திருப்பாதம் நம்பி வந்தேன்
Tue Sep 10, 2013 9:33 pm
[color:139c=blue:bddd72a555]திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பை கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே
இந்தப் பாடலுக்கு கிறிஸ்தவ சபைகளில் ஒரு சிறப்பான இடம் உண்டு. இந்தப் பாடலை அதன் அர்த்தத்தை உணர்ந்து பாடும் எவரும் உருகிடுவர். இத்தலைமுறையினரான நமக்கு இந்த பாடலை சபைகளில் (குறிப்பாக தாய்மார்களாகிய பெண்கள்) தூங்கிவழிந்து கொண்டு, இழுத்து இழுத்து பாடுவதை கேட்கும் போது இந்த பாடல் எப்போது முடியும் என்று நமக்கு நினைப்பு வரலாம். ஆனால் இந்த பாடலை எழுதியவர் மிகுந்த கண்ணீரின் அனுபவத்தின் போது இந்த பாடலை எழுதினார். இதன் ஆசிரியர் யார் என்பது எல்லாரும் அறிவர்.
இந்த பாடலை எழுதிய சகோதரி முதலில் சிலோன் பெந்தேகோஸ்தே சபையுடன் இணைந்து ஊழியம் செய்து வந்தார்.அக்காலத்தில் அவர் ஜெபிக்கும்படி நாற்பது நாள் எல்லாரையும் விட்டு விலகி வீட்டில் தனித்து ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் இதை தவறாகப் புரிந்து கொண்ட அந்த சபை ஊழியர்கள் ஒரு தவறான கதையை கட்டி விட்டனர்.அதென்னவெனில் அந்த சகோதரி தவறான முறையில் கருத்தரித்ததால்தான் வீட்டில் தனியாக யாரும் பார்க்க முடியாதவாறு இருக்கிறார்கள் என்ற கதையை பரப்பினர். இதனால் சகோதரிக்கு பெரிய நிந்தை உண்டாயிற்று. அவமானத்தை எண்ணி மனம் வெதும்பி ஆண்டவரின் சமூகத்தில் கதறி அழுதார்.
அச்சமயத்தில்தான்
[color:139c=red:bddd72a555]என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே - திருப்பாதம் நம்பிவந்தேன்
[color:139c=blue:bddd72a555]என்று தன் உள்ளத்தில் உள்ள பாரங்கள் யாவையும் ஆண்டவர் சமூகத்தில் ஊற்றி ஜெபித்து இந்த பாடலை எழுதினார்.அவ்வேளையில் நம் ஆண்டவரால் அவர் தேற்றப் பட்டார். இந்த பாடல் இன்றும் பலருக்கு நெருக்கடியான வேளைகளில் தேற்றுவதாய், உள்ளத்தை ஊற்றி ஜெபிக்க உதவுகிறது. நீங்களும் இப்பிண்ணணியத்தை அறிந்தவர்களாய் இப்பாடலின் கவிகளை நோக்கிப் பாருங்கள், பாடுங்கள். பரமனை நோக்குங்கள்.மேலும் இந்த பாடலை கேட்க கீழே கொடுக்கப்பட்டுள்ள Link மூலம் கேட்டு தேவபாதம் சேருங்கள்.
http://www.tamilchristiansongs.org/media/components/com_zina/music/Other_Singers/Freddy%20Joseph/Vol.%201/Thirupaatham%20Nambi%20Vantheyn.rm
நன்றி: மார்ஸ்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பை கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே
இந்தப் பாடலுக்கு கிறிஸ்தவ சபைகளில் ஒரு சிறப்பான இடம் உண்டு. இந்தப் பாடலை அதன் அர்த்தத்தை உணர்ந்து பாடும் எவரும் உருகிடுவர். இத்தலைமுறையினரான நமக்கு இந்த பாடலை சபைகளில் (குறிப்பாக தாய்மார்களாகிய பெண்கள்) தூங்கிவழிந்து கொண்டு, இழுத்து இழுத்து பாடுவதை கேட்கும் போது இந்த பாடல் எப்போது முடியும் என்று நமக்கு நினைப்பு வரலாம். ஆனால் இந்த பாடலை எழுதியவர் மிகுந்த கண்ணீரின் அனுபவத்தின் போது இந்த பாடலை எழுதினார். இதன் ஆசிரியர் யார் என்பது எல்லாரும் அறிவர்.
இந்த பாடலை எழுதிய சகோதரி முதலில் சிலோன் பெந்தேகோஸ்தே சபையுடன் இணைந்து ஊழியம் செய்து வந்தார்.அக்காலத்தில் அவர் ஜெபிக்கும்படி நாற்பது நாள் எல்லாரையும் விட்டு விலகி வீட்டில் தனித்து ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் இதை தவறாகப் புரிந்து கொண்ட அந்த சபை ஊழியர்கள் ஒரு தவறான கதையை கட்டி விட்டனர்.அதென்னவெனில் அந்த சகோதரி தவறான முறையில் கருத்தரித்ததால்தான் வீட்டில் தனியாக யாரும் பார்க்க முடியாதவாறு இருக்கிறார்கள் என்ற கதையை பரப்பினர். இதனால் சகோதரிக்கு பெரிய நிந்தை உண்டாயிற்று. அவமானத்தை எண்ணி மனம் வெதும்பி ஆண்டவரின் சமூகத்தில் கதறி அழுதார்.
அச்சமயத்தில்தான்
[color:139c=red:bddd72a555]என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே - திருப்பாதம் நம்பிவந்தேன்
[color:139c=blue:bddd72a555]என்று தன் உள்ளத்தில் உள்ள பாரங்கள் யாவையும் ஆண்டவர் சமூகத்தில் ஊற்றி ஜெபித்து இந்த பாடலை எழுதினார்.அவ்வேளையில் நம் ஆண்டவரால் அவர் தேற்றப் பட்டார். இந்த பாடல் இன்றும் பலருக்கு நெருக்கடியான வேளைகளில் தேற்றுவதாய், உள்ளத்தை ஊற்றி ஜெபிக்க உதவுகிறது. நீங்களும் இப்பிண்ணணியத்தை அறிந்தவர்களாய் இப்பாடலின் கவிகளை நோக்கிப் பாருங்கள், பாடுங்கள். பரமனை நோக்குங்கள்.மேலும் இந்த பாடலை கேட்க கீழே கொடுக்கப்பட்டுள்ள Link மூலம் கேட்டு தேவபாதம் சேருங்கள்.
http://www.tamilchristiansongs.org/media/components/com_zina/music/Other_Singers/Freddy%20Joseph/Vol.%201/Thirupaatham%20Nambi%20Vantheyn.rm
நன்றி: மார்ஸ்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|