பாஜகவின் நிர்வாகிகளுக்கான வினாடி வினா நிகழ்ச்சி
Fri Mar 20, 2015 10:42 pm
இன்றைக்கு பாஜகவின் நிர்வாகிகளுக்கான வினாடி வினா நிகழ்ச்சி. முதுகெலும்புள்ள யாராவது ஒருவர் பதில் சொல்லட்டும்!
1. புதிய தலைமுறை தொலைக் காட்சியின் தாலி பற்றிய நிகழ்ச்சிக்கு இதுவரை பாஜக மறுப்போ எதிர்ப்போ காட்டாதது ஏன்?
2. இதுவரை மத்தியில் இருந்து வாங்கிய தேர்தல் செலவிற்கு கணக்கு காட்டியாகி விட்டதா? (நாம் அறிந்தவரை ஒவ்வொரு எம்பி தொகுதிக்கும் 3சி கொடுக்கப் பட்டதாகத் தகவல். எல்லாம் ஸ்வாகாவா?)
3. எங்க ஊர் அஞ்சாம்பு பையன் கிச்சாவின் தெரு கிரிக்கெட் டீமின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்கும் சங் பரிவார் எனும் தமிழ் நாட்டின் அமைப்பினை கட்டுப்படுத்துவது யார்? பாஜகவா இல்லை அந்த அமைப்பிற்கு புதியதாக சேர்ந்து விஷ வித்துக்களை விதைக்கொண்டு இருக்கும் அந்த புதிய அல்லக்கையா?
4. கமலாலயம் எனும் பாஜகவின் சொத்து ஏன் கட்சியின் பெயரில் இல்லாமல் தனிப்பட்ட நபரின் பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டு உள்ளது? ஏதாவது கட்சியோடு பிரச்சனை வந்தால் இடத்தோடு நகர்ந்து இடம் பெயரலாம் எனும் நப்பாசையா? (இது நடக்காது என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்! முன்பு தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் பா. ராமச்சந்திரன் காமராஜர் மறைவுக்குப் பின் சத்திய மூர்த்தி பவனோடு இந்திரா காங்கிரசில் அடைக்கலம் ஆனார். பரிசாக அவருக்கு 5 ஆண்டுகால கவர்னர் பதவி கிடைத்தது)
5. தமிழ் நாடு பாஜக வில் நாடார்களைத் தவிர யாரும் இல்லையா? ஏன் மீண்டும் மீண்டும் பதவிகள் அவர்களுக்கே கிடைக்கிறது?
6. புதிய தலைமுறை தொலைக் காட்சியை எதிர்த்தால், அந்த நிறுவன முதலாளி மூலம் சும்மா கிடைக்கும் 7 MBBS சீட்டுகள் பறிபோகும் என்று பயந்தா இதுவரை பாஜக நிர்வாகிகள் இதுவரை வாய் மூடிக் கொண்டு சும்மா இருக்கிறார்கள்?
அய்யா தமிழ் பெருமக்களே! இந்த கட்சி உங்களுக்காக எதுவும் செய்யவில்லை. கட்சியைப் பயன் படுத்தி சொந்த லாபத்தை அதிகரித்துக் கொள்ளும் ஒரு கூட்டத்திடம் கட்சி மாட்டிக் கொண்டு இருக்கிறது. இதற்காக நான் பாஜகவின் தொண்டன் என்று சொல்லிக் கொள்ளவில்லை. மோடியின் கையாலாகத்தனத்தை பார்த்து பார்த்து சிரித்துக் கொண்டு இருப்பவர்களில் நானும் ஒருவன்.
யாராவது பதில் சொல்லுங்களேன்! மக்கள் தெரிந்து கொள்ளட்டும்!
- டி பெட்
1. புதிய தலைமுறை தொலைக் காட்சியின் தாலி பற்றிய நிகழ்ச்சிக்கு இதுவரை பாஜக மறுப்போ எதிர்ப்போ காட்டாதது ஏன்?
2. இதுவரை மத்தியில் இருந்து வாங்கிய தேர்தல் செலவிற்கு கணக்கு காட்டியாகி விட்டதா? (நாம் அறிந்தவரை ஒவ்வொரு எம்பி தொகுதிக்கும் 3சி கொடுக்கப் பட்டதாகத் தகவல். எல்லாம் ஸ்வாகாவா?)
3. எங்க ஊர் அஞ்சாம்பு பையன் கிச்சாவின் தெரு கிரிக்கெட் டீமின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்கும் சங் பரிவார் எனும் தமிழ் நாட்டின் அமைப்பினை கட்டுப்படுத்துவது யார்? பாஜகவா இல்லை அந்த அமைப்பிற்கு புதியதாக சேர்ந்து விஷ வித்துக்களை விதைக்கொண்டு இருக்கும் அந்த புதிய அல்லக்கையா?
4. கமலாலயம் எனும் பாஜகவின் சொத்து ஏன் கட்சியின் பெயரில் இல்லாமல் தனிப்பட்ட நபரின் பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டு உள்ளது? ஏதாவது கட்சியோடு பிரச்சனை வந்தால் இடத்தோடு நகர்ந்து இடம் பெயரலாம் எனும் நப்பாசையா? (இது நடக்காது என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்! முன்பு தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் பா. ராமச்சந்திரன் காமராஜர் மறைவுக்குப் பின் சத்திய மூர்த்தி பவனோடு இந்திரா காங்கிரசில் அடைக்கலம் ஆனார். பரிசாக அவருக்கு 5 ஆண்டுகால கவர்னர் பதவி கிடைத்தது)
5. தமிழ் நாடு பாஜக வில் நாடார்களைத் தவிர யாரும் இல்லையா? ஏன் மீண்டும் மீண்டும் பதவிகள் அவர்களுக்கே கிடைக்கிறது?
6. புதிய தலைமுறை தொலைக் காட்சியை எதிர்த்தால், அந்த நிறுவன முதலாளி மூலம் சும்மா கிடைக்கும் 7 MBBS சீட்டுகள் பறிபோகும் என்று பயந்தா இதுவரை பாஜக நிர்வாகிகள் இதுவரை வாய் மூடிக் கொண்டு சும்மா இருக்கிறார்கள்?
அய்யா தமிழ் பெருமக்களே! இந்த கட்சி உங்களுக்காக எதுவும் செய்யவில்லை. கட்சியைப் பயன் படுத்தி சொந்த லாபத்தை அதிகரித்துக் கொள்ளும் ஒரு கூட்டத்திடம் கட்சி மாட்டிக் கொண்டு இருக்கிறது. இதற்காக நான் பாஜகவின் தொண்டன் என்று சொல்லிக் கொள்ளவில்லை. மோடியின் கையாலாகத்தனத்தை பார்த்து பார்த்து சிரித்துக் கொண்டு இருப்பவர்களில் நானும் ஒருவன்.
யாராவது பதில் சொல்லுங்களேன்! மக்கள் தெரிந்து கொள்ளட்டும்!
- டி பெட்
Re: பாஜகவின் நிர்வாகிகளுக்கான வினாடி வினா நிகழ்ச்சி
Fri Mar 20, 2015 10:49 pm
திரு எஸ் வி சேகர்!
புதிய தலைமுறை விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக சேகருக்கு எதிராக ஒரு சில அல்லக் கைகள் கிளப்பி இருக்கின்றனர்! எனது கேள்விகள் அந்த அல்லக் கைகளுக்காக!
1. முதலில் நீங்கள் யார்? உங்களுக்கும் பாஜகவிற்கும் என்ன சம்மந்தம்? சங் பரிவார் எனும் அமைப்பின் பெயரில் எதிர்ப்பை கிளப்பும் உங்களின் பின்னணி என்ன? உங்களின் அமைப்பை தநா பாஜக அங்கீகரித்துள்ளதா? உங்களின் தொண்டர்கள் எண்ணிக்கை 230 ஐயும் தாண்டி மேலும் வளர்ந்துள்ளதா?
சேகருக்கு உள்ள சொந்தக் காரர்கள் எண்ணிக்கை மந்தைவெளியில் மட்டுமே 680 பேர். உங்களின் சங்கத்தை விட அதிகம்.
2. தாலி பற்றிய உங்களின் செண்டிமெண்ட் வரவேற்கத் தக்கதே. ஆனால் வாலெண்டைன்ஸ் டே அன்று நாய்க்கும் கழுதைக்கும் தாலி கட்டி கல்யாணம் செய்வித்த உங்களின் கூட்டத்திற்கு தாலி குறித்து விவாதம் நடத்தக் கூடாது எனும் உரிமை எங்கிருக்கிறது? தாலியை கழுதைக்கு கட்டியதின் மூலம் தாலி கட்டிய பெண்கள் கழுதைக்குச் சமம் என்று சொல்லாமல் சொல்லிய உங்கள் கூட்டம் தமிழ் பெண்களை அவமானப் படுத்தவில்லையா?
3. புதிய தலைமுறை நிர்வாகிகளைப் பாராட்டுகிறேன். ஒரு நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு என்று தெரிந்த அந்த கணமே அவர்கள் அதை ஒளிபரப்பாமல் நிறுத்தி விட்டார்கள். அவர்கள் மேலானவர்களா? இல்லை ஓலைப் பட்டாசை பேடிகள் போல அவர்கள் அலுவலகம் முன்பு வெடிகுண்டு எனும் பெயரில் வெடித்து தற்காலிகப் பெருமை கொண்ட உங்கள் கூட்டம் பெரியதா? இந்த நிகழ்விற்கு பாஜகவினர் ஆதரவு தந்தனரா? உங்களை அங்கீகரித்துள்ளனரா? முதலில் அதைக் கூறுங்கள்!
4. எனக்குத் தெரிந்து முதுகெலும்புள்ள ஒரு சில தமிழர்களில் (உதாரணம் T N சேஷன், சோ, கோபால்சாமி...) திரு சேகர் அவர்கள் ஒருவர். தனக்கு சரி என்று பட்டதை தெளிவாகச் செய்வார்! அவர் விரும்பி இருந்தால் அதிமுகவின் பதவி சுகத்தில் திளைத்திருக்கலாம். ஆனால் தன்மானத்திற்கு இழுக்கு வந்தபோது, அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார். காரணம் உங்களுக்கு தெரியும். அவர் கலைஞர் அவர்களை சந்தித்தை ஜெ விரும்பவில்லை. அது ஒன்றே காரணம். இந்த நிலையில் உங்களுக்கு நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். அரசியலில் அனைத்து தரப்பினருக்கும் மரியாதை கொடுக்கும் ஒரே கட்சி திமுகதான். நான் திமுக காரன் அல்ல. ஆனாலும் உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும். அவர்கள் எந்த விதத்திலும் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்க மாட்டார்கள். உண்மையில் திமுக ஜென்டில்மேன் கட்சி.
நான்கு நாட்களுக்கு முன் அவர் தணிக்கை குழு அதிகாரிகள் சரியான விதத்தில் நடந்து கொள்ளவில்லை என்பதற்காக அவர் அந்தக் குழுவின் கூட்டத்தைப் புறக்கணித்தது எத்தனை பேருக்குத் தெரியும். பெருமைப் படுங்கள், தன்மானத்திற்கு இழுக்கு வரும்போது எதிர்ப்பைத் தெரிவிக்கும் தமிழன் அவர் என்று!
5. சேகர் அவர்களின் உரிமை தொலைக் காட்சியில் பேச வேண்டுமா வேண்டாமா என்பது. அதற்கான கட்டுப்பாட்டை விதிக்க வேண்டியது கட்சித் தலைமை மட்டுமே! ஆனால் தநாட்டில் அப்படி ஒரு ஒழுங்கான நிர்வாகம் இருக்கிறதா? ஏதாவது ஒரு கோரம் இருக்கிறாதா? அல்லது போகவேண்டும் வேண்டாம் என்று சொல்லும் ஒரு தலைமையாவது இருக்கிறதா? இங்கே நண்டின் காலை நண்டு இழுப்பது போல அல்லவா உள்ளுக்குள் நடந்து கொண்டு இருக்கிறது! அவர்களின் சுய நல அரசியல் மட்டும் அல்லவா அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
6. சேகர் போன்றவர்கள் கட்சிக்குள் வந்தது கட்சிதான் பெருமை பட வேண்டும். அவராத்தான் உள்ளே வந்தார். அவரை யாரும் இழுக்கவில்லை. அவர் கட்சிக்குள் வரக்கூடாது என்று தடுத்தவர்கள் எத்தனை பேர்? அவருக்கு தணிக்கைக் குழு பதவி கிடைத்ததும் வயிறு எறிந்தவர்கள் எத்தனை பேர்? மோடி யின் முடிவு என்பதால் வாய் பொத்திக் கொண்டு இருந்தார்கள். இல்லை என்றால் இவரை நடுவீதி வரை அவமானப் படுத்தி இருப்பார்கள்.
7. அரசியலுக்கு அப்பால், அவர் செய்யும் நல்ல காரியங்களும் பலர் அறியாததே. நானெல்லாம் அவரின் சினிமா கிளாமருக்காக அவருடன் நடுப்பு பாராட்டவில்லை. அவர் செய்யும் நல்ல காரியங்களில் எனது பங்களிப்பு எதையாவது செய்ய வேண்டும் என்றே அவருடன் இன்றளவும் நட்பது பாராட்டி வருகிறேன். சேகர் அவர்களை இன்று நேற்றல்ல, 1976 முதல் எனது நண்பர். அவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே நல்ல நண்பர். அவர் போன்றவர்களை அசிங்கப் படுத்த நினைக்கும் கும்பலின் சவால்களை நான் நிச்சயம் எதிர் கொள்வேன்.
8. தினசரி இறைவணக்கம், மது அருந்தாமை, பிறன் மனை நோக்காமை, தரும சிந்தனை, கலைத்துறையில் முத்திரை, இதுவே அவரை விரும்புபவர்கள் உட்கொண்ட குணங்கள்.
அல்லக் கைகளே! எதிர்க்கும் முன் உங்களின் குணாதிசயங்களை அவரின் குணங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து பின்னர் அதை செய்வதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறதா என்று சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்!
- டி பெட் -
நன்றி: டிமிடித் பெட்கோவ்ஸ்கி - முகநூல்
புதிய தலைமுறை விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக சேகருக்கு எதிராக ஒரு சில அல்லக் கைகள் கிளப்பி இருக்கின்றனர்! எனது கேள்விகள் அந்த அல்லக் கைகளுக்காக!
1. முதலில் நீங்கள் யார்? உங்களுக்கும் பாஜகவிற்கும் என்ன சம்மந்தம்? சங் பரிவார் எனும் அமைப்பின் பெயரில் எதிர்ப்பை கிளப்பும் உங்களின் பின்னணி என்ன? உங்களின் அமைப்பை தநா பாஜக அங்கீகரித்துள்ளதா? உங்களின் தொண்டர்கள் எண்ணிக்கை 230 ஐயும் தாண்டி மேலும் வளர்ந்துள்ளதா?
சேகருக்கு உள்ள சொந்தக் காரர்கள் எண்ணிக்கை மந்தைவெளியில் மட்டுமே 680 பேர். உங்களின் சங்கத்தை விட அதிகம்.
2. தாலி பற்றிய உங்களின் செண்டிமெண்ட் வரவேற்கத் தக்கதே. ஆனால் வாலெண்டைன்ஸ் டே அன்று நாய்க்கும் கழுதைக்கும் தாலி கட்டி கல்யாணம் செய்வித்த உங்களின் கூட்டத்திற்கு தாலி குறித்து விவாதம் நடத்தக் கூடாது எனும் உரிமை எங்கிருக்கிறது? தாலியை கழுதைக்கு கட்டியதின் மூலம் தாலி கட்டிய பெண்கள் கழுதைக்குச் சமம் என்று சொல்லாமல் சொல்லிய உங்கள் கூட்டம் தமிழ் பெண்களை அவமானப் படுத்தவில்லையா?
3. புதிய தலைமுறை நிர்வாகிகளைப் பாராட்டுகிறேன். ஒரு நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு என்று தெரிந்த அந்த கணமே அவர்கள் அதை ஒளிபரப்பாமல் நிறுத்தி விட்டார்கள். அவர்கள் மேலானவர்களா? இல்லை ஓலைப் பட்டாசை பேடிகள் போல அவர்கள் அலுவலகம் முன்பு வெடிகுண்டு எனும் பெயரில் வெடித்து தற்காலிகப் பெருமை கொண்ட உங்கள் கூட்டம் பெரியதா? இந்த நிகழ்விற்கு பாஜகவினர் ஆதரவு தந்தனரா? உங்களை அங்கீகரித்துள்ளனரா? முதலில் அதைக் கூறுங்கள்!
4. எனக்குத் தெரிந்து முதுகெலும்புள்ள ஒரு சில தமிழர்களில் (உதாரணம் T N சேஷன், சோ, கோபால்சாமி...) திரு சேகர் அவர்கள் ஒருவர். தனக்கு சரி என்று பட்டதை தெளிவாகச் செய்வார்! அவர் விரும்பி இருந்தால் அதிமுகவின் பதவி சுகத்தில் திளைத்திருக்கலாம். ஆனால் தன்மானத்திற்கு இழுக்கு வந்தபோது, அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார். காரணம் உங்களுக்கு தெரியும். அவர் கலைஞர் அவர்களை சந்தித்தை ஜெ விரும்பவில்லை. அது ஒன்றே காரணம். இந்த நிலையில் உங்களுக்கு நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். அரசியலில் அனைத்து தரப்பினருக்கும் மரியாதை கொடுக்கும் ஒரே கட்சி திமுகதான். நான் திமுக காரன் அல்ல. ஆனாலும் உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும். அவர்கள் எந்த விதத்திலும் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்க மாட்டார்கள். உண்மையில் திமுக ஜென்டில்மேன் கட்சி.
நான்கு நாட்களுக்கு முன் அவர் தணிக்கை குழு அதிகாரிகள் சரியான விதத்தில் நடந்து கொள்ளவில்லை என்பதற்காக அவர் அந்தக் குழுவின் கூட்டத்தைப் புறக்கணித்தது எத்தனை பேருக்குத் தெரியும். பெருமைப் படுங்கள், தன்மானத்திற்கு இழுக்கு வரும்போது எதிர்ப்பைத் தெரிவிக்கும் தமிழன் அவர் என்று!
5. சேகர் அவர்களின் உரிமை தொலைக் காட்சியில் பேச வேண்டுமா வேண்டாமா என்பது. அதற்கான கட்டுப்பாட்டை விதிக்க வேண்டியது கட்சித் தலைமை மட்டுமே! ஆனால் தநாட்டில் அப்படி ஒரு ஒழுங்கான நிர்வாகம் இருக்கிறதா? ஏதாவது ஒரு கோரம் இருக்கிறாதா? அல்லது போகவேண்டும் வேண்டாம் என்று சொல்லும் ஒரு தலைமையாவது இருக்கிறதா? இங்கே நண்டின் காலை நண்டு இழுப்பது போல அல்லவா உள்ளுக்குள் நடந்து கொண்டு இருக்கிறது! அவர்களின் சுய நல அரசியல் மட்டும் அல்லவா அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
6. சேகர் போன்றவர்கள் கட்சிக்குள் வந்தது கட்சிதான் பெருமை பட வேண்டும். அவராத்தான் உள்ளே வந்தார். அவரை யாரும் இழுக்கவில்லை. அவர் கட்சிக்குள் வரக்கூடாது என்று தடுத்தவர்கள் எத்தனை பேர்? அவருக்கு தணிக்கைக் குழு பதவி கிடைத்ததும் வயிறு எறிந்தவர்கள் எத்தனை பேர்? மோடி யின் முடிவு என்பதால் வாய் பொத்திக் கொண்டு இருந்தார்கள். இல்லை என்றால் இவரை நடுவீதி வரை அவமானப் படுத்தி இருப்பார்கள்.
7. அரசியலுக்கு அப்பால், அவர் செய்யும் நல்ல காரியங்களும் பலர் அறியாததே. நானெல்லாம் அவரின் சினிமா கிளாமருக்காக அவருடன் நடுப்பு பாராட்டவில்லை. அவர் செய்யும் நல்ல காரியங்களில் எனது பங்களிப்பு எதையாவது செய்ய வேண்டும் என்றே அவருடன் இன்றளவும் நட்பது பாராட்டி வருகிறேன். சேகர் அவர்களை இன்று நேற்றல்ல, 1976 முதல் எனது நண்பர். அவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே நல்ல நண்பர். அவர் போன்றவர்களை அசிங்கப் படுத்த நினைக்கும் கும்பலின் சவால்களை நான் நிச்சயம் எதிர் கொள்வேன்.
8. தினசரி இறைவணக்கம், மது அருந்தாமை, பிறன் மனை நோக்காமை, தரும சிந்தனை, கலைத்துறையில் முத்திரை, இதுவே அவரை விரும்புபவர்கள் உட்கொண்ட குணங்கள்.
அல்லக் கைகளே! எதிர்க்கும் முன் உங்களின் குணாதிசயங்களை அவரின் குணங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து பின்னர் அதை செய்வதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறதா என்று சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்!
- டி பெட் -
நன்றி: டிமிடித் பெட்கோவ்ஸ்கி - முகநூல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|