நீங்கள் வளர்ச்சியை பெற விரும்பினால்
Sun Jun 01, 2014 4:42 am
கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்கிறான். லூக்.11:10
ஜெபத்திலே நாம் கர்த்தரிடம் விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தால், நம்முடைய தேவன் நம்முடைய தேவைகளை அறிந்து ஜெபத்திற்கு பதில் தருவார். இந்த நாளிலும் எனக்கன்பானவர்களே, நாம் எதைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்? நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாம் எதைக் கேட்கவேண்டும் என்று விரும்புகிறார் தெரியுமா?
1. தேவனுடைய ராஜ்யத்தை தேடுவதற்காக,
2. தேவனுடைய (தகப்பனுக்குறிய) அன்பு, நன்மைகளை தரும் தன்மை இவற்றை உணர,
3. தேவனுடைய சித்தத்திற்கு உட்பட்டு ஜெபித்திட,
4. கிறிஸ்துவோடு ஐக்கியமாயிருக்க,
5. கிறிஸ்துவுக்கு கீழ்படிய,
அவர் சொன்ன வார்த்தையின் அடிப்படை நோக்கம் இதுவேயாகும்.
இந்த கடைசி நாட்களில் ஒவ்வொரு கர்த்தருடையப் பிள்ளையும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்காகக் கேட்கவேண்டும் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உணர்த்துகிறார். கேட்கிறவர்கள் மாத்திரமே இதை பெற்றுக்கொள்ளமுடியும்.
பிரியமானவர்களே, பரிசுத்த ஆவியானவரை அப்பம், மீன், முட்டையுடன் ஒப்பிட்டிருப்பதை இவ்வதிகாரத்தில் காணலாம். அப்பம், மீன், முட்டை, வளர்ந்து முதிர்ச்சி அடைய விரும்புகிறவர்களின் ஆகாரமாகும். பரிசுத்த ஆவியின் அபிஷேகமானது வளர்ச்சியை விரும்புகிறவர்களின் அப்பியாசமாகும். நீங்கள் வளர்ச்சியை விரும்பினால் அபிஷேகத்தைக் கேளுங்கள். கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்கிறான்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தாமே, இந்நாளில் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் அபரிவிதமாக ஆசீர்வதிப்பாராக.
நன்றி: சகோ.மேரி ஆக்ஸிலியா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|