தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஆலயம் செல்ல தவறினால் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆலயம் செல்ல தவறினால் Empty ஆலயம் செல்ல தவறினால்

Sat Feb 16, 2013 10:18 pm


"வேத-ஒளி"
நீலகிரி மலையில் இருக்கும் ஒரே ஒரு கிறிஸ்தவ ஆலயம். அதன் போதகர்
அருளானந்தம் தேவனை அதிகமாய் நேசித்து அவருக்காக வாழும் உத்தம ஊழியர். அவரது
தயாள குணத்தால் கிறிஸ்துவை அறியாதவர்கள் கூட அவர் மீது அதிக மரியாதை
வைத்திருந்தனர்.

அந்த ஆலயத்தில் வாரந்தோறும் தேவனை ஆராதித்து வந்த
"சாலமன்" அங்கு வருவதை சில வாரங்களாக நிறுத்திவிட்டான். அவன் வேறெந்த
ஆராதனையிலும் கலந்து கொள்ளவில்லை என்று போதகருக்கு அறிவிக்கப்பட்டது.
மிகவும் வேதனையுற்ற போதகர் அவனை சந்திக்க முடிவு செய்தார்.


ஒரு-நாள் மாலை அந்த ஊரை கடும்-குளிர் மூடியிருந்தது. சாலமன் தனது வீட்டில்
மர கட்டைகளை எரித்து அதில் குளிர் காய்ந்து கொண்டிருந்தான். திடீரேனே "டக்
டக்" என்று கதவை தட்டும் சத்தம் கேட்கவே, எழுந்து சென்று கதவை திறந்தான்.
அங்கு போதகர் நின்று கொண்டிருந்தார். போதகர் தனது வீட்டிற்கு வந்திருக்கும்
நோக்கத்தை அவன் எளிதில் புரிந்து கொண்டான். "உள்ளே வாருங்கள்" என்று
வரவேற்றான்.

போதகர் புன்னகையோடு
உள்ளே வந்து நெருப்பினண்டை கிடத்தி இருந்த இருக்கையில் அமர்ந்தார்.
சாலமனும் அவர் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். போதகர்
ஒன்றுமே பேசாமல், எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை உற்று கவனித்துக்
கொண்டிருந்தார்.

சில நிமிடங்கள் கடந்தும் அவர் எதுவும்
பேசவில்லை, 'சாலமனது' மனதில் குழப்பம் நிழலிட்டது. போதகர் நெருப்பையே
தீவிரமாய் கவனித்துக் கொண்டிருந்தார். பட்டென இருக்கையிலிருந்த எழுந்த
போதகர் ஒரு இடுக்கியை எடுத்து பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்த ஒரு மர
துண்டை தனியாக எடுத்து வைத்தார். எதுவும் பேசாமல் மீண்டும் இருக்கையில்
அமர்ந்து கொண்டார்.

சாலமன் ஒன்றும் புரியாமல் தனியாக வைக்கப்பட்ட
மர துண்டை கவனித்துக் கொண்டிருந்தான். தனியே வைக்கப்பட்ட மர-துண்டில்
நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது, சிறிது நேரத்தில் பிரகாசமான அந்த
மர-துண்டு மங்கி எரிய ஆரம்பித்தது, இறுதியில் அணைந்தே விட்டது.


ஆரம்பம் முதல் எதுவுமே பேசாத போதகர், தான் கிளம்பும் நேரம் வந்துவிட்டது
என்று அறிந்து இருக்கையை விட்டு எழுந்தார். அணைந்து போன அந்த மர-துண்டை
மீண்டும் எரிந்து கொண்டிருக்கும் மர-துண்டுகளோடு வைத்தார். துரிதமாக அது
பற்றி எரிந்து பிரகாசிக்க ஆரம்பித்தது. இதை கவனித்துக் கொண்டிருந்த
சாலமனின் கண்களில் நீர் கசிந்தது.

போதகர் கதவை நோக்கி நடக்க
தொடங்கினார். கதவை திறக்கும் போது , சாலமன் பின்னிருந்து "ஐயா! தங்கள்
வருகைக்கும் , இந்த அக்னி உபதேசத்திற்கும் மிக்க நன்றி. வருகிற ஞாயிற்று
கிழமை ஆலயத்தின் முதல் வரிசையில் அமர்ந்திருப்பேன்' என்றான்.

புன்னகை உதிர்த்து அமைதலாய் கடந்து போனார் போதகர்.

நண்பர்களே! நமக்கு இவ்வுலகில் பேசாத உபதேசங்கள் பல உண்டு. அவைகள் தேவன் நமக்கு தரும் அனுபவங்களே.

கடந்த சில வாரங்களாக ஆலயம் செல்ல தவறியதால் (அல்லது அதிக ஈடுபாட்டோடு
ஆராதனைக்கு செல்லாததால்) நீங்கள் மங்கி எரிந்து கொண்டிருக்கலாம். நாளை
ஆலயம் செல்ல எல்லா ஆயத்தமும் இன்றே செய்துவிடுங்கள். கிறிஸ்து உங்களை
பிரகாசிக்கச் செய்வார்

** 1 John (1:7) அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் 'ஒருவரோடொருவர்' ஐக்கியப்பட்டிருப்போம் **

For More Stories :
KadambamTamil.blogspot.com

-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_




ஆலயம் செல்ல தவறினால் 16924_426826510729331_1914802460_n
avatar
samuel.w.dhinakaran
புதியவர்
புதியவர்
Posts : 15
Join date : 05/01/2013
Location Location : Milton keynes., LONDON., UK

ஆலயம் செல்ல தவறினால் Empty Re: ஆலயம் செல்ல தவறினால்

Mon Feb 18, 2013 1:31 am
nice
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum