பேசாத குகை பேசியது
Tue Aug 11, 2015 12:41 am
இந்தக்கதை வயதில் சிறிய செல்லக் குட்டிகளுக்கு மட்டுமே.
முயல் ஒன்று தன் குடும்பத்துடன் காட்டில் இருந்த சிறிய குகையில் வசித்து வந்தது. தினமும் காலையில் குடும்பமாய் இரை தேட வெளியே செல்லும். மாலையில் வீடு திரும்பும். குகை மிகவும் மறைவான இடத்தில் இருந்ததால் அது எந்த ஆபத்துமில்லாமல் வாழ்ந்து வந்தது. அதனுடைய வாழ்க்கை சந்தோஷமாய் நகர்ந்தது.
ஒரு நாள் ஒரு ஓநாய் உணவு ஏதும் கிடைக்காமல் காட்டின் இண்டு இடுக்கெல்லாம் தேடியது. அப்போது அதன் கண்களில் முயல்கள் வசிக்கும் குகை பட்டுவிட்டது. "ஆகா ! சின்ன குகை. இதில் நிச்சயமாக சிறிய பிராணி எதாவது இருக்கும். இன்னிக்கு சாப்பாடு கிடைச்சாச்சு " என்றபடி குகைக்குள் நுழைந்து பார்த்தது.
ஆனால் அங்கு எதுவும் இல்லை. இருந்தாலும் அங்கு ஏதோ ஒரு பிராணி வசித்து வருகிறது என்பது மட்டும் ஓநாய்க்குப் புரிந்தது. எனவே அங்கேயே பதுங்கி இருந்து அந்தப் பிராணி வந்தவுடன் அதை விழுங்கி விடலாம் என்று முடிவு செய்து அங்கேயே இருந்தது. மாலை நேரம் வந்து விட்டது. முயல்கள் சந்தோஷமாய் குகையை நெருங்கின. முயல்களின் வாசனை ஓநாயின் மூக்கைத் துளைத்தது .
"ஆஹா. நாம காத்திருந்தது வீண் போகலை. இன்னிக்கு நமக்கு சரியான வேட்டைதான். இன்னும் கொஞ்சம் பக்கத்தில் வரட்டும். ஓரே பிடியில் முடிக்கிறேன் " என்று நாவில் நீர் வடியக் காத்திருந்தது. முயல்கள் உள்ளே நுழைய முற்படும் போது அப்பா முயல் தடுத்து விட்டது. காற்றில் ஏதோ ஒரு கொடிய மிருகத்தின் வாசனையை உணர்ந்து சைகையால் தன் குடும்பத்தினரைத் தடுத்து பின்புறமாக நகரச் சொன்னது . அதன் மனைவி, பிள்ளைகள் புரிந்து கொள்ளும்படி உள்ளே யாரோ எதிரி இருப்பதாக சைகையாலேயே உணர்த்தி விட்டு ஒரு தந்திரம் செய்து குகையை நோக்கிப் பேசியது.
" என்ன குகையே! வழக்கமாக நாங்கள் வந்தவுடனேயே "வாங்க வாங்க"ன்னு சொல்லுவியே. இன்னிக்கு என்ன பேசவே மாட்டேங்கிற? யாராவது இருக்காங்களா?" என்றது. ஓநாய்க்குத் தூக்கி வாரிப்போட்டது.
" நல்ல உணவு கிடைச்சாச்சுன்னு நினைச்சா இப்படியெல்லாம் நடக்குதே. இப்ப நாம அமைதியா இருந்தா காலைலேர்ந்து பட்ட பிரயாசமெல்லாம் வீணாப் போயிடுமே" என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தது. குரலைக் கொஞ்சம் மென்மையாக வைத்துக் கொண்டு சொன்னது,
" வாங்க வாங்க. கொஞ்சம் தொண்டை சரியில்லை. அதான். வாங்க. வேகமா உள்ளே வாங்க "
முயல் சந்தேகப்பட்டது சரியாகப் போயிற்று. "தப்பிச்சோம்டா சாமி" என்று குடும்பத்தோடு வேறொரு பாதுகாப்பான இடத்துக்கு ஓடி மறைந்தது.
செல்லமே! சத்துரு நம்மை விழுங்க எங்கு வேண்டுமானாலும் பதிவிருப்பான். ஆனாலும் நாம் ஆவியானவர் நம்முடைய மனதில் வெளிப்படுத்துவதை கவனித்து நடந்து கொண்டால் அவன் ஏமாந்து வெட்கப்பட்டுப் போவான்
முயல் ஒன்று தன் குடும்பத்துடன் காட்டில் இருந்த சிறிய குகையில் வசித்து வந்தது. தினமும் காலையில் குடும்பமாய் இரை தேட வெளியே செல்லும். மாலையில் வீடு திரும்பும். குகை மிகவும் மறைவான இடத்தில் இருந்ததால் அது எந்த ஆபத்துமில்லாமல் வாழ்ந்து வந்தது. அதனுடைய வாழ்க்கை சந்தோஷமாய் நகர்ந்தது.
ஒரு நாள் ஒரு ஓநாய் உணவு ஏதும் கிடைக்காமல் காட்டின் இண்டு இடுக்கெல்லாம் தேடியது. அப்போது அதன் கண்களில் முயல்கள் வசிக்கும் குகை பட்டுவிட்டது. "ஆகா ! சின்ன குகை. இதில் நிச்சயமாக சிறிய பிராணி எதாவது இருக்கும். இன்னிக்கு சாப்பாடு கிடைச்சாச்சு " என்றபடி குகைக்குள் நுழைந்து பார்த்தது.
ஆனால் அங்கு எதுவும் இல்லை. இருந்தாலும் அங்கு ஏதோ ஒரு பிராணி வசித்து வருகிறது என்பது மட்டும் ஓநாய்க்குப் புரிந்தது. எனவே அங்கேயே பதுங்கி இருந்து அந்தப் பிராணி வந்தவுடன் அதை விழுங்கி விடலாம் என்று முடிவு செய்து அங்கேயே இருந்தது. மாலை நேரம் வந்து விட்டது. முயல்கள் சந்தோஷமாய் குகையை நெருங்கின. முயல்களின் வாசனை ஓநாயின் மூக்கைத் துளைத்தது .
"ஆஹா. நாம காத்திருந்தது வீண் போகலை. இன்னிக்கு நமக்கு சரியான வேட்டைதான். இன்னும் கொஞ்சம் பக்கத்தில் வரட்டும். ஓரே பிடியில் முடிக்கிறேன் " என்று நாவில் நீர் வடியக் காத்திருந்தது. முயல்கள் உள்ளே நுழைய முற்படும் போது அப்பா முயல் தடுத்து விட்டது. காற்றில் ஏதோ ஒரு கொடிய மிருகத்தின் வாசனையை உணர்ந்து சைகையால் தன் குடும்பத்தினரைத் தடுத்து பின்புறமாக நகரச் சொன்னது . அதன் மனைவி, பிள்ளைகள் புரிந்து கொள்ளும்படி உள்ளே யாரோ எதிரி இருப்பதாக சைகையாலேயே உணர்த்தி விட்டு ஒரு தந்திரம் செய்து குகையை நோக்கிப் பேசியது.
" என்ன குகையே! வழக்கமாக நாங்கள் வந்தவுடனேயே "வாங்க வாங்க"ன்னு சொல்லுவியே. இன்னிக்கு என்ன பேசவே மாட்டேங்கிற? யாராவது இருக்காங்களா?" என்றது. ஓநாய்க்குத் தூக்கி வாரிப்போட்டது.
" நல்ல உணவு கிடைச்சாச்சுன்னு நினைச்சா இப்படியெல்லாம் நடக்குதே. இப்ப நாம அமைதியா இருந்தா காலைலேர்ந்து பட்ட பிரயாசமெல்லாம் வீணாப் போயிடுமே" என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தது. குரலைக் கொஞ்சம் மென்மையாக வைத்துக் கொண்டு சொன்னது,
" வாங்க வாங்க. கொஞ்சம் தொண்டை சரியில்லை. அதான். வாங்க. வேகமா உள்ளே வாங்க "
முயல் சந்தேகப்பட்டது சரியாகப் போயிற்று. "தப்பிச்சோம்டா சாமி" என்று குடும்பத்தோடு வேறொரு பாதுகாப்பான இடத்துக்கு ஓடி மறைந்தது.
செல்லமே! சத்துரு நம்மை விழுங்க எங்கு வேண்டுமானாலும் பதிவிருப்பான். ஆனாலும் நாம் ஆவியானவர் நம்முடைய மனதில் வெளிப்படுத்துவதை கவனித்து நடந்து கொண்டால் அவன் ஏமாந்து வெட்கப்பட்டுப் போவான்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|