லீ குவான் யூ - சிங்கப்பூரின் தந்தை
Thu Mar 26, 2015 12:22 am
சிங்கப்பூர் நிறுவனரும், சிங்கப்பூரைத் தோற்றுவித்த தந்தை என்றும் போற்றப்படும் 91 வயதான முன்னாள் பிரதமர் லீ குவான் யூ - மார்ச் மாதம் 23 ஆம் தேதி காலை 3:18 உயிர் நீத்தார்.
.
கடந்த பல வாரங்களாக நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3.18 மணிக்கு அமைதியான முறையில் அவரது உயிர் பிரிந்ததாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
.
லீ குவான் யூ (Lee Kuan Yew, பிறப்பு: 16 செப்டம்பர் 1923) சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் (1959 - 1990) ஆவார். இவரை சிங்கப்பூரின் தந்தை எனச் சொல்லுவர்.
.
1959 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவரின் மக்கள் செயல் கட்சி மொத்தமுள்ள 51 இடங்களில் 43 இடங்களில் வெற்றி பெற்றது. இவ்வெற்றியினால் 'லி குவான் யூ' ஜூன் 3 ஆம் நாள் 1959 -ல் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
.
இவர் சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியின் (PAP) நிறுவனர்களுள் ஒருவரும் ஆவார்.நவம்பர் 12 ஆம் நாள் 1954 ஆம் வருடம் மக்கள் செயல் கட்சியை நிறுவினார்.1959 முதல் 1990 வரை இவரது மக்கள் செயல் கட்சியை 7 முறை வெற்றிபெற வைத்தவர்.1990 - ல் மக்கள் செயல் கட்சியின் கோ சோக் தோங்கு பிரதமராக இருக்கும் போது இவர் அதில் ஒரு முதுநிலை அமைச்சராகப் பணியாற்றினார்.
.
பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த லீ க்வான் யூ, பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார். 1965 ல் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்த போது லீ குவான் யூ முக்கிய பங்காற்றினார்.
.
சிங்கப்பூரின் முதல் பிரதமராக பதவியேற்ற லீ குவான் யூ, 31 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். இவரது ஆட்சிக் காலத்தில்தான் அதுவரை துறைமுக நகரமாக அறியப்பட்ட சிங்கப்பூர் பிரம்மிக்கும் வகையில் வர்த்தக நகரமாக உருமாறியது.
.
லீ குவான் யூ பிரதமர் ஆட்சியில் இருந்து விலகிய பின்னரும் சிங்கப்பூரின் மிக முக்கியமான அரசியல்வாதியாக இருக்கிறார். பின்னர் 2004 முதல் 2011 வரை இவருக்காகவே உருவாக்கப்பட்ட மதியுரை அமைச்சர் (Minister Mentor) பதவியில் பணியாற்றினார். சிங்கப்பூர் சுதந்திரத்திற்கு முன்னான 1955 ஆம் ஆண்டு தேர்தலில் ' தஞ்சாங் பாகர் ' தொகுதியில் வென்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
.
கடந்த பல வாரங்களாக நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3.18 மணிக்கு அமைதியான முறையில் அவரது உயிர் பிரிந்ததாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
.
லீ குவான் யூ (Lee Kuan Yew, பிறப்பு: 16 செப்டம்பர் 1923) சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் (1959 - 1990) ஆவார். இவரை சிங்கப்பூரின் தந்தை எனச் சொல்லுவர்.
.
1959 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவரின் மக்கள் செயல் கட்சி மொத்தமுள்ள 51 இடங்களில் 43 இடங்களில் வெற்றி பெற்றது. இவ்வெற்றியினால் 'லி குவான் யூ' ஜூன் 3 ஆம் நாள் 1959 -ல் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
.
இவர் சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியின் (PAP) நிறுவனர்களுள் ஒருவரும் ஆவார்.நவம்பர் 12 ஆம் நாள் 1954 ஆம் வருடம் மக்கள் செயல் கட்சியை நிறுவினார்.1959 முதல் 1990 வரை இவரது மக்கள் செயல் கட்சியை 7 முறை வெற்றிபெற வைத்தவர்.1990 - ல் மக்கள் செயல் கட்சியின் கோ சோக் தோங்கு பிரதமராக இருக்கும் போது இவர் அதில் ஒரு முதுநிலை அமைச்சராகப் பணியாற்றினார்.
.
பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த லீ க்வான் யூ, பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார். 1965 ல் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்த போது லீ குவான் யூ முக்கிய பங்காற்றினார்.
.
சிங்கப்பூரின் முதல் பிரதமராக பதவியேற்ற லீ குவான் யூ, 31 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். இவரது ஆட்சிக் காலத்தில்தான் அதுவரை துறைமுக நகரமாக அறியப்பட்ட சிங்கப்பூர் பிரம்மிக்கும் வகையில் வர்த்தக நகரமாக உருமாறியது.
.
லீ குவான் யூ பிரதமர் ஆட்சியில் இருந்து விலகிய பின்னரும் சிங்கப்பூரின் மிக முக்கியமான அரசியல்வாதியாக இருக்கிறார். பின்னர் 2004 முதல் 2011 வரை இவருக்காகவே உருவாக்கப்பட்ட மதியுரை அமைச்சர் (Minister Mentor) பதவியில் பணியாற்றினார். சிங்கப்பூர் சுதந்திரத்திற்கு முன்னான 1955 ஆம் ஆண்டு தேர்தலில் ' தஞ்சாங் பாகர் ' தொகுதியில் வென்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
Re: லீ குவான் யூ - சிங்கப்பூரின் தந்தை
Thu Mar 26, 2015 12:27 am
முகநூல் பின்னுட்டங்கள்:
1. இலங்கை தமிழர் படுகொலைக்கு எதிராகவும், ராசபக்சேவுக்கு எதிராகவும் முழங்கிய முதல் உலகத் தலைவர். தமிழர்கள் அவர்கள் விரும்பும் விடுதலை அஅடையும் வரை ஓயமாட்டார்கள் என்று கூறியவர். தமிழுக்கும், தமிழருக்கும் அளப்பரிய பல நன்மைகள் செய்தவர். பார்பனர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட ஆரிய அடிமை சாதிய முறையே இந்திய வளர்ச்சிக்கு தடைக்கல் என்ற நுட்பமான கருத்தை பதிவு செய்தவர்.
Read this link about LKY.s comment about caste system in India.http://belfercenter.ksg.harvard.edu/.../india_is_a_nation...
India is a Nation of...
BELFERCENTER.KSG.HARVARD.EDU
2. மலேசியா, இஸ்லாமியர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொல்லியபோது அதை எதிர்த்து எல்லா மக்களுக்கும் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும்.. இனம்,மொழி,மதம் எதுவும் பாராது எல்லா மக்களும் இந்நாட்டு பிள்ளைகளே என்று கூறி சிங்கப்பூரை தோற்றுவித்த தந்தை... இன்று சிங்கப்பூர் ஆசியாவிலேயே மிகச் சிறந்த நாடாகத் திகழ்கிறது. மதவெறிக் கொண்ட மலேசியா நாளுக்கு நாள் கவலைக்கிடமான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது.
1. இலங்கை தமிழர் படுகொலைக்கு எதிராகவும், ராசபக்சேவுக்கு எதிராகவும் முழங்கிய முதல் உலகத் தலைவர். தமிழர்கள் அவர்கள் விரும்பும் விடுதலை அஅடையும் வரை ஓயமாட்டார்கள் என்று கூறியவர். தமிழுக்கும், தமிழருக்கும் அளப்பரிய பல நன்மைகள் செய்தவர். பார்பனர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட ஆரிய அடிமை சாதிய முறையே இந்திய வளர்ச்சிக்கு தடைக்கல் என்ற நுட்பமான கருத்தை பதிவு செய்தவர்.
Read this link about LKY.s comment about caste system in India.http://belfercenter.ksg.harvard.edu/.../india_is_a_nation...
India is a Nation of...
BELFERCENTER.KSG.HARVARD.EDU
2. மலேசியா, இஸ்லாமியர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொல்லியபோது அதை எதிர்த்து எல்லா மக்களுக்கும் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும்.. இனம்,மொழி,மதம் எதுவும் பாராது எல்லா மக்களும் இந்நாட்டு பிள்ளைகளே என்று கூறி சிங்கப்பூரை தோற்றுவித்த தந்தை... இன்று சிங்கப்பூர் ஆசியாவிலேயே மிகச் சிறந்த நாடாகத் திகழ்கிறது. மதவெறிக் கொண்ட மலேசியா நாளுக்கு நாள் கவலைக்கிடமான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|