கலப்பட நெய் - ஒரு எச்சரிக்கை பதிவு
Tue Jan 06, 2015 6:48 am
நாட்டில் தினமும் 300 டன் சுத்தமான நெய் உற்பத்தி
செய்யப்படுகிறது.
.
அதைவிட அதிகமாக 400 டன் அளவிற்கு செயற்கை நெய்
உற்பத்தி செய்யப்பட்டு புழக்கத்தில் விடப்படுகிறது.
.
அது சந்தையில் அதிகமான இடத்தையும் பிடித்துள்ளது.
.
பிரபல நெய் உற்பத்தி நிறுவனங்கள் பெயரில்
.
போலியான அக்மார்க் முத்திரையுடன் இந்த நெய் வகைகள் புழக்கத்தில் விடப்படுகின்றன.
.
இந்த செயற்கை நெய் தயாரிப்பதற்கு மாட்டுக் கொழுப்பு, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சணல் எண்ணைய் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.
.
இந்த மூலப் பொருட்களுடன் சேர்த்து சுத்தமான நெய்
வாசனை வருவதற்காக
.
ஜெர்மனியிலிருந்து அரை கிலோ ரூ.2000 என்ற விலையில்
இறக்குமதி செய்யப்பட்ட எசன்ஸ் ஊற்றப்படுகிறது.
.
ஒரு சொட்டு எசன்ஸ் ஊற்றினாலே செயற்கை நெய் சுத்தமான பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட நெய்யை விட நறுமணம்
தூக்கலாக இருக்கும்.
.
பிரபலமான நிறுவனங்கள் பெயரில் இந்த வகை நெய் விற்கப்படுவதால்
.
அப்பாவி நுகர்வோர் அவற்றின் பாதிப்புகளை அறியாமல்
சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
.
மேலும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் கெமிக்கல்
பொருட்கள், பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் மெழுகு ஆகியனவும் கலக்கப்படுகின்றன.
.
முன்பு பனை எண்ணைய், வனஸ்பதி ஆகியவற்றை கலப்படம்
செய்து நெய்யாக விற்பனை செய்து வந்தனர்.
.
ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எசன்ஸ் வந்த பின்பு இந்த வகை நெய்கள் அதிகமாகிவிட்டன.
.
சுத்தமான ஒரிஜினல் நெய்யின் விலை ரூ.130 லிருந்து ரூ.140 வரை விற்கப்படுகிறது.
.
ஆனால்,... கலப்பட நெய் தயாரிப்பதற்கு ரூ.60 வரை மட்டும் செலவாகிறது.
.
மார்க்கெட்டில் ரூ.110 வரை விற்கப்படுகிறது.
.
இதனால் மொத்த மார்க்கெட்டில் 80 சதவீதம் வரை இடம்
பிடித்துவிட்டது.
.
ஹரே கிருஷ்ணா,
.
கவாலா,
.
முராரி,
.
நந்தகோபால்,
.
காமதேனு,
.
மில்க் மாஸ்டர்
.
போன்ற பெயரில் போலியான வடமாநில முகவரிகளோடு
கலப்பட நெய் விற்பனை செய்யப்படுகிறது ..
.
கலப்பட நெய்யைப் பயன்படுத்திச் செய்யப்படும் உணவுப் பொருட்களை உண்பவர்களுக்கு
.
ஆரம்பத்தில் வயிற்றெரிச்சலும், பின் வாந்தி அதைத் தொடர்ந்து
இரத்த வாந்தி கூட ஏற்படும் அபாயம் உள்ளது.
.
இதைத் தொடர்ந்து சாப்பிடுபவர்கள் அஜீரண கோளாறுகளால் பாதிக்கப்படுவதுடன் முடிவில் குடல் புண்ணுக்கும்,
.
இறுதியில் புற்று நோய்க்கும் ஆளாவார்கள்.
.
---- அமுதா அமுதா --- இன்று முதல் தகவல்
செய்யப்படுகிறது.
.
அதைவிட அதிகமாக 400 டன் அளவிற்கு செயற்கை நெய்
உற்பத்தி செய்யப்பட்டு புழக்கத்தில் விடப்படுகிறது.
.
அது சந்தையில் அதிகமான இடத்தையும் பிடித்துள்ளது.
.
பிரபல நெய் உற்பத்தி நிறுவனங்கள் பெயரில்
.
போலியான அக்மார்க் முத்திரையுடன் இந்த நெய் வகைகள் புழக்கத்தில் விடப்படுகின்றன.
.
இந்த செயற்கை நெய் தயாரிப்பதற்கு மாட்டுக் கொழுப்பு, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சணல் எண்ணைய் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.
.
இந்த மூலப் பொருட்களுடன் சேர்த்து சுத்தமான நெய்
வாசனை வருவதற்காக
.
ஜெர்மனியிலிருந்து அரை கிலோ ரூ.2000 என்ற விலையில்
இறக்குமதி செய்யப்பட்ட எசன்ஸ் ஊற்றப்படுகிறது.
.
ஒரு சொட்டு எசன்ஸ் ஊற்றினாலே செயற்கை நெய் சுத்தமான பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட நெய்யை விட நறுமணம்
தூக்கலாக இருக்கும்.
.
பிரபலமான நிறுவனங்கள் பெயரில் இந்த வகை நெய் விற்கப்படுவதால்
.
அப்பாவி நுகர்வோர் அவற்றின் பாதிப்புகளை அறியாமல்
சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
.
மேலும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் கெமிக்கல்
பொருட்கள், பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் மெழுகு ஆகியனவும் கலக்கப்படுகின்றன.
.
முன்பு பனை எண்ணைய், வனஸ்பதி ஆகியவற்றை கலப்படம்
செய்து நெய்யாக விற்பனை செய்து வந்தனர்.
.
ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எசன்ஸ் வந்த பின்பு இந்த வகை நெய்கள் அதிகமாகிவிட்டன.
.
சுத்தமான ஒரிஜினல் நெய்யின் விலை ரூ.130 லிருந்து ரூ.140 வரை விற்கப்படுகிறது.
.
ஆனால்,... கலப்பட நெய் தயாரிப்பதற்கு ரூ.60 வரை மட்டும் செலவாகிறது.
.
மார்க்கெட்டில் ரூ.110 வரை விற்கப்படுகிறது.
.
இதனால் மொத்த மார்க்கெட்டில் 80 சதவீதம் வரை இடம்
பிடித்துவிட்டது.
.
ஹரே கிருஷ்ணா,
.
கவாலா,
.
முராரி,
.
நந்தகோபால்,
.
காமதேனு,
.
மில்க் மாஸ்டர்
.
போன்ற பெயரில் போலியான வடமாநில முகவரிகளோடு
கலப்பட நெய் விற்பனை செய்யப்படுகிறது ..
.
கலப்பட நெய்யைப் பயன்படுத்திச் செய்யப்படும் உணவுப் பொருட்களை உண்பவர்களுக்கு
.
ஆரம்பத்தில் வயிற்றெரிச்சலும், பின் வாந்தி அதைத் தொடர்ந்து
இரத்த வாந்தி கூட ஏற்படும் அபாயம் உள்ளது.
.
இதைத் தொடர்ந்து சாப்பிடுபவர்கள் அஜீரண கோளாறுகளால் பாதிக்கப்படுவதுடன் முடிவில் குடல் புண்ணுக்கும்,
.
இறுதியில் புற்று நோய்க்கும் ஆளாவார்கள்.
.
---- அமுதா அமுதா --- இன்று முதல் தகவல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|