சத்தியத்தில் ஒரு ஆத்துமாவை சரியாக நடத்தினால்
Tue Aug 11, 2015 12:27 am
விசுவாசிகள் சிலருக்கு ஒரு பழக்கம் உண்டு. கர்த்தரின் அன்பையும், சமாதானத்தையும் கண்டு ஈர்க்கப்பட்டு அவரிடம் வருபவர்களைத் தமது ஞானமில்லாத பேச்சினாலும், அவர்களின் பழைய வழிபாட்டு முறைகள் குறித்த விமர்சனங்களாலும் வெறுப்படையச் செய்து அவர்களின் ரட்சிப்புக்கு இடறல் உண்டாக்குகின்றனர் .
இதனால் அவர்கள் தமக்கும் பிரச்சினைகளைத் தேடிக் கொள்ளுவார்கள். இந்தக் கதை அவர்களுக்காகத்தான்.
விஞ்ஞான வளர்ச்சி அதிகமில்லாத காலம் அது.
அங்கே ஒரு மனிதன் தன்னுடைய வயலில் தனியாகப் புல் அறுத்துக் கொண்டிருந்தான். அப்போது கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று அவனது கட்டை விரலைக் கடித்து விட்டது. அது கடித்தால் ஒரு மணி நேரத்தில் மரணம் நிச்சயம். உதவிக்கோ யாருமே அருகில் இல்லை. அவன் நல்ல தைரியசாலி. தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் புல்லறுக்கும் அறிவாளால் சற்றும் தாமதிக்காமல் கடிபட்ட விரலை வெட்டி வீசிவிட்டான். அவனது உடனடி நடவடிக்கையால் விஷம் உடலெங்கும் பரவாமல் தடுக்கப்பட்டது. வெட்டப்பட்ட இடத்தில் வயலில் இருந்து மூலிகைகளை மென்று பற்றுப் போட்டுக் கொண்டு வைத்தியரிடம் ஓடினான்.
அவரும் விஷமுறிவுக்கும், வெட்டப்பட்ட விரலுக்கும் சக்தி வாய்ந்த மூலிகைகளை அரைத்துக் கட்டி, அவனது வீரத்தையும், புத்திசாலித்தனத்தையும் பாராட்டினார். பச்சிலையின் சக்தியால் ஒரே நாளில் அவனது வலி குறைந்தது. வேலை செய்து பழகிய சரீரம் வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. காலாற சற்று நடந்துவிட்டு வரலாம் என்று மீண்டும் வயலுக்குப் போனான். மனம் முழுவதும் தனது வீரத்தையும், புத்திசாலித்தனத்தையும் குறித்த பெருமை. பாம்பு கடித்த அதே இடத்துக்குப் போய் நின்று பார்த்தான்.
நேற்றைய தினம் வெட்டி வீசிய கட்டைவிரல் இப்போது விஷத்தால் கருத்து உப்பிக் கிடந்தது. அதைக் காலால் உதைத்தான். உப்பியிருந்ததால் வரப்பில் பட்டு பந்து போலத் திரும்பி வந்தது. தனது மன வலிமையைக் கண்டு அவனுக்கே பெருமை வந்தது. தைரியமாய் அதைக் கையிலெடுத்து அழுத்திப் பார்த்தான். வேடிக்கையாக இருந்தது. அவன் விளையாட்டாக இன்னும் பலமாக அழுத்த அதனுள்ளிருந்த விஷ திரவம் அவன் முகத்திலும், கண்ணிலும் பீய்ச்சி அடித்தது. அலறிய படியே கீழே சாய்ந்தான். கண்கள் வழியாய் விஷம் எளிதாகத் தலைக்கு ஏறிற்று. வாயில் நுரை தள்ளி இறந்து போனான்.
செல்லமே! சர்ப்பத்தின் தலை ஏற்கெனவே நசுக்கப் பட்டு விட்டது. நாம் பாவங்களுக்கு எச்சரிக்கையாக இருப்பது நல்லதுதான். ஆனால் விக்கிரகங்களைப் பொருட்டாக எண்ணி நாமும் தேவையில்லாமல் டென்ஷனாகி , புற ஜாதியினர் மனதிலும் காழ்ப்புணர்ச்சியை உண்டு பண்ணி ... தேவைதானா?
சத்தியத்தில் ஒரு ஆத்துமாவை சரியாக நடத்தினால் தேவையற்ற விஷயங்களை அது தானாகவே விலக்கும் இல்லையா?
இதனால் அவர்கள் தமக்கும் பிரச்சினைகளைத் தேடிக் கொள்ளுவார்கள். இந்தக் கதை அவர்களுக்காகத்தான்.
விஞ்ஞான வளர்ச்சி அதிகமில்லாத காலம் அது.
அங்கே ஒரு மனிதன் தன்னுடைய வயலில் தனியாகப் புல் அறுத்துக் கொண்டிருந்தான். அப்போது கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று அவனது கட்டை விரலைக் கடித்து விட்டது. அது கடித்தால் ஒரு மணி நேரத்தில் மரணம் நிச்சயம். உதவிக்கோ யாருமே அருகில் இல்லை. அவன் நல்ல தைரியசாலி. தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் புல்லறுக்கும் அறிவாளால் சற்றும் தாமதிக்காமல் கடிபட்ட விரலை வெட்டி வீசிவிட்டான். அவனது உடனடி நடவடிக்கையால் விஷம் உடலெங்கும் பரவாமல் தடுக்கப்பட்டது. வெட்டப்பட்ட இடத்தில் வயலில் இருந்து மூலிகைகளை மென்று பற்றுப் போட்டுக் கொண்டு வைத்தியரிடம் ஓடினான்.
அவரும் விஷமுறிவுக்கும், வெட்டப்பட்ட விரலுக்கும் சக்தி வாய்ந்த மூலிகைகளை அரைத்துக் கட்டி, அவனது வீரத்தையும், புத்திசாலித்தனத்தையும் பாராட்டினார். பச்சிலையின் சக்தியால் ஒரே நாளில் அவனது வலி குறைந்தது. வேலை செய்து பழகிய சரீரம் வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. காலாற சற்று நடந்துவிட்டு வரலாம் என்று மீண்டும் வயலுக்குப் போனான். மனம் முழுவதும் தனது வீரத்தையும், புத்திசாலித்தனத்தையும் குறித்த பெருமை. பாம்பு கடித்த அதே இடத்துக்குப் போய் நின்று பார்த்தான்.
நேற்றைய தினம் வெட்டி வீசிய கட்டைவிரல் இப்போது விஷத்தால் கருத்து உப்பிக் கிடந்தது. அதைக் காலால் உதைத்தான். உப்பியிருந்ததால் வரப்பில் பட்டு பந்து போலத் திரும்பி வந்தது. தனது மன வலிமையைக் கண்டு அவனுக்கே பெருமை வந்தது. தைரியமாய் அதைக் கையிலெடுத்து அழுத்திப் பார்த்தான். வேடிக்கையாக இருந்தது. அவன் விளையாட்டாக இன்னும் பலமாக அழுத்த அதனுள்ளிருந்த விஷ திரவம் அவன் முகத்திலும், கண்ணிலும் பீய்ச்சி அடித்தது. அலறிய படியே கீழே சாய்ந்தான். கண்கள் வழியாய் விஷம் எளிதாகத் தலைக்கு ஏறிற்று. வாயில் நுரை தள்ளி இறந்து போனான்.
செல்லமே! சர்ப்பத்தின் தலை ஏற்கெனவே நசுக்கப் பட்டு விட்டது. நாம் பாவங்களுக்கு எச்சரிக்கையாக இருப்பது நல்லதுதான். ஆனால் விக்கிரகங்களைப் பொருட்டாக எண்ணி நாமும் தேவையில்லாமல் டென்ஷனாகி , புற ஜாதியினர் மனதிலும் காழ்ப்புணர்ச்சியை உண்டு பண்ணி ... தேவைதானா?
சத்தியத்தில் ஒரு ஆத்துமாவை சரியாக நடத்தினால் தேவையற்ற விஷயங்களை அது தானாகவே விலக்கும் இல்லையா?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|