கர்த்தரை தெய்வமாய் கொண்ட பெற்றோருக்கு அவசர மடல்.....
Wed Jun 17, 2015 8:30 am
தேவாதி தேவனால் சிருஷ்டிக்கபட்டதுதான் சூரியன். தொழுகைக்கு உரியவர் நம்மை படைத்த பரம்பொருளாம் கர்த்தர் (இயேசு) ஒருவரே. படைக்கபட்டவற்றை தொழுவது கடவுளுக்கு எதிரான கலகமாகும்.
சாத்தான் ஆதிமுதல் கலகம் செய்து வருகிறான். படப்பை வணங்க வற்புறுத்துகிறான்.
இப்போது யோகா என்கிற பெயரில் சூரியனை வணங்க உலகை எல்லாம் கூட்டி இணைப்பதை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது.
பள்ளிகூடங்களிலும் பிள்ளைகளை மூச்சு பயிற்ச்சி என்கிற போலி புனை பெயரை கொடுத்து சிருஷ்டியை தொழும்படி வஞ்சகமாய் செயல்படுகிறான்.
பெற்றோரே தேவ பிள்ளைகளாகிய நாம் நமது பிள்ளைகளுக்கு தானியேல் மற்றும் அவரது நண்பர்களின் பணிவையும் துணிவையும் கற்றுக் கொடுத்து சாத்தானுக்கு எதிரான யுத்தத்திற்கு தயார்படுத்தி மூச்சு பயிற்ச்சி என்கிற பெயரில் உலாவரும் சூரிய நமஸ்கார நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாம் என வலியுறுத்த வேண்டும்.கர்த்தர் தாமே உங்கள் இருதயத்தில் பேசுவாராக..
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|