அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
Wed Oct 29, 2014 9:31 pm
சென்னை மாவட்டத்தில் 485 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நவம்பர் 11–ந் தேதி கடைசி நாள்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் பணியாளர்களை தேர்ந்து எடுப்பது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், சென்னை மாவட்டத்தில் கீழ்கண்ட பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடங்கள் விவரம்:
அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள்– 151
குறு அங்கன்வாடி பணியாளர்பணியிடங்கள்– 36
அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள்– 298
அங்கன்வாடி பணியாளர்– 25–35 வயது
குறு அங்கன்வாடி
பணியாளர்– 25–35 வயது
அங்கன்வாடி உதவியாளர்– 20–40 வயது,
அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர்கள்– பத்தாம் வகுப்பு தேர்ச்சி
அங்கன்வாடி உதவியாளர்– தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
காலியாக உள்ள மையங்கள் மற்றும் இன சுழற்சி குறித்த விவரங்கள் அந்தந்த பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் வெளிப்படுத்தப்படும்.
தகுதி வாய்ந்த உள்ளூர் பெண் நபர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அந்தந்த பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், உரிய விண்ணப்பங்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள்www.icds.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களுக்கு நவம்பர் 11–ந் தேதி மாலை 5 மணி வரை வந்து சேரலாம்.
இதுகுறித்து விவரம் வேண்டுவோர் அந்தந்த பகுதியிலுள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரியை அணுகலாம்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் பணியாளர்களை தேர்ந்து எடுப்பது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், சென்னை மாவட்டத்தில் கீழ்கண்ட பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடங்கள் விவரம்:
அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள்– 151
குறு அங்கன்வாடி பணியாளர்பணியிடங்கள்– 36
அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள்– 298
அங்கன்வாடி பணியாளர்– 25–35 வயது
குறு அங்கன்வாடி
பணியாளர்– 25–35 வயது
அங்கன்வாடி உதவியாளர்– 20–40 வயது,
அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர்கள்– பத்தாம் வகுப்பு தேர்ச்சி
அங்கன்வாடி உதவியாளர்– தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
காலியாக உள்ள மையங்கள் மற்றும் இன சுழற்சி குறித்த விவரங்கள் அந்தந்த பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் வெளிப்படுத்தப்படும்.
தகுதி வாய்ந்த உள்ளூர் பெண் நபர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அந்தந்த பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், உரிய விண்ணப்பங்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள்www.icds.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களுக்கு நவம்பர் 11–ந் தேதி மாலை 5 மணி வரை வந்து சேரலாம்.
இதுகுறித்து விவரம் வேண்டுவோர் அந்தந்த பகுதியிலுள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரியை அணுகலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|