தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
காபாவில் இருந்து கல்வாரிக்கு என்ற புத்தகத்தில் இருந்து... Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

காபாவில் இருந்து கல்வாரிக்கு என்ற புத்தகத்தில் இருந்து... Empty காபாவில் இருந்து கல்வாரிக்கு என்ற புத்தகத்தில் இருந்து...

Thu Aug 06, 2015 12:10 pm
குலாம் காதிர் குரைஷி... (06/08/15)


காபாவில் இருந்து கல்வாரிக்கு என்ற புத்தகத்தில் இருந்து..


1960 ஆம் ஆண்டில் காஷ்மீரைச் சேர்ந்த Srinagar பட்டணத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து சில மாதங்கள் சில நற்செய்திப்பணியாளர்கள் சுவிசேஷத்தை அறிவித்துக்கொண்டு வந்தனர், நற்செய்தியை கவனித்துக் கேட்டவர்களில் குலாம் காதிர் குரைஷி என்பவரும் ஒருவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை (MA Lit ) பட்டம் பெற்ற இளைஞர். எதையும் கவனித்து ஆராய்ந்து அறிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர். ஒரு காரியத்தை உண்மை என்று கண்டால் அதை அவர் ஆமோதிக்கத் தயங்கினதில்லை. 


நல்ல குடும்ப சூழல், வசதியான வாழ்க்கை, கல்வியறிவு, அனுதின தொழுகை அப்பியாசங்கள் இருந்தபோதிலும் வாலிபத்தின் பாவங்களுக்கும் மனதில் ஆழ்ந்து கிடக்கிற குற்ற உணர்வுகளுக்கும் பிராயசித்த வழி தெரியாததினால் விழித்துக்கொண்டிருந்தபோதுதான் பரிசுத்த ஆவியானவர் இந்த நற்செய்திப்பணியாளர்கள் அறிவித்த வேதவாக்கியங்கள் மூலம் குரைஷியிடம் பேசத்தொடங்கினார் .வேதாகமத்தை வாங்கி வாசிக்கலானார், அவரது கண்கள் திறக்கப்பட்டன. 

மதத்தின் பெயரால் அவர் அடிமைபட்டு கிடந்த கட்டுகளிலிருந்து கிறிஸ்துவின் வார்த்தை அவரை விடுதலையாக்கிற்று. கிறிஸ்து இயேசுவே பாவத்திற்கு பரிகாரம், அவரால் மட்டுமே மீட்பு, கிறிஸ்து இயேசுவே சந்தேகங்கள் அனைத்திற்கும் பதில் தர இயலும் என திட்வட்டமாக அறிந்து தன் பாவங்களையும் தன் அறியாமையையும் அறிக்கை செய்து மனந்திரும்பி கிறிஸ்தவை இரட்சகராக ஏற்றுக்கொண்டார். 



இரட்சிக்கப்பட்டபின் தேவகிருபையிலும், வல்லமையிலும் நிறைந்து கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்ந்தார், கிட்டதட்ட ஓராண்டுக்குப்பின் நற்செய்திக்குழுவினர் நடத்திய பெரிய அளவிலான ஒரு திறந்த வெளிக் கூட்டத்தில் தன் சாட்சியை அறிவித்தார், அக்கூட்டம் Srinagar க்கு 20 மைல் தூரத்தில் நடந்தது .அக்கூட்டங்களுக்காக ஆயத்தம் செய்யும் போதிலிருந்தே இஸ்லாமிய போதகர்களிடமிருந்து தொடர்ந்து எதிர்புகள் வந்தவண்ணமாயிருந்தன.


கடும் எதிர்ப்புக்கு நடுவில் முதல் இரண்டு நாள் கூட்டங்கள் தடங்கலின்றி தேவகிருபையால் நடந்தேறியது. மூன்றாம் நாள் கூட்டத்தில் குரைஷி இயேசுவை ஏற்றுக்கொண்டதற்கான காரணத்தையும். இயேசு அவருக்கு செய்த நன்மைகளையும் அறிவிக்க வேண்டுமென்று ஆண்டவரால் ஏவப்பட்டார்.

 வழக்கமான பாடல் பகுதியும், ஜெப வேளையும் நிறைவேறியவுடன் குரைஷி மேடையில் ஏறி சாட்சி பகரத் தொடங்கினார், தன் குடும்ப சூழ்நிலைகளைப் பகிர்ந்துகொண்டு நான் கண்ட இஸ்லாமியர்களில் ஒருவராகிலும் பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றிருக்கமாட்டார்கள் ஏன் தீர்க்கதரிசி முகமது கூட இந்த அனுபவததை அடைந்திருக்கமுடியாது. குரானில் சொல்லப்பட்டுள்ள இறைவன் இயேசு கிறிஸ்துவிலே தான் வெளிப்பட்டிருக்கிறார் எனவும் கூறினார். இதைக் கேட்ட உணர்ச்சி வசப்பட்ட இஸ்லாமியர் சிலர் இவன் இஸ்லாம் மார்கத்தை காட்டிக்கொடுத்தவன்.. கல்லெறிந்து கொல்லப்படத்தக்க துரோகி எனக் கத்தினார்கள்.


குரைஷியோ உறுதியான தீர்மானத்துடன் “நீங்கள் என்னைக் கொன்று போட்டாலும் பிராதான துதனுடைய எக்காளம் தொனிக்கிறதை கேட்கிற அந்த நேரத்தில் தானே நான் மரணத்திலிருந்து உயிரோடு எழுந்து பரலோகத்திற்கு பறந்து செல்வேன். உங்களுக்கு அந்த நம்பிக்கை உண்டா?“ என்றும் கெர்ஜித்தார். 



இதுதான் அவரது சாட்சியத்தின் கடைசி வார்த்தைகள். நான்கு முரட்டு வாலிபர்கள் மேடைக்கு பின்னாலேயிருந்து வந்தனர். இமைப்பொழுதில் ஒருவன் கணமான இரும்புத்தடியால் குரைஷியின் பின்பக்கத்தில் பலமாக அடித்தான். மற்ற மூவரும் அவனுடன் சேர்ந்து கொண்டு குரைஷியை பலமாகத்தாக்கினர். குரைஷியை காப்பதற்காகவும், தாக்குதலில் இருந்து விடுவிக்கவும் நற்செய்திப் பணியாளர்கள் குறுக்கிட்டுத் தடுத்தனர். அவர்களில் இரண்டுபேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. பலத்த தாக்குதலுக்குள்ளான குரைஷி இரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். முழுக்கூட்டம் நிறுத்தப்பட்டது.

நற்செய்திப் பணியாளர்கள் துரிதமாய் குரைஷியை மருத்துவமனைககு எடுத்துச் சென்றனர். இரண்டு மணி நேரத்தில் அவர் தேவ ராஜ்ஜியம் போய்ச் சேர்ந்தார். ஆனால் குரைஷியின் “தேவ எக்காளமும் பிராதன துதனுடைய சத்தமும் தொனிக்கும் போது நான் மரித்தோரிலிருந்து எழுந்திருப்பேன். உங்களுக்கு அந்த நம்பிக்கை உண்டா?“ என்ற கடைசி வார்த்தைகள் சவாலாக அமைந்துவிட்டன. 


குலாம் காதிர் குரைஷி கிறிஸ்துவுக்காக இரத்தசாட்சியாய் மரித்ததினிமித்தம் அவரது பெற்றோர்களும் இரட்சிக்கப்பட்டனர் .ஆனால் விசுவாசத்தின் காரணமாக அவர்களும் தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. இப்போது முழுக்குடும்பமாக கிறிஸ்துவுக்குள் வாழ்கிறார்கள். பிற மதங்களிலிருந்து இரட்சிக்கப்படுவர்களின் பாதுகாப்பிற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். 

Whatsapp -daily devotional
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum