தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
காப்பீடு பற்றி ஒரு கணக்கு! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

காப்பீடு பற்றி ஒரு கணக்கு! Empty காப்பீடு பற்றி ஒரு கணக்கு!

Sun Jul 06, 2014 1:57 am
காப்பீடு பற்றி ஒரு கணக்கு! P62c
காப்பீடு பற்றி ஒரு கணக்கு! White_spacer
காப்பீடு பற்றி ஒரு கணக்கு! P62b
[size=undefined]காப்பீடு பற்றி ஒரு கணக்கு! P62[size=undefined]‘‘ம[/size]னித வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகளில் உணவு, உடை, உறைவிடத்துக்கு அடுத்து இன்னொன்று இருக்கிறது. அதுதான் வாழ்க்கைக்குப் பாதுகாப்பைத் தேடித்தரும் இன்ஷூரன்ஸ்! ஆனால், அது ஏதோ தேவையற்ற செலவு என்று பலரும் ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள். உங்கள் உயிர், உடமைகளின் பாதுகாப்புக்கு வழி செய்யும் இன்ஷூரன்ஸ் விஷயத்தில், உங்களுக்கு எந்த அளவு விழிப்பு உணர்வு இருக்கிறது... நீங்களே சோதித்துப் பாருங்களேன்!’’ என்கிறார் நேஷனல் இன்ஷூரன்ஸின் டிவிஷனல் மேனேஜர் வேணுகோபாலன்.[/size]
1. உங்கள் சம்பளத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியம் எத்தனை சதவிகிதம்?
அ. 5%க்கு கீழ்
ஆ. 5 10%
இ. 10%க்கும் மேல்.
2. இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறேன். காரணம்...?
அ. புதிதாக ஏஜென்ட்டான ஒரு நண்பரின் வற்புறுத்தலுக்காக.
ஆ. வருமான வரிச் சலுகைக்காக.
இ. எதிர்காலப் பாதுகாப்புக்காக.
காப்பீடு பற்றி ஒரு கணக்கு! P62a
 
3. மருத்துவக் காப்பீடு அவசியமா..?
அ. எப்போது எதுநடக்கும் என்று தெரியாத உலகம் இது. எனவே, நிச்சயம் தேவை.
ஆ. வருமான வரிச்சலுகை கிடைக்கும் என்பதால் எடுக்கலாம்.
இ. பிரீமியத் தொகை கூடுதல் போல் தெரிவதால், மிகக்குறைந்த தொகைக்கு பாலிசி எடுத்து வைக்கலாம்.
4. வாகன விபத்து ஒன்றில் சிக்கிவிட்டீர்கள். உடனே நீங்கள் செய்வது..?
அ. உறவினர்களுக்குத் தகவல் சொல்லி வரவழைப்பேன்.
ஆ. இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தகவல் சொல்வேன்.
இ. போலீஸுக்குப் போய் எஃப்.ஐ.ஆர் போடுவேன்.
காப்பீடு பற்றி ஒரு கணக்கு! P63
5. வீட்டு இன்ஷூரன்ஸ், வீட்டுப் பொருட் களுக்கான இன்ஷூரன்ஸ் செய்திருக்கிறீர்களா?
அ. புதிய பொருட்களுக்கு மட்டும் எடுப்பேன்.
ஆ. ரொம்ப முக்கியமான பொருட்களை மட்டும் இன்ஷூர் செய்திருக்கிறேன்.
இ. அனைத்து பொருட்களுக்கும் இன்ஷூர் செய்துவிடுவேன்.
6. ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசியை வைத்து கடன் வாங்கும் வசதி இருக்கிறது...
அ. அதில் வட்டி சதவிகிதம் குறைவு என்பதால் அவசியமான நேரத்தில் மட்டுமே பயன்படுத்துவேன்.
ஆ. கடனை வாங்கிவிட்டு, விரைவிலேயே திரும்பச் செலுத்த முயற்சிசெய்வேன்.
இ. ‘நமக்குப் பின் குடும்பத்துக்கு பாதுகாப்பு தரும் பாலிசியில் கை வைப்பதா..?’ என்று யோசிப்பேன்.
காப்பீடு பற்றி ஒரு கணக்கு! P64
 
7. நீங்கள் செய்திருக்கும் பல்வகை இன்ஷூரன்ஸ் பற்றிக் குடும்பத்தாருக்குத் தெரிவிக்க என்ன செய்திருக்கிறீர்கள்?
அ. டைரியில் எழுதி வைத்திருக்கிறேன்.
ஆ. பாலிசி பத்திரங்களை ஒரு ஃபைலில் போட்டு வைத்திருக்கிறேன்.
இ. குடும்பத்தாருக்குத் தகவல் சொல்லி இருக்கிறேன்.
8. ஆயுள்காப்பீடு பிரீமியம் கட்டும் கெடு அடிக்கடி தாண்டிப் போகும்போது...
அ. சலுகைத் தேதிக்குள் கட்ட முயற்சிப்பேன்.
ஆ. சிரமமாக இருந்தால் சரண்டர் செய்துகட்டிய தொகையை வாங்கி விடுவேன்.
இ. கட்டாமல் விட்டுவிட்டு, பாலிசி முடியும்போது பணத்தை வாங்குவேன்.
காப்பீடு பற்றி ஒரு கணக்கு! P63a9. இடம்மாறி வெளியூருக்குச் செல்லும் போது வீட்டுப் பொருட் களுக்கு காப்பீடு செய்வீர்களா?
அ. வீட்டுப் பொருட்களை இடம் மாற்றுவதற்கு, நல்ல தரமான நிறுவனத்தை அமர்த்திக்கொள்வதால் காப்பீடு செய்வதில்லை.
ஆ. எல்லாப் பொருட்களுக்கும் காப்பீடு செய்துகொள்வேன்.
இ. விலையுயர்ந்த மற்றும் கண்ணாடிப் பொருட்களுக்கு மட்டும் காப்பீடு செய்வேன்.
10. உங்கள் குடும்பத்தில் எத்தனை பேருக்கு ஆயுள் காப்பீடு ச்பாலிசி இருக்கிறது?
அ. சம்பாதிக்கும் என்னை நம்பித்தான் குடும்பமே இருக்கிறது என்பதால், எனக்கு மட்டும்தான்.
ஆ. எல்லோருக்குமே பாலிசி எடுத்திருக்கிறேன்.
இ. எதிர்காலத் தூண்களான குழந்தைகள் நலனுக்காக எடுத்திருக்கிறேன்.
11. விபத்துக் காப்பீட்டுப் பாலிசி எவ்வளவு ரூபாய்க்கு எடுத்திருக்கிறீர்கள்..?
அ. நான் பயணிக்கும் விதத்தைப் பொறுத்து.
ஆ. ஆபத்து இல்லை. அதனால், குறைந்த தொகைக்கு பாலிசி எடுத்துக் கொள்வேன்.
இ. என் வருமானத்தின் அடிப்படையில் முடிவுசெய்வேன்.
12. நீங்கள் வைத்திருப்பது எந்த வகையான வாகன இன்ஷூரன்ஸ்..?
அ. மூன்றாம் நபருக்கான பாதுகாப்பு மட்டும் இருக்கிறது.
ஆ. மூன்றாம் நபருக்கான பாதுகாப்பு மற்றும் வண்டிக்கான விபத்து பாதுகாப்பு இணைந்த பாலிசி.
இ. இவை இரண்டோடு b, திருட்டு போன்றவற்றுக்கான பாலிசியும் சேர்த்து எடுத்திருக்கிறேன்.
உங்கள் பதில்களுக்கு என்ன மதிப்பெண்கள் என்பதை இங்கே சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
[size=undefined]காப்பீடு பற்றி ஒரு கணக்கு! P63b[size=undefined]நீ[/size]ங்கள் பாதுகாப்பு விஷயத்தில் தெளிவான சிந்தனையும் முறையான அணுகுமுறையும் இருப்பவராக இருந்தால், நிச்சயமாக [size=undefined]30 முதல் 36 வரை [/size]மதிப்பெண் வாங்கி இருப்பீர்கள். உங்களுக்கு, அனைத்து வகை பாதுகாப்பு பற்றியும் நல்ல ஞானம் இருக்கிறது.[/size]
நல்ல திட்டங்களையும் நல்ல நிறுவனத்தையும் தேர்ந்தெடுத்து, அளவான பிரீமியத்தில் பெரிய பாதுகாப்பை உங்களால் செய்துகொள்ளமுடியும். கூடவே மற்றவர்களுக்கும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள்.
[size=undefined]21 முதல் 30 வரை யிலான மதிப்பெண் பெற்றிருக்கிறீர்களா..? கொஞ்சம் உஷாராக இருங்கள். பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் விளிம்பில் நின்றுகொண்டு முடிவுகளை எடுக்கும் சூழலில் இருக்கிறீர்கள். ஒன்றுக்கு இரண்டுபேரைக் கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுங்கள். நமக்குத்தான் தெரியுமே என்றோ அல்லது நம்மை மீறி என்ன நடந்துவிடப்போகிறது என்றோ அலட்சியமாக நடந்துகொள்ளாமல் பாதுகாப்பான வழிகளைத் தேர்ந்தெடுங்கள்.[/size]
எந்த இனத்துக்கு என்ன பாதுகாப்பு தேவைப்படும் என்று அதற்குரிய வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்றுச் செயல்படுவது நல்லது. என்னதான் நாம் கவனமாக இருந்தாலும் நம்மை மீறியதுதானே விதியின் விளையாட்டு. அதனால், கொஞ்சம் கவனம் தேவை.
[size=undefined]20-க்கும் குறைவான மதிப்பெண் பெற்றிருக்கிறவரே, நீங்கள் மிகவும் வேகமாகச் செயல்படவேண்டிய நேரம் இது. பாதுகாப்பு பற்றிய அடிப்படை ஆர்வமும் அறிவும் இருக்கிறதே தவிர, அதில் கவனம் செலுத்து வதாகத் தெரியவில்லை. அதைத்தாண்டி, உங்களைச் சுற்றிஇருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டியது இன்னும் ஏராளம் இருக்கிறது. இதற்கென பல புத்தகங்கள் இருக்கின்றன. வெப் சைட்கள் இருக்கின்றன. நிபுணர்கள் இருக்கிறார்கள். அதோடு, வீட்டுக்குள் வரும் விளம்பரங்களே உங்கள் அறியாமைக் கண்ணைத் திறக்கக்கூடும்.[/size]
பார்த்துப் பார்த்து சேர்த்த சொத்தை, உறவுகளை, உங்கள் உயிர் மற்றும் உடைமைகளுக்கு உரிய முக்கியத் துவத்தைக் கொடுங்கள். கவனமாக இருங்கள்!

நன்றி: விகடன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

காப்பீடு பற்றி ஒரு கணக்கு! Empty Re: காப்பீடு பற்றி ஒரு கணக்கு!

Sun Jul 06, 2014 2:01 am
இன்றைக்கு இன்ஷூரன்ஸ் துறையில் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தையாக மாறி இருக்கிறது 'மிஸ்செல்லிங்’.  இன்ஷூரன்ஸ் பாலிசிகள் பற்றி தவறான தகவல்களையும், வாக்குறுதிகளையும் தந்து விற்கப்படுவதுதான் 'மிஸ்செல்லிங்’. கடந்த எட்டு ஆண்டுகளில் தவறான தகவலையும் வாக்குறுதியையும் தந்து, ஏமாற்றி விற்கப்பட்ட பாலிசிகள் ஒன்று, இரண்டு அல்ல. சில உதாரணங்களை மட்டும் பார்ப்போம்.
மனோகரனின் கதை!
திருவள்ளூரைச் சேர்ந்தவர் மனோகரன் (பெயர் மாற்றப்பட் டுள்ளது). அவரது பக்கத்து வீட்டில் பகுதி நேர இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஒருவர் இருந்தார். 'எஃப்டி-யைவிட அதிக வருமானம் தரும் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் உள்ளன. வருடம்  ரூ.10 ஆயிரம் என அடுத்த மூன்றாண்டு களுக்கு முதலீடு செய்தால், உங்களுக்கு ரூ.75 ஆயிரம் கிடைக்கும்’ என்று சொல்லி, ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தந்தார்.  
மனோகரனுக்கு எழுத, படிக்கத் தெரியாது. மேலும், ஏஜென்டை சிறுவயதிலிருந்தே தெரியும் என்பதால் அவர் சொன்னதை அப்படியே நம்பினார். சரியான நேரத்தில் பிரீமியத் தொகையை வசூலித்த ஏஜென்ட், அதன்பிறகு மனோகரனின் கண்ணில் தென்படவே இல்லை.
இதனிடையே, தனது மகளின் திருமணச் செலவுக்காக இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்த பணத்தை எடுக்க விரும்பினார் மனோகரன். ஒருவழியாக ஏஜென்ட்டைத் தேடிப்பிடித்து விஷயத்தைச் சொல்ல,   'நீங்களே சென்று வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றார்.  ஆனால், பணத்தை எடுக்கப்போன மனோகரனுக்குத்தான்  அதிர்ச்சி. அவர் செலுத்திய தொகையைவிடக் குறைவான தொகைதான் அவருக்குக் கிடைத்தது. ரூ.75 ஆயிரம் கிடைக்கும் என்று போனவருக்கு, வெறும் ரூ.25 ஆயிரம்தான் கிடைத்தது. தன் தலையில் கட்டப்பட்ட பாலிசி யூலிப் வகையைச் சேர்ந்தது. இதில் போட்ட பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கேற்பவே இந்த பாலிசியிலிருந்து வருமானம் கிடைக்கும் என்கிற தகவல்கள் மனோகரனுக்கு சொல்லப்படவே இல்லை. ஆனால், தவறான வாக்குறுதிகளை மட்டும் அள்ளிவிட்டிருக்கிறார் அந்த பலே ஏஜென்ட்.
காப்பீடு பற்றி ஒரு கணக்கு! Nav08
விஞ்ஞானியும் ஏமாந்தார்!
மனோகரன் படிக்காதவர்.  அவர் எளிதில் ஏமாந்துபோனார் எனில், படித்தவர்கள்கூட நிறையவே ஏமாந்திருக்கிறார்கள்.  லக்னோவைச் சேர்ந்தவர் வீரேந்திர பால் கபூர். விஞ்ஞானியான இவருக்கு விற்கப்பட்ட யூலிப் பாலிசிக்காக ஐந்து ஆண்டுக்குமுன் ரூ.50,000 பிரீமியம் கட்டினார். அது இப்போது வெறும் ரூ.248-ஆகக் குறைந்திருக்கிறது.
ஐஆர்டிஏ-வின் அதிரடி!
இப்படி ஒவ்வொரு ஊரிலும் பல ஆயிரம் மனோகரன்களும் வீரேந்திர பால் கபூர்களும் இருக்கவே செய்கிறார் கள். கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளில் இவர்கள் கண்ட மிகப் பெரிய நஷ்டம், இன்று இன்ஷூரன்ஸ் துறையையே முன்நோக்கி செல்லவிடாதபடிக்கு ஒரு காரணமாக மாறியிருக்கிறது. அதனால், இன்ஷூரன்ஸ் பாலிசிகள் ஏமாற்றி விற்கப்படுவதைத் தடுக்க (மிஸ்செல்லிங்) இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு வாரியமான ஐஆர்டிஏ இப்போது பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருக்கிறது. சமீபத்தில் அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கும் ஐஆர்டிஏ ஓர் அறிக்கையை அனுப்பி உள்ளது. வருகிற ஜூலை 20-ம் தேதிக்குள், 'மிஸ்செல்லிங்’ செய்வதைத் தடுக்க இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைத் தெரிவிக்க வேண்டும்’ என அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.
காப்பீடு பற்றி ஒரு கணக்கு! Nav06d
ஏன் 'மிஸ்செல்லிங்’?
இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகள் பாலிசிகளை விற்கும்போது ஏன் 'மிஸ்செல்லிங்’ செய்கிறார்கள் என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த இன்ஷூரன்ஸ் ஆலோசகர் பலராமனிடம் கேட்டோம்.
''பாலிசி எடுத்து 5, 6 வருடம் பிரீமியம் செலுத்தியபிறகு, அந்த பாலிசி சரியாகச் செயல்படவில்லை, இப்போது இதைவிட நல்ல பாலிசி வந்துள்ளது, இதை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக ரிட்டர்ன் கிடைக்கும் என பாலிசிதாரரிடம் சொல்லி, புது பாலிசியை எடுக்க வைக்கிறார்கள் சில ஏஜென்ட்டுகள். யூலிப் பாலிசிகளில்தான் இது அதிகம் நடக்கிறது. இதற்கு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் உடந்தையாக இருக்கின்றன. இதற்கு காரணம், ஏற்கெனவே விற்பனை செய்த பாலிசிக்கு குறிப்பிட்ட அளவு கமிஷன் ஏஜென்ட்டுகளுக்குக் கிடைத்திருக்கும். இப்போது புதிதாக விற்கும் பாலிசிக்குத் மறுபடியும் ஆரம்பகாலத்தில் அதிக  கமிஷன் கிடைக்கும் என்கிற ஆசையில் சில ஏஜென்ட்டுகள் இப்படி 'மிஸ்செல்லிங்’ செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள்.  
எப்படி குறைக்கலாம்?
இந்த 'மிஸ்செல்லிங்’கை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நினைத் தால் குறைக்கலாம். இன்ஷூரன்ஸ் நிறுவன அதிகாரிகள், பாலிசி எடுத்தவரை நேரில் அழைத்தோ அல்லது போன் மூலமாக தொடர்பு கொண்டோ அந்த பாலிசி பற்றிய விவரங்கள் அவருக்கு சரியாக எடுத்துச் சொல்லப்பட்டு இருக்கிறதா என்பதைச் சோதிக்க வேண்டும். ஆனால், எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனமும் இதைச் செய்வதில்லை.
அடுத்த முக்கியமான பிரச்னை, இன்ஷூரன்ஸ் பாலிசிகளை மக்களிடம் விநியோகம் செய்வதற்கு  சரியான நபர்கள் கிடைப்பதில்லை. இதனால் அந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களை ஏஜென்ட் வேலைக்கு எடுத்துக்கொள்கிறார்கள். 'இந்த வேலையை முழுநேரமாகச் செய்ய வேண்டாம். பகுதி நேரமாகச் செய்தாலே மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கலாம். ஒரு சின்ன பரீட்சை எழுதினால் போதும்’ என்று சொல்லித்தான் ஏஜென்ட் வேலைக்கு ஆட்களைச் சேர்க்கிறார்கள்.
காப்பீடு பற்றி ஒரு கணக்கு! Nav06e
இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கு ஐஆர்டிஏ நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வுக்கான பயிற்சியை அந்தந்த நிறுவனங்களே நடத்துகின்றன. இந்தத் தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. ஆனால், இதில் 17 மதிப்பெண் எடுத்தாலே ஒருவர் பாஸாகி, ஏஜென்ட் ஆகிவிடலாம். சில ஆண்டுகளுக்குமுன் இது 25 மதிப்பெண்ணாக இருந்தது.  ஏஜென்ட்டுகளின் அறிவுத்திறனை உயர்த்த 25 மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி என்கிற மாற்றத்தை ஐஆர்டிஏ கொண்டுவர வேண்டும்.
சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்கெனவே விநியோகம் செய்த பாலிசியைப் புதுப்பிக்கும் சதவிகிதத்தை யும் கவனிக்கிறது. அதாவது, கடந்த ஆண்டு விற்பனை செய்த பாலிசியில் 80 சதவிகிதத்துக்குக் கீழ் புதுப்பித்தல் இருந்தால் அந்த ஏஜென்ட்டுகளின் ஊக்கத் தொகையைக் குறைக்கிறது'' என்றார்.
அதிக கமிஷனுக்கு ஆசை!
இன்ஷூரன்ஸ் பாலிசிகள் 'மிஸ்செல்லிங்’ செய்யப்படுவதற்கான காரணங்களைச் சொன்னார்  இந்தியா நிவேஷ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் வி.கிருஷ்ணதாசன்.
''இன்ஷூரன்ஸ் துறையில் 'மிஸ்செல்லிங்’கானது திட்டமிட்டுச் செய்யப்படுகிறது. இன்ஷூரன்ஸ் விற்பனைப் பிரிவில் வேலை பார்க்கும் அனைவருக்கும் டார்கெட் உள்ளது. இந்த டார்கெட்டை முடித்தால் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லலாம்; பரிசு தொகை உண்டு என பல பரிசு திட்டங்களை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அறிவிக்கிறது. இதற்கு ஆசைப்பட்டு ஏஜென்ட்டுகளும் வேக வேகமாக பாலிசிகளை விற்பனை செய்கிறார்கள்.
ஒவ்வொரு பாலிசிக்கும் ஒவ்வொரு விதமாக கமிஷன் கிடைக்கிறது. குறைவாக கமிஷன் கிடைக்கும் பாலிசிகளை எந்த இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டும் விற்க விரும்புவதில்லை. அதிக கமிஷன் கிடைக்கும் பாலிசிகளை  விற்பனை செய்வதில் மட்டும்தான் ஏஜென்ட்டுகள் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் பாலிசிதாரரின் தேவை என்ன என்று பார்ப்பதைவிட, தனக்கு எதில் அதிக கமிஷன் கிடைக்கும் என்பதைப் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஏஜென்ட்டுகள் உள்ளாகிவிடுகிறார்கள்.
காப்பீடு பற்றி ஒரு கணக்கு! Nav06g
மூத்த குடிமக்களுக்கு லைஃப் இன்ஷூரன்ஸ் என்பது தேவையே இல்லை. லைஃப் இன்ஷூரன்ஸ் என்பது வருமானம் ஈட்டக்கூடியவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், அவரது குடும்பத்தைப் பொருளாதார ரீதியாகக் காப்பாற்றுவதற்காகத்தான். ஆனால், சில ஏஜென்ட்டுகள் மூத்த குடிமக்களுக்கு லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை விற்பனை செய்கிறார்கள். இதையெல்லாம் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் கண்டுகொள்வதே இல்லை.
10, 20 வருடத்துக்கு பிரீமியம் செலுத்த வேண்டிய பாலிசிகளை சிங்கிள் பிரீமியம் பாலிசி எனச் சொல்லி விற்பனை செய்வதும் நடக்கிறது. இதுபோலவே, பாலிசியின் கால அளவை குறைத்தும் பாலிசியை விற்பனை செய்கிறார்கள். அதாவது, 10 வருட பாலிசியை 5 வருட பாலிசி என்று சொல்லி விற்கிறார்கள். பாலிசி எடுப்பவர் பாலிசி காலம் முடிந்துவிட்டது. முதிர்வு தொகையை வாங்கிக்கொள்ளலாம் என நினைத்து இன்ஷூரன்ஸ் அலுவலகத்துக்கு செல்லும்போதுதான் இந்த உண்மையே பலருக்கும் தெரிய வருகிறது'' என்றார்.
பாலிசிதாரர்களும் பொறுப்பு!
மும்பையைச் சேர்ந்த கவர்ஃபாக்ஸ் இன்ஷூரன்ஸ் புரோக்கிங் நிறுவனத்தின் இயக்குநர் சீனிவாசனிடம் 'மிஸ்செல்லிங்’ பற்றி கேட்டோம்.
''ஏஜென்ட்டுகளின் நடவடிக்கை களை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் வருகின்றன. மூன்று அல்லது ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஏஜென்ட்டு களிடம் அவர்கள் விற்பனை செய்யும் பாலிசிகளின் தன்மை, அதன் பயன்கள் குறித்து கேள்விகள் கேட்கப் படுகின்றன. இதில் சரியாகப் பதில் அளிக்காதவர்களுக்குத் தண்டனை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு கூடுதல் பயிற்சியும் தரப்படுகிறது. ஆனால், ஏஜென்ட்டுகள் இந்த வகுப்புகளுக்குச் சரியாகப் போவதே இல்லை. காலையில் வகுப்புக்கு சென்று கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு வந்துவிடுகிறார்கள். இந்த விஷயம் நிறுவனத்துக்குத் தெரிய வரும்போது இன்ஷூரன்ஸ் நிறுவனம், ஏஜென்ட்டை பணிநீக்கமும் செய்கிறது''  என்றவர், 'மிஸ்செல்லிங்’கைத் தடுக்கும் வழிகளையும் சொன்னார்.  
காப்பீடு பற்றி ஒரு கணக்கு! Nav06f
''இந்த விஷயத்தில் நாம் ஏஜென்ட்டுகளை மட்டுமே குறை சொல்லிப்  புண்ணியமில்லை. பாலிசி எடுப்பவர்கள் விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும். ஒரு செல்போன் அல்லது வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு பலரிடம் விசாரிக்கிறோம். அந்தப் பொருளின் செயல்பாடு, விலை பற்றி  தேடித்தேடி தெரிந்துகொள்கிறோம். அதன்பிறகே வாங்குகிறோம். ஆனால், இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது மட்டும் இதை செய்வதில்லை. இப்போது எல்லா இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் கஸ்டமர்கேர் எண் வைத்துள்ளது. இதில் தொடர்புகொண்டால் உங்களுக்குத் தெரிந்த மொழியில் உங்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளிப்பார்கள். ஆனால், இதை யாருமே செய்வதில்லை. படிக்காதவர் மட்டுமில்லை, படித்தவர்களும் இன்ஷூரன்ஸ் விஷயத்தில் இப்படிதான் செயல்படுகிறார்கள். இதை இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
இனியாவது, பாலிசி எடுக்கும்முன் அது பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை எந்த விசாரணையும் செய்யாமல் எடுத்திருந்தால், பாலிசிப் பத்திரம் கையில் கிடைத்த 15 நாட்களுக்குள் அதுபற்றி முழுமையாக விசாரித்து, அந்த பாலிசி தனக்கு ஏற்றதல்ல என்பது தெரிந்தால், உடனே அதை ரத்து செய்துவிடலாம்'' என்றார் அவர்.
காப்பீடு பற்றி ஒரு கணக்கு! Nav06h
டேர்ம் இன்ஷூரன்ஸ் பெஸ்ட்!
ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது குடும்பத்தின் பாதுகாப்புக்குதான். இதை முதலீட்டுத் திட்டமாகக் கருதுவது தவறு. எனவே, அதிக கவரேஜ் அளிக்கும் குறைவான பிரீமியம் கொண்ட டேர்ம் பிளான் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை வேறு நல்ல திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. இப்படி செய்யும்போது 'மிஸ்செல்லிங்’ பிரச்னை வருவதற்கு வாய்ப்பு இல்லை. இனியாவது, இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் என்னை ஏமாற்றிவிட்டார் என்று புலம்புவதற்கு பதில், நாம் எடுக்கும் பாலிசிகளைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு எடுப்போமாக!

நன்றி: நாணயம் விகடன்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum