உமக்கு லேசான காரியம்
Fri Jun 06, 2014 7:55 am
கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு லேசான காரியம். எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணை நில்லும்” (2 நாளா. 14:11).
ஆசா, யூதாவிலே ஆறாவது ராஜா. இவர் கர்த்தர்மேல் அன்பு வைத்து, ஆண்டவரைத் தேட ஆரம்பித்தார். இதனால் பத்து வருடங்கள் அந்த தேசம் சமாதானமாக இருந்தது. எதிரிகள் இல்லாமல் இளைப்பாறினது. ஆனால் பத்து வருடங்களுக்குப் பிறகு எத்தியோப்பியர்கள், லூபியர்கள், ஒரு காரணமுமில்லாமல், ஆசாவுக்கு விரோதமாக படையெடுத்து வந்தார்கள். எதிரிகளின் படையில், பல மடங்கு அதிகமான வீரர்கள் இருந்தார்கள். முந்நூறு இருப்பு இரதங்கள் இருந்தன. இஸ்ரவேலரிடம் ஒரு இருப்பு இரதம் கூட இல்லை.
ஆகவே ஆசாவின் உள்ளத்தில் பயம் வந்துவிட்டது. தம்முடைய சின்ன படையை கொண்டு அவ்வளவு பலமிக்க எண்ணிக்கையில் மிக அதிகமான பகைவரை எப்படி மேற்கொள்ளுவது? ஆகவே கலக்கமற்ற ஆசா, நேராக ஆண்டவருடைய சமுகத்தில் போய் ஊக்கமாய் ஜெபித்தார். “பலனில்லாதவர்களுக்கானாலும் சரி, பலமுள்ள வர்களுக்கானாலும் சரி, உம்மை நோக்கிக் கூப்பிடுகிற ஒவ்வொருவருக்கும் உதவி செய்வது உமக்கு லேசான காரியம்” என்று ஜெபித்தார்.
ஒரு வேளை, அவருடைய உள்ளத்தில், கிதியோனின் படை ஜெயங்கொண்டதைப் பற்றிய சிந்தனை இருந்திருக்கக்கூடும். நியாயாதிபதியாயிருந்த கிதியோனின் படையில் வெறும் முந்நூறுபேர் தான் இருந்தார்கள். எதிரிகளாய் வந்த மீதியானியர்களோ, கடற்கரை மணலத்தனையானவர்கள். முந்நூறு பேரை கொண்டு அவ்வளவு திரளான மீதியானியரை முறியடிப்பது கர்த்தருக்கு லேசான காரியமாயிருந்தது. ராட்ஷசனான கோலியாத்தை முறியடிப்பது தாவீதுக்கு சிறிய காரியமாயிருந்தது.
தேவபிள்ளைகளே, உங்களுக்கு விரோதமாய் எத்தனை பேர் இருந்தாலும், கர்த்தர் உங்கள் பட்சத்தில் நிற்பது எத்தனை பெரிய பாக்கியம்! அவருடைய சேனையில் கோடான கோடி தேவதூதர்கள் இருக்கிறார்கள். எத்தனை மலைபோன்ற பிரச்சனை வந்தாலும், எத்தனை தீய மனிதர்கள் சூழ்ந்து நின்றாலும், நீங்கள் சோர்ந்துபோக வேண்டியதில்லை. பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பது கர்த்தருக்கு லேசான காரியம். ஆகவே தாவீது சொன்னார். “தேவன் நமக்கு அடைக்கலமும், பெலனும் ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்” (சங். 46:1-3).
நன்றி: சகோ.பால் பிரபாகர்
ஆசா, யூதாவிலே ஆறாவது ராஜா. இவர் கர்த்தர்மேல் அன்பு வைத்து, ஆண்டவரைத் தேட ஆரம்பித்தார். இதனால் பத்து வருடங்கள் அந்த தேசம் சமாதானமாக இருந்தது. எதிரிகள் இல்லாமல் இளைப்பாறினது. ஆனால் பத்து வருடங்களுக்குப் பிறகு எத்தியோப்பியர்கள், லூபியர்கள், ஒரு காரணமுமில்லாமல், ஆசாவுக்கு விரோதமாக படையெடுத்து வந்தார்கள். எதிரிகளின் படையில், பல மடங்கு அதிகமான வீரர்கள் இருந்தார்கள். முந்நூறு இருப்பு இரதங்கள் இருந்தன. இஸ்ரவேலரிடம் ஒரு இருப்பு இரதம் கூட இல்லை.
ஆகவே ஆசாவின் உள்ளத்தில் பயம் வந்துவிட்டது. தம்முடைய சின்ன படையை கொண்டு அவ்வளவு பலமிக்க எண்ணிக்கையில் மிக அதிகமான பகைவரை எப்படி மேற்கொள்ளுவது? ஆகவே கலக்கமற்ற ஆசா, நேராக ஆண்டவருடைய சமுகத்தில் போய் ஊக்கமாய் ஜெபித்தார். “பலனில்லாதவர்களுக்கானாலும் சரி, பலமுள்ள வர்களுக்கானாலும் சரி, உம்மை நோக்கிக் கூப்பிடுகிற ஒவ்வொருவருக்கும் உதவி செய்வது உமக்கு லேசான காரியம்” என்று ஜெபித்தார்.
ஒரு வேளை, அவருடைய உள்ளத்தில், கிதியோனின் படை ஜெயங்கொண்டதைப் பற்றிய சிந்தனை இருந்திருக்கக்கூடும். நியாயாதிபதியாயிருந்த கிதியோனின் படையில் வெறும் முந்நூறுபேர் தான் இருந்தார்கள். எதிரிகளாய் வந்த மீதியானியர்களோ, கடற்கரை மணலத்தனையானவர்கள். முந்நூறு பேரை கொண்டு அவ்வளவு திரளான மீதியானியரை முறியடிப்பது கர்த்தருக்கு லேசான காரியமாயிருந்தது. ராட்ஷசனான கோலியாத்தை முறியடிப்பது தாவீதுக்கு சிறிய காரியமாயிருந்தது.
தேவபிள்ளைகளே, உங்களுக்கு விரோதமாய் எத்தனை பேர் இருந்தாலும், கர்த்தர் உங்கள் பட்சத்தில் நிற்பது எத்தனை பெரிய பாக்கியம்! அவருடைய சேனையில் கோடான கோடி தேவதூதர்கள் இருக்கிறார்கள். எத்தனை மலைபோன்ற பிரச்சனை வந்தாலும், எத்தனை தீய மனிதர்கள் சூழ்ந்து நின்றாலும், நீங்கள் சோர்ந்துபோக வேண்டியதில்லை. பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பது கர்த்தருக்கு லேசான காரியம். ஆகவே தாவீது சொன்னார். “தேவன் நமக்கு அடைக்கலமும், பெலனும் ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்” (சங். 46:1-3).
நன்றி: சகோ.பால் பிரபாகர்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|