தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
மன்னிக்கும் மனப்பான்மை...... Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மன்னிக்கும் மனப்பான்மை...... Empty மன்னிக்கும் மனப்பான்மை......

Thu Mar 26, 2015 12:00 am

நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். - (கலாத்தியர். - 5:15).

ஜெர்மன் நாட்டில் போபன்ஷோசன் என்ற இடத்தில் பழங்கால மடாலயம் ஒன்றுண்டு. இன்று அது சுற்றுலா பயணிகள் வந்து போகும் இடமாக உளளது. இங்குள்ள ஒரு அறையில் மான் கொம்புகள் இரண்டு ஜோடி இருப்பதை காணலாம். ஓன்றோடென்று பின்னப்பட்ட இரண்டு ஜோடி மான் கொம்புகள் இருப்பதைக் காணலாம்.

 அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காட்டுப்;பகுதியில் கிடைக்க பெற்றன. அநேகமாக இரண்டு மான்கள் ஒன்றோடொன்று முட்டி சண்டையிட்டபோது பிரிக்க முடியாதபடி கொம்புகள் சிக்கி கொண்டிருக்க கூடும். பின்பு சிக்கிய நிலையில் புல் மேயாதபடி தண்ணீர் குடிக்க முடியாதபடி அவ்விரண்டும் உயிர் இழந்திருக்க கூடும். அந்த மான்கள் கொஞ்சம் விட்டு கொடுத்து இரண்டும் சேர்ந்து புல் மேயவும், தண்ணீர் குடிக்கவும் முயற்சித்திருக்குமானால், ஒரு வேளை உயிர் பிழைத்திருக்கலாம். ஏன் கொம்புகளின் சிக்குண்ட நிலை கூட விடுபட்டிருக்கலாம். ஆனால் பரிதாபம் அவை மரித்து போயின.

இந்த மான்கள் இரண்டும் முட்டி மோதி சிக்குண்டு அழிந்தது போல இன்றைய சமுதாயத்தில் மனிதர்களுக்குள்ளும் இப்படிப்பட்ட சம்பவங்களை பார்க்கிறோம். 

பள்ளிகளில் மாணவர்களுக்குள் பிரச்சனை, தொழிற்சாலைகளில் வேலை செய்வோர்களுக்குள் பிரச்சனை, வீட்டிற்குள் கணவன் மனைவி, பிள்ளைகளுக்குள் பிரச்சனை என்று அடுக்கிகொண்டே போகலாம். இப்படி பிரச்சனை உருவாகும்போது, ஒருவர் மற்றவரை மன்னிக்க முடியாமல் கோபமும், சண்டைகளும் எழுகின்றன. அந்த சண்டை சச்சரவுகள் ஓய்ந்த பின்பும் ஒருவரையொருவர் மன்னிக்க முடியாமல் கசப்பிலே தங்கள் வாழ்க்கையை கழிக்கின்றனர்.

இப்படி இரு நபர்களுக்குள் கசப்புகள் இருக்கும்போது, ஒருவர் மற்றவர் தன்னிடம் வந்து மன்னிப்பு கேட்கவேண்டுமென்று எதிர்பார்த்து காலத்தை கசப்புடனே கழிக்கின்றனர். 

இச்செய்தியை வாசிக்கும் அருமையானவர்களே, 

உங்களுக்கும் மற்ற யாருடனாவது பிரச்சனை பிரிவினை உண்டா? அந்த மான்களின் நிலையைப் போல நீங்களும் வாழ்க்கையில் சிக்குண்டு சமாதானத்தை இழந்து காணப்படுகிறீர்களா? இதற்கு ஒரு தீர்வு உண்டு. அது என்ன? பாதிக்கப்பட்ட நீங்கள் முதலாவது சென்று மற்ற நபரிடம் மன்னிப்பு கேட்டு பாருங்களேன்.

 நீங்கள் ஒப்புரவாக விரும்புவது போல அந்த நபரும் ஒப்புரவாக வாஞ்சையாயிருப்பதை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். ஒருவேளை அந்த நபர் சமாதானத்திற்கு உடன்பட மறுத்தாலும் அவரிடம் தாழ்ந்து போனதினால் உங்கள் இருதயம்; சமாதானத்தினால் நிரம்பும். பிறர் குற்றத்தை நான் மன்னித்தது போல ஆண்டவரே என்னையும் மன்னியும் என்று தைரியமாய் தேவனை நோக்கி ஜெபிக்கலாம். கொஞ்சகாலம் வாழப்போகும் இந்த பூமியில் பிறர் மேல் உள்ள கசப்புணர்வுகளை களைந்து மனதார மன்னித்து சமாதானத்தோடு வாழ பிரயாசமெடுப்போம்.

வேதாகமத்தில் இரு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனை எப்படி தீர்ந்தது என்று பார்ப்போம். யாக்கோபு தன் சகோதரன் ஏசாவையும், தன்தகப்பனையும் ஏமாற்றி, ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டு, தன் மாமனாகிய லாபானிடத்திற்கு ஓடி, அங்கு இருபது வருஷம் இருந்து விட்டு திரும்ப வீடு திரும்பும் நேரத்தில், தன் சகோதரனாகிய ஏசா தன்னை என்ன செய்வானோ என்று பயந்தவனாக செல்லும் நேரத்தில், 'என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன்' என்று கர்த்தரிடம் பாதுகாவலை கேட்டு ஜெபித்து, 'அன்று ராத்திரி அவன் அங்கே தங்கி, தன் கைக்கு உதவினவைகளிலே தன் சகோதரனாகிய ஏசாவுக்கு வெகுமானமாக, இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும், பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும், அவைகளின் குட்டிகளையும், நாற்பது கடாரிகளையும், பத்துக் காளைகளையும், இருபது கோளிகைக் கழுதைகளையும், பத்துக் கழுதைக்குட்டிகளையும் பிரித்தெடுத்து, தன் வேலைக்காரனிடத்தில் கொடுத்து, இது உமது அடியானாகிய யாக்கோபுடையது; இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி; இதோ, அவனும் எங்கள் பின்னே வருகிறான் என்று சொல்' என்றான். பின்னர் அவன் ஏசாவை கண்டபோது, தான் தன் பிள்ளைகள், மனைவிகளுக்கு முன்னாக நடந்துபோய், ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான். அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள் (ஆதியாகமம் 32-33).

 இருவரும் ஒருவரையொருவர் மன்னித்து, சந்தோஷமாய் தங்கள் இடங்களுக்கு திரும்பி போனார்கள் என்று பார்க்கிறோம். ஒருவேளை ஏசா யாக்கோபை மன்னியாதிருந்திருந்தால், அந்த இடத்திலே தானே, யாக்கோபின் கோத்திரம் அழிந்திருக்கும். இஸ்ரவேலின் சந்ததி இல்லாமல் போயிருந்திருக்கும், கிறிஸ்து உலகிலே தோன்றாதபடி தடை ஏற்பட்டிருக்கும். தேவன் அப்படி நேரிடாதபடி, ஏசா யாக்கோபை மன்னிக்க கிருபை செய்தார்.

நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஆனால் ஒருவரையொருவர் மன்னித்து வாழ்ந்தால், நிச்சயமாகவே செழிப்பீர்கள். நாம் ஒருவரையொருவர் மன்னித்து, சந்தோஷமாய் வாழ தேவன் தாமே கிருபை செய்வாராக! 

நன்றி: தேவனுடைய சத்தம்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மன்னிக்கும் மனப்பான்மை...... Empty Re: மன்னிக்கும் மனப்பான்மை......

Thu Mar 26, 2015 12:02 am
ஒரு சிறிய ஆய்வு

உனக்காக நான் மரித்தேனே நீ எனக்காக என்ன செய்தாய் என்று இயேசு கேட்டால் என்ன பதில் சொல்லப்போகின்றோம்? சிந்திப்போமா?

இயேசு கேட்கின்றார்

மகனே ! மகளே !

எனக்காக ஒரு மணிநேரம் விழித்து இருந்து ஜெபிப்பாயா ?
நாம் தினம் ஜெபிகின்றோமா ?
நான் உன்னோடு தினமும் பேச விரும்புகிறேன் ,
நாம் தினம் வேதம் வாசிகின்றோமா ?
நீ எனக்கு கீழ்ப்படிகின்றாயா? என் சித்தம் செய்கின்றாயா ?
எத்தனை பேருடன் ஒப்புரவானாய் ,?
உன் சகோதரனிடத்தில் மன்னிப்பு கேட்டாயா?
உன்னிமித்தம் காயப்பட்டவர்கள் எத்தனை பேர் அவர்களிடம் உன்னை தாழ்த்தி மன்னிப்பு கேட்டாயா?
எனக்காக நீ வேறு பிரிந்து ஜீவிக்கின்றாயா ?
இப்படி ஆண்டவர் கேட்டால் நம்மிடம் சரியான பதில் உண்டா ?

இந்த கேள்விகள் எல்லாவற்றிற்கும் கடந்த வார செய்திகளில் இருக்கின்றது,
மேலே 7 கேள்விகள் இருக்கின்றன 7 கேள்விக்கும் ஆம் என்று ஒருவராலும் பதில் சொல்ல முடியாது ,

கடைசியில் இருக்கின்ற 4 கேள்விகளுக்கும் யாராலும் பதில் சொல்ல முடியாது , எங்கே பார்த்தாலும் சண்டை , விரோதம் , பகை .

யார் தான் செய்தது தவறு என்று மற்றவர்கள் சொல்லாமல் உணர்ந்து மன்னிப்பு கேட்டு ஒப்புரவாகி சமாதானம் செய்கின்றார்கள்,
ஒப்புறவாகாமல் ஒருவரும் பரிசுத்த இராப்போஜனம் எடுக்க கூடாது, நல்ல சண்டை போட்டுட்டு வருட கணக்கில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொள்ள மாட்டார்கள் , ஆனால் திருவிருந்து எடுக்க முதல் ஆளாக இருப்பார்கள் ,

மத்தேயு 5:9 சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.

தேவனுடைய பிள்ளைகளாக நாம் மாற வேண்டுமானால் யாவரோடும் சமாதானமாக இருக்க வேண்டும் , ஒருவர் முகத்தை பார்த்து நாம் பேச தயங்கினால் நாம் எப்படி தேவனுடைய பிள்ளை என்று சொல்ல முடியும். ஒரு மனிதனுடைய முகத்தை நேரே பார்த்து நம்மால் பேச முடியவில்லையானால் நிச்சயம் நாம் தேவனுடைய இராஜ்ஜியத்தை காண முடியாது,

அவருக்காக வேறுபிரிந்து வாழ முடியவில்லை ,

வாயில் சொல்கின்றோம் , ஆண்டவரே உங்கள் சித்தம் செய்வேன் /செய்கின்றேன் என்று 

ஆனால் எனக்காக உன் தகப்பன் வீட்டை விட்டு நான் உனக்கு காண்பிக்கும் தேசத்துக்கு போ என்று சொல்வாரானால் ,

ஆண்டவரே நான் எப்படி போக முடியும் எனக்கு எவ்வளவு பொறுப்புகள் இருக்கு இதையெல்லாம் விட்டுவிட்டு எப்படி போக முடியும் என்று ஆண்டவரை கேள்வி கேட்கின்றோம்,
இப்படி எல்லாம் கேள்வி கேட்டு ஜீவித்தால் தேவனுக்கு நாம் பிள்ளைகளாக முடியுமா ? நாம் அவருடைய பிள்ளையானால் சொன்னதற்கு மறு பதில் பேசாமல் செய்து முடிக்க வேண்டும் ,
இந்த சிறிய காரியங்களை ஆண்டவருக்காக செய்ய தவறும் பொழுது எப்படி நாம் அவருக்கு சாட்சிகளாக வாழப்போகின்றோம்,
ஒப்புறவாகுதல் , மன்னிப்பு என்ற செய்திகள் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கின்றது , தேவனுக்கு ஸ்தோத்திரம் அவர் நாமம் மகிமை படுவதாக. ஆமென்

நன்றி: தேவனுடைய சத்தம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum