திருந்தார். 

ஏன் தெரியுமா? யாரும் மோசேயை பார்த்து, “தேவன் உன்னோடு பேசவில்லை” என்று சொல்லிவிடக்கூடாதே.
வேதாகமத்தைக் குறித்து கேள்வி எழுப்புகிறவர்கள், மோஸே தன் சொந்த கருத்தைக் கூறிவிட்டார், அவரோடு தேவன் பேசவில்லை, தேவன், வேதத்தையும் பத்துக்கட்டளையை அவருக்குக் கொடுக்கவில்லை இது அவருடைய சொந்த கற்பனையே, மேலும் இவர்கள் கேட்பது, முகமதுவோடு ஜிப்ரியேல் பேசினதற்கு ஆதாரமில்லை, அதே போல மோசேயோடும் தேவன் பேசினதற்கும் ஆதாரமில்லை, என்று வாதாடுகிறார்கள்…. இது உண்மையா? 

அடுத்த பதிவில், தேவன் மோசேயினடத்தில் யாருக்கும் தெரியாமல் வெளிப்பாட்டைக் கொடுத்தாரா இல்லை எல்லோருக்கும் முன்பாகவே கொடுத்தாரா என்பதைப் பார்க்கபோகிறோம். 
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

குரானில் உள்ள மிகப் பெரிய ஓட்டை Empty Re: குரானில் உள்ள மிகப் பெரிய ஓட்டை

Wed Dec 16, 2015 12:20 am
தேவ செய்தியை எடுத்து வருபவர்களை குர்ஆன் இறைத்தூதர் என்றும், பைபிளானது தீர்க்கதரிசி என்றும் குறிப்பிடுகிறது. தேவன் தன்னுடைய வார்த்தையை, குறிப்பிட்ட ஒரு நபரிடத்தில் கொடுப்பதற்கு முன் தன் செய்தியை கொண்டுபோகிற அந்த இறைதூதரையோ அல்லது தீர்க்கதரிசியையோ மக்கள் நம்பும்படி செய்ய வேண்டும். இது தானே நியாயம். 

ஆனால் குர்ஆனில் முகமது ஒரு இறைதூதர் என்று நிரூபிக்கத்தக்க எந்த ஆதாரத்தையும் காணமுடியாது. அவருடைய வாழ்க்கையும் எந்த விதத்திலும் அன்று வாழ்ந்தவர்களை விட உயர்ந்ததாக இல்லை, எந்த அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்யவில்லை, குறைந்த பட்சம் ஜிப்ரியேல் இவரிடம் பேசியதைப் பார்த்தவர்கள் யாரும் இருந்த்தாக குர்ஆனில் எந்த ஆதாரமும் இல்லை.... அப்ப எப்படி நம்பமுடியும்?

இன்னும் ஒரு காரியம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது, அதாவது தனது 40 ஆவது வயதில் முகமது இறைதூதராக நியமிக்கப்பட்டபின் அவருக்கு பல வருடங்களாக, தான் ஒரு இறைதூதரா? தன்னிடத்தில் வருவது உண்மையிலே இறைச்செய்திதானா என்பதை கூட உறுதிப்படுத்த முடியாதவராகவே இருந்துள்ளார் நம்புங்கள் (புகாரி4,3392,6982,4954). இது எல்லா முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்ளும் நம்பகமான ஹதீஸ்.

சகோதரர்களே, ஒன்றை நிதானியுங்கள், முகமதுவை, மக்களுக்கு முன்பாக இறைதூதர் என்பதை உறுதிப்படுத்தி காண்பிக்காவிட்டாலும், குறைந்தபட்சம் அவருக்காவது “நீ ஒரு இறைதூதன்தான்” என்பதை விளங்கச்செய்திருக்க வேண்டுமா இல்லையா? 
அதற்குப் பின்தானே அல்லா தன்னுடைய செய்தியை அவருக்குக் கொடுத்திருக்க வேண்டும். 

ஆனால் இதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாதவராக வாழ்ந்த நிலைமையிலே முகமதுவுக்கு அல்லா எப்படி தொடர்ந்து மிக முக்கியத்துவம் வாய்ந்த "வஹியை" (குர்ஆனை) கொடுக்க முடியும். 

இதெல்லாம் மிகப்பெரிய கேள்விகள் பதில்சொல்லப்பட முடியாதவைகள்.

நாம் இன்னும் குர்ஆனில் எழுதப்பட்ட சத்தியத்தை குறித்து கேள்வி எழுப்பவில்லை, அது கொடுக்கப்பட்ட முறைமையை குறித்தே கேள்வி எழுப்புகிறோம். 

குர்ஆன் கொடுக்கப்பட்டதில் எந்த தேவ வல்லமையையோ, அதிகாரத்தையுமோ, பார்க்க முடியவில்லை. இது தேவன் தான் கொடுத்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆதாரமே இல்லை என்பதால் அதை வாசிக்க வேண்டிய ஆவசியமும் இல்லை.

முகமது தான் கடைசி நபி என்று முஸ்லிம்கள் நம்பும்போது , "மிர்ஸா குலாம்", என்பவர் நாம் தான் கடைசி நபி என்று பிரகடனம் செய்தார், இன்றைக்கும் சில முஸ்லிம்கள் இவரைப் பின்பற்றுகின்றனர். ஏன் தெரியுமா தான் அனுப்பும் நபிமார்களை அல்லா நிரூபித்துக் காண்பிக்காததுதான். 

அதுமாத்திரமல்ல முகமது இறந்தபின் முகமதுவுக்குப் பின் ஆட்சியாளராக “அபூபக்கர்” என்பவர் ஆட்சிபொறுப்பேற்றார். இந்த சமயத்தில் தான் “முஸைலாமா” என்பவர் எழும்பி முகமதுவிடமிருந்து தனக்கென ஒரு கூட்டத்தைக் கூட்டிக்கோண்டார்

எப்படித் தெரியுமா? 

நான் தான் இறைதூதன், முகமதுவோ வேறு யாருமோ கிடையாது, நான் தான் இறைவன் அனுப்பின உண்மையான இறைதூதன் என்று சொல்லி அநேகரை “முஸைலாமா” தன் பால் இழுத்துக்கொண்டான், 

அதோடு நிறுத்தாமல் முகமதுவிடம் இருந்து குர்ஆனை மனப்பாடம் செய்திருந்த முக்கியமான 70 பேர்களை கொன்றும் விட்டான். 

ஏன் இதை சொல்லுகிறேன் என்றால்

முகமது காலத்திலும் அதற்கு பின் வந்த காலத்திலும் இறைதூதன் என்று சொல்லிக்கொண்டு அநேகர் வந்தார்கள், இன்னும் வருவார்கள். ஆக தேவன் ஒரு இறைதூதரை அனுப்புகிறார் என்றால் அது எவ்வளவு அதிகாரப்பூர்வமாகவும், அத்தாட்சி நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். முஸைலாமா என்பவன் தன்னை ஒரு இறைதூதன் என்று சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லையே, 

அன்றைக்கு வாழ்ந்த முகமதுவின் சகாக்கள் அவனை எதிர்த்து போரிட்டார்கள், ஏன் அப்படிச் செய்ய வேண்டும், முகமதுவும் திடீரென தன்னை ஒரு இறைதூதர் என்று சொன்னவர் தானே! அவரை மட்டும் நம்பவேண்டும், முஸைலாமா போன்று ஒருவர் சொன்னால் நம்பக்கூடாதா? 

ஒரு உதாரணத்திற்கு

நீங்கள் ஆசைப்படும் பெண்ணின் ஒரு கடிதத்திற்காக காத்திருக்கிறீர்கள், கடிதமும் ஒரு வழியாய் வந்தாயிற்று, கடிதத்தில் எழுதியிருக்கும் வார்த்தைகளும் நீங்கள் எதிர்பார்த்த வார்த்தைகள்தான், அனால் ஒரு விஷயம் மட்டும் மிஸ்ஸிங், 

அதாங்க அந்த கடிதத்தில் எந்த கையொப்பமும் இல்லை, நீங்கள் விரும்பும் அந்த பெண்தான் எழுதினாள் என்பதற்கு எந்த அத்தாட்சியும் அதில் இல்லை. என்ன செய்வீர்கள்? 

கடிதத்தில் உள்ள வார்த்தைகள் நீங்கள் எதிர்பார்த்த மாதிரியே இருப்பதால் அந்த பெண்தான் எழுதியிருப்பாளோ என்ற நிச்சயத்துக்கு வருவீர்களா? 

ஒரு முடிவுக்கும் வரமுடியாது.

இன்றைக்கும் குர்ஆனை படிக்கிறவர்களும் இப்படித்தான், அதின் மொழிநடையை பாருங்கள், இலக்கியத்தைப் பாருங்கள் அதன் அறிவியல் உண்மையை பாருங்கள் நாம் எதிர்பார்த்த மாதிரி இருக்கிறது, அதனால் இது தேவனால் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டனர். 

நாம் எதிர்பார்த்தமாதிரி இருக்கிறதோ இல்லையோ, இலக்கணங்கள் நன்றாக இருக்கிறதோ இல்லையோ, அறிவியல் உண்மைகள் பேசப்பட்டிருகிறதோ இல்லையோ, அது தேவன் தான் கொடுத்தார் என்பதையும் அதைக் கொடுத்தவரோடு அல்லா பேசினதையும் சாட்சியாக மக்கள் முன் நம்பும்படி செய்திருந்தால் தான் இதை ஏற்றுக்கொள்ள முடியும்... இது நடக்கவில்லை, 

அப்ப இவ்வளவு பேசுகிறீர்களே இப்படித்தான் வேதாகம் கொடுக்கப்பட்டதா என்று கேள்வி கேட்கிறீர்களா, உங்கள் கேள்வி நியாயமானது தான்,

இதற்கான பதிலுக்கு கீழ்கண்ட தளத்தில் காத்திருங்கள்... 

(See updates here, www.facebook.com/theosgospelhall)

பயனடைந்தால் தெரியப்படுத்தி உற்சாகப்படுத்துங்கள்…. 

(இது தவறு என்று நினப்பவர்களும், சரி என்று நினைப்பவர்களும், தங்கள் கருத்தை கண்ணியமாய் எடுத்துரைக்கலாம், ,,,,, நீங்கள் பதிவிடும் வார்த்தைகள் நீங்கள் பின்பற்றும் மார்க்கத்தை வெளிப்படுத்துகிறது என்பதை மறக்க வேண்டாம்)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

குரானில் உள்ள மிகப் பெரிய ஓட்டை Empty Re: குரானில் உள்ள மிகப் பெரிய ஓட்டை

Wed Dec 16, 2015 12:21 am
குர்ஆன் இஸ்லாமுக்கு முக்கியமோ இல்லையோ, அல்லாவுக்கு இது ரொம்ப முக்கியமாக கருதப்படுகிறது. ஏனென்றால் இதற்கு முன் அல்லா கொடுத்த எல்லா வஹீயும் (வேதம் அல்லது வெளிப்பாடு) அழிந்து போய்விட்டது. ஆக அல்லா கடைசியும், முக்கியமானதுமான குர்ஆனை கொடுப்பதற்கு முடிவெடுத்தார். இது மற்ற வெளிப்பாட்டைப் போல் இல்லாமல் இதை அழியவிடாமல் கடைசிவரைக்கும் காக்கப்போவது என்று திட்டமிட்டார். அதனால் தான் இன்றை வரைக்கும் குர்ஆனே அவர்களின் கடைசி ஏற்பாடாகவும் அதைக் கொடுத்த முகமது கடைசி நபியாகவும் நம்பப்படுகிறார்.

ஆக இதுவே கடைசி ஏற்பாடு என்றால் அல்லா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வெளிப்பாட்டை உலகுக்கு கொடுக்கப்போகிறார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். இனி வேறு எந்த இறைத்தூதரும் வரப்போவதில்லை ஆக குர்ஆனை கொடுக்கப்போகிற கடைசி தூதரை, அல்லா எப்படி உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும்? அதை நீங்களே பாருங்கள்…..

சற்று நிதானித்துப்பாருங்கள், இதுவரைக்கும் வந்த எல்லா இறைத்தூதர்கள் கொடுத்த வெளிப்பாடுகளூம், வேதங்களும் அழிந்து போயிற்று, அதை பின்பற்றுகிற மக்களும் பாவமாகவும், தவறானவர்களாகவும் மாறிப்போனார்கள் என்று குர்ஆன் சொல்லுகிறது. 

ஆக கடைசி அழிக்கமுடியாத ஏற்பாட்டை உலகிற்குக் கொண்டுவரும் தூதர், மிக முக்கியமானவர். 
முதலாவது அவர், வெளிப்பாட்டை(குர்ஆனை) கொண்டுவருவதற்கு முன் அவர் இறைதூதராக(நபி) மக்களால் அங்கீகரிக்கப்படவேண்டும். அப்பொழுதுதானே அவரால் கொடுக்கப்படபோகிற குர்ஆனையும் நம்பமுடியும். ஆனால் நிலைமை அப்படியில்லை……

முகமது வந்து, ஜிப்பிரியேல் தூதன் என்னை சந்தித்தார், நான் ஒரு இறைதூதன் என்று சொன்னவுடன் மக்கள் யாரும் நம்பவில்லை, 
உண்மைதான் எப்படி நம்பமுடியும், யாராலும் நம்பமுடியாது. ஆனாலும் மக்கள் அவரிடம் சில கேள்விகளை கேட்டார்கள்…

அதாவது தூதன் வந்து உங்களை சந்தித்ததாக சொல்லுகிறீர்கள், அந்த தூதனையே வரச்சொல்லுங்கள் நாங்கள் நம்புகிறோம் என்று தெளிவாகச் சொன்னார்கள். ( குர்ஆன் 23:24, 41:14)

மேலும் அவர்கள் சொன்னது,” எங்களுடைய தேவன் ஒன்றை வழங்குவார் என்றால் தூதனை நேராக எங்களிடத்திற்கே அனுப்பியிருப்பார்” என்றும் சொன்னார்கள். 

அதுமாத்திரமல்ல அத்தியாயம் 25:4ல் இவர் சொல்வது பொய், இதை இவரே இட்டுக்கட்டிக்கொண்டார், மற்றொரு சமுதாயத்தினர் இவருக்கு ஏதோ உதவி செய்திருக்கிறார்கள்…. என்றும் சொன்னார்கள்.

25:5 ஆம் வசனத்தில் முன்னோர்களின் கட்டுக்கதை என்று சொன்னதாக வாசிக்கிறோம். ஒரு குறிப்பிட்ட இல்லத்தை குறிப்பிட்டு அவர்கள் தான் இவருக்கு இதை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்…… என்றும் குற்றம் சாட்டினார்கள்.

அத்தியாயம் 23:24 ல் அல்லா நினைத்திருந்தால் தூதரை நம்மிடத்தில் அனுப்பியிருப்பார், என்றும் முகமதுவுக்கு மற்ற எல்லா மனிதர்களைவிட பெரிய ஆளாக வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் தான் இவ்வாறெல்லாம் செய்கிறார் என்றும் குற்றப்படுத்தினர். 

கடைசியில் இவை எல்லாவற்றிற்கும் மேல் அத்தியாயம் 23:25ல் முகமது ஒரு பைத்தியக்காரர் அவரை விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். 

(ஆதாரமில்லாமல் தேவன் சொன்ன இறைத்தூதர் நான் தான், என்று சொன்னால் இந்த நிலைமதானே)

இதற்கெல்லாம் காரணம் என்ன? 

உண்மையிலே தேவன் தனது மிக முக்கியமான வஹியை இப்படி சாதாரணமாக கொடுப்பாரா? நிதானியுங்கள்.

இங்கு முகமது உண்மையிலே ஒரு இறைத்தூதன் என்று வைத்துக்கொண்டால், அவர் வந்து சொன்னவுடன் மக்கள் நம்பவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லையே……

இவரை நம்பும் படி அல்லா, எப்படி எதிர்பார்க்கலாம்,? 

மக்கள் சரியாக இருக்கிறார்கள், எந்த மனிதனையும் நம்பிவிடக்கூடாது என்பதில் அவர்கள் கருத்தாய் இருக்கிறார்கள்.

அவர்கள் நம்பும்படி அல்லா என்ன உத்திரவாதத்தை கொடுத்திருக்கிறார். யார் இறைச்செய்தியை எடுத்துவந்தாலும் அவரை இறைவன் தான் அனுப்பினார் என்பதற்கு தகுந்த ஆதாரம் வேண்டுமே…. கடைசிவரை மக்களுக்கு அல்லா எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை,…..

குர்ஆனில் ஐந்து தடவைக்கு மேல் மக்கள் முகமதுவை நம்புவதற்கு ஆதாரம் கேட்டனர், ஆனால் ஆதாரம் கேட்ட இடத்தில் சொல்லப்பட்ட வசனம் என்ன தெரியுமா?

இப்படி நம்பாதவர்களை நான் அழிப்பேன், அழிப்பேன் என்பதே… எங்கெல்லாம் மக்கள் முகமதுவை நம்பாமல் ஆதாரம் கேட்டனரோ அங்கெல்லாம் அவர்கள் அழிவார்கள், என்ற வசனம் தவறாமல் வருகிறதை பார்க்க முடியும். 

ஆனால் வேதத்தில்(பைபிள்) ஆதாரம் கேட்ககூட தேவன் இடம்கொடாமல் நேர்த்தியாய் கொடுத்திருக்கிறார், அதை பின்னால் பார்ப்போம்.

குர்ஆனில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று பார்ப்பதற்கு முன்னால் இதை ஓதிக்கொடுத்தவர் இறைவனின் நபிதான் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் “அல்லாவோ, ஜிப்ரியேல் தூதனோ” கடைசி வரை கொடுக்கவேயில்லை….

பின் எப்படி குர்ஆன் இறைவேதம் என்பதை ஒத்துக்கொள்வது….. ஆனால் பைபிள் வேதம் எழுதி தரப்பட்ட போது தேவன் எப்படி செயல்பட்டார் என்பதை தொடர்ந்து கற்றுக்கொள்வோம்…..
காத்திருங்கள்……

பயனடைந்தால் தெரியப்படுத்தி உற்சாகப்படுத்துங்கள்…. 

(இது தவறு என்று நினப்பவர்களும், சரி என்று நினைப்பவர்களும், தங்கள் கருத்தை கண்ணியமாய் எடுத்துரைக்கலாம், ,,,,, நீங்கள் பதிவிடும் வார்த்தைகள் நீங்கள் பின்பற்றும் மார்க்கத்தை வெளிப்படுத்துகிறது என்பதை மறக்க வேண்டாம்)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

குரானில் உள்ள மிகப் பெரிய ஓட்டை Empty Re: குரானில் உள்ள மிகப் பெரிய ஓட்டை

Wed Dec 16, 2015 12:23 am
ஒரு உதாரணத்திற்கு சொல்லுகிறேன், இப்பொழுது உங்கள் பக்கத்து வீட்டு காரர் திடீரென உங்கள் வீட்டிற்கு வந்து, “நீங்கள் இப்போது நம்பும் வேதம் சரியானது அல்ல நான் இப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்போகும் வேதம்தான் சரியானது, ஏனெனில், அகில உலகத்தையும் படைத்த தேவன் நேற்று ஒரு தேவதூதனை அனுப்பி என்னிடம் இவைகளைச் சொன்னார்”, என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? 

எந்த ஒரு மனிதனும் நம்ப மாட்டான். அப்படியே நம்புவதாக இருந்தாலும் தூதன் வந்து சந்தித்தற்கு ஆதாரத்தை நீங்கள் கேட்பீர்கள் ,.... அப்படித்தானே!

இதேபோல குரானை எடுத்துக்கொள்வோம், முதன் முதலில் குரானை ஜிப்ரியேல் தூதன், முகமது நபியின் காதில் ஓதினார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பின்பு நபி, முதலில் அவர் மனைவியிடமும், பின்பு அவரின் சகாக்களிடம் வந்து தன்னை ஒரு தூதன் சந்தித்ததாகவும், அவர் கடைசிஏற்பாட்டை(குரானை) கொடுத்தார் என்பதாகவும் செய்தி வருகிறது (சுருக்கமாக பதிவிட்டுள்ளேன்). அப்போது அவரோடு இருந்த ஏராளமானோர் அதை நம்பவில்லை, அதற்கு பல ஆதாரங்களை கேட்டனர், (குர்ஆன் 17:90...; 23:24,25;7,) அதற்கு முகமது என்ன பதில் சொன்னார் எனபதை தொடர்ந்து வரக்கூடிய பதிவுகளில் பார்ப்போம், 

அதற்கு முன்பாக மோசேயை தேவன் அனுப்பும் போதும் இதே மாதிரியான நிலைமை இருந்தது, ஆனால் தேவன் இதை எப்படி கையாண்டார் என்பதைப் பார்ப்போம்.
மோசேக்கு தேவன் முட்செடியில் தரிசனமாகி நீ போய், “நான் உனக்கு தரிசனம் ஆனதையும், நான் தான் உன்னை அனுப்புகிறவர் என்பதையும் அவர்களுக்கு சொல்”, என்றார். 

ஆனால் மோசேயோ அதற்கு சரியான ஒரு பதிலை சொன்னார், 

"அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள், என் வாக்குக்குச் செவிகொடார்கள், கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான்." (யாத் 4:1)

ஆனால் இப்படி எந்த ஒரு வார்த்தையையும் முகமது சொன்னதாக குர்ஆனில் கிடையாது, எந்த தைரியத்தில் தனியாக ஹீரா குகையில் தான் சந்தித்த, ஜிப்ரியேல் தூதனை மக்களும் நம்புவார்கள் என்று எதிர்பார்த்தார் என்று தெரியவில்லை...... சரி இதை பின்பு பார்க்கலாம்.

மோசே இப்படிக் கேட்டது நூற்றுக்கு நூறு சரியானதே, , இப்படி யார் சொன்னாலும் எந்த மனிதனும் நம்பப் போவதில்லை, அப்படி நம்புவார்களேயாகில் அப்படிப்பட்டவர்களை யார் வேண்டுமானாலும் ஏமாற்றிவிடலாம். இதை தேவனும் அறிந்திருந்தார், உடனே தேவன் எந்த கோபமும் படாமல் மோசேயை பார்த்து கூறினார், 

"2. கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்.
3. அதைத் தரையிலே போடு என்றார், அவன் அதைத் தரையிலே போட்டபோது அது சர்ப்பமாயிற்று. மோசே அதற்கு விலகியோடினான்.
4. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார், அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது அது அவன் கையிலே கோலாயிற்று.
5. ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார்.
6. மேலும், கர்த்தர் அவனை நோக்கி: உன் கையை உன் மடியிலே போடு என்றார், அவன் தன் கையைத் தன் மடியிலே போட்டு அதை வெளியே எடுக்கும்போது இதோ அவன் கை உறைந்த மழையைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது.
7. அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே போடு என்றார். அவன் தன் கையைத் திரும்பத் தன் மடியிலே போட்டு தன் மடியிலிருந்து அதை வெளியே எடுத்தபோது அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப்போலாயிற்று.
8. அப்பொழுது அவர்: முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு உன்னை நம்பாமலும் உனக்குச் செவிகொடாமலும் போனால் பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள்.
9. இவ்விரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும் உன் வாக்குக்குச் செவிகொடாமலும் இருப்பார்களானால் அப்பொழுது நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும் என்றார்."

அவர்கள் நம்பமாட்டார்கள் என்று சொன்னவுடன் தேவன் இஸ்ரவேல் மக்கள் மேல் கோபப்படவில்லை, மோசேயையும் கடிந்து கொள்ளவில்லை, மாறாக அதை அவர் எதிர்பார்த்தே இருந்தார் என்பது மேற்கண்ட வசனத்தின் மூலம் தெளிவுபெறலாம். 

அதனால் தான் 3 அடையாளங்களை மோசேயினிடத்தில் கொடுத்து அனுப்பினார், முதல் இரண்டிற்கும் அவர்கள் நம்பாமல் போனாலும் கூட கடைசி அடையாளத்திற்கு அவர்கள் நம்புவார்கள் என்று சொல்லி அனுப்பினார். எதற்காக 3 அடையாளங்கள், ஒரு இனம் தங்கள் தேவனை தெரிந்து கொள்ளப்போகிறது, இதில் எந்த சாத்தானுடைய தந்திரமும் உள்ளே வந்து விடக்கூடாது, ஆக ஒரு காரியத்தை நம்புவதற்கு முன் அதை இரண்டு மூன்று சாட்சிகளால் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆக மோசேயை தேவன் தான் அனுப்பினார் என்பதை மக்கள் அறியவும், ஏற்றுக்கொள்ளவும் தேவன் அடையாளத்தை கொடுத்தனுப்பினார்.

இந்த அடையாளங்களெல்லாம் மோசேயை (தீர்க்கதரிசியாக – இறைத்துதராக) தேவன் தான் அனுப்பினார், என்பதை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே, கொடுக்கப்பட்டவை. ஆனால் மோசே கர்த்தருடைய வேதத்தை இப்போது எழுதிக்கொடுக்கவில்லை, அவர்கள் எகிப்திலிருந்து விடுதலையாகி வனாந்திரத்தில் நடந்து வரும் போது தேவன் வேதத்தை எழுதிக்கொடுத்தார். 

மோசேயை, மக்கள் தீர்க்கதரிசியாக நம்புவதற்கு மட்டும்தான் இந்த அடையாளங்கள், ஆனால் மோசே மூலமாக தேவன் வேதத்தை கொடுத்தபோது வேறு சில அடையாளங்களையும் காண்பித்தார். 

இதிலிருந்து தேவனுடைய செயல் பாட்டையும், அவரை மக்கள் நம்பவேண்டும் என்பதில் எவ்வளவு கருத்தாய் காரியங்களை நடப்பித்திருக்கிறார் என்பதை அறியலாம்.

இதன் மூலம் வேதம் எவ்வளவு அதிகாரப்பூர்வமாய் கொடுக்கப்பட்டிருகிறது என்பதைக் கற்றுக்கொள்வதே நோக்கமாகும், வேறு எந்த மார்க்கத்தையும், மதத்தையும் விட வேதம் எவ்வளவு தெளிவுபட உள்ளது ...

ஆனால் குர்ஆனில் நிலைமை தலைகீழாக உள்ளது, அதை அடுத்துவரும் பதிவுகளில் காண்போம், 
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

குரானில் உள்ள மிகப் பெரிய ஓட்டை Empty Re: குரானில் உள்ள மிகப் பெரிய ஓட்டை

Wed Dec 16, 2015 12:23 am
அந்த காலத்தில் அரசனுடைய செய்தியை இன்னொரு அரசனுக்கு கொண்டு போய் சேர்க்க தூதர்கள் இருந்தனர், அந்த தூதர்கள் கொண்டு செல்லும் செய்தியில் அரசனின் முத்திரை கண்டிப்பாக இருக்கும், இந்த செய்தி அரசனுடையது தான் என்பதற்கு இது தான் ஆதாரம்.

இன்றைக்கும் நாம் கடிதம் எழுதுவோம் என்றால் அதை நாம் தான் எழுதினோம் என்பதற்கு கையெழுத்தை இடுவோம். கையெழுத்து இல்லாத ஒரு கடிதத்தை அதிகாரப்புர்வமானதாக எடுக்க முடியாது. ஒரு உயில் எழுதினாலும், நிலம் விற்றாலும், வாங்கினாலும், எதை செய்தாலும் அதிகாரப்பூர்வமான சாட்சி வேண்டும். அது கையெழுத்தோ, நேரில் பார்த்த மக்களோ, இருந்தால் தான் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும். இது தான் நீதி..... 

அதேபோல ஒரு செய்தியை தேவன், ஒருவரிடம் கொடுத்து அனுப்புகிறார் என்றால் அந்த செய்தியை தேவன் தான் கொடுத்தார் என்பதற்கு ஆதாரத்தையும் சேர்த்துக் கொடுப்பது தானே நியாயம்.

அப்படிக் கொடுக்காவிட்டால் செய்தி கொண்டுவரும் நபர் தன் சொந்த செய்தியை கொடுக்கிறாரா, இல்லை தேவனின் செய்தியைத்தான் கொடுக்கிறாரா என்பதை எப்படி அறிவது. 

குர்ஆன் ஆகட்டும், வேதமாகட்டும், இரண்டும், தேவனால் மனிதர்களை கொண்டு தரப்பட்டதாக நம்பப்படுகிறது. தீர்க்கதரிசிகளைக் கொண்டு வேதாகமும், இறை தூதரைக் கொண்டு குர்ஆனும் கொடுக்கப்பட்டதாக அறியலாம். 

ஆனால் ஒரு பொதுவான கொள்கையின் படி, தேவன் தன்னுடைய செய்தியை, ஒருவர் மூலமாய் கொடுக்கிறார் என்றால், அது குர்ஆன் ஆகட்டும் வேதமாகட்டும் வேறு எந்த மதமாக இருந்தாலும் கூட, அந்த செய்தியை நான் தான் கொடுத்தேன் என்பதை நிரூபிக்க வேண்டும், இல்லாவிட்டால் செய்தி கொண்டு போகும் நபரை மக்கள் நம்ப வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

இந்த அடிப்படைச் சட்டத்தின் படி நாம் குர்ஆனையும், வேதத்தையும் ஆராயப்போகிறோம். 

வேதத்தில் முதல் 5 புஸ்தகங்கள் மோசேயினால் எழுதப்பட்டது, மோசே உண்மையிலேயே, தேவனுடைய இறைதூதர் தான், என்பதை மக்கள் நம்பினால் தான் மேசேயின் மூலம் தேவன் கொடுக்கும் வார்த்தையையும் நம்ப முடியும். 

அதேபோல குர்ஆனை மக்களுக்கு கொடுக்கும் முன் முகமதுதான் இறைதூதர் என்பதை அல்லா நிரூபித்தால் தான், முகமது மூலம் தன்னுடைய வார்த்தையை அல்லா மக்களுக்கு கொடுக்க முடியும்…. இல்லாவிட்டால் யாரும் குர்ஆனை நம்பவேண்டிய அவசியம் இல்லை.

ஆக இந்த காரியங்களை வேதத்திலும், குர்ஆனிலும் ஆராய்ந்தால் நமக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது
Sponsored content

குரானில் உள்ள மிகப் பெரிய ஓட்டை Empty Re: குரானில் உள்ள மிகப் பெரிய ஓட்டை

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum