மதம் மாற மறுத்த யாஸிதிகள் சுட்டுக் கொலை
Sun Aug 17, 2014 9:06 am
ஈராக்கில் மதம் மாற மறுத்த யாஸிதி இன மக்களின் மீது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக்கில் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பல நகரங்களை சன்னி பிரிவு ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ தீவிரவாதிகள் பல இடங்களை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் சிஞ்சார் அருகே ‘கோசோ’ என்ற இடத்தில் உள்ள “யாஸிதி” இன குடிமக்களை, அங்கு புகுந்த தீவிரவாதிகள் ஒன்று திரட்டி மதம் மாற வேண்டும் என கட்டளையிட்டுள்ளனர். மேலும் அவர்கள் அனைவரையும் ஒரு இடத்தில் அடைத்து வைத்து, இஸ்லாம் மதத்துக்கு மாறும் படி 5 நாட்களாக சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளனர். ஆனால் அதன் பிறகும் அவர்கள் மதம் மாற மறுத்ததால், கோசோ கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றிற்கு, சுமார் 80 ஆண்களை அழைத்து சென்று சரமாரியாக சுட்டு கொன்றுள்ளனர். இதற்கிடையே அபிள் நகருக்கு கடத்தி செல்லப்பட்ட “யாஸிதி” இன பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலை குறித்து அறியப்படவில்லை. Thanks: Lankasri -World News |
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|