இயற்கையான முறையில் முகத்தைப் பராமரிக்க
Mon Jul 06, 2015 8:29 am
எனக்கு எண்ணெய்ப் பசை சருமம். இது வெயில் நேரம் என்பதால் முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிகிறது. பருக்கள் தொல்லையும் அதிகமாக இருக்கிறது. பருக்கள் குறைவதற்காக சில க்ரீம்களைப் பூசிசேன். அலர்ஜி ஏற்பட்டுவிட்டது. அதனால் இயற்கையான முறையில் முகத்தைப் பராமரிக்க ஆலோசனை சொல்லுங்கள்.
- ஸ்வேதா, சென்னை
ஸ்வேதாவின் பிரச்சினைக்குஆலோசனை வழங்குகிறார் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் எஸ். ரோஹிணி.
* கேரட் சாறுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசலாம்.
* சோற்றுக் கற்றாழை ஜெல்லையும், ஓட்ஸ் பவுடரையும் சேர்த்து முகப்பூச்சு போட்டு சிறிது நேரம் கழித்து கழுவினாலும் முகம் பளிச்சென்று மாறும்.
* பாதாம் பவுடரையும் தேனையும் சேர்த்து முகத்தில் பூசிவர பொலிவு கூடும்.
* வெள்ளைக் கருவுடன் புளிக்காத தயிர், தக்காளி சாறு சேர்த்து முகப்பூச்சு தயாரித்து பயன்படுத்தலாம்.
* ஆரஞ்சுப் பழத்தின் தோலைப் பவுடராக்கி, அதை ரோஸ் வாட்டர் கலந்து பூசிவந்தாலும் பலன் கிடைக்கும்.
* ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி சாற்றுடன், சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவிவர பருக்களும் கரும்புள்ளிகளும் நாளடைவில் மறையும்.
* உருளைக்கிழங்கு சாறும் முகத் துக்குப் பொலிவைத் தரும்.
* எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் இந்தக் கலவைகளை முகப்பூச்சாகப் பயன்படுத்தலாம். உலர் சருமம் உள்ளவர்களும், மற்றவர்களும் சாறாகப் பூசலாம். பத்து முதல் பதினைந்து நிமிடம் கழித்து முகத்தைக் கழுவிவிடலாம்.
- ஸ்வேதா, சென்னை
ஸ்வேதாவின் பிரச்சினைக்குஆலோசனை வழங்குகிறார் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் எஸ். ரோஹிணி.
* கேரட் சாறுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசலாம்.
* சோற்றுக் கற்றாழை ஜெல்லையும், ஓட்ஸ் பவுடரையும் சேர்த்து முகப்பூச்சு போட்டு சிறிது நேரம் கழித்து கழுவினாலும் முகம் பளிச்சென்று மாறும்.
* பாதாம் பவுடரையும் தேனையும் சேர்த்து முகத்தில் பூசிவர பொலிவு கூடும்.
* வெள்ளைக் கருவுடன் புளிக்காத தயிர், தக்காளி சாறு சேர்த்து முகப்பூச்சு தயாரித்து பயன்படுத்தலாம்.
* ஆரஞ்சுப் பழத்தின் தோலைப் பவுடராக்கி, அதை ரோஸ் வாட்டர் கலந்து பூசிவந்தாலும் பலன் கிடைக்கும்.
* ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி சாற்றுடன், சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவிவர பருக்களும் கரும்புள்ளிகளும் நாளடைவில் மறையும்.
* உருளைக்கிழங்கு சாறும் முகத் துக்குப் பொலிவைத் தரும்.
* எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் இந்தக் கலவைகளை முகப்பூச்சாகப் பயன்படுத்தலாம். உலர் சருமம் உள்ளவர்களும், மற்றவர்களும் சாறாகப் பூசலாம். பத்து முதல் பதினைந்து நிமிடம் கழித்து முகத்தைக் கழுவிவிடலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|