தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இஸ்லாமியரின் கிறிஸ்தவம் தொடர்பான கேள்விகளுக்கான விடைகள்  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்லாமியரின் கிறிஸ்தவம் தொடர்பான கேள்விகளுக்கான விடைகள்  Empty இஸ்லாமியரின் கிறிஸ்தவம் தொடர்பான கேள்விகளுக்கான விடைகள்

Mon Aug 25, 2014 8:19 am
ஒரு சில நாட்களுக்கு முன்பு ஒரு இஸ்லாமியர் மின்னஞ்சல் வழியாக என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மகிழ்ச்சியடைகிறேன்.

இஸ்லாமியரின் கிறிஸ்தவம் தொடர்பான கேள்விகளுக்கான விடைகள்  Jesusismesiah
கேள்வி எண் 1. இயேசு ஒரு கிறிஸ்தவரா? கிருஸ்தவர் என்று பைபிள் இல் உள்ளதா?
நல்ல கேள்வி ஹாரீஸ் அவர்களே, இயேசு கிறிஸ்தவரா என்று அறிவதற்கு முன்னால் கிறிஸ்து என்றால் என்ன எனபதைப் பார்த்து அதை இயேசுவோடு பொறுத்திப் பார்த்தால் அவர் கிறிஸ்தவரா என்பதையும் பைபிளில் அப்படி சொல்லப்பட்டுள்ளதா என்பதையும் எளிதாக அறியமுடியும்.

கிறிஸ்து என்ற சொல் ஒரு கிரேக்கச் சொல்லாகும், இதன் எபிரேய சொல் மேசியா(S/O GOD) என்பதாகும், மல்லிகைப் பூவை தமிழில் மல்லிகை என்றும் ஆங்கிலத்தில் ஜாஸ்மின் என்றும் அழைக்கிறோம் அல்லவா அப்படியே கிறிஸ்துவும், மேசியாவும் ஒரே பொருளையுடைய வெவ்வேறு மொழி சொற்கள்(யோவான் 1:41, 4:25). இதற்கு தமிழில் கடவுளால் அபிஷேகிக்கப்பட்ட இறைமகன் மற்றும் இஸ்ரவேலை அனாதியாய் ஆள்பவர் என்று பொருள், யூதர்களுடைய வரலாற்றை எடுத்துக்கொண்டால் ஆதாம் காலத்தில் பாம்புக்கு கொடுக்கப்பட்ட சாபத்தில் நேரடியாக பிதாவாகிய தேவனாலும், மனிதர்கள் மூலமாக‌ ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான‌ ஏனோக்கின் காலம் தொடக்கியே மேசியாவின் வருகையைக் குறித்த வெளிப்பாடுகள் வர ஆரம்பித்திருக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் மோசே, சாமுவேல், தாவீது, சாலமோன், ஏசாயா, என்று பைபிளில் பெயர் குறிப்பிடும்படியான அனைத்து தீர்க்கதரிசிகளும் மேசியாவைக் குறித்த முன்னறிவிப்பு செய்திருக்கின்றார்கள். இந்த முன்னறிவிப்புகள் எல்லாம் சுமார் 500க்கும் அதிகமானவையாகும், அவைகள் அனைத்தையும் இயேசு நிறைவேற்றினார், அதாவது யாரிடம் எங்கு என்பது தொடங்கி இன்னவிதமாக மரிக்கப் போவது, உயிர்த்தெழுவது என்பது வரைக்கும் நிறைவேற்றினார். எந்த மனிதனாலும் தீர்மானிக்க முடியாத இரண்டு விசயங்கள் யாரிடம் எங்கு எப்போது பிறப்பது எப்படிப்பட்ட மரணத்தின் மூலம் மரிப்போம், மரித்த பின்பு திரும்ப எழும்புவது ஆகியவைகள் தீர்க்கதரிசிகள் மூலமாக முன்னறிவிக்கப்பட்டதை அப்படியே நிறைவேற்றினார் எப்படி? 

யாரிடம் மேசியா பிறப்பார் என்பதைக் குறித்த தீர்க்கதரிசனம்  

யூதர்களின் தோரா அதாவது கிறிஸ்தவர்களின் பழைய உடன்படிக்கையிலுள்ள ஏசாயா தீர்க்கதரிசன ஆகமத்தில் "இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்."(ஏசா7:14)

அதன்படியே இயேசுவும் கன்னிகையின் வயிற்றில் பிறந்தார் என்று இஸ்லாத்தும் ஒப்புக்கொள்கிறதல்லவா?

மேசியா எங்கே பிறப்பார் என்பதற்கான தீர்க்கதரிசனம்
அதே பழைய ஏற்பாட்டிலுள்ள மீகா தீர்க்கதரிசி: எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.(மீகா 5:2) 

என்று மேசியா பெத்தலகேமில் பிறப்பார் என்று சொல்லப்பட்ட தீர்க்கதரிசனமும் இயேசுவில் நிறைவேறியிருக்கிறது என்பதையும் இந்த உலகம் அறியும்.,

மேசியாவின் மரணம் குறித்த தீர்க்கதரினம்
அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.(ஏசாயா 53:7)

கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி: அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.
பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.(சங்கீதம்2) 

இது அப்படியே இயேசுவின் வாழ்க்கையில் நிறைவேறிற்று 

இயேசுவே மேசியா என்று அவர் வாயில் சொல்லுதல்
இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரை நோக்கி நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.(மத்தேயு 27:11)
அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின் மேல் கட்டினார்கள்.(மாற்கு 15:26)
மேற்கண்ட வசனங்கள் இயேசு மேசியா என்று அறிவிக்கப்பட்டதை அறிந்து கொள்கிறோம், 

அந்த வகையில் இயேசுவே கிறிஸ்து என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் பைபிள் சொல்லுகிறது, 

இயேசு கிறிஸ்து சரி இயேசு கிறிஸ்தவரா?

அன்பு நண்பரே இயேசுகிறிஸ்து அதாவது இறைமகன், இஸ்ரவேலை அநாதியாய் ஆள்பவர், பிதாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவர் இயேசு கிறிஸ்து என்று பைபிள் தெளிவாக விளக்கியதைப் பார்த்தோம் இப்போது கிறிஸ்வர்கள் என்பதைக் குறித்துப் பார்ப்போம்,

கிறிஸ்தவர்கள் என்பவர்கள் யார்?
யூதர்கள் பொதுவாக மற்ற இன‌த்தாரோடு பந்தியிருக்க மாட்டார்கள், ஆனால் இயேசுவை ஏற்றுக்கொண்ட யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்ட கிரேக்கர்களுடன் ஒரே சபையாக அந்தியோகியா என்ற இடத்தில் உலக வரலாற்றில் முதன்முறையாக சமபந்தி போஜனம் அதாவது கிறிஸ்து கற்பித்த இராபோஜனத்தை நிணைவுகூரும் வகையில் பந்தியிருந்தார்கள். அதைப் பார்த்த இயேசுவை ஏற்றுக்கொள்ளாத யூதர்களும், கிரேக்கர்களும், மற்ற இணத்தாருடன் பந்தியிருக்கும் தங்கள் மக்களை கேலி செய்வதற்காக கிறிஸ்தவர்கள் என்ற பட்டப்பெயரை வைத்து அழைத்தர்கள் அது முதல் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் வழங்களாயிற்று என்று வேதம் சொல்லுகிறது(அப்போஸ்தலர் 11:26)

அது சரி இயேசு கிறிஸ்தவரா?
ஆம் அவர் ஒரு கிறிஸ்தவரே, கிறிஸ்துவுக்கு கிறிஸ்தவராவதில் பெரிய சிரமம் இருக்கப் போவதில்லை, அவர் அவருடைய சீஷர்களுக்கு முன்னுதாரணமாக தான் வாழ்ந்த காலத்தில் சகேயூ எனப்பட்ட ஒரு ஆயக்காரன்(தாழ்ந்த குடி) வீட்டில் உணவருந்தினார், மத்தேயூ எனப்பட்ட ஒரு ஆயக்காரனை தன்னுடைய 12 அப்போஸ்தலர்களுல் ஒருவராக வைத்து தானும், பின்நாட்களில் யூதர்கள் மற்றும் கிரேக்கர்களால் கிறிஸ்தவர்கள் என்று இகழப்பட்டவர்களின் தலைவர்களாக இருந்த அப்போஸ்தலர்களும், அந்த ஆயக்காரனுடன் பந்தியிருந்தார்கள், 

அன்று ஜாதி இன மொழி வித்தியாசமில்லாமல் அந்தியோகியாவில் பந்தியிருந்த இயேசுவின் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டால் இன்று பரிசுத்த திருப்பந்தியில் கிறிஸ்துவின் இரத்தமும் சரீரமுமாகிய சாக்கிரமந்தை புஷித்துப் பானம்பன்னும் எங்களையும் இந்த உலகம் கிறிஸ்தவர்கள் என்று சொல்லுமானால் எங்கள் தலைவர் இயேசுவும் கிறிஸ்தவர் தானே?

உங்களுடைய இரண்டாவது கேள்வி
தற்போது உங்களிடம் உள்ள பைபிளின் வரலாறு என்ன?
இதற்கான பதில் இந்தத் தொடுப்பில் இருக்கிறது: [url=http://www.bibleuncle.com/search/label/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D %E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81]http://www.bibleuncle.com/search/பைபிள் வரலாறு[/url] 
இதைப் படியுங்கள் நாளை அதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கர்த்தருக்கு சித்தமானால் நிச்சயமாக தெளிவாக்குகிறேன் நன்றி

- See more at: http://www.bibleuncle.com/2013/05/1.html#sthash.2bhUq5VQ.dpuf
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்லாமியரின் கிறிஸ்தவம் தொடர்பான கேள்விகளுக்கான விடைகள்  Empty Re: இஸ்லாமியரின் கிறிஸ்தவம் தொடர்பான கேள்விகளுக்கான விடைகள்

Mon Aug 25, 2014 8:20 am
தற்போது உங்களிடம் உள்ள பைபிளின் வரலாறு என்ன?
பைபிளின் மூலப்பிரதி எங்கே உள்ளது?
இஸ்லாமியரின் கிறிஸ்தவம் தொடர்பான கேள்விகளுக்கான விடைகள்  Historybookofbible


பைபிள் வரலாற்றை ஏற்கெனவே இங்கே சுருக்கமாக தெளிவாக எழுதியிருந்தாலும், இஸ்லாம் வியாபாரிகளின் பொய்பிரச்சாரங்களுக்குத் தங்களை விற்றுப்போட்ட இஸ்லாம் நண்பர்களுக்கு இதைக் குறித்த தெளிவை உண்டாக்க வேண்டிய காலச்சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.

உலகத்தில் வேதங்கள் என்று சொல்லப்படுகின்றவைகள் பெரும்பான்மையானவைகள் பூரணமானவைகள் அல்ல, அவைகள் மற்ற நூல்களின் உசாத்துனையின்றி அறிதல் இயலாது, அதே போல பூரணவாழ்வுக்கான வழிகாட்டியாகவும் அவை இருப்பதில்லை, ஆனால் பைபிள் முற்றிலும் மாறுபட்டது மற்ற நூல்களின் துணை தேவையில்லை, அதே போல பூரண வாழ்வுக்கான வழியை சொல்வதில் துவக்கம் முதல்கொண்டே நோக்கத்தில் உறுதியாக நிற்கின்றது, அந்த பூரண வாழ்வுக்கான வழி இயேசு கிறிஸ்துவே.. உலகத்தோற்றம் முதற்கொண்டு உலகத்தின் முடிவு வரைக்கும் தேவக்குமாரனாம் இயேசு கிறிஸ்துவை மையப்படுத்தி தேவ ஆவியானவரின் ஏவுதலால் பைபிள் எழுதப்பட்டது

யாரால் எழுதப்பட்டது?
பைபிள் மனிதர்களால் எழுதப்பட்டது தான் ஆனால் அதில் தொடக்கம் முதல் முடிவு வரை எழுதப்பட்ட‌ காலமும், எழுதப்பட்ட மனிதர்களின் மொழி பன்பாடு நாகரீகம் கல்வியறிவு ஆகியவைகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவைகள். இவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் சொல்லப்பட்ட தகவல்கள் ஒரே மாதிரியானவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பினைந்தவை, என்ன ஒன்றும் புரியவில்லையா? தொடர்ந்து படியுங்கள புரிந்து விடும்

அதாவது பைபிளில் முதல் புத்தகம் முதல் கடைசிப் புத்தகம் வரை எழுத சுமார் 1600 (ஆயிரத்து ஆறுனூறு) ஆண்டுகள் ஆனது, மேலும் எழுதிய மனிதர்களும் முற்றிலும் மாறுபட்டவர்கள் அதாவது மோசே போன்ற தீர்க்கதரிசிகள் எஸ்ரா போன்ற ஆசாரியன். தாவீது போன்ற அரசர்கள், தானியேல் போன்ற அமைச்சர்கள், பவுல் போன்ற அறிஞர்கள், பேதுரு போன்ற மீனவர்கள், லூக்கா போன்ற மருத்துவன், என பலதரப்பட்ட 40 மனிதர்களால் எழுத்தப்பட்டது தான் பைபிள், மேலும் இவர்கள் வாழந்த காலமும் இடமும் ஒன்றோடு ஒன்று முற்றிலும் மாறுபட்டவை.

எழுதப்பட்ட மொழிகள்
அதோடு அல்லாமல் எழுதப்பட்ட மூல மொழிகளிலும் வேறுபாடுகள் உண்டு பழைய ஏற்பாட்டின் பெரும்பாலான பகுதிகள் எபிரேய மொழியிலும், சில பகுதிகள் அரமாயிக் மொழியிலும் எழுத்தப்பட்டது, புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டது இப்படி பன் மொழியில் எழுதப்பட்டதுதான் பைபிள், ஒரு வேளை இவைகள் வேறு வேறு மொழிகளில் எழுதப்பட்டாலும் எழுதப்பட்ட இடங்கள் ஒன்றாக இருக்குமோ என நீங்கள் நினைப்பது தெரிகிறது அதுதான் இல்லை

எழுதப்பட்ட இடங்கள்
மோசே பாலஸ்தீனாவிற்கு வெளியே எழுதினார். கானான் தேசத்தில் பலர் எழுதினார்கள், பாபிலோனிலிருந்தும், தாவீது பாலைவனத்திலிருந்தும் அரச சிம்மாசனத்திலுமிருந்தும், புதிய ஏற்பாட்டுக் கடிதங்களை ஆசிய ஐரோப்பிய கண்ட முக்கிய நகரங்களில் இருந்தும் எழுத்தப்பட்டது

பைபிளின் ஆசிரியர் யார்,
பைபிளை சுமார் 40 மனிதர்கள் எழுதினார்கள் என்று சொல்லிவிட்டு இப்போது அதன் ஆசிரியர் யார் என்ற கேள்வி குழப்பத்தை உண்டாக்கலாம், ஆனால் வெவ்வேறு கால கட்டத்தில் வெவ்வேறு மனிதர்கள் மூலம் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு நாகரீகத்தில், வெவ்வேறு இடங்களிலிருந்து, வெவ்வேறு காலச்சூழ்நிலைகளில் எழுதப்பட்ட ஒரு நூல் எப்படி முரண்பாடுகள் அற்றதாக இருக்க முடியும் என்ற கேள்வி பிறப்பது இயல்பே ஆனால் இதை எழுதியவர்கள் எல்லோரும் நாம் முன்பே குறிப்பிட்டது போல‌ தேவ ஆவியானவரின் ஏவுதலால் தான் எழுதினார்கள், அதனால் தான் பூரண வாழ்வுக்கான வழியை(அந்த வழி இயேசு கிறிஸ்து) மையப்படுத்தியே எழுதப்பட்டிருக்கின்றது, அதனால் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து சொல்லப்படுகின்ற நோக்கத்தில் உறுதியாக இருக்கின்றது,

பைபிளில் துவக்கம், 
மோசே வனாந்திரத்தில் எகிப்த்திலிருந்து கானான் தேசத்துக்கு இஸ்ரவேல் மக்களை நடத்திச் சென்றபோது தேவ ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்டது பைபிளில் இருக்கும் முதல் 5 நூல்கள் ஆகும், உலகத்தைக் காத்து இரட்சிக்கும் மேசியா என்ற கிறிஸ்து இஸ்ரவேல் சந்ததியில் பிறப்பார் என்ற வாக்குறுதியைப் பெற்ற ஆபிரகாமின்(ஆதியாகமம் 22:18, கலாத்தியர் 3:16) வழி வந்த இசாக்கு யாக்கோபின் வம்சாவழியினராகிய இஸ்ரவேல் மக்களுக்கு மேசியாவின் வருகையை மீண்டும் ஒருவிசை உறுதிப்படுத்தி, அவர்களை பரிசுத்த ஜனமாக வேறுபிரித்து உலகத்தின் பாவங்களுக்கு பலியாக தன்னைத்தான் ஒப்புக்கொடுக்கப் போகின்ற கிறிஸ்துவின் நிழலாக பலிகளையும், 

உன்னிடத்தில் நீ அன்பு கூறுகிறது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக என்ற கிறிஸ்து கற்பித்த அடிப்படை சத்தியத்தின் நிழலாட்டமாக நியாயப்பிரமானத்தையும்(10கட்டளைகள்)தேவன் கொடுத்த வரலற்றையும், அப்படி வேறுபிரிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களின் வரலாற்றையும் சொல்லும் நூல் பஞ்சாகமம் என்று சொல்லப்படுகின்ற மோசேயின் ஆகமங்களாகும்,

அதைத் தொடர்ந்து வந்த யோசுவா, இஸ்ரவேல் மக்கள் கானானில் குடியமர்ந்த பின்பு நியாயம் விசாரித்த நியாயாதிபதிகளின் வரலாறு, சாமுவெல் தீர்க்கதரிசியின் ஆகமம், அதைத் தொடர்ந்து இஸ்ரேல் மக்களை ஆண்ட இராஜாக்களைக் குறித்த விவரங்கள் அவர்களது நடபடிகளை விவரிக்கும் நாளகமம், மற்றும் அவ்வப்போது இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய வார்த்தையை விட்டு வழி விலகும் போதெல்லாம் தேவன் தீர்க்க தரிசிகளை அனுப்பி எச்சரித்தார், அவர்கள் கண்ட தரிசனங்கள் மற்றும் அவர்கள் எழுதிவைத்த வரலாற்று குறிப்புகள் ஆகியவை அடங்கிய நூல்கள் தீர்க்கதரிசன ஆகமங்கள் எனப்படும், இவைகளைத் தொகுத்தவர் எஸ்ரா என்ற ஆசாரியன் ஆவான்.

இழையோடும் நோக்கம்
இந்த நூல்களிலும், இஸ்ரவேலின் கோத்திரத் தலைவனாகிய அபிரகாமுக்கு தேவன் ஆனையிட்டுக்கொடுத்த மேசியாவைக் குறித்த வெளிப்படுகள், எதிர்பார்ப்புகள், அவருடைய ஆளுகை எப்படி இருக்கும் என்பதைக் குறித்த தெளிவான விளக்கங்கள் என்று ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்கில் தொடங்கி, மோசேயின் ஆகமங்களில் இஸ்ரவேல் சந்ததியாருக்கு உறுதி செய்து அதன் நீட்சியாக தீர்க்கதரிசன ஆகமங்களில் மேசியா முன்மொழியப்படுகின்றார்.

மேசியாவின் வருகை யூதா(யூதர்) கோத்திரத்தில் உறுதி செய்யப்படுதல்
இஸ்ரவேல் கோத்திரம் 12 ஆகும், இராஜாக்களின் காலம் வரைக்கும் மேசியா எந்த கோத்திரத்தில் பிறப்பார் என்று தெரியாமல் இருந்தது அது தாவீது இராஜாவின் காலத்தில் யூதர்களிடமிருந்து அதிலும் குறிப்பாக தாவீதின் சந்ததியில் பிறப்பார் என்று உறுதிப்படுத்தப்பட்டது(சங்கீதம் 2:7)

அதைத் தொடர்ந்து வந்த தீர்க்கதரிசிகள் பெத்தலகேமிலும், கன்னியின் வயிற்றிலும் பிறப்பார் என்று மேசியாவின் வருகையைக் கூர்மையாக்கினார்கள், இதைக் குறித்து சென்ற பதிவில் நாம் விரிவாகக் கண்டோம்...

இதுவரை மேசியாவின் வருகை ஆபிரகாம் >> ஈசாக்கு >> இஸ்ரவேல் >> யூதர் >> தாவீது வம்சம் >> பெத்தலகேம் >>  கன்னிகை என்று வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த வெவ்வேறு மனிதர்கள் மூலம் தேவ ஆவியானவர் முன்னறிவித்ததை பார்த்தோம் இது பைபிளில் பழைய ஏற்பாடு என்று சொல்லப்படுகின்றது.

புதிய ஏற்பாடு
அடுத்து மேசியாவின் பிறப்பு இறப்பு, உயிர்த்தெழுதல் பரமேருதல், அதன் பிறகு முன்பு யூதர்களுக்கு மாத்திரம் இருந்த மேசியாவை தேவனுடைய கரத்தின் சிருஷ்டிகளாய் இருக்கும் உங்களுக்கும் எனக்கும் இயேசுவின் இரத்தத்தின் மூலம் நமக்கு சொந்தமாக்கினார், அவர் திரும்ப வந்து இந்த பூமியை நித்தியமாய் அரசாள்வார் என்பதையே புதிய ஏற்பாடு சொல்கிறது...

பைபிளின் நம்பகத்தன்மை
கிறிஸ்தவர்களாகிய நாங்கள் பயன்படுத்தும் பைபிளின் பழைய ஏற்பாடு இன்றைக்கும் இந்த உலகத்தில் வாழும் யூதர்களின் வேதமான தோரா ஆகும், கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவுக்காக அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று இன்றும் மேசியாவின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கும் யூதர்களின் வேதமே சாட்சி, இயேசுவை கிறிஸ்து என்று ஏற்றுக்கொள்ளாத யூதர்கள் இன்றும் பூமியில் இருக்கிறார்கள் அவர்களிடம் உள்ள வேதமும் பைபிளின் பழையேற்பாடும் ஒன்றே.. ஆகவே பைபிளின் பழைய ஏற்பாடு கிறிஸ்தவர்களால் திருத்தப்படவில்லை என்பது தெளிவாக விளங்குகின்றது.

புதிய ஏற்பாடு நம்பகத்தன்மை..

பைபிளில் புதிய ஏற்பாடு என்பது கிறிஸ்தவர்களுக்கு மட்டும் உரியது ஒருவேளை இதை கிறிஸ்தவர்களுக்கு சாதகமாக மாற்றியிருக்கலாம் என்ற ஐயம் எழுவது இயற்கையே ஆனால் பழங்கால நூல்களின் நம்பகத் தன்மையை ஆராயும் மூலப் பிரதி விமர்சன அறிவியல் இந்த விசயத்தில் நமக்கு உதவி செய்கின்றது.

மூலப்பிரதி விமர்சன அறிவியல் என்பது என்ன?
இது பழங்கால நூல்களில் இடைச்செறுகல்கள் உள்ளதா என்பதைக் குறித்து ஆராய்ந்து அதில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையா என்பதை தெளிவாக்கும் ஒரு தற்கால தொல்பொருள் துறை நுட்பம் ஆகும்,

இது எப்படி செயல்படுகின்றது?
ஒரே கருத்துக்கள் சொற்றொடர்கள் உள்ள பழங்கால நூல்களின் பிரதிகள் எத்தனை அதிகமாகவும், எத்தனை பரவலாகவும்(நிலப்பரப்பில்) கிடைக்கின்றது என்பதையும், எழுதப்பட்ட கால அளவுக்கும் நமக்குக் கிடைத்திருக்கும் பிரதியின் கால அளவுக்குமான வித்தியாசம் எத்தனை குறைவு போன்ற அளவீடுகளைக் கொண்டு அதன் உண்மைத் தன்மையை அறியும் அறிவியல் முறையாகும், இந்த அடிப்படையிலேயே பழங்கால நூல்கள் ஆராயப்பட்டு உலகத்தின் வரலாறு எழுதப்படுகின்றது

பைபிள் புதிய ஏற்பாட்டில் மூலப்பிரதி விமர்சன அறிவியல்

இந்த தொல்பொருள் துறை நுட்பத்தைக் கொண்டு பைபிளின் மூலப் பிரதிகளை ஆராய்ந்த முடிவுகளை இங்கு குறிப்பிடுவது அவசியம், பைபிளின் புதிய ஏற்பாடு மிகச்சரியாக இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதழுக்குப் பின் 16 ஆண்டுகளுக்குப் பின் எழுத ஆரம்பிக்கப்பட்டது (கொலேசியர் நிரூபம்) இறுதி நூலான வெளிப்படுத்தல் கி.பி 94 ல் முடிக்கப்பட்டது. தோராயமான கணக்கில் கி.பி 30க்கும் கி.பி 100க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது என்று வைத்துக் கொள்வோம்..

நமக்குக் கிடைத்திருக்கும் மூலப்பிரதிகளின் எண்ணிக்கை மற்றும் எழுதப்பட்ட கால அளவு
பைபிளின் மூலப்பிரதிகள் அன்றைய சபைகளுக்கு பல்வேறு கையெழுத்துப் பிரதிகளாக எழுதப்பட்டு கொண்டு செல்லப்பட்டது அதன் பரப்பளவு அரேபியா துவக்கி பாலஸ்தீனா, சிரியா, துருக்கி, கிரீஸ், இத்தாலி, சிசிலி, சைப்ரஸ், மால்டா போன்ற மத்திய தரைக்கடல் எல்லையில் அமைந்திருக்கும் அத்தனை நாடுகளின் முக்கிய நகரங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டது அதில் சிதிலமடைந்தது போக நமக்குக் கிடைத்திருக்கும் அளவு என்ன வென்று தெரியுமா?

கி.பி 130 என்ற தேதியில் யோவான் எழுதிய சுவிசேசம் ஒரு பகுதி பிரதியும், ஆதித் திருச்சபை பிதாக்களின் எழுத்துக்களில் 36,000க்கும் மேற்பட்ட மேற்கோள்கள், கிரேக்க மொழியில் 5000+ லத்தீன் 10,000+ பிற மொழிகளில் 9300+ என்று கிட்டத்தட்ட 25000க்கும் மேற்பட்ட மூல கையெழுத்துப் பிரதிகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இதில் ஆதித் திருச்சபை முற்பிதாக்களின் மேற்கோள்களின் தொகை சேர்க்கப்படவில்லை.. இவை அனைத்திலும் சொல்லப்படுகின்ற செய்திகள் ஒன்றாகவே இருக்கின்றன, ஒரு சில பிரதிகளில் மாத்திரம் ஒரு சில வசனங்கள் விடுபட்டிருந்தன ஆனாலும் அவைகளிலும் சொல்லப்படுகின்ற செய்திகளில் முரன்பாடு இல்லை

தற்போது கிடைத்திருக்கும் பிரதிகள் எழுதப்பட்ட காலம்
நாம் முன்னமே புதிய ஏற்பாடு கி.பி 100க்குள் எழுதப்பட்டிருக்கலாம் என்று பார்த்தோம், கிபி 327 ஆம் ஆண்டில் பிஷப் அக்னேசியஸ் தலைமையில் கூடிய டிரெண்ட் மன்றம் புதிய ஏற்பாட்டு நூல்களை இறுதி செய்தது என்று வரலாறு நமக்குச் சொல்லுகின்றது. அதாவது எழுதப்பட்ட காலத்துக்கும், நமக்குக் கிடைத்திருக்கும் காலத்துக்குமான இடைவெளி அதிகப் பட்சமாக 300 ஆண்டுகளாகும்,

இந்தக் கால இடைவெளி நம்பகத் தன்மை வாய்ந்ததா?
உலக வரலாற்றைத் தொகுத்தெழுத உதவிய மூலப்பிரதி விமர்சன அறிவியல் முறையில் மற்ற வரலாற்று நிகழ்வுகளை தொகுக்கும் போது மேற்சொன்ன எழுதப்பட்ட கால அளவுக்கும், நமக்கு கிடைக்கப்பெற்ற பிரதியின் கால அளவுக்குமான வேறுபாடு பைபிளைப் பொறுத்தவரை மிகவும் குறைவாகும்... 

ஆனாலும் மற்ற தொன்மையான நூல்களைக் காட்டிலும் எண்னிக்கையிலும், பரப்பளவிலும் பைபிளே முதலிடம் பிடித்து சந்தேகத்துக்கு இடமில்லாமல் தன் உண்மைத் தன்மையை பறைசாற்றுகின்றது. இது குறித்த இன்னும் தெளிவான ஒப்பீட்டு அட்டவனை இங்கே உள்ளது


பைபிளின் மூலப்பிரதிகள் எங்கே உள்ளன?
மேலே சொன்ன 25000 (இருபத்தி ஐந்தாயிரம்) க்கும் மேற்பட்ட பைபிளின் மூலப் பிரதிகள், ஆதித்திருச்சபை முற்பிதாக்களின் மேற்கோள்களில் உள்ள 36000( முப்பத்தி ஆறாயிரம்)க்கும் மேற்பட்ட குறிப்புகள் ஆகியவை இலண்டன் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது.

கி.பி 327ல் டிரெண்டு மன்றம் புதிய ஏற்பாட்டு நூல்களை இறுதி செய்த பின்பு கி.பி350 தேதியிடப்பட்ட முழுமையான பைபிள் புதிய ஏற்பாட்டு நூல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

அதாவது எழுதப்பட்ட காலத்துக்கும் நம் கண் முன்னால் இலண்டன் அருங்காட்சியகத்தில் இருக்கும் பிரதிகளுக்கும் இடையிலான வித்தியாசம் அதிகப்பட்சம் 300 ஆண்டுகளே.. பழங்கால நூல்களில் பைபிளே இத்தகு குறுகிய கால அளவுடன், ஒரே கருத்துடன் கூடிய ஆயிரக்கணக்கான பிரதிகள் மத்திய கிழக்கு, மேற்கு ஆசியா கிழக்கு மற்றும் தெற்கு ஐரோப்பா என்று பரந்த நிலப்பரப்பில் கிடைத்து சாதனை படைத்திருக்கின்றது.

இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால் இஸ்லாம் கைக்கூலிகள் தங்கள் பிழைப்புக்காக பைபிள் திருத்தப்பட்டது, மூலப்பிரதிகள் இல்லை என்றெல்லாம் பொய்சொல்லி வயிறு வளர்க்கிறார்கள். அதை இஸ்லாமியர்கள் கூட நம்பி ஏமாறவேண்டாம் என்பதே எங்கள் தாழ்மையான விருப்பம்..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்லாமியரின் கிறிஸ்தவம் தொடர்பான கேள்விகளுக்கான விடைகள்  Empty Re: இஸ்லாமியரின் கிறிஸ்தவம் தொடர்பான கேள்விகளுக்கான விடைகள்

Mon Aug 25, 2014 8:22 am
உலக மொழிகளில் பைபிள்


இஸ்லாமியரின் கிறிஸ்தவம் தொடர்பான கேள்விகளுக்கான விடைகள்  Bibles
உலக மொழிகளில் பைபிள் 
ஒரு கருத்து உலக அளவில் பிரபலமாக வேண்டுமானால் அது உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படவேண்டும், ஆனால் உலக மக்களோடு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் ஒரு கால கட்டம் வரை அதாவது பல நூற்றாண்டுகள் வரை மூல மொழிகளைத்தவிர வேறு எந்த மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்படவில்லை. இதற்கு இரன்டு அடிப்படைக் காரனங்கள் உண்டு யகோவா தேவன் இஸ்ரவேலரராகிய நமக்கு மட்டுமே சொந்தம் அவருடைய வாக்குத்தத்தங்களும் உடன்படிக்கையும் நமக்கெ உரியது என இஸ்ரவேல் மக்கள் நினைத்தனர், இரண்டாவது காரணம் பல நூற்றாண்டுகள் இஸ்ரவேல் மக்கள் எபிரேய மொழியைத்தவிர வேறு எந்த மொழியையும் பேசவில்லை.

கிரேக்க‌ சாம்ராஜ்ஜியம்
உலக வரலாற்றில் பாபிலோனிய ஆட்சிக்குப்பின் மாபெரும் வல்லரசாக உருவானது பெர்சிய பேரரசு ஆகும் இதன் எல்லைகள் எத்தியோபியா முதல் இந்தியா வரை நீண்டிருந்தது என எஸ்தர் 1;1ல் வாசிக்கிறோம். அதன் பின் எழும்பிய கிரேக்கப் பேரரசு உலக அளவில் கலை இலக்கிய வரலாற்றில் ஒரு மாபெரும் புரட்சியை உருவாக்கியது, இந்த பேரரசில் சிதறிக்கிடந்த இஸ்ரவேலர்கள், கிரேக்கப் பேரரசின் தாக்கத்தால் எபிரேய மொழியைவிட கிரேக்க மொழியையே அதிகமாகப் படிக்க ஆரம்பித்தனர்.

ஜெதுவஜித்து (LXX)
கிமு 3ஆம் நூற்றாண்டில் எகிப்பதை ஆண்ட தாலமி11(பிலடல்பஸ்) என்ற மன்னன் கிரேக்க மொழியில் பைபிளை மொழியாக்கம் செய்யவேண்டும் என விரும்பினான், அதன் படி இஸ்ரவேல் கோத்திரத்தில் கோத்திரத்திற்கு ஆறு பேர் வீதம் மொத்தம் எழுபத்திரெண்டு அறிஞர்களைத் தேர்வு செய்து நியமித்தான், அவர்கள் எழுபத்திரண்டே நாட்களில் எபிரேய மொழியில் இருந்து கிரேக்க மொழிக்கு மொழிமாற்றம் செய்தனர், இதற்கு எழுபது எனப் பெயர் கொள்லும் வகையில் ஜெப்துவஜித்து (Septuagint) எனப் பெயரிட்டனர், இந்த மொழியாக்கம் எகிப்திலுள்ள அலெக்சான்டிரியா நகரில் நடந்தது.

மூலமொழி புத்தகத்திற்கும் கிரேக்க மொழி பெயர்ப்புக்கும் உள்ள வேறுபாடு
நீங்கள் ஒரு வேறுபாட்டை பைபிளில் கவனித்திருப்பீர்கள் அதாவது கத்தோலிக்க பைபிளில் கூடுதல் ஆகமமும் நாம் வைத்திருக்கும் பைபிளில் பழைய ஏற்பாட்டில் 39 ஆகமமும் மட்டுமே இருக்கும், இதற்கு காரனம் இந்த ஜெப்துவஜிந்து தான், அதாவது இஸ்ரவேலர்களில் தாயகமான பாலஸ்தீனாவில் புழ‌க்கத்திலிருந்த எபிரேய வேத்தத்தில் 39 புத்தகம் மட்டுமே இருந்தது ஆனால் எகித்து அலெக்சாண்டிரியாவில் மொழியாக்கம் செய்யப்பட்ட வேதத்தில் சில கூடுதல் புத்தகங்கள் சேர்க்கப்பட்டன‌.
இந்த‌ கூடுத‌ல் புத்த‌க‌ங்க‌ளை இயேசு கிறிஸ்துவோ அப்போஸ்த‌ல‌ர்க‌ளோ ஏற்றுகொள்ள‌வில்லை ஆகவே தான் அவைக‌ளை த‌ள்ளுப‌டி ஆக‌ம‌ங்க‌ள் அல்ல‌து விடுப‌ட்ட‌ ஆக‌ம‌ங்க‌ள் அல்ல‌து ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌ ம‌றை நூல‌க‌ள் என்று சொல்லுகிறோம், இது ஏன் விடுப‌ட்ட‌து? இதில் எதேனும் முர‌ன்பாடுக‌ள் இருக்கிற‌தா என்ப‌தை அடுத்து வரும் அத்தியாயங்களில் கான‌லாம் இப்போது மற்ற மொழிபெய‌ர்ப்புக‌ள் ப‌ற்றி இங்கே காண்போம்,

கிரேக்க‌ மொழியாக்க‌த்திற்குப் பிற‌கு வேத‌ம் ம‌ற்ற‌ மொழிக‌ளில் சில‌ நூற்றாண்டுகால‌ம் மொழியாக்க‌ம் செய்ய‌ப்ப‌ட‌வில்லை

சீரியாக் மொழியாக்க‌ம்
சீரியாக் என‌ப்து மெச‌ப‌டோமியாவில் ச‌ம‌வெளிப் ப‌குதியில் வாழ்ந்த‌ ம‌க்க‌ள் பேசிய‌ ஒருவ‌கை மொழியாகும், இந்த‌ மொழியில் கிபி முத‌ல் நூற்றாண்டில் வேத‌ம் மொழியாக்க‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து இத‌ற்கு பெசிட்டா மொழியாக்க‌ம்
என்று பெய‌ர் பெசிட்டா என்றால் 'சாதார‌ன' என்று பொருளாகும்.


வால்கேட்
கிபி 2ஆம் 3ஆம் நூற்றாண்டில் ரோம‌ப் பேர‌ர‌சு வ‌லுப்பெற்றிருந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் ல‌த்தீன் மொழி உல‌க‌ அள‌வில் அதிக‌மாக‌ப் பேச‌ப்ப‌ட்ட‌து இத‌னால் ல‌த்தீன் மொழியில் மொழியாக்க‌ம் செய்ய‌ப்ப‌ட‌ வேண்டிய‌து கால‌த்தின் க‌ட்டாய‌மாக்க‌ப்ப‌ட்ட‌து கிபி நான்காம் நூற்றாண்டில் ஜெரோம் என்ப‌வ‌ர் கிரேக்க‌ மொழியிலிருந்து ல‌த்தீன் மொழிக்கு வேத்தத்தை மொழியாக்க‌ம் செய்தார். அவ‌ர் முத‌லில் புதிய‌ ஏற்பாட்டையும் பின் ப‌ழைய‌ ஏற்பாட்டையும் கிரேக்க‌ மொழியிலிருந்து லத்தீன் மொழிக்கு மொழியாக்கம் செய்தார். இதற்கு வால்கேட் என பெயர் வால்கேட் என்றால் பொதுமக்களுக்கு உரியது எனப் பொருள்படும்.

வால்கேட் வெளிவந்து சுமார் 10 நூற்றாண்டுகள் (100 ஆண்டுகள்) வேறு எந்த மொழியாக்கமும் பிரதானமாக வெளிவரவில்லை அதற்கு காரணம் பொதுமக்களுக்கு உரியது என பெயரிடப்பட்ட வால்கேட் பொதுமக்கள் வாசிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது கார‌ண‌ம் ம‌க்க‌ள் ஒவ்வொருவ‌ரும் ஒவ்வொரு வித‌த்தில் புரிந்து கொண்டு விள‌க்க‌ம‌ளித்த‌தால் குருமார்க‌ள் ம‌ட்டுமே ப‌டிக்க‌ வேண்டும் என‌ அறிவுருத்த‌ப்ப‌ட்ட‌து. அது ம‌ட்டும‌ல்லாம‌ல் ல‌த்தீன் மொழி தெய்வீக‌ மொழி என்றும் அதில் தான் வேத‌ம் ப‌டிக்க‌ வேண்டும் என்ற‌ க‌ட்டுக்க‌தைக‌ள் நில‌வி வ‌ந்த‌தால் மொழியாக்க‌ம் த‌டைப‌ட்டுக் கிட‌ந்த‌து.

இந்த‌ நிலை சீர்திருத்த‌த் த‌ந்தை மார்டீன் லூத‌ர் கிங் அவ‌ர்க‌ள் ல‌த்தீன் வேத‌த்தை ஜெர்ம‌ன் மொழியில் வெளியிடும் கால‌ம் வ‌ரை நீடித்த‌து.

மேலும் சில‌ மொழியாக்க‌ங்கள்

காப்டிக் மொழியாக்க‌ம்
ஜெப்துஜிந்திலிருந்து காப்டிக் என்ற‌ ப‌ழமையான‌ எகிப்தின் புதிய‌ எழுத்து ந‌டையில் மொழியாக்க‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து இந்த‌ மொழியாக்க‌ம் இப்போதும் கீழை எகிப்தில் புழ‌க்க‌த்தில் உள்ள‌து.

கோதிக் மொழியாக்க‌ம்
ஜெர்ம‌ன் மொழிகுடும்ப‌த்தில் மூத்த‌ முத‌ல் மொழிபெய‌ர்ப்பு இதுவாகும் இதை பேராய‌ர் உல்பிலாஸ் என‌ப‌வ‌ர் கிபி 4ஆம் நூற்றான்டில் வெளியிட்டார்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்லாமியரின் கிறிஸ்தவம் தொடர்பான கேள்விகளுக்கான விடைகள்  Empty Re: இஸ்லாமியரின் கிறிஸ்தவம் தொடர்பான கேள்விகளுக்கான விடைகள்

Mon Aug 25, 2014 8:25 am
பைபிளில் புதிய உடன்படிக்கை யாரோடு செய்யப்பட்டுள்ளது?


இஸ்லாமியரின் கிறிஸ்தவம் தொடர்பான கேள்விகளுக்கான விடைகள்  New_agreement
அன்பானவர்களே பைபிளில் ஏற்பாடு என்ற சொல்லுக்கு உடண்படிக்கை எனபதை முந்தைய கட்டுரையில் அறிந்தோம், மேலும் பழைய உடண்படிக்கை பன்டைய மெசபடோமியா நாகரீகத்தில் வாழ்ந்து வந்த ஆபிரகாம் என்ற பக்திமானோடு செய்யப்பட்டது என அறிந்தோம், இனி புதிய ஏற்பாடு(உடன்படிக்கை) பற்றி இங்கே காண்போம், 

புதிய உடன்படிக்கை யாரால் ஏற்படுத்த‌ப்பட்டது?
நாம் பழைய உடன்படிக்கை பற்றிய முந்தைய கட்டுரையில் ஆபிரகாமுடன் கடவுள் செய்து கொண்ட ஒப்பந்ததின் படி, கடவுளின் எதிர்பார்ப்புப்படி வாழ்ந்த ஆபிரகாமின் வம்சத்தில் வந்த யூத குலத்தில் உலகமக்களின் பாவத்திற்கு பலியாகி உலகமக்களின் நல்வாழ்கையை உறுதி செய்ய அனுப்பப்பட்ட மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவே புதிய உடன்படிக்கைக்கான ஆதாரம், அவரே இந்தப் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தினார்.

புதிய உடன்படிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
புதிய உடன்படிக்கை என்பது மனித இனத்திற்கு ஒரு மிகப்பெரிய கிடைப்பதற்கரிய ஓர் ஒப்பற்ற சொத்து ஆகும், இதில் மனிதன் சாகாமல் நித்தியமான வாழ்வு பெற்றுக்கொள்ள முடியும், எப்படி ஒன்றும் புரியவில்லையா? மேலே படியுங்கள் புரிந்துவிடும், அதாவது கடவுள் பரிசுத்தமாய்ப் படைத்த மனிதனின் வாழ்வில் பிசாசு மனித இனத்தில் பாவம் என்ற நஞ்சை விதைத்தான். இதனால் மனிதன் திருடு, பொய், சூது அன்பின்மை, விபசாரம், போன்ற பாவங்களில் விழுந்தான், அவனுடைய பாவத்தினால் மனிதன் பாவத்தின் சம்பளமான தண்டனையை அடைந்து வந்தான், இதனால் மனமிறங்கிய கடவுள் மனிதனின் பாவங்களுக்காக தானே இந்த பூமிக்கு வந்து குற்றமில்லாதவராய் வாழ்ந்து மிகவும் சித்ரவதைப்பட்டு மான்டார், ஒரு மனிதன் தன் இயல்பிலேயே உள்ள தீய குண‌ங்களினால் செய்த குற்றங்களுக்குத் தண்டனை அடைய விரும்பமாட்டான், ஆகவே அவனது பாவங்களை இயேசுவிடம் ஒப்படைத்து விட்டால் இம்மையிலும் மறுமையிலும் அவன் அடையவேண்டிய தண்டனையிலிருந்து தப்பலாம், 
மனிதன் இந்த உடன்படிக்கையில் பங்குகொள்ளச் செய்யவேண்டியது என்ன‌?
இந்த உடன்படிக்கையில் பங்குள்ளவர்களாக மாற மனிதனிடம் கடவுள் எதிர்பார்ப்பது மிகவும் சிறியதாகும் அவை:

1. தேவக் குமாரனாம் இயேசுகிறிஸ்துவிடம் தாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களைக் கூறி மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும் 

2. முன் கட்டுரையில் கண்ட பத்து கட்டளையோடு நம்மில் நாம் எவ்வளவு அன்பு செலுத்துகிறோமோ அப்படியே மற்றவர்களின் தவறுகளை மன்னித்து அவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் இவையே மனிதன் இந்தப் புதிய உடன்படிக்கையில் பங்கு பெறச் செய்ய வேண்டியவை ஆகும்.


புதிய உடன்படிக்கையில் பங்கு பெற்றால் என்ன நன்மை?
இந்தப் புதிய உடன்படிக்கையில் மனிதன் பங்கு பெற்றால் பிசாசினால் உண்டாகும் தீமைகளான, பரம்பரைச்சாபம், நோய்கள், பற்றாக்குறைகள், நிம்மதியின்மை, சமாதானமற்ற நிலை, தீயப்பழக்கங்களுக்கு அடிமையாதல், இன்னும் பல தீமைகளிலிருந்து விடுதலை அடைய முடியும் மேலும் இந்த உலக வாழ்வின் முடிவில் மரனமில்ல நித்திய வாழ்வை அடைய முடியும்.

நித்திய வாழ்வு என்றால் என்ன‌?
அதென்ன நித்திய வாழ்வு என நீங்கள் கேட்பது புரிகிறது நீங்கள் பாவமற்றவராய் வாழ்ந்தால் உங்கள் உடலுக்கு மட்டுமே மரனம் வரும், உங்கள் ஆத்மாவிற்கு அல்ல உங்கள் ஆத்துமா கடவுளோடு இன்பமான பரிசுத்த நிலையில் சொல்ல முடியாத சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடும் முடிவிள்ளா நாட்களோடு இளைப்பாரும்.

இந்தப் புதிய உடன்படிக்கையில் பங்கு பெறாவிட்டால் என்ன ஆகும்?
நாம் கடவுளின் இந்தப் புதிய உடன்படிக்கையில் பங்குபெறாவிட்டால், அல்லது குறைந்த பட்சம் நம்செயல்களிலாவது இந்த உடன்படிக்கையைக் கைக்கொள்ளாவிட்டால் நாம் பிசாசின் பிடியில் இருப்போம் அப்போது திருடுதல், பொய்சொல்லுதல், விபச்சாரம் செய்தல், பெருமை, கொலை, போன்ற பாவங்களைச் செய்து பிசாசின் மகனாய் வாழ்ந்து சாபம், நோய்கள், சமாதானமின்மை, இன்னும் பல இன்னல்களை நாமும் நம் சந்ததியும் அனுபவிப்பதோடு மட்டுமல்ல இறப்பில் நித்திய இளைப்பாறுதலுக்குச் செல்லாமல் பிசாசினோடு இனைந்து கடவுளின் நியாயதீர்ப்புக்கு ஆளாகவேண்டும், 

இயேசுவை ஏற்றுக்கொண்டால் மட்டும் போதுமா?
இல்லை என்பது தான் பதில் நாம் நம் பாவங்களை இயேசு கிறிஸ்துவிடம் கொடுத்துவிட்டால் மட்டும் போதாது நம் செயலில் உடன் மேலே சொன்ன உடன்படிக்கையில் கடவுளின் எதிர்பார்ப்பையும் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.
Sponsored content

இஸ்லாமியரின் கிறிஸ்தவம் தொடர்பான கேள்விகளுக்கான விடைகள்  Empty Re: இஸ்லாமியரின் கிறிஸ்தவம் தொடர்பான கேள்விகளுக்கான விடைகள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum