தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இஸ்ரவேலின் தேவனைக்குறித்து ஹமாஸ் தீவிரவாதிகளின் வாக்குமூலம் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்ரவேலின் தேவனைக்குறித்து ஹமாஸ் தீவிரவாதிகளின் வாக்குமூலம் Empty இஸ்ரவேலின் தேவனைக்குறித்து ஹமாஸ் தீவிரவாதிகளின் வாக்குமூலம்

Mon Aug 25, 2014 7:50 am
இஸ்ரவேலின் தேவனைக் குறித்து ஹமாஸ் தீவிரவாதிகளின் வாக்கு மூலம்


இஸ்ரவேலின் தேவனைக்குறித்து ஹமாஸ் தீவிரவாதிகளின் வாக்குமூலம் Hamaztestomony
இஸ்ரேல் தேசம் - உலக வரைப்படத்தில் சிறிய தேசமாய் இருந்தாலும் இன்று உலகமே வியந்து பார்க்கும் ஓர் பெரிய நாடாக விளங்கி கொண்டிருக்கிறது. இந்த தேசம் 19ம் நூற்றாண்டு வரை உலக வரைப்படத்தில் இல்லை. ஆனால் பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள பல தீர்க்கதரிசன வசனங்கள் நிறைவேறி கொண்டிருக்கிரன்றன.. அது இந்த இஸ்ரேல் தேசத்தை பற்றியும் தான்..

70ம் ஆண்டில் (கிறிஸ்துவுக்கு பின்) யூதர்கள்/இஸ்ரவேலர்கள் இந்த 20ம் நூற்றாண்டில் தான் மீண்டும் தங்கள் தேசத்தை சொந்தமாகிகொள்ள முடிந்தது.

1. சிதறடிக்கப்பட்ட யூதர்கள் மீண்டும் தங்கள் தேசத்தை அடைவர் (ஏசாயா 11:11,12)


2. இஸ்ரேல் தேசம் மீண்டும் உயிர்பெறும் (ஏசாயா 66:7,8 மற்றும் எசேக்கியல் 37: 21-22). இந்த வசனம் நிறைவேறிய நாள் மே 14, 1948


3. யூதர்கள் மீண்டும் எருசலேம் நகரத்தை தனதாக்கி கொள்வர் (சகரியா 8:4-Cool. இந்த வசனம் நிறைவேறிய நாள் ஜூன் 7, 1947


4. பாழாக்கப்பட்ட இஸ்ரேல் தேசத்தின் மண் மீண்டும் விளைச்சலை கொடுக்கும் (எசேக்கியேல் 36:34-35). இந்த வசனம் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது. ஆனால் சொன்னதை மாற்றாமல் நிறைவேறி உலக கவனத்தை தன பக்கம் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்று கொண்டிருக்கிற போர் பல நாடுகளை கவலை அடைய செய்துள்ளது. ஆனால் இதை பலரும் முக்கியமாக ஹமாஸ் இயக்கம் பொய்யான முகத்தை காட்டி தப்பிக்க முயல்கிறது. இதற்கு ஆதரவாக சமீபத்தில் இந்தியாவில் / தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள பல போராட்டங்கள் மக்களின் மனதில் இஸ்ரேல் தேசத்தை பற்றி தவறான கருத்துக்களை பதிய உதவுகிறது.

இந்த போருக்கு அடிப்படை காரணம்? 

ஹமாஸ் என்ற தீவிரவாத இயக்கம்


இந்த போருக்கு காரணம்? 

இஸ்ரேல் தேசத்தை சேர்ந்த மூன்று பள்ளி மாணவர்களை ஹமாஸ் இயக்க தீவிரவாதிகள் குழுவை சேர்ந்தவர்கள் கடத்தி கழுத்தை அறுத்து கொன்றனர். இவர்களை கொன்றவனின் தாய் தான் பெருமைப்படுவதாக பேட்டி அளித்து பாலஸ்தீனர்கள் எந்த அளவிற்கு இஸ்ரேல் தேசத்தை வெறுக்கிறார்கள் என்பதை நிரூபித்தார். http://mondoweiss.net/2014/06/israeli-netanyahu-responsible.html . இந்த படுகொலையை அடுத்து இஸ்ரேல் அதிபர் எச்சரிக்கை விடுத்தார். அதற்குள் ஆத்திரம் அடைந்த சில யூதர்கள் ஓர் பாலஸ்தீன வாலிபனை பிடித்து அடித்து கொன்றனர். http://timesofindia.indiatimes.com/world/middle-east/Israel-charges-3-Jews-over-Palestinian-teen-murder/articleshow/38557983.cms

இதில் நீங்கள் முக்கியமாக பார்க்கவேண்டியது என்னவென்றால் இஸ்ரேல் வாலிபர்களை கொன்ற பாலஸ்தீனர்களை பாலஸ்தீன அரசு கண்டிக்கவோ, கைது செய்யவோ இல்லை. ஆனால் ஒரு பாலஸ்தீன வாலிபனை கொன்றதற்காக இஸ்ரேல் அரசு மூன்று பேரை கைது செய்து நீதியை நிலைநாட்டியது.

பாலஸ்தீன வாலிபன் இறுதி சடங்கில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் ஹமாஸ் இயக்க துணையோடு வெறியூட்டப்பட்டவர்களாய் இஸ்ரேலை குறிவைத்து தாக்கினர். இஸ்ரேல் அவர்களை அடக்கியது. இதில் ஆத்திரம் அடைந்த ஹமாஸ் இயக்கம் குண்டு வீசியது. பதிலுக்கு இஸ்ரேல் ராணுவமும் குண்டு வீசியது.. http://rt.com/news/170500-israel-palestinian-clashes-funeral/

இது தான் இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் போருக்கு காரணம். ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தின் தூண்டுதலால் சாதாரண மக்கள் கொலை செய்யப்படுகின்றனர். இதனை அறிந்த பல இஸ்லாமிய நாடுகளும் ஹமாஸ் இயக்கத்தை கண்டித்து போரை முடிவுக்கு கொண்டு வர வற்புறுத்துகின்றனர்.

முக்கியமாக கத்தார், எகித்திய நாடுகள் இதனை முன்னின்று ஹமாஸ் இயக்கம் நிச்சயம் அழியும் என்று எதிர்பார்க்கின்றனர். அவர்களை பொறுத்தவரை ஹமாஸ் என்ற இயக்கம் தான் பாலஸ்தீனர்கள் அழிய முக்கியமான காரணம். http://www.gatestoneinstitute.org/4401/egypt-israel-hamas அரபியர்களும் ஹமாஸ் இயக்கம் அழியும் என்று எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர்.



ஹமாஸ் இயக்கம் ஓர் ராணுவம் அல்ல. தீவிரவாத இயக்கம். இதற்கு ஒரே குறிக்கோள் தான். எப்படியாவது இஸ்ரேல் தேசத்தை அழிக்க வேண்டும் என்பது தான். ஆனால் பாலஸ்தீன மக்கள் அமைதியை விரும்பும் சாதாரண மக்கள். இங்கு பண, தொழில் வளர்சிகள் ஹமாஸ் இயக்கத்தால் முடங்கி போய் உள்ளன.

இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் இந்த போரில் மக்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர். இஸ்ரேல் தேசம் தன் நாட்டு மக்களை காத்துக்கொள்ள போரில் குதித்துள்ளது. ஆனால் ஹமாஸ் இயக்கம் மக்களை கேடயமாக பயன்படுத்தி சாதாரண மக்களை பலியாக்கி வருகிறது.

இஸ்ரேல் மருத்துவமனை, பள்ளிகூடங்கள், மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டு வீசுகிறது என்று ஹமாஸ் இயக்கம் தகவலை அள்ளித்தருகிறது. உண்மை தான். ஆனால் இங்கு தான் பதுங்கு குழிகளை அமைத்து ஹமாஸ் குண்டுகளை வீசி வருகிறது. இதனால் இஸ்ரேல் அரசுக்கு வழிதெரியவில்லை. குண்டுவீச்சில் பல தீவிரவாதிகள் கொள்ளப்படுவதில் இருந்தே இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். ஆனால் இவர்களையும் அப்பாவி மக்கள் என்று ஹமாஸ் இயக்கம் பொய்யான தகவலை பரப்பி வருகிறது.

இதில் உலக புகழ் பெற்ற BBC தொலைகாட்சி நிறுவனமும் அடங்கும். சமீபத்தில் இந்த நிறுவனம் மன்னிப்பு கோரி உள்ளது. http://www.washingtonpost.com/news/the-intersect/wp/2014/07/11/what-was-fake-on-the-internet-this-week-celebrity-impressions-endangered-redheads-and-photos-from-gaza/

பாலஸ்தீனர்கள் இஸ்ரேலியர்களை முழு மனதுடன் எதிர்க்கிறார்கள் என்றால் ஏன் 50,000 க்கும் மேற்ப்பட்ட பாலஸ்தீனர்கள் வெளியேற வேண்டும்? ஹமாஸ் இயக்கத்துடன் நின்று சண்டை போடலாமே? பாலஸ்தீனர்கள் அமைதியை விரும்புகிறார்கள். ஆனால் ஹமாஸ் இயக்கமோ போரை விரும்புகிறார்கள். அதனால் தான் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவித்த பின்னரும் ஹமாஸ் குண்டு வீசி தாக்கி வருகிறது.

இந்த சந்தையில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறி வந்தாலும் பெயர் விபரத்தை இன்னமும் வெளியிடவில்லை. இந்த உண்மையை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இஸ்ரேல் தரப்பிலும் பல சேதங்கள் உண்டு. ஆனால் யாரும் அதை பெரிதுபடுத்துவதில்லை. பொய்கள் தான் இன்று பெரிதாய் தெரிகின்றன..

இஸ்ரேல் நாடு தன் நாட்டு மக்களை பாதுகாத்துக்கொள்ள உரிமை இருக்கிறது. கார்கில் போரில் எந்த நாட்டில் பேச்சையும் நாம் கேட்கவில்லை. இந்தியாவிற்கு தெரியும், எப்படி இந்தியாவை பாதுகாக்க வேண்டும் என்று. அதை போல இன்னொரு நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் நாம் மூக்கை நுழைப்பது முடியாத காரியம்.

அந்தந்த நாடு முடிவெடுத்து தன் மக்களை காக்க வேண்டும். இதில் இஸ்ரேல் தன் மக்களை காக்க முடிவெடுத்ததில் எந்த தவறும் இல்லை. ஹமாஸ் இயக்கத்திற்கு தைரியம் இருந்தால் அவர்கள் மக்கள் மத்தியில் இருந்து வெளியே வரட்டும். இஸ்ரேலில் இஸ்ரேல் ராணுவத்தினர் மட்டும் தான் தாக்கப்பட்டனர். ஆனால் பாலஸ்தீனத்தில் மக்களும் போரில் இறையாகுகின்றனர். காரணம் ஹமாஸ் மக்கள் மத்தியில் மறைந்து நின்று ஏவுகணைகளை வீசுகிறது. இஸ்ரேல் மீண்டும் தாகும் பொது தீவிரவாதிகளோடு மக்களும் மறிக்கின்றனர். 
http://www.smh.com.au/comment/hamas-rocket-attacks-provoked-israels-ground-offensive-into-gaza-strip-20140720-zuysx.html

இந்த உண்மையை நான் இஸ்லாமியர்களுக்கு எதிராக எழுதவில்லை. நான் பாலஸ்தீனர்களுக்கு எதிரானவன் அல்ல. ஹமாஸ் என்ற ஓர் தீவிரவாத இயக்கத்தின் ரத்த வாடைக்கு பலியாகும் அப்பாவி மக்களை பற்றி இதில் எழுதியுள்ளேன். மீண்டும் தொடரும்.

இந்த பட தலைப்பில் ஓர் ஹமாஸ் தீவிரவாதி கொடுத்த பேட்டியை தான் பார்க்கிறீர்கள். அவர்களின் தெய்வம் (யெஹோவா) நாங்கள் வீசும் ராக்கட்டுகளை திசை மாற செய்கிறார்" என்று அங்கலாய்க்கும் செய்தியை தான் படிக்கிறீர்கள். நம் தேவன் பெரியவர். அவர் ஒரு போதும் கைவிடார். ஒரு நாளும் விலகிடார். ஆமென்..

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ
ஊழியங்கள்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்ரவேலின் தேவனைக்குறித்து ஹமாஸ் தீவிரவாதிகளின் வாக்குமூலம் Empty Re: இஸ்ரவேலின் தேவனைக்குறித்து ஹமாஸ் தீவிரவாதிகளின் வாக்குமூலம்

Mon Aug 25, 2014 7:51 am


இந்தக் கானொளியைப் பாருங்கள் காசா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகள் குழந்தைகளை எப்படி மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்று புரியும், ஒருவேளை இஸ்ரேல் இரானுவம் இந்த குண்டுவீச்சுக்கு எதிர்த் தாக்குதல் நடத்துமானால் இங்கிருக்கும் குழந்தைககளும் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.. இப்படித்தான் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் இராணுவம் அப்பாவி மக்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லுவதாக உலகம் முழுவதும் பொய்பிரச்சாரத்தில் ஈடுபட்டு நம்பவைக்கிறார்கள் இஸ்ரவேலின் சமாதாணத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள் ( சங்கீதம் 122:6) 
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum