தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
தமிழின் பிரிவுகள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தமிழின் பிரிவுகள் Empty தமிழின் பிரிவுகள்

Wed Oct 29, 2014 8:42 am
தமிழின் பிரிவுகள் 10408986_616316355146173_8357894409212801007_n

பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த குமரிமாந்தனின்
காலத்தைவிட பல்லாயிரம் ஆண்டுகள்
பிந்தியதே தொல்காப்பியம். 

தொல்காப்பியம்
தோன்றிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும்,
கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட
காலமாகும். தொல்காப்பியர்
காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ்
மொழி மிகச் சிறப்புற்றிருந்தது. சிறப்பு மிக்க
தமிழ் இலக்கியங்கள் பல இருந்தன. 

ஆனால் அவைகள்
அனைத்தும் நான்குமுறைகள் ஏற்பட்ட கடல்
கோள்களால் முழுமையாக அழிவுற்றன.
மூன்று தமிழ் : தமிழ் மொழி தோற்றத்தையும்
வரலாற்றுக் காலத்தையும் பல பகுதிகளாக
பிரித்துக் கொள்ளலாம்.

1. பழந்தமிழ்
2. இடைக்காலத்தமிழ்
3. தற்காலத்தமிழ்.

1. பழந்தமிழ் (Ancient Tamil)
உட்பிரிவுகள் மூன்று.
அ. முன்பழந்தமிழ் – தொல்பழந்தமிழ்
Early ancient Tamil (or) Proto Ancient Tamil
ஆ. மத்திய பழந்தமிழ் – Medieval Ancient Tamil
இ. பின்பழந்தமிழ் – Later Ancient Tamil

2. இடைக்காலத் தமிழ் (Medieval Tamil)
உட்பிரிவுகள் மூன்று.
அ. முன்இடைக்காலத் தமிழ் – Early Medieval Tamil
ஆ. மத்தியஇடைக்காலத் தமிழ் – Medium Mediaval Tamil
இ. பின்இடைக்காலத் தமிழ் – Later Medieval Tamil.

3. தற்காலத் தமிழ் (Modern Tamil)
உட்பிரிவுகள் மூன்று.
அ. முன் தற்காலத் தமிழ் – Early Modern Tamil
ஆ. பின் தற்காலத் தமிழ் – Later Modern Tamil
முன்பழந்தமிழ் அல்லது தொல்பழந்தமிழ்Early ancient Tamil
(or) Proto Ancient Tamil
திராவிட மொழிகள் பல உள்ளன. 

அவைகள் அனைத்தும்
தமிழ் என்ற ஒரு மூல
மொழியிலிருந்து உருவானவைகள்.

தொல்பழங்காலத்தில் திராவிட மூல மொழியாக
இருந்த தமிழ் மொழியிலிருந்து பிரிந்து,
காலத்தாலும் இடமாற்றங்களாலும்
வெவ்வேறு மாற்றமடைந்து வளர்ந்தவைகளே பிறம
ொழிகள். 

அவற்றை நாம் ” திராவிட மொழிக்
குடும்பம்” என்று அழைக்கிறோம். பல மொழிகள்
உருவாக மூலமாக, கருவாக இருந்த மொழியினைத்
தொல்திராவிட மொழி அல்லது மூலத்திராவிட
மொழி (Proto Diravidan Language) என்கிறோம்.

திராவிட மொழிக் குடும்பம்
மூலத்திராவிட மொழி அல்லது தொல் திராவிட
மொழியாகத் திகழ்ந்த தமிழ்
மொழியிலிருந்து பிரிந்து சென்ற மொழிகளைத்
திராவிட மொழிக் குடும்பம் என்கிறோம். தமிழ்,
கோண்டி, கூயி, கூவி, கோவாமி, மண்டா,
கொண்டா, நாயக்கி, குருக், மால்தோ, பிராகூய்
போன்றவைகளோடு இன்னும் பல பல உண்டு.
திராவிட மொழிகளை மூன்று பிரிவுகளாகப்
பிரித்துள்ளனர்.

1. தென் திராவிட மொழிகள் – தமிழ், மலையாளம்,
கன்னடம்.

2. நடுத்திராவிட மொழிகள் – தெலுங்கு, கோண்டி,
கூயி, கூவி மேலும் பல உள்ளன.

3. வடதிராவிட மொழிகள் – குருக், மால்தோ,
பிராகூப் மேலும் பல உள்ளன.

தமிழ்மொழியின் பெரும்புகழ்
திராவிட மொழிகளில் மிகப் பழமை வாய்ந்த
மொழி தமிழ். 

சுமார் ஐந்தாயிரம் (5000)
ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண நூல்களையும் பல
இலக்கியங்களையும் பெற்று பாரெங்கும் புகழ்பரவ,
பெரும் வளர்ச்சி பெற்றிருந்த
ஒரே மொழி தமிழாகும். 

திராவிட
மொழியை ஆய்வு செய்த பேரறிஞர்கள் திரு.
பர்ரோவும், திரு. எமனோவும்
இணைந்து “திராவிடச் சொற்பிறப்பியல்
அகராதி” (Diravidan Etymological Dictonary) வெளியிட்டனர்
என்றால், தமிழ் மொழியின் வளர்ச்சியை உணருங்கள்.

இத்தமிழ் மொழி, இன்றைய தமிழ் நாட்டில் மட்டும்
அல்ல அன்றைய குமரிக் கண்டமாகிய பழந்தமிழ்
நாட்டில் மட்டுமல்லாமல் பாரெங்கும்
பரவியிருந்தது. பர்மா, மலேசியா, சிங்கப்பூர்,
பிஜித்தூவு, இலங்கை, தென் ஆப்பிரிக்கா,
பிரிட்டிஷ், கயானா, மடகாஸ்கர், கிரினிடால் போன்ற
உலகின் பல பகுதிகளிலும் பரவி மலர்ந்திருந்தது.

தமிழினம் மற்றும் மொழிச் சிதைவு
உலகெங்கும் தன்னிகரற்ற பேரரசனாகக் கொடிகட்டிப்
பறந்த தமிழினமும், அவன் தாய் மொழியாகிய தமிழ்
மொழியும், நான்குமுறை ஏற்பட்ட பெரும் கடல்
கோள்களால் அழிவுற்றது. 

அப்பெரும் கடல்
கோள்களால் குமரிக்கண்டம் மட்டுமல்ல, உலக நாடுகள்
அனைத்திலுமே பேரழிவுகளால்
மலை மடுவானது, உலகின் பல நாடுகள்
அழிவுற்றன. உயிரினங்கள் மாண்டன, மொழிகளும்
சிதைவுற்றன. 

அவ்வாறே குமரிக்கண்டமும் நீரில்
மூழ்கி அழிவுற்றது. இந்த அழிவுகளால் தமிழின்
மரபு, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் இலக்கணங்கள்,
இலக்கியங்கள் அத்தனையும் சிதைந்து நாசமாகியது.

உலகின் பூகோள வடிவமே மாற்று வடிவம்
பெற்றது.
வரலாற்றுச் சான்றுகள்
வரலாறு பலவகை உண்டு. அவற்றில்
மொழிவரலாறும் ஒன்று.

மொழி வரலாறு என்பது மொழியின் தோற்றம்,
வளர்ச்சி, காலங்கள் தோறும் ஏற்படும் மொழியின்
மாற்றங்கள், பிறமொழிக் கலவை, வரிவடிவ மாற்றங்கள்
இப்படிப் பல மொழிச் செய்திகளை நமக்குத்
தருவது மொழி வரலாறு. 

ஒரு மொழியின்
வரலாற்றைப் படைக்க, சான்றுகளே முக்கியப்
பங்கேற்கிறது. சான்றுகளின்றிப் படைக்கப்படும்
வரலாறுகள் வரலாறுகள் அல்ல, அவைகள் கதைகளாகக்
கருதப்படும்.

தமிழ் மொழி வரலாற்றுச் சான்றுகள்
மொழிகள் காலத்திற்குக் காலம் மாற்றம் ஏற்பட்டுக்
கொண்டே இருக்கின்றன. மொழிகள் தோன்றிய காலம்
எதுவென்று சரிவரக் கூறமுடியாத நிலை இன்னும்
நீடிக்கிறது மனிதன் என்று தோன்றினான்?

உயிரின
வளர்ச்சிகள், மொழிகளின் இயற்கைத் தோற்றம், அவற்றின்
வளர்ச்சிகள், போன்ற பலதலைப்புகளில் சிந்தனையைச்
செலுத்தவும், ஆய்வினைக் கொள்ளவும், முதல்
முதலில் தோன்றியது “டார்வினின் பரிணாமக்
கொள்கையே” ஆகும். தமிழ் மொழியின் ஆய்வினைக்
கொண்ட பேரறிஞர்கள் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள்,
அகராதிகள், கல்வெட்டுகள், பிறமொழிக்
கல்வெட்டுக்கள், அயல்நாட்டினர் குறிப்புகள்,
நடுகற்கள், அரசுச் சாசனச் செப்பேடுகள், தொல்
பொருட்களின் மீது எழுதப்பட்ட வரி வடிவங்கள் போன்ற
பல மொழி வரலாற்றுச் சான்றுகளைப்
பயன்படுத்தி மொழி வரலாற்றைப் படைக்கின்றனர்.

ஆற்றுச் சமவெளி நாகரிகங்கள்
ஒரு வரலாற்றைப் படைக்க, ஒரு நாட்டைப் பற்றித்
தெரிந்து கொள்ள, ஒரு மொழியை அறிந்துகொள்ள
அடிப்படையாக அமைவது ஆற்றுச்
சமவெளி நாகரிகங்களே! 

இத்தோடு ஒத்துழைப்புத்
தருபவைகள் மொழி இலக்கணங்களும், இலக்கியங்களும்,
அனைத்து விதமான ஆதாரங்களைக் கொண்டு உலக
வரலாற்றைக் கண்டறிந்த ஆய்வு நிபுணர்கள்,
மொழி வரலாற்றையும் கண்டறிந்துள்ளனர்.

தமிழ்மொழியின் தொன்மையையும்,
தோற்றத்தையும் மாற்றத்தையும் வளர்ச்சியையும்
பின்வரும் பகுதிகளில் நன்கு அறிவோம்.

சார்லஸ் டார்வின்:-
இங்கிலாந்து நாட்டின் வரலாற்று மேதை திரு.
சார்லஸ் டார்வின் எழுதிய “உயிரினத்தோற்றம்”
வாயிலாக கடல் வாழ் உயிரினங்கள், மற்றும்
குரங்கையொத்த உருவைக் கொண்ட “மாந்தன் (Lemuria)”
போன்ற உயிரினத் தோற்றங்களை அறிகின்றோம்.

மேலும் “மனிதனின் பாரம்பரிய வளர்ச்சி” என்னும்
நூலின் வாயிலாக குமரிமாந்தனையும், மனித இன
பரிணாம வளர்ச்சியையும் உணரமுடிகிறது...
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum