தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
வீட்டுக் குறிப்புக்கள் Counter

Go down
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

வீட்டுக் குறிப்புக்கள் Empty வீட்டுக் குறிப்புக்கள்

Fri Mar 08, 2013 8:27 am
ஈ தொல்லை ஒழிய:

டைனிங்டேபிள்
மீது ஒரு கிண்ணத்தில் சிறிதளவு புதினா இலையைப் போட்டு தண்ணீர் ஊற்றி
சிறிது உப்பையும் கலந்து வையுங்கள், ஈத் தொல்லை இருக்கவே இருக்காது.


லெதர் பொருட்கள் பளபளக்க:

தோலில் செய்த எந்தப் பொருளையும், பாலில் நனைத்த துணியால் துடைத்தால், நல்ல பளபளப்பாகி விடும்.



உப்புப் பாதிப்பிலிருந்து பாத்திரங்களை பாதுகாக்க:

உப்புத்தண்ணீரினால்
பாத்திரங்கள் வெள்ளையாக, சொர, சொரப்பாக இருந்தால், மோர் ஊற்றி வைத்து 4
முதல் 5 மணி நேரம் களித்து பாத்திரத்தை கழுவிப் பாருங்கள், பாத்திரம்
பளிச்சென்று மின்னும்.


மாவு அரைக்கீறீர்களா?:

மாவு மிஷினில்
மாவு அரைப்பதற்கு முன், சிறிதளவு அரிசியைப் போட்டு அரைத்தபின் எந்த மாவு
வேண்டுமானாலும் அரைக்கலாம். நமக்கு முன்பு கம்பு, கேழ்வரகு, கோதுமை,
பருப்பு அரைத்தாலும் கவலை வேண்டாம். மாவு சுத்தமாக இருக்கும்.


டீ.வி., ஃப்ரிட்ஜ், ட்யூப் லைட் டிப்ஸ்:

டீ.வி.,
ஃப்ரிட்ஜ், ட்யூப் லைட் போன்ற சாதனங்களின் ஸ்விட்ச்களை அணைத்தவுடனேயே
(மனம் மாறி) மீண்டும் போடாதீர்கள். ஃப்ரிட்ஜில் உள்ள கம்ப்ரசரும்,
டி.வியில் உள்ள பிச்சர் டியூப்பும், டியூப் லைட்டில் உள்ள பால்ஸ்டும்
இதனால் பாதிக்கப்பட்டு விரைவில் பழுதாகும்.


மூட்டைப்பூச்சி ஒழிய:

கற்பூரத்தைப்
பொடி செய்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் கரைத்து, பிரஷ்ஷில் எடுத்து
வீட்டிலுள்ள மரச்சாமான்களின் இடுக்குகளில் தடவினால் மூட்டைப்பூச்சி மற்றும்
சிறு சிறு பூச்சிகள் ஒழிந்து விடும்.


மல்லிகைப்பூ அதிக நாள் வாடாமல் இருக்க:

ஃபிரிஜ்ஜில்
கருவேப்பிலை, கொத்தமல்லி,வெற்றிலை மற்றும் மல்லிகைப்பூ போன்றவற்றை
அலுமினியம் ஃபாய்ல் கவரில் வைத்தால் பத்து நாட்கள் ஆனாலும் அழுகாது.


பூ வாடாமல் இருக்க:

மல்லிகைப்பூ
மாலையில் வாங்கி அடுத்தநாள் அப்படியே வாடாமல் இருக்க, ஒரு பாத்திரத்தை
நீரில் முக்கி எடுத்து அதில் பூக்களை வைத்து மூடி வைக்கவும். மறுநாள்வரை
பூக்கள் வாடாமல், மனம் குறையாமல் இருக்கும்.


புகைப் படங்களை பூச்சி அரிக்காமல் தடுக்க:

புகைப் படங்களை பூச்சி அரிக்காமல் தடுக்க, தண்ணீரில் கற்பூரத்தைக் கரைத்து புகைப் படங்களை துடைக்க வேண்டும்.


பித்தளை, வெள்ளிப்பாத்திரம் பளபளக்க:

பித்தளை,வெள்ளிப்பாத்திரங்கள்
கறுத்துக் காணப்பட்டால், அதற்கு சாதம் வடித்த கஞ்சியில் சிறிது நேரம்
ஊறவைத்து, பின் எடுத்துத் துலக்கினால் பாத்திரம் பளபளக்கும்.


பளிச்சிடும் வெண்மைக்கு:

பழுப்பேறிய
வெள்ளைத் துணிகளை வெண்மையாக்க அழுகிய எலுமிச்சை பழத்தையோ, நல்லதையோ
பிழிந்து சாறு எடுத்து கால் வாளித்தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து பின்
அலசி உலர்த்துங்கள். பிறகு பாருங்கள் வெண்மையை.


ஊருக்கு போகிறீர்களா?:

ஊருக்கு
போகும்போது கக்கூஸ், வாஸ்பேசின் ஆகியவற்றில் கொஞ்சம் பிணாயில் ஊற்றி
விட்டுச் செல்லுங்கள். தாங்கள் திரும்பி வரும்போது துர்நாற்றத்தை
தவிர்க்கலாம்.


பெயிண்ட் வாடை நீங்க:

புதிதாக அடித்த பெயிண்ட் வாடை நீங்க ஒரு வெங்காயத்தை நறுக்கி வீட்டின் நடுவே வைத்து விட்டால் பெயிண்ட் வாடை நீங்கும்.


பூச்சிகள் வராமல் தடுக்க:

புத்தகம்
வைக்கும் அலமாரி, டி.வி. ஸ்டாண்டு, பீரோ மற்றும் பொம்மைகள் வைக்கும்
"ஷோகேஸ்"களில் வசம்பு வாங்கி போட்டு விட்டால் ஆண்டுகள் ஆனாலும் பூச்சியும்
வராது, மணமும் தொடர்ந்து இருக்கும்.

தேங்காய் சமமாக உடைய:

தேங்காயை சிறிது நேரம் தண்ணீரில் ஊரவைத்து நடுவில் தட்டி உடைத்தால் சமமாக உடையும்.

விளக்கு அதிக நேரம் எரிய:

விளக்கு அதிக நேரம் எரிய, ஒரு ஸ்பூன் விளக்கெண்ணையும், நல்லெண்ணையும் கலந்து ஏற்ற வேண்டும்.

கொத்தமல்லி உபயோகம்:

சாதரணமாக
கொத்தமல்லி, கருவேப்பிலை போன்றவைளை ஒரு எவர் சில்வர் டப்பாவில் போட்டு
ஃபிரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை புதிதாகவே இருக்கும்.

எறும்பிடமிருந்து சர்க்கரையை காப்பாற்ற:

ஒரு
பூண்டுப் பல் எடுத்து கையினானேலேயே நசுக்கி மூடிப்பகுதிக்கு சற்று கீழே
வளையம் போல் சுற்றி தடவி விட்டால் எறும்புகள் அண்டவே அண்டாது.

தீப்பெட்டி ஈரமானால்:

தீப்பெட்டி ஈரமாகி நமத்துவிட்டால் அரிசி மாவை அதன் மீது தடவி விட்டுக் கொளுத்தினால் டக் என்று ஏற்ற வரும்.

ரோஜாச் செடி அழகாக பூக்க:

ரோஜாச் செடி அழகாக பூக்க, பீட்ரூட்டின் தோலையும், வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலையும் உரமாகப் போட வேண்டும்.


தேங்காய் எண்ணெய் உறைவதை தடுக்க:

குளிர்காலத்தில், ஆமணக்கு எண்ணெய் சில சொட்டு தேங்காய் எண்ணெயில் சேர்த்தால், எண்ணெய் உறைவதை தடுத்து எப்போதும் நீர்த்து இருக்கும்.


டிபன் பாக்ஸ் திறக்க:

டிபன் பாக்ஸ் திறக்க முடியவில்லை எனில், குழாய்த்தண்ணீரில் சிறிது நேரம் காண்பித்து பின்னர் முயற்சி செய்யுங்கள், எளிதாகும்


நன்றி: கொங்குசுரியன் blogspot .com
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum