தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஊழியம் செய்ய முதலில் நீ சீஷனாக இருக்கவேண்டும்!. Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஊழியம் செய்ய முதலில் நீ சீஷனாக இருக்கவேண்டும்!. Empty ஊழியம் செய்ய முதலில் நீ சீஷனாக இருக்கவேண்டும்!.

Thu Apr 10, 2014 9:07 am
அழைப்பு என்பது என்ன? பிரதிஸ்டை என்பது என்ன? ஒருவன் கிறிஸ்துவுக்குள் மறுபடியும் பிறக்கும் போது அவனைப் பற்றியக்காரியம் அவனுக்கு பிதாவினால் எதைச் செய்யவேண்டும் என்பதை தேவன் கூறுவதே அதற்கென அவன் தெரிந்துக்கொள்ளப்பட்டான் அல்லது அழைக்கப் பட்டான் என்பதாகும் அதற்கும் சில விதிமுறைகள் நம்மிடம் தேவன் எதிர்ப்பார்க்கிறார் அதுதான் சீஷன் என்கிற தகுதி .

 

எந்த ஊழியத்துக்கும் நுழைவுத்தேர்வு உண்டு அது சீஷன் என்கிற பட்டத்தைப் பெறுவதற்காக நடத்தப்படுகிறது.

 

இதில் அநேகர் தோற்றுப்போனாலும் தன்னிச்சையாய ஊழியம் செய்கிறார்கள் இதனால்தான் போட்டி பொறாமைகள் சண்டைகள்,பிரிவனைகள் இதுவெல்லாம் நடக்க காரணம்.

 

தகுதி பெறாத டாக்டர்கள் ஆஸ்பத்திரி வைக்கமுடியாது,தகுதி பெறாத டீச்சர் ஆசிரியராய் வேலை செய்யமுடியாது,உடல் தகுதிபெறாதவன் கிரிகெட் ஆடமுடியாது .எந்த ஒரு வேலைக்கும் தகுதி தேவை ஆதுபோலத்தான் தேவ ஊழியத்துக்கும் சீஷன் என்கிற தகுதி தேவை 

 

சீஷன் :-அவனுடைய பிரதிஸ்டை என்ன?1.உலகத்தை நேசிக்காதவனாய் இருக்கவேண்டும்.பரலோகவாசியாய் தன்னை அடையாளப்படுத்துகிறவனாய் இருக்கவேண்டும்.

 

2.கிறிஸ்து எப்படி சென்றாரோ அவ்வழியில் தானும் செல்ல வாஞ்சையுள்ளவனாய் பாடுபட அதே சிந்தையுள்ளவனாய் இருக்கவேண்டும்

 

3.தன்னை நேசியாமல் கிறிஸ்துவை நேசிக்கிறவனாய் இருக்கவேண்டும்எல்லாவற்ரையும் விட தேவனுக்குரியவற்றை முதன்மையாக எண்ணவேண்டும்.

 

4.தேவனுடைய அன்பை மற்றவர்களிடத்தில் கொண்டு செல்ல எப்போதும் எந்த நிலையிலும் ஆயத்தமாய் இருக்கவேண்டும்

 

5.அசையாத உறுதியான விசுவாசம்.எப்பேர்பெற்ற மரன திகில் வந்தாலும் கர்த்தரில் உறுதியான நம்பிக்கையில் இருந்து பின்வாங்காத மனதும்,தேவனுடைய வார்த்தையில் இருக்கும் அசையாத நம்பிக்கையும் வேண்டும்.

 

6.தற்புகழை நாடமால் தேவனுக்கே மகிமையை கொண்டுவருகிறவனாய் இருக்கவேண்டும்.

 

7.தன் விருப்பத்தை மனதில் கூட எண்ணாமல் தேவனுடைய விருப்பத்தை அறிய மனதை ஒருமுகப்படுத்தி ஆவியின் மூலம் அறிந்து அதையே செய்ய பக்திவைராக்கியம் உள்ளவனாக இருக்கவேண்டும்.

 

8.உடைகள்,பேச்சு,நடைகள்,பாவனைகள் எல்லாம் ஒரு கிறிஸ்துவின் சுபாவத்தை பிரதிபலிக்கவேண்டும் என்கிற வாஞ்சை உடையவனாய் இருக்கவேண்டும்9.சுயத்தை வெறுத்து அனுதினமும் சுயத்துக்கு மரித்து கிறிஸ்துவில் ஜீவிக்கிறவனாய் வாழ வாஞ்சிக்கிரவனாக இருக்கவேண்டும்

 

லூக்கா 9:23 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.

 

லூக்கா 14:26-35 யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

 

தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

 

உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து,

 

அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்:

 

இந்த மனுஷன் கட்டத்தொடங்கி முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப்பாராமலிருப்பானோ?

 

அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?

 

கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.

 

அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

 

உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?

 

அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

நன்றி: சகோ.ஜான்சன்துரை
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஊழியம் செய்ய முதலில் நீ சீஷனாக இருக்கவேண்டும்!. Empty Re: ஊழியம் செய்ய முதலில் நீ சீஷனாக இருக்கவேண்டும்!.

Thu Apr 10, 2014 9:16 am
நாம் ஏன் அப்போஸ்தலர்களைப்போல வாழ முடியவில்லை?
நாம் ஏன் அப்போஸ்தலர்களைப்போல வாழ முடியவில்லை? வேதம் வாசிப்பதுக்கும் போதிப்பதுக்கும் மட்டும்தானா? வாழ்விற்கும் சாட்சிக்கும் தூரமா? இல்லை இல்லவே இல்லை! நம்மிடமே குறைகள் உண்டு.. அவைகளை எப்படி சரிசெய்வது?--Jesus Friend Murugesh.

 

அப்போஸ்தலர்கள் உலகத்தில் உயர்வை விரும்பாமல் பிதாவின் சித்தத்தை செய்வதில் ஆர்வம் கொண்டார்கள் ஆனால் நாமோ தேவனே என்னைக்கொண்டு அதைச் செய்யும் இதைச் செய்யும் என்ற சுயநல உயர்வை விரும்பி பிதாவின் சித்தத்தினை அறியவே விரும்பாமல் சுய விருப்பத்தை தேவனிடத்தில் இருந்து பெறும்படியாய் ஜெபிப்பதும்,ஆராதனை செய்வதும்,சுகமளிக்கும் ஊழியம் செய்வதுமாய் திருப்தி கொண்டு ஜீவியத்தில் கோட்டைவிட்டுவிடுகிறோம்! இதுதான் இதற்கு தடை .

 

சீஷனாய் இரு பின்பு ஊழியம் செய் ஆனால் இவர்களோ அப்படியில்லாமல் நீ எப்போதும் போல் இரு ஆண்டவர் உனக்காய் தண்டனை அனுபவித்ததால் சீஷன் அப்படி இப்படி என்று குழப்பி உன்னை பாடுகளுக்குள் ஒப்புக்கொடுத்து வாழாதே! இந்த உலகத்தில் சம்பூர்ணமாய் ஆசிர்வாதமாய் உலகத்தானாய் வாழு என்கிறார்கள் .

 

அப்போஸ்தலரின் கொள்கை நாம் உலகத்தார் அல்ல ஆகையால் நாம் இவ்வுலகத்தில் பரதேசிகள் போல் இருக்கவேண்டும் என்பதே 

 

ஆனால் இன்றய கிறிஸ்தவனின் கொள்கையோ இந்த உலகத்தில் குறைவில்லாமல் செழிப்பாய் தேவன் ஆசிர்வதிப்பார் நாமக்கு இருக்க பெரிய சொகுசு பங்ளா விசுவாசித்தால் கொடுப்பார்! நமக்கு சொகுசு கார் விசுவாசித்தால் கொடுப்பார் என்கிறார்கள்

 

இயேசுகிறிஸ்து:- அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது.

 

இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள்.

 

மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

 

அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள்பலன் மிகுதியாயிருக்கும்; அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.

 

ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்கள் ஆறுதலை நீங்கள் அடைந்து தீர்ந்தது (மத்6:20-24)

நன்றி: சகோ.ஜான்சன்துரை
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஊழியம் செய்ய முதலில் நீ சீஷனாக இருக்கவேண்டும்!. Empty Re: ஊழியம் செய்ய முதலில் நீ சீஷனாக இருக்கவேண்டும்!.

Thu Apr 10, 2014 9:16 am
நிற்கிறேன் என்கிறவன் விழாதிருக்க எச்சரிக்கையாக இருக்கக்கடவன்!
I கொரிந்தியர் 10:12 இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.

 

ஒருவருக்கொருவர் தீங்கு செய்தால் மனப்பூர்வமாய் மன்னிக்க தேவ அன்பு அவசியம் அப்படியே தேவனுடைய அன்பினால் மன்னித்து மறக்க முடியும் .


 

ஆனால் சிலர் தன்னை புகழவேண்டும் என்ற நோக்கத்தில் மற்றவர்களின் பாராட்டைப் பெறவேண்டும் என்ற போக்கில் கிறிஸ்தவத்தை ஆதாயமாய் கொண்டு செயல்படுவதை கடுமையாக கண்டிக்கவேண்டும்.

 

அப்படி .மாய்மாலம் செய்பவர்களைப் பார்க்கும் போது நமக்கு கோபம் வரும் அதேசமயம் நாம்.அதற்காக அவர்களை கொச்சையாய் பேசுவதும் தேவனுடைய பார்வையில் சரியாக இருக்காது! 

 

நான் மற்றவர்கள் தனிப்பட்ட மாய்மாலத்தைப் பகிரங்கமாய் கூறப்போய் நானும் மாய்மாலக்காரனாய் மாறியிருக்கேன்,பிற்பாடு என் செயலுக்காய் வருந்தும்போது கிருபை அப்படிப்பட்ட காரியத்தில் என்னை தாங்கி சுமந்ததை அறிந்தேன் ஆகையால் நிற்கிறேன் என்கிறவன் விழாதிருக்க தான் இருக்கும் பெலவீன நிலையில் தேவனுடைய பெலன் செயல்படுவதை உணர்ந்து கிருபையை பற்றிக்கொள்ள வேண்டும். 

 

நாம் எப்போதும் மற்றவர்களைப் பற்றிய உண்மையைக் கூறும்போது அவர்களை கண்டிக்கும் போது பயன்படுத்தும் கொச்சை வார்த்தைகள் கேலி பேச்சுக்கள் நம்முடைய பக்திவைராக்கியத்தை கேள்விக்குரியாக்கிவிடும் என்பது மிக உண்மை!

 

எந்தக்காரியத்தைச் செய்யும் போதும் இதில் தேவன் இதை எந்த வித்மாய் செய்வார் என்பதை ஆவியில் அறிந்துச் செய்தால் நாம் ஒருகாலம் கிருபையை இழக்கமாட்டோம்! 

நன்றி: சகோ.ஜான்சன்துரை
Sponsored content

ஊழியம் செய்ய முதலில் நீ சீஷனாக இருக்கவேண்டும்!. Empty Re: ஊழியம் செய்ய முதலில் நீ சீஷனாக இருக்கவேண்டும்!.

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum