டிப்ஸ்.... டிப்ஸ் ...
Tue Jan 06, 2015 6:56 am
*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால்
கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில்
சப்பாத்தி மாவு ஒட்டாது.
*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக
இருக்கும்.
*அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.
*வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும்.
அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால்
பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.
*ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல்
இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி,
புழுக்கள் வராது. தயிர் நீண்ட நேரம் புளிக்காமல்
இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம்
தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
*காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால்
காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும். காய்ந்த
மிளகாயை வறுக்கும்போது நெடி வரும்.
அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
*பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல்
காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.
*நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.
*காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன்பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன்
போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.
*சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில்
போட்டால் வெடிக்காது.
*சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும் கட்டையில் முதலில் உருண்டையாக போட்டுவிட்டு பின்பு அதனை நாலாக மடித்து உருட்டி போட்டால் சப்பாத்தி மிருதுவாக
இருக்கும்.
*முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால்
விரிந்து போகாமல் இருக்கும்.
*எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது. இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில்
அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
*சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால்
உப்பை எடுத்துவிடும்.
*தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில்
கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில்
தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.
கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில்
சப்பாத்தி மாவு ஒட்டாது.
*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக
இருக்கும்.
*அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.
*வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும்.
அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால்
பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.
*ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல்
இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி,
புழுக்கள் வராது. தயிர் நீண்ட நேரம் புளிக்காமல்
இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம்
தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
*காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால்
காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும். காய்ந்த
மிளகாயை வறுக்கும்போது நெடி வரும்.
அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
*பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல்
காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.
*நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.
*காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன்பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன்
போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.
*சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில்
போட்டால் வெடிக்காது.
*சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும் கட்டையில் முதலில் உருண்டையாக போட்டுவிட்டு பின்பு அதனை நாலாக மடித்து உருட்டி போட்டால் சப்பாத்தி மிருதுவாக
இருக்கும்.
*முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால்
விரிந்து போகாமல் இருக்கும்.
*எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது. இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில்
அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
*சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால்
உப்பை எடுத்துவிடும்.
*தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில்
கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில்
தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.
Re: டிப்ஸ்.... டிப்ஸ் ...
Sat Apr 04, 2015 5:40 am
ஃப்ரிட்ஜில் வைத்த பிரெட், பன் போன்றவை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். அவற்றை 10 முதல் 15 விநாடிகள் ’மைக்ரோவேவ் அவன்'ல் வைத்து எடுத்தால் மீண்டும் ஃபிரெஷ்ஷாகிவிடும்.
வெண்டைக்காய், பீன்ஸ் போன்ற காய்கள் முற்றலாக இருந்தால் தூக்கி எறிய வேண்டாம். அவற்றைத் துண்டு களாக்கி தண்ணீரில் போட்டு கொதிக்கவிடுங்கள். பிறகு வடிகட்டி, உப்பு, மிளகு, சீரகப் பொடி சேர்த்து சூப்பாக அருந்தலாம். அல்லது சாம்பார், கிரேவி போன்ற திரவ உணவுகளில் சேர்க்கலாம். இதனால் சத்துக்கள் வீணாகாமல் இருக்கும்.
சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் ஆகியவை செய்து இறக்கியதும், அதில் அரை டம்ளர் தேங்காய்ப்பால் ஊற்றிக் கலந்துவிட்டால் சுவை கூடும். ஆறினாலும் அதிகம் கெட்டியாகாது. நெய்யும் குறைவாகச் சேர்க்கலாம்
தேன்குழல், முறுக்கு, தட்டை, சீடை போன்ற எண்ணெயில் பொரிக்கும் பலகாரங்கள் செய்யும்போது, முதலில் மாவை வெறும் வாணலியில் நன்கு சூடாக்கிக் கொள்ளுங்கள். இதனால் மாவில் பிசுபிசுப்பு இருக்காது. பட்சணங்கள் ருசியாகவும் மொறுமொறுவென்றும் இருக்கும்
தக்காளி, வெங்காயம் போன்ற காய்களில் சட்னி செய்யும்போது சிறிது கறுப்பு எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டால் சட்னியின் மணமும் ருசியும் கூடுதலாக இருக்கும்.
இட்லி மாவு, அடி மாவாக இருக்கும்போது இட்லி தோசை சரியாக வார்க்க முடியாது. இந்த மாவில் மிச்சம் இருக்கும் பொரியல், கூட்டு இவற்றைச் சேர்த்து, அத்துடன் ஒரு வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிப் போட்டு ஊத்தப்பமாகவோ, குழி அப்பமாகவோ சுட்டெடுத்தால் அருமையாக இருக்கும்.
வெண்டைக்காய், பீன்ஸ் போன்ற காய்கள் முற்றலாக இருந்தால் தூக்கி எறிய வேண்டாம். அவற்றைத் துண்டு களாக்கி தண்ணீரில் போட்டு கொதிக்கவிடுங்கள். பிறகு வடிகட்டி, உப்பு, மிளகு, சீரகப் பொடி சேர்த்து சூப்பாக அருந்தலாம். அல்லது சாம்பார், கிரேவி போன்ற திரவ உணவுகளில் சேர்க்கலாம். இதனால் சத்துக்கள் வீணாகாமல் இருக்கும்.
சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் ஆகியவை செய்து இறக்கியதும், அதில் அரை டம்ளர் தேங்காய்ப்பால் ஊற்றிக் கலந்துவிட்டால் சுவை கூடும். ஆறினாலும் அதிகம் கெட்டியாகாது. நெய்யும் குறைவாகச் சேர்க்கலாம்
தேன்குழல், முறுக்கு, தட்டை, சீடை போன்ற எண்ணெயில் பொரிக்கும் பலகாரங்கள் செய்யும்போது, முதலில் மாவை வெறும் வாணலியில் நன்கு சூடாக்கிக் கொள்ளுங்கள். இதனால் மாவில் பிசுபிசுப்பு இருக்காது. பட்சணங்கள் ருசியாகவும் மொறுமொறுவென்றும் இருக்கும்
தக்காளி, வெங்காயம் போன்ற காய்களில் சட்னி செய்யும்போது சிறிது கறுப்பு எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டால் சட்னியின் மணமும் ருசியும் கூடுதலாக இருக்கும்.
இட்லி மாவு, அடி மாவாக இருக்கும்போது இட்லி தோசை சரியாக வார்க்க முடியாது. இந்த மாவில் மிச்சம் இருக்கும் பொரியல், கூட்டு இவற்றைச் சேர்த்து, அத்துடன் ஒரு வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிப் போட்டு ஊத்தப்பமாகவோ, குழி அப்பமாகவோ சுட்டெடுத்தால் அருமையாக இருக்கும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|