தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
வேதத்தைக் காக்க தலையை கொடுத்தவன் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வேதத்தைக் காக்க தலையை கொடுத்தவன் Empty வேதத்தைக் காக்க தலையை கொடுத்தவன்

Sat Feb 14, 2015 10:00 am
வேதத்தைக் காக்க தலையை கொடுத்தவன் 10947290_725127447601456_3805823866164835463_n

தன்னுடைய வேதாகமத்தை சிலர் எரித்துகொண்டிருப்பதை கண்ட சிறுவன் அதை காப்பாற்ற தன் தலையை கொடுத்த உண்மை சம்பவம். 
(https://www.facebook.com/vomusa/photos/a.106756294356.92359.11006419356/10152950903224357/?type=1&theater)

ஜோயல் - வயது 3. வழக்கம் போல ஞாயிறு அன்று சபைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தான். திரும்பும் வழியில் சில மதவெறியர்கள் வழிமறித்து ஜோயல் கையில் இருந்த பரிசுத்த வேதாகமத்தை பிடுங்கினார். பிடுங்கியவர்கள் அதன் மீது அறிந்து கொண்டிருந்த தணலை போட்டனர். இதை சற்றும் எதிர்பாராத ஜோயல் உடனே பரிசுத்த வேதாகமத்தின் மீதிருந்த தணலை ஓர் குச்சியை கொண்டு வேகமாய் தட்ட முற்ப்பட்டான். இதனை கண்ட மதவாதிகள் கடும்கோபம் அடைந்தனர். குழந்தை ஜோயலின் தலையை பிடித்து எரிந்து கொண்டிருந்த தணல் மீது வைத்து தேய்த்தனர். சிறுவன் வழியால் அலற "உனக்கு இவ்வளவு நெஞ்சளுத்தமா?" என்று கோபத்துடன் தலையை தீயினால் எரித்தனர். 

இப்படிப்பட்ட நிகழ்வுகள் நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் நடக்கும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. சராசரியாக சுமார் 332 கிறிஸ்தவர்கள் ஒரே மாதத்தில் கொல்லப்படுகிறார்கள் என்று உலக மிஷனரி இயக்கங்கள் கணக்கெடுத்து உள்ளது. சுமார் 214 சபைகள் சேதப்படுத்தப்படுகின்றன. சுமார் 772 விதங்களில் கிறிஸ்தவர்கள் மீது பொய்யான புகார்கள் கொடுக்கப்பட்டு சிறைகளிலும், கட்டாய திருமணங்களிலும், கற்பழிப்புகளிலும், கொடுமைபடுத்தப்படுகின்றனர். 
(https://www.opendoorsusa.org/christian-persecution/)

இப்படிப்பட்ட துன்பங்களை இயேசு கிறிஸ்து நமக்கு முன்னறிவித்திருந்தார். லூக்கா 21:12 இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.

ஆதலால் விழித்திருந்து ஜெபம் பண்ணுகள். காலம் கடைசி காலமாய் இருக்கிறது. என்ன துன்பங்கள் வந்தாலும் தொடர்ந்து சுவிசேஷத்தை சொல்லி வருவோம். 
I தெசலோனிக்கேயர் 2:2 உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பிபட்டணத்திலே நாங்கள் பாடுபட்டு நிந்தையடைந்திருந்தும், வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம்.

II தீமோத்தேயு 1:8 ஆகையால் நம்முடைய கர்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர்நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக்குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவவல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கநுபவி.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வேதத்தைக் காக்க தலையை கொடுத்தவன் Empty Re: வேதத்தைக் காக்க தலையை கொடுத்தவன்

Sat Feb 14, 2015 10:01 am
வேதத்தைக் காக்க தலையை கொடுத்தவன் 10941910_723304557783745_4247725686211116556_n

ஓர் அவசர ஜெப அழைப்பு 

மாற்கு 13:9 நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் உங்களை ஆலோசனை சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெபஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுவீர்கள்.

Nguyễn Hồng Quang - வியட்நாம் நாட்டை சேர்ந்த போதகர். ஜனவரி 18ம் நாள் மாலை 4.30 மணியளவில் இவருடன் உடன் ஊழியக்காரரும் வேதாகம கல்லூரி அருகில் நடந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த 5 நபர்கள் இருவரையும் கட்டை மற்றும் கற்களை கொண்டு கடுமையாக தாக்கினர். இதில் நிலைகுலைந்த இருவரும் நடுரோட்டில் சுருண்டு விழுந்தனர். விழுந்தவர்களை கடுமையாக காலால் மிதித்தனர். 

இதன் பிறகு Nguyễn Hồng Quang மற்றும் உடன் ஊழியரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் போதகர் Nguyễn Hồng Quang அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டாதால் தீவிர மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நமது ஊழியர்கள் VOM (The Voice of the Martyrs) மூலமாக இவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் போதகருக்கு மூக்கில் கடுமையான காயம், சில எலும்புகள் உடைந்து உள்ளது. கடுமையான வலியோடு வாந்தியும் தொடர்ந்து வருவதால் சிரமத்தர்க்கு ஆளாகியுள்ளார். 

இன்று நடந்தது போதகருக்கு புதிது அல்ல. இதை போன்று பல முறை இவருக்கு ஊழியம் செய்ய கூடாது என்று உச்சரிப்பு இருந்தது. கடுமையாக பல முறை தாக்கப்பட்டார். ஆனாலும் தேவனுக்கென்று எடுத்த முயற்சியில் சிறிதும் பின்வாங்காது தொடர்ந்து ஓடி கொண்டிருக்கிறார். 

இவருக்காகவும் இவர் குடும்பத்திர்க்காகவும் ஜெபித்து கொள்ளுங்கள். 

மனிதர் என்னை கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாரிட்டாலும்
ஐஸ்வரியம் யாவும் அழிந்திட்டாலும்
இயேசு போதுமே 

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வேதத்தைக் காக்க தலையை கொடுத்தவன் Empty Re: வேதத்தைக் காக்க தலையை கொடுத்தவன்

Sat Feb 14, 2015 10:03 am
வேதத்தைக் காக்க தலையை கொடுத்தவன் 10177300_688766851237516_3341080471350856874_n

கென்யா, சமீபத்திய ரத்த கரைகளில் விழுந்த பரிதாபத்திற்குரிய ஓர் நிலம். இங்கு வாழும் கிறிஸ்தவ மக்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்க மதத்தின் போர்வையில் ஓர் தீவிரவாதம் உள்ளே நுழைந்தது. சோமாலியா நாட்டை சேர்ந்த அல்-ஷஹாப் என்ற தீவிரவாத இயக்கம் தன் பங்குக்கு பல ஆயிரம் உயிர்களை கொன்று குவித்து பல குடும்பங்களை இன்று தெருவில் அனாதைகளாக்கி வருகிறது. 

வட கென்யாவில் உள்ள மண்டேரா டவுன் பகுதியில் (கென்யாவின் எல்லைப்பகுதி) ஓர் கிராமத்தை நோக்கி அமைதியாக பேருந்து சென்று கொண்டிருந்தது. இதில் கிறிஸ்மஸ் காலத்தை கொண்டாட பலரும் பல இடங்களில் இருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்படி அமைதியாக சென்று கொண்டிருந்த பேருந்தில் சில தீவிரவாதிகள் ஏறினர். துப்பாக்கி முனையில் அப்பாவி மக்களை மிரட்டிய அந்த தீவிரவாத கும்பல் தாங்கள் வைத்திருந்த அல்-குரானின் ஓர் பகுதியை படிக்கும்படியாக அனைவருக்கும் உத்தரவு கொடுத்தனர். 

படித்த மக்களை தனியாகவும், அரபி மொழி தெரியாத கிறிஸ்தவர்களும் வேறுவேறாக பிரிக்கப்பட்டனர். பின்னர் பேருந்தை விட்டு இறக்கிய அந்த கும்பல் அவர்களை வரிசையாக தரையில் மண்டியிட வைத்து தங்கள் மதத்தை ஏற்றுகொள்ளும்படி வற்புருத்தினர். ஆனால் இதனை ஏற்றுகொள்ள மண்டியிட்ட கிறிஸ்தவர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது. (http://www.npr.org/2014/11/24/366379341/islamist-al-shabab-militants-kill-28-in-kenya-bus-attack)

இவர்களின் மன உறுதியை கண்ட தீவிரவாத கும்பலுக்கு வெறி தலைக்கேறியது. உடனே ஒருவர் ஓவருவராக தலையில் துப்பாக்கியை வைத்து சுட்டு மூளை பகுதியை சிதைத்தனர். (படத்தை பார்க்கவும், இருதய பாதிப்புள்ளவர்கள் தயவு செய்து படத்தை உத்து பார்க்கவேண்டாம்). ஒவ்வொருவராக வீழ்த்தப்பட மற்றவர்கள் கண்ணீருடன் ஆனால் மனதில் இயேசுவின் சிலுவையை சுமந்தவாறு மரணத்தை வரவேற்றனர். மற்றவர்கள் கண்முன்னே கொல்லப்படுவதை பார்த்தாலும் கடைசி மனிதனும் இயேசு கிறிஸ்துவை மறுதலிக்காமல் மரணத்தை வரவேற்றான், 

மரணமே உன் கூர் எங்கே, பாதாளமே உன் ஜெயம் எங்கே? என்கிற வேத வசனம் என் மனதில் தொனிக்கிறது. கிறிஸ்தவன் சாகலாம், ஆனால் கிறிஸ்தவம் சாகாது. விசுவாசத்தை அசைத்துபார்க்கும் கொடிய மிருக குணம் இந்த பூமியில் சாத்தானால் எவிவிடப்பட்டுள்ளது. இந்த மிருகத்திற்கு பயப்படும் எவனும் கிறிஸ்தவனாய் இருப்பதற்கு தகுதியற்றவன். 

தேவன் பயப்படுகறவர்களை பார்த்து "மத்தேயு 10:28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்" பிறகு எதற்கு பயப்பட வேண்டும் என்று வேதம் கற்று தருகிறது? நம்முடைய தேவனுக்கு மாத்திரமே பயப்பட வேண்டும். மனிதனை பார்த்து அல்ல "ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்". உங்கள் சரீரம் நரகத்தில் அழிக்ககூடாதபடி பரிசுத்தமாய் வாழுங்கள். 

எத்தனை நாள் வாழ்கிறோம் என்பது முக்கியம் அல்ல, இயேசு கிறிஸ்துவுக்குள் எப்படி வாழ்கிறோம் என்பதே அதிமுக்கியம். இது ஒன்றே உன்னை பரலோகில் போய் சேர்க்கும். 100 வயது வரை சுகமாய் வாழ்ந்து நரகத்தில் சாவதை விட, சில நாட்களாவது இயேசுவுக்காக, அவருக்குள், அவருடைய வார்த்தைக்குள் வாழ்ந்து உத்தமாமாய் கண்ணை மூடுவது சாலச்சிறந்தது. 

வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

மேலே கூறப்பட்டுள்ள வசனத்தில் பயம், அவ்விசுவாசம், பொய் கூறுதல் ஆகியவை நம் வாழ்க்கையில் அன்றாடம் நுழைய துடிக்கும் பிசாசின் தந்திரங்கள். இப்படி பயப்படும் அவ்விசுவாசிகள் மற்றும் பொய் கூறுபவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்று வேத வசனம் தெளிவாக எச்சரிக்கிறது.

மரணத்தை கண்டு ஓடுபவன் மனிதன், மரணத்தை வரவேற்பவன் கிறிஸ்தவன். இவ்வுலகத்தில் வாழும் ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசியின் நோக்கம் என்ன தெரியுமா?? "II கொரிந்தியர் 5:8 நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத்தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்."

பிலிப்பியர் 1:23 ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன், தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;

பரதேசியாய் வாழும் இந்த பூமியில் மற்றவர்களுக்கு நன்மை செய்யவே தேவன் நமக்கு கற்று கொடுத்திருக்கிறார். 16. இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.

நன்மை செய்வதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக. ஏசுவும் இந்த பூமியில் அதை தான் நமக்கு கற்று கொடுத்தார். சிலுவை பரியந்தம் தம்மை தாழ்த்தினார். அங்கே பிசாசானவன் தோற்க்கடிக்கப்பட்டான். இந்த நாம் சிலுவையில் அறைய ஒப்புகொடுக்கப்பட்டிருக்கிறோம். நாமும் நம்மை தாழ்த்துவோம். நிச்சயம் தேவன் பெரிய காரியங்களை செய்வார்.

சிலர் என்னிடம் கேட்பது "இப்படியே கிறிஸ்தவர்கள் செத்தால் உலகில் கிறிஸ்தவம் மறைந்து விடுமோ?"
இல்லை நண்பர்களே. தேவன் ஊழியம் செய்தது 3 1/2 வருடங்கள் தான். இருந்ததோ 12 சீடர்கள், அதிலும் ஒருவன் பிசாசின் தந்திரத்திற்கு பலியாகிவிட்டான். ஆனால் இந்த இரண்டாயிரம் வருடத்தில் உலகின் அனைத்து மூளைக்கும் இந்த இயேசு கிறிஸ்து சென்றுவிட்டார். இன்றைய நிலைமையில் சீன தேசத்தில் கம்யூனிஸ்ட் மக்களை விட கிறிஸ்தவர்கள் வேகமாக வளர்ந்துவிட்டனர். விரைவில் சீன தேசத்தில் மூவரில் ஒருவர் கிறிஸ்தவராக இருப்பார்கள். 

வேத வசனங்கள் நிறைவேறி கொண்டிருக்கும் காலம் இது. கடைசி காலமாய் இருக்கிறது. இன்னமும் பல ஆயிரம் நடக்கும், பின்பு முடிவு வரும். உலகம் பல லட்சக்கணக்கான ஆண்டுகள் இருக்கும் என்று கர்ஜித்த நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இன்று "உலகம் நிச்சயம் அழியும்" என்ற முடிவிற்கு வந்துள்ளது. 

பயப்படாதிருங்கள். திடன் கொள்ளுங்கள். அழிந்து போகிற இந்த உலக மண்ணிற்காக மண்ணான மனிதன் மற்றவர்களை அழித்து வருகிறான். எபோலா, எயிட்ஸ், ஓரின சேர்க்கை, விபச்சாரம், கற்பழிப்பு, திருட்டு, கொலை, பண பேராசை, போன்ற பயங்கர பிசாசுகளுக்கு மனிதன் ஒன்றாய் நின்று எதிர்க்காமல் இப்படிப்பட்ட கொலைகளுக்கு பணத்தையும், நேரத்தையும் செலவழித்து கொண்டிருக்கிறான். மனிதனிடம் நோய் மறைந்து போய் இன்று மனிதனே ஓர் விஷ கிருமியாக மாறிவிட்டான்.

உங்கள் முழங்காலை முடக்குங்கள். உங்களுக்காகவும், உங்கள் சந்ததிக்காகவும் அழுங்கள். உங்களோடு உங்கள் குடும்பம் பரலோகில் இருக்குமா என்பதை மட்டும் நிதானித்து பாருங்கள். மரணம் எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஆனால் உங்கள் சொந்த ஜீவனை இதற்கென்று நஷ்டப்படுத்திவிடாதீர்கள்.

அப்போஸ்தலர் 20:24 ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
Sponsored content

வேதத்தைக் காக்க தலையை கொடுத்தவன் Empty Re: வேதத்தைக் காக்க தலையை கொடுத்தவன்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum