எப்படி தப்பித்துக்கொள்வோம்.......
Tue Dec 15, 2015 11:58 pm
திரியேகம் எனக்கு எதற்கு? அதினால் என்ன பயன்?
போதிக்கிற நாம் திரியேகத்தை ஏன் போதிக்கிறோம் என்பதற்கும் பதில் சொல்லியாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் தானே!
இந்த திரியேக தேவனின் செயல்பாடு எனக்கு ஒரு உறுதியை தருகிறது அதாவது இரட்சிப்பின் திட்டத்திற்கு தேவன் தன்னையே அர்ப்பணிக்கிறார் என்பதே!
அக்பர் ஒரு நாள் நதி ஓரத்தில் குடும்பத்துடன் ஓய்வு எடுத்த வேளையில் தன் குழந்தை தெரியாமல் நதியில் விழுந்துவிட்டதாம், உடனே பதறிய அக்பர் அங்கு நின்ற எந்த ஒரு போர்ச்சேவகனையும் பார்த்து என் குழந்தையை காப்பாற்று என்று கட்டளையிடாமல் தானே ஆற்றில் விழுந்து காப்பாற்றினதாக கதை உண்டு. என்னதான் இராஜாவாக இருந்தாலும் தன் குழந்தையை காப்பாற்ற அவரே விழுந்ததில் ஆச்சரியமில்லை.
அதே போல இரட்சிப்பின் திட்டத்திற்கு தேவன் தன்னுடைய எந்த படைப்பையும் நம்பவில்லை என்பது யோபு 4 ஆம் அதிகாரம் மூலம் தெளிவாகிறது.
17. மனுஷன் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப்பார்க்கிலும் சுத்தமாயிருப்பானோ?
18. கேளும், அவர் தம்முடைய பணிவிடைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை; தம்முடைய தூதரின்மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே.
19. புழுதியில் அஸ்திபாரம் போட்டு, மண் வீடுகளில் வாசம்பண்ணி, பொட்டுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?
இந்த வசனத்தின் உண்மையான அர்த்தமே தேவன் எந்த ஒரு படைப்பையும் நம்பமுடியாது என்பதைக் காண்பிக்கவே! அது மனிதனாக இருந்தாலும் சரி தேவதூதனாக இருந்தாலும் சரி....வேறு எந்த படைப்பாக இருந்தாலும் முழுமையான நம்பிக்கையை தேவன் இவர்கள் மேல் வைக்கமுடியாது, தேவன் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் அது தன்மேல் நம்பிக்கைவைத்தால் தான் உண்டு. ஆணையிடும் போது கூட தன்பேரிலே ஆணையிடும் தேவன் தான் நம்முடைய தேவன்..
ஆக தேவன் தம்முடைய எந்த ஒரு படைப்பினிடத்திலும் நம்பிக்கை வைப்பதில்லை. அவர்களால் இந்த திட்டத்தை சரியாக செய்யமுடியலாம், செய்யமுடியாமலும் போகலாம்... ஆனாலும் தேவன் இவர்களையெல்லாம் நம்பமுடியாது.........
இது நான் சொல்லவில்லை வேதம் சொல்லுகிறது.....
ஏசாயா 53:10கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
இந்த உலகத்தில் தேவனுடைய சித்தத்தை யார் வேண்டுமானலும் செய்ய்முடியும் ஆனால் அதே சமயம் கண்டிப்பாக எந்த தவறும் இல்லாமல் செய்ய்முடியும் என்று சொல்லமுடியாது. ஒரு பாவமும் தவறும் குற்றமும் செய்யாமல் ஒருவர் தேவனுடைய திட்டத்தை செய்யமுடியும் என்றால் அவர் தேவனாக இருந்தால் மாத்திரமே செய்யமுடியும்!
அதனால் தான் வேதம் இவ்வளவு பெரிதான் இரட்சிப்பு என்றும், விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்டோம் என்றும் சொல்லுகிறது. .......
ஆக தேவன் தம்முடைய படைப்பின் இரத்தத்தை வைத்து நம்மை சம்பாதிக்கவில்லை அல்லது காப்பாற்றவில்லை. அதாவது அக்பர் தன் வேலைக்காரரின் உயிரை பணையம் வைத்து தன் மகனை காப்பாற்றவில்லை என்பதே உண்மை. ஒரு வேலைக்காரனை தன் மகனை காப்பாற்று என்று சொல்லி விட்டு தன் மகன் வந்ததும் மகனே நானே என் உயிரைக் கொடுத்து காப்பாற்றினேன் என்று சொன்னால் மகனுக்கு எப்படி இருக்கும்! இப்படித்தான் அநேகர் சொல்லுகிறார்கள் ஆனால் வேதம் அப்படி சொல்லவில்லை.......
வேதம் சொல்லுகிறது தேவன் தம்முடைய சுய இரத்தத்தினால் மீட்டுக்கொண்டார் அல்லது நம்மை காப்பாற்றினார் என்பதே!
தேவனே எனக்காக மரித்தார் அதாவது திரியேகத்தில் பிதாவுக்கு சமமாக இருந்த கிறிஸ்து பிதாவின் சித்தம் நிறைவேற்ற பூமிக்கு வந்தார், கிறிஸ்து அத்திட்டத்தை நிறைவேற்ற பரிசுத்த ஆவியானவர் எல்லாவிதத்திலும் உதவுகிறார்..... ஆக இந்த இரட்சிப்பின் திட்டம் தேவன் எனக்காக தன்னையே அர்ப்பணித்து செயல்படுத்தியது இந்த இரட்சிப்பை அசட்டை செய்தால் தண்டனைக்கு எப்படி தப்பித்துக்கொள்வோம்.......
போதிக்கிற நாம் திரியேகத்தை ஏன் போதிக்கிறோம் என்பதற்கும் பதில் சொல்லியாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் தானே!
இந்த திரியேக தேவனின் செயல்பாடு எனக்கு ஒரு உறுதியை தருகிறது அதாவது இரட்சிப்பின் திட்டத்திற்கு தேவன் தன்னையே அர்ப்பணிக்கிறார் என்பதே!
அக்பர் ஒரு நாள் நதி ஓரத்தில் குடும்பத்துடன் ஓய்வு எடுத்த வேளையில் தன் குழந்தை தெரியாமல் நதியில் விழுந்துவிட்டதாம், உடனே பதறிய அக்பர் அங்கு நின்ற எந்த ஒரு போர்ச்சேவகனையும் பார்த்து என் குழந்தையை காப்பாற்று என்று கட்டளையிடாமல் தானே ஆற்றில் விழுந்து காப்பாற்றினதாக கதை உண்டு. என்னதான் இராஜாவாக இருந்தாலும் தன் குழந்தையை காப்பாற்ற அவரே விழுந்ததில் ஆச்சரியமில்லை.
அதே போல இரட்சிப்பின் திட்டத்திற்கு தேவன் தன்னுடைய எந்த படைப்பையும் நம்பவில்லை என்பது யோபு 4 ஆம் அதிகாரம் மூலம் தெளிவாகிறது.
17. மனுஷன் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப்பார்க்கிலும் சுத்தமாயிருப்பானோ?
18. கேளும், அவர் தம்முடைய பணிவிடைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை; தம்முடைய தூதரின்மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே.
19. புழுதியில் அஸ்திபாரம் போட்டு, மண் வீடுகளில் வாசம்பண்ணி, பொட்டுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?
இந்த வசனத்தின் உண்மையான அர்த்தமே தேவன் எந்த ஒரு படைப்பையும் நம்பமுடியாது என்பதைக் காண்பிக்கவே! அது மனிதனாக இருந்தாலும் சரி தேவதூதனாக இருந்தாலும் சரி....வேறு எந்த படைப்பாக இருந்தாலும் முழுமையான நம்பிக்கையை தேவன் இவர்கள் மேல் வைக்கமுடியாது, தேவன் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் அது தன்மேல் நம்பிக்கைவைத்தால் தான் உண்டு. ஆணையிடும் போது கூட தன்பேரிலே ஆணையிடும் தேவன் தான் நம்முடைய தேவன்..
ஆக தேவன் தம்முடைய எந்த ஒரு படைப்பினிடத்திலும் நம்பிக்கை வைப்பதில்லை. அவர்களால் இந்த திட்டத்தை சரியாக செய்யமுடியலாம், செய்யமுடியாமலும் போகலாம்... ஆனாலும் தேவன் இவர்களையெல்லாம் நம்பமுடியாது.........
இது நான் சொல்லவில்லை வேதம் சொல்லுகிறது.....
ஏசாயா 53:10கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
இந்த உலகத்தில் தேவனுடைய சித்தத்தை யார் வேண்டுமானலும் செய்ய்முடியும் ஆனால் அதே சமயம் கண்டிப்பாக எந்த தவறும் இல்லாமல் செய்ய்முடியும் என்று சொல்லமுடியாது. ஒரு பாவமும் தவறும் குற்றமும் செய்யாமல் ஒருவர் தேவனுடைய திட்டத்தை செய்யமுடியும் என்றால் அவர் தேவனாக இருந்தால் மாத்திரமே செய்யமுடியும்!
அதனால் தான் வேதம் இவ்வளவு பெரிதான் இரட்சிப்பு என்றும், விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்டோம் என்றும் சொல்லுகிறது. .......
ஆக தேவன் தம்முடைய படைப்பின் இரத்தத்தை வைத்து நம்மை சம்பாதிக்கவில்லை அல்லது காப்பாற்றவில்லை. அதாவது அக்பர் தன் வேலைக்காரரின் உயிரை பணையம் வைத்து தன் மகனை காப்பாற்றவில்லை என்பதே உண்மை. ஒரு வேலைக்காரனை தன் மகனை காப்பாற்று என்று சொல்லி விட்டு தன் மகன் வந்ததும் மகனே நானே என் உயிரைக் கொடுத்து காப்பாற்றினேன் என்று சொன்னால் மகனுக்கு எப்படி இருக்கும்! இப்படித்தான் அநேகர் சொல்லுகிறார்கள் ஆனால் வேதம் அப்படி சொல்லவில்லை.......
வேதம் சொல்லுகிறது தேவன் தம்முடைய சுய இரத்தத்தினால் மீட்டுக்கொண்டார் அல்லது நம்மை காப்பாற்றினார் என்பதே!
தேவனே எனக்காக மரித்தார் அதாவது திரியேகத்தில் பிதாவுக்கு சமமாக இருந்த கிறிஸ்து பிதாவின் சித்தம் நிறைவேற்ற பூமிக்கு வந்தார், கிறிஸ்து அத்திட்டத்தை நிறைவேற்ற பரிசுத்த ஆவியானவர் எல்லாவிதத்திலும் உதவுகிறார்..... ஆக இந்த இரட்சிப்பின் திட்டம் தேவன் எனக்காக தன்னையே அர்ப்பணித்து செயல்படுத்தியது இந்த இரட்சிப்பை அசட்டை செய்தால் தண்டனைக்கு எப்படி தப்பித்துக்கொள்வோம்.......
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|