தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
அதிசய தகவல்கள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அதிசய தகவல்கள் Empty அதிசய தகவல்கள்

Fri May 23, 2014 7:34 am
* ஆப்பிரிக்காவில் ரத்த வேர்வை சிந்தும் நீர் யானை உள்ளது.

* ஆரல் கடல், சாக்கடல், காஸ்பியன் கடல் இவை மூன்றும் கடல் என்ற பெயரைக் கொண்ட ஏரிகள் ஆகும்.

* உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதி அளவை தரும் நாடு தென்னாப்பிரிக்கா (ஒரு ஆண்டுக்கு 700 டன்).

* முத்துத் தீவு என அழைக்கப்படும் நாடு பஹ்ரெய்ன்.


* தென்னாப்பிரிக்காவில் ஒரு ஆண், ஒரு பெண்ணை பார்க்க வந்தால் அந்த பெண் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது வழக்கமாக இருந்தது. அந்த ஆண் தன் மனத்திற்கு பிடித்தவனாக இருந்தால் நீளமான மெழுகுவர்த்தியும், பிடிக்காதவனாக இருந்தால் சிறிய மெழுகுவர்த்தியையும் ஏற்றி வைப்பாள்.


* காண்டா மிருகத்தின் கொம்பு மற்ற மிருகங்களின் கொம்புகளிலிருந்து வேறுபடுகிறது. இதன் கொம்பு எலும்பால் ஆனது அல்ல. தோலிலிருந்தே உருவானது.


* நாகபாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டுப் பாம்பு, கட்டுவிரியான் ஆகியவை மிகவும் கொடிய நச்சுள்ள பாம்புகள்.


* சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக தோன்றும். ஆனால், அது பச்சையாகத் தோன்றுவது அண்டார்டிக் காவில் மட்டும் தான்.


* பச்சைத் தங்கம் என அழைக்கப்படும் மரம் யூகாலிப்டஸ் மரம்.


* நீரை உறிஞ்சி குடிக்கும் ஒரே பறவை புறா தான்.


* நச்சுள்ள பாம்பு இன்னொரு பாம்பைக் கடித்தால் கடிப்பட்ட பாம்பு இறந்து விடும்.


* பாம்புகளில் 3,000 வகையான பாம்புகள் உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் மட்டும் 350 வகைகள் உள்ளன.


* இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 648 வங்கிகளும், 4,819 கிளைகளும் இருந்தன.


* காரில் செல்லும் போது மழை, இடி வந்தால் காரை விட்டு இறங்காமலிருப்பதே நல்லது. காரணம், பூமிக்கும், 



காருக்கும் பாசிடிவ் சார்ஜ் கவராமலிருப்பது தான்.

* நிலத்தில் ஒரு மைல் என்பது 5,280 அடி. கடலில் ஒரு மைல் 6,080 அடி.


* ஆஸ்திரேலியாவில் ஒரு பாறை உள்ளது. 300 மீட்டர் உயரமும், 11 கி.மீட்டர் சுற்றளவும்கொண்ட இப்பாறை எவ்வளவு தூரத்திலிருந்து பார்த்தாலும் சிவப்புக் கூடாரம் போல் காட்சியளிக்கும். இப்பாறையின் சிறப்பு என்னவெனில், வெய்யிலில் சிவப்பு நிறமாகவும், நண்பகலில் பழுப்பு நிறமாகவும் மாலையில் நீலம் கலந்த சிவப்பாகவும் தோன்றும். எனவே, இதை பச்சோந்திப் பாறை என அழைக்கப்படுகிறது


*வெளவால்களில் மொத்தம் 2,000 வகைகள் உள்ளன.


*கொசுவில் 2,700 வகைகள் உள்ளன.


*குரங்குகளில் அழகானது 'மர்மோசைட்' என்ற வகை குரங்கு.


*நம் கண்களில் லாக்ரிமல் கிளாண்ட் என்ற சுரப்பியால் சுரக்கப்படும் லாக்ரிமா என்ற திரவத்தைத்தான் பொதுவாக கண்ணீர் என்கிறோம்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அதிசய தகவல்கள் Empty Re: அதிசய தகவல்கள்

Fri May 23, 2014 7:44 am
*ஆந்தையில் மொத்தம் 133 வகை உண்டு. மற்ற பறவைகளின் கண்களைப் போல ஆந்தைகளின் கண்கள் அதன் விழிக்குள் இலகுவாக அசைவதில்லை. கண்கள் இரண்டும் முகத்தின் முன்னாலேயே பக்கவாட்டில் இல்லாமல் இருக்கின்றன. இந்தக் குறையை ஈடு செய்ய தன் தலையை 180 டிகிரி வரைப் சுற்றி பார்க்க முடியும்.

*மாட்டுக்கு பற்கள் தேய ஆரம்பித்து விட்டால் அது பத்து வயதிற்கு மேற்பட்டது.

*எவரெஸ்ட் சிகரத்தை சாகர் மாதா என்று நேபாள நாட்டினர் அழைக்கின்றனர்.

*ரீசன்டோலியா என்ற ஆஸ்திரேலியத் தாவரம் மண்ணுக்குள் மணம் வீசும் மலரைக் கொண்டது.

*பவ்டக் என்ற பர்மியச் செடி மூன்று முறை தொடர்ந்து பூத்தால் பருவமழை தொடங்கி விடும்.


*கோட்ஸ்பியர்டு என்ற ஆப்பிரிக்க நாட்டுப் பூச்செடியில் ஒவ்வொரு கொத்திலும் பத்தாயிரம் மொட்டுக்கள் வரை இருக்கும்.


* ஒரு இதழோ அல்லது ஒன்பது இதழ்களோ உள்ள பூக்களை எங்கும் காண முடியாதாம்.


*ஆஸ்திரேலிய மலரான கேண்டிஸ் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும். கற்றாழை எனப்படும் கள்ளி 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும்.


*ரத்தச் சிவப்பணுக்கள் முதிர்ச்சிக்கு காரணமாய் அமைவது சயனா கோபலமின்.


*நார் தயாரிக்க பயன்படும் பாக்டீரியா கிளாஸ்டரியம்.


* லெகோஸ் என்ற ஒன்றுடன் ஒன்று செருகிக் கொள்ளும் வண்ண பிளாஸ்டிக் துண்டுகள் 1949-ம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த கிறிஸ்டியான்ஸன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவர்கள் இவற்றைக் கூட்டி வைத்து பொம்மை நகரங்கள் கட்ட உதவிய இந்தத் துண்டுகள் இதுவரை இரண்டாயிரம் கோடிக்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டன. இன்றும் மாறாமல் முதலிடம் பெற்றிருக்கும் சிறுவர்களுக்கான இந்த விளையாட்டுப் பொருள்களில் இரண்டாயிரம் வகைத் துண்டுகள் உள்ளன.


* நாய் உணவில்லாமல் கூட இருந்து விடும். ஆனால், தூக்கம் இல்லாவிட்டால் விரைவில் இறந்து விடும்.


* கரப்பான் பூச்சிகள், பல்லிகள், விஷப் பாம்புகளை சாப்பிடும் ஒருவகை எட்டுக்கால் பூச்சி ‘டாரண்டுலா’வாகும்.


* ஒரு தேனீ 4,000 பூக்களிலிருந்து சேகரிக்கும் தேன் ஒரு ஸ்பூன் அளவே ஆகும்.


* காண்டாமிருகம் சுத்தமான சைவ விலங்கு.


* காலில் கண் உள்ள பூச்சி வெட்டுக்கிளி.


* முதன்முதலில் அலுமினியத்தை கண்டறிந்த நாடு பிரான்ஸ்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அதிசய தகவல்கள் Empty Re: அதிசய தகவல்கள்

Mon May 26, 2014 8:39 am
தகவல் துளிகள்...


*ஆசியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்டவர் - ராபட்கிளைவ்


* ஐந்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு - ரஷ்யா


* தொழிற்சாலையில் நொதித்தல் நிகழ்ச்சியில் பயன்படுவது - ஈஸ்ட்

* வளையாமல் நேராகச் செல்லும் நீளமாக ரெயில் பாதை உள்ள நாடு - ஆஸ்திரேலியா - 478 கி.மீ


*உலோகங்களை உருக்கி இணைக்க பயன்படுவது - ஆக்சி அசிட்டிலின்


*காய்களை பழங்களாக்க பயன்படுவது - எத்திலின்


*விண்வெளியில் உணவாகப் பயன்படுவது - குளோரெல்லா


* முடிச்சாயம் தயாரிக்கப் பயன்படுவது - வெள்ளி நைட்ரேட்


* விவாகரத்துக்கு அனுமதி இல்லாத நாடு - அயர்லாந்து


* பட்டாசு தயாரிப்பில் பயன்படுவது - பொட்டாசியம் நட்ரேட்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அதிசய தகவல்கள் Empty Re: அதிசய தகவல்கள்

Fri Oct 31, 2014 1:11 pm
*பூமிக்குள் இதுவரை துளையிட்டதிலேயே அதிகபட்ச ஆழம் 13 கிலோ மீட்டர். பூமியின் மையப்பகுதியை அடைய வேண்டும் எனில், இதைப் போல 500 மடங்கு துளையிட வேண்டும்.

*பூமித்தட்டுகள் எப்போதும் நகர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆண்டுக்கு சராசரியாக 2.5 சென்டிமீட்டர் தூரம். ஓராண்டில் நம் நகங்கள் வளர்வதும் ஏறத்தாழ இதே அளவுதான்!

*வெதுவெதுப்பான, சூரிய ஒளி நிறைந்த ஆழ்கடல் பகுதிகளிலேயே பவழங்கள் காணப்படுகின்றன.

*6,690 கிலோமீட்டர் நீளம் கொண்ட, உலகின் மிக நீளமான நைல் நதியும் காலத்தின் கோலத்தில் சுருங்கி வருகிறது.

*உலகின் மிகப்பெரிய ஆற்றுக் கழிமுகம் (டெல்டா), 77 ஆயிரத்து 700 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டது. கங்கை, பிரம்மபுத்ரா நதிகளால் உருவான இந்த டெல்டா, இந்தியாவிலும் பங்களாதேஷிலும் பரவியுள்ளது.


*நிலவில் அமெரிக்கக் கொடி வைக்கப்பட்டிருந்தாலும், ஒரு போதும் அந்தக் கொடி பறப்பதில்லை. காரணம் காற்றின்மை!


*கலிபோர்னியாவிலுள்ள ஒரு செம்மரத்தின் அடிமரச் சுற்றளவு 24 மீட்டர். உயரம் 83 மீட்டர். இந்த பிரமாண்டத்தைச் சிறப்பிக்கும் வகையில், இம்மரத்துக்கு ‘ஜெனரல் ஷெர்மன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


*ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான பிளாங்க்டன் போன்ற உயிரினமாகத்தான் பிறக்கிறது, மிகப்பெரிய ஆக்டோபஸும் கூட. நண்டு, நட்சத்திர மீன் போன்றவையும் பிறப்பால் சின்னஞ்சிறு உயிரிகளே!


*Echinoderm என்ற கடல்வாழ் குடும்பத்தில் 6 ஆயிரத்துக்கும் அதிக இனங்கள் உண்டு. ஆனாலும், அவற்றில் 5 முக்கியப் பிரிவுகள்தான். இக்குடும்பத்தின் பிரதான உயிரினம் நட்சத்திர மீன்!


*டைனோசரை விடவும் பல மடங்கு மிகப்பிரமாண்டமான உயிரினமான நீலத்திமிங்கலம், 33 மீட்டர் நீளம் வரை வளரும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அதிசய தகவல்கள் Empty Re: அதிசய தகவல்கள்

Fri Dec 05, 2014 3:32 pm
** லண்டனிலுள்ள ‘பிக் பென்’ மணிக்கூண்டின் நிமிட முள் வேலை செய்வதை தொலைவில் கணக்கிட்டால், அது ஆண்டுக்கு 190 கிலோமீட்டர் கடக்கிறது!
** முட்டைக்குள் உருவாகும் கோழிக்குஞ்சுகளால், மேல் ஓட்டின் வழியாக சுவாசிக்க முடியும்
** சார்லஸ் ஆஸ்போர்ன் என்பவருக்கு 1922 முதல் 1990 வரை தொடர்ந்து 68 ஆண்டுகளுக்கு விக்கல் பிரச்னை இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட 43 கோடி விக்கல்கள். விக்கல் விலகிய அடுத்த ஆண்டே, 97 வயதில் இறந்து போனார் அவர். மெடிக்கல் மிராகிள்?
** ஸ்லோத் என்ற குரங்கு போன்ற ஒருவகை உயிரினம் ஒரு மைல் தூரத்தைக் கடப்பதற்கு ஒரு மாத காலம் எடுத்துக் கொள்ளும். அதனால்தானோ என்னவோ இந்த வார்த்தைக்கு ‘அசமந்தம்’ என்றும் பொருள் உண்டு. இதை ‘அசையாக்கரடி’ என்றும் அழைக்கிறார்கள்!
** பூமியைச் சுற்றிவரும் விண்வெளி வீரர்கள் ஒவ்வொரு நாளும் அதிகபட்சம் 16 சூரிய உதயங்களையும் அஸ்தமனங்களையும் காண முடியும்.
** 100 ஆண்டுகள் பழமையான சாக்லெட் பார், 700 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டிருக்கிறது!
** உடலியல் ரீதியாக, சிங்கத்தை விட நீர் யானை அபாயமானது.
** சில பெண் மீன்களால் ஆணாக மாற முடியும்!
** கடல் மட்டத்தில் இயங்குவதை விடவும், உயரமான மலையில் கடிகாரம் சற்று வேகமாக ஓடும்!
** புதன் கிரகத்தில் ஆண்டின் அளவைக் காட்டிலும் நாளின் நீளம் அதிகம்!
Sponsored content

அதிசய தகவல்கள் Empty Re: அதிசய தகவல்கள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum