தப்பிப்பதே பெரிது
Tue Aug 27, 2013 9:44 pm
ஓநாய் ஒன்று அரக்கப்பரக்க ஆசையுடன் மாமிசத் துண்டுகளை வேகவேகமாக சாப்பிட்டது. அப்படி சாப்பிட் டதனால் அதன்தொண்டைக்குள் பெரிய எலும்புத் துண்டு ஒன்று மாட்டிக் கொண்டது.எலும்புத்துண்டு உள்ளேயும் செல்லவில்லை. வெளியேயும்வரவில்லை. ஓநாயும் எப்படி எப்படியோ தலையை ஆட்டிப்பார்த்தது. எலும்புத்துண்டுதொண்டைக்குழியல் நின்று தொந்தரவு தந்தது. நேரம் செல்லச் செல்ல ஓநாய்க்கு வலிதாங்க முடியவில்லை. வேதனையால் கதறியது. அதன் கதறலைக்கேட்டு காட்டுமிருகங்கள் அங்கு வந்து கூடிவிட்டன. ஐயோ... வலிக்கிறதே, என் தொண்டையில் சிக்கியஎலும்புத்துண்டை யாராவது எடுத்துவிடுங்களேன். என்று ஓநாய் கெஞ்சியது, எந்தமிருகமும் உதவிக்கு வரவில்லை. வலி தாங்க முடியவில்லையே... எனக்கு உதவிசெய்தால் அவர்களுக்கு நான் நல்லதொரு பரிசு தருகிறேன். என்று கூறியது ஓநாய்.அப்பொழுதும் உதவிக்கு வர மிருகங்கள் தயக்கம் காட்டின.
கொக்கு ஒன்று அந்த நேரம் அங்கு வந்து சேர்ந்தது. கொக்கே... நீயாவது எனக்குஉதவிசெய். தொண்டையில் மாட்டிய எலும்புத்துண்டை எடுத்துவிட்டால் உனக்கு, நீகேட்கும் பரிசு தருகிறேன் என்று கொக்கைப் பார்த்து பரிதாபமாகக் கெஞ்சியது ஓநாய்,கொக்கும் ஒப்புக்கொண்டது. பிறகு ஓநாயின் வாயைத் திறக்கச் சொன்னது. ஓநாயும் தன்பெரிய வாயை அகலமாகத் திறந்தது. கொக்கும் மெதுவாகத் தன் நீண்ட கூடிய அலகைஓநாயின் வாய்க்குள் செலுத்தியது. பின்னர் மெதுவாக அசைத்து அதன் வாயில்சிக்கியிருந்த எலும்புத் துண்டை வெளியே எடுத்துவிட்டது.s
அப்பாடா... இப்பத்தான் நிம்மதி... என்று ஓநாய் மகிழ்ச்சி அடைந்தது. நேரமாகுது,பேசியபடி பரிசைக் கொடுங்கள் என்று ஆவலாய்க் கேட்டது கொக்கு. பரிசா? உனக்கா?அப்போதே கொடுத்து விட்டேனே என்று ஏளனமாய் சொன்னது ஓநாய். எப்போது பரிசுகொடுத்தீங்க? கொக்குக் குழம்பியது.
கொக்கு.. நீ ஒரு மக்கு... என்னோடே வாயக்குள்ளே உன் அலகைவிட்டு, அப்புறம்அந்த அலகை வெளியே எடுத் தாயே அதுவே ஒரு பெரிய பரிசுதானே இப்போநினைச்சாலும் நான் உன்னை அடிச்சு சாப்பிடலாம். தெரியுதா? ஓநாய் கூறிவிட்டுவாய்விட்டுச் சிரித்தது.
தகுதி இல்லாதவர்களுக்குச் செய்யும் உதவி நன்மை தராது.
நன்றி: ஜீசஸ் லவ்ஸ் இண்டியா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|