தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கிறிஸ்துவே மகா தேவன் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்துவே மகா தேவன் Empty கிறிஸ்துவே மகா தேவன்

Thu Aug 22, 2013 11:31 pm
யாராவது உங்கள் வீட்டிற்கு வந்து, “நாங்கள் கிறிஸ்தவர்கள். நாங்கள் வேதாகமத்தை முழுமையாக விசுவாசிப்பவர்கள். வேதாகமத்தில் எழுதியிருப்பது எல்லாம் உண்மை என்பது எங்கள் நம்பிக்கை. கடவுள் தம்மை வேதாகமம் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார். உங்களிடம் கொஞ்ச நேரம் பேசலாமா?” என்று ஆரம்பித்து, பின்னர் “வேதாகமத்தில் ஒரே கடவுள் தான் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆகவே பிதாவாகிய யேகோவா மட்டுமே தான் கடவுள், இயேசு கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியானவரும் கடவுள் இல்லை” என்று உங்களிடம் சொல்லுவார்கள். அப்படிப்பட கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டால் உங்களுக்கு அதை எதிர்த்து வேதாகமத்திலிருந்து பதில் சொல்லத் தெரியுமா? இது எங்கேயோ கற்பனையாக நடக்கும் காரியம் இல்லை. நாம் இருக்கும் எல்லா இடங்களிலும் இது நடக்கும் காரியம் தான். இதுவரை உங்களை இப்படி யாராவது சந்திக்கவில்லை என்றால் நிச்சயம் உங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் சந்திக்க அதிகமான வாய்ப்பு உள்ளது. நீங்கள் சந்திக்காமல் போனாலும் உங்களுடைய வீட்டார், பிள்ளைகள், உறவினர்கள், திருச்சபை நண்பர்கள் யாராவது இப்படிப்பட்வர்களை சந்திக்கலாம். பொதுவாக ஜெகோவா விட்னஸ் (Jehovah Witness) என்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதிலே மிகவும் தீவிரமாக இருக்கிறவர்கள். மேலும் அநேக மதங்களைச் சார்ந்தவர்கள் இப்படி உங்களிடம் வாதாடலாம். ஆனால் இந்த கூட்ட மக்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். அதை எதிர்த்து நீங்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறீர்களா?
மேலும் அவர்கள் விசுவாசிப்பது என்னவென்றால்,  கிறிஸ்து கடவுள் கிடையாது, அவர் மிகாவேல் என்ற தூதனாக இருந்தார், அவர் சிலுவையில் மரிக்கவில்லை, நரகம் என்று ஒரு இடம் இல்லை, இந்த வாழ்க்கைக்குப் பின்னர் நாம் நிர்மூலமாகி விடுவோம், பரிசுத்த ஆவி என்பது கடவுளுடைய தன்மைகளில் ஒன்று, அது ஒரு அக்கினியைப் போல கடவுளுடைய வல்லமையான சக்தி, பரிசுத்த ஆவியானவர் கடவுள் கிடையாது, என்பதெல்லாம் அவர்களுடைய விசுவாசம். இந்தக் தவறுகளை எதிர்த்து உங்களால் வேதாகமத்தின் அடிப்படையில் பதில் சொல்ல முடியுமா? 
 எல்லா விஷயங்களையும் விளக்கமாக படிக்க நமக்கு இடம் போதாது. இந்த இதழில் கிறிஸ்து கடவுள் என்பதை வேதாகமம் எப்படி விளக்கியுள்ளது என்பதற்கு ஓரு சில முக்கியமான வேதாகம வசனங்களை ஆதாரமாக இங்குத் தருகிறேன். கிறிஸ்து கடவுள் என்பதை வேதாகமத்தில் எல்லா பக்கங்களும் சொல்கின்றன. வேதாகமத்தின் மொத்த பொருளும் தொகுப்பும் அவரே. அது அவரைப் பற்றிய புத்தகம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருந்தாலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு சில காரியங்களையும் வேத வசனங்களையும் உங்கள் மனதில் எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. 
இயேசு எல்லாம் உண்டாக்கப்படுவதற்கு முன்பே இருந்தவர், அவரை யாரும் உண்டாக்கவில்லை, “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை” (யோவான் 1:1-3). இங்கு தெளிவாக அவர் கடவுள் என்று எழுதப்பட்டுள்ளது. உண்டாக்கப்பட்து எதுவும் இவரில்லாமல் உண்டாக்கப்படவில்லை என்றால் இவர் உண்டாக்கப்படாதவர் என்பது தானே அர்த்தம். கடவுள் மட்டுமே உண்டாக்கப்படாதவர். கடவுள் மட்டுமே சிருஷ்டிக்கும் வல்லமையைக் கொண்டவர். எல்லாவற்றையும் கிறிஸ்து உண்டாக்கினார் என்றால் அவர் கடவுளாகத் தான் இருக்கவேண்டும். 
மேலும், அவர் பிதாவினுடைய குமாரன் என்று வேதாகமத்தில் பல வசனங்களில் சொல்லப்பட்டுள்ளது. அவரும் பிதாவை அப்படியாகவே அழைத்தார். எந்த தூதருக்கும் அந்த சிலாக்கியம் கொடுக்கப்படவில்லை. கிறிஸ்து நமக்கும் பிதாவை பரலோகத் தந்தை என்று அழைக்கும் புத்திர சிலாக்கியத்தைப் பெற்றுக்கொடுத்தார். இதுவும் தேவதூதர்களால் செய்யமுடியாத காரியம் அல்லவா? “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” (யோவான் 1:14).
அதரிசனமான தேவனை யாரும் கண்டதில்லை, ஆனால் இயேசு கிறிஸ்து மட்டுமேதேவனை வெளிப்படுத்துகிறார். இவர் மூலமாகவே பிதாவும் தம்மை வெளிப்படுத்துகிறார், “தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்” (யோவான் 1:18). எந்த மனிதனோ அல்லது தூதனோ பிதாவை வெளிப்படுத்த முடியாது, கடவுளாகிய இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே அவரை வெளிப்படுத்த முடியும். ஏனென்றால் இயேசு கிறிஸ்துவே அவருடைய வெளிப்பாடு, “இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்” (எபிரேயர் 1:3).
இயேசு கிறிஸ்து தேவதூதர்களைக் காட்டிலும் எவ்வளவு விசேஷமானவர் என்பதை வேதாகமம் தெளிவாகச் சொல்கிறது. அவரை விசேஷமான ஒரு தூதர் என்று சொல்லவில்லை, தம்முடைய மெய்யான குமாரனாகிய கடவுள் என்று தான் சொல்கிறது, “நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?” (எபிரேயர் 1:5). 
மேலும் இயேசு கிறிஸ்து “நானும் பிதாவும் ஒன்று” என்று சொல்கிறார். அவர் தூதராக இருந்தால் அப்படி அவரால் சொல்ல முடியாது. பிதாவுடைய தன்மைகளும் தம்முடைய தன்மைகளும் ஒன்று என்பதை அவர் இங்கு சொல்லவில்லை. அவர் பிதாவுக்கு சமமானவர் என்று சொல்கிறார். அவரிடம் வாதாடிய யூதர்கள் கூட அவர் தம்மை கடவுள் என்று சொல்கிறார் என்பதை புரிந்துகொண்டார்கள், “தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்” (யோவான் 5:18). 
பிதா செய்கிறதையே இயேசுவும் செய்கிறார், “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார். பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான். என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (யோவான் 5:19-24). இந்த வார்த்தைகள் எல்லாம் ஒரு தூதனால் சொல்லவே முடியாது. பிதாவோடு ஆதி முதல் இருந்த கடவுளாகிய குமாரனால் மட்டுமே சொல்ல முடியும். எந்த தூதனால் மரித்தவர்களுக்கு உயிர் கொடுக்க முடியும், எந்த தூதனுக்கு நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரம் உண்டு, எந்த தூதனை விசுவாசித்தால் நித்திய ஜீவன் கிடைக்கும்? 
பாவிகளை இரட்சிக்க ஒருவர் உலகத்தில் வருவார் என்பது ஏதேன் தோட்டத்திலே கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம். அந்த வாக்குத்தத்தம் பின்னர் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யூதா வம்ச வழியில் உறுதிசெய்யப்பட்டது. பின்னர் தாவீதின் சந்ததியிலே மேசியா வருவார், பெத்லகேம் ஊரிலே கிறிஸ்து பிறப்பார் என்பது வரை தீர்க்கதரிசனமாக கடவுள் தம்முடைய தாசர்கள் மூலமாக அறிவித்தார். இது எந்தக் காலத்திலே நடக்கும் எப்படி இரட்சிப்புக்கு வழி உண்டாக்கப்படும் என்பதைக் குறித்து தீர்க்கதரிசிகள் புரிந்துகொள்ள போராடினார்கள், தேவதூதர்களும் இதைப் பார்க்க ஆவலாக இருந்தார்கள், “தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள். தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது, பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்” (1 பேதுரு 1:11-12). ஆனால் கடவுளுடைய வார்த்தையின் படியே இந்த காரியங்கள் எல்லாம் நிறைவேறியது. அப்படியே யூதர்களின் ராஜாவாகிய மேசியா எழுதப்பட்டபடியே வந்தார், இருளில் இருந்த மனிதர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். இயேசு கிறிஸ்துவிடம் சமாரியா ஸ்திரீயிடம் தாமே மேசியா என்பதை அறிவிக்கிறார், “அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்” (யோவான் 4:25-26). இந்தத் தகுதி எந்த தூதர்களுக்கும் உரியது அல்ல. அவர்கள் எல்லோரும் இதை வேடிக்கை தான் பார்க்க முடிந்தது.  
அவருடைய சீஷர்கள் எல்லாரும் அவரைத் தொழுதுகொண்டார்கள், அவரை வணங்கினார்கள். இது மனிதர்களுக்கு கொடுக்கும் மரியாதை போல கிடையாது. யூதர்கள் கடவுளைத் தவிர வேறு யாரையும் தொழுதுகொள்ளமாட்டார்கள். இதிலே அவர்கள் மிகவும் வைராக்கியமாக இருப்பார்கள். தூதர்களையும் அவர்கள் தொழுதுகொள்ளமாட்டார்கள். தூதர்களும் தங்களை யாரும் தொழுது கொள்ள அனுமதிக்கமாட்டார்கள். அவருடைய சீஷனாகிய தோமா இயேசு கிறிஸ்துவை நோக்கி “என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்” (யோவான் 20.28). இவ்வளவு ஏன், பிதாவாகிய கடவுள் தூதர்களை எல்லாம் தம்முடைய குமாரனாகிய கடவுளாகிய இயேசு கிறிஸ்துவை தொழுதுகொள்ளச் சொல்கிறார், “தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்” (எபிரேயர் 1:6). 
அவர் உலகத்தில் மனிதனாக வாழ்ந்தாலும், அவருடைய தெய்வீக தன்மைகளை எல்லாம் வெளிப்பட்டது. ஏனென்றால் அவர் முழுமையான மனிதன் மட்டுமல்ல அவர் முழுமையான கடவுளுமாக இருப்பதினால் தான். விசேஷித்த தூதர்களோ, மனிதர்களோ கடவுளுக்குரிய காரியங்களைச் செய்யமுடியாது. அவர் எல்லாவற்றையும் அறிந்திருந்தார், சர்வ வல்லவராக இருந்தார், மனிதர்களுடைய சிந்தனைகளையும், எண்ணங்களையும், இருதயத்தையும் நன்றாக அறிந்திருந்தார், “இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை. மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை. (யோவான் 2:24-25). 
அவர் அநேக அற்புதங்களைச் செய்தார். தூதர்களும் மனிதர்களும் அற்புதங்களைச் செய்தாலும் அவர்கள் எல்லாரும் ஆண்டவருடைய நாமத்தில் தானே அற்புதம் செய்தார்கள். ஆனால் ஆண்டவர் கடவுளை மகிமைப்படுத்தி அற்புதங்களைச் செய்தார், தம்மை குமாரனாகிய கடவுள் என்று மக்கள் விசுவாசித்து நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே அற்புதங்களைச் செய்தார். அவருடைய அப்போஸ்தலர்களும் இயேசு கிறிஸ்துவின் நாமத்திலேயே அற்புதங்களைச் செய்தார்கள். எந்த தேவதூதர்களாவது அல்லது மனிதர்களாவது தங்களுடைய சொந்த நாமத்திலே ஏதாவது அற்புதம் செய்ததாக வேதாகமம் சொல்கிறதா? இல்லையே. 
அவர் உலகத்தில் வாழ்ந்த போது பாவங்களை மன்னித்தார். அநேக ஜனங்களுக்கு சரீர சுகம் கொடுத்தார், குருடர்களுக்கு பார்வை வழங்கினார், செவிடர்களின் காதுகளைத் திறந்தார், மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார். இவைகளைக் காட்டிலும் பாவிகளை மன்னித்தார். எந்த மனிதர்களுக்காவது அல்லது எந்த தேவதூதர்களுக்காவது பாவங்களை மன்னிக்க அதிகாரம் உண்டா? இல்லையே. உருவாக்கப்பட்ட மனிதர்கள் எல்லாரும் பாவத்தினால் கறைபடிந்தவர்கள். பாவங்களை மன்னிக்கும் தகுதி பாவிகளாகிய மனிதர்களுக்கு கிடையாது. தூதர்கள் அநேகர் பாவத்தில் விழுந்தவர்கள். அவர்களாலும் பாவத்தை மன்னிக்க முடியாது. கிறிஸ்துவினால் நமக்கு மீட்பு உண்டு, ஆனால் வீழ்ந்த தூதர்களுக்கு அதுவும் கிடையாது. இப்படி பாவத்திலிருந்து மீட்டுக்கொள்ள அவர்களுக்கே சக்தியில்லாமல் இருக்கும் போது, பாவத்தை மன்னிக்கும் தகுதி அவர்களுக்கு ஏது. இல்லவே இல்லை. பாவத்தை மன்னிக்க கடவுளுக்கு மட்டுமே தகுதி உண்டு. 
கடவுளுடைய நியாயத்தீர்ப்பு எல்லாம் இயேசு கிறிஸ்துவிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது “பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார்” (யோவான் 3:35-36). நியாயம் தீர்க்கும் அதிகாரம் தூதர்களுக்கு கிடையாது, எந்தக் காலத்திலுமே இருந்ததும் கிடையாது. 
பேதுரு அவரைப் பற்றி எழுதும் போது இயேசுவை தேவன் என்று தான் எழுதுகிறார், “நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது” (2 பேதுரு 1.1) பவுல் அப்போஸ்தலர் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கப்பட் சிலாக்கியத்தைக் குறித்து எழுதும்போது, கிறிஸ்து தேவன் என்பதை எவ்வளவு தெளிவாக எழுதியிருக்கிறார் என்று கவனியுங்கள், “பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்” (ரோமர் 9.5).  பவுல் மேலும் இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி வாழ நம்மை ஊக்கப்படுத்தும் போது இயேசு கிறிஸ்துவை தேவன் என்று தானே சொல்கிறார், “மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது” (தீத்து 2:13). பவுல், பேதுரு, யோவான் மட்டுமல்ல, எல்லா சீஷர்களும் அப்போஸ்தலர்களும் விசுவாசிகளும் இயேசுவை தேவன் என்று தான் சொல்கின்றனர். இந்த வசனங்களில் எல்லாம் தேவன் என்பதற்கான மூல சொல்லாகிய தியோஸ் என்ற வார்த்தை தான் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சில வசனங்கள் மட்டும் அவரை தேவன் என்று சொல்லவில்லை, இன்னும் அநேக வசனங்கள் அவரை கடவுள் என்று சொல்லுகிறது. (சங்கீதம் 2.6-12, எபிரேயர் 1.5, சங்கீதம் 45.6-7, எபிரேயர் 1.8-9, சங்கீதம் 110.1, எபிரேயர் 1.13, ஏசாயா 9.6, எரேமியா 23.6, தானியேல் 7.13, மீகா 5.2, சகரியா 13.7, மல்கியா 3.1, யோவான் 1.1-3, 14, 18, 2.24-25, 3.16-18, 35-36, 4.14-15, 5.18-22, 25-27, 11.41-44, 20-28. 1 யோவான் 1.3, 2.23, 4.14-15, 5.5, 10-13, 20, ரோமர் 1.7, 9.5, 1 கொரிந்தியர் 1.1-3, 2.8, 2 கொரிந்தியர் 5.10, கலாத்தியர் 2.20, 4.4 பிலிப்பியர் 2.6, கொலோசேயர் 2.9, 1 தீமோத்தேயு 3.16, எபிரேயர் 1.1-3, 5, 8, மத்தேயு 5.17, 9.6, 11.1-6, 27, 14.33, 16.16-17, 28.18, 25.31, மாற்கு 8.38).
அவருடைய நண்பர்கள் மட்டுமல்ல, அவருடைய எதிராளிகள் கூட இயேசு தம்மை கடவுள் என்று சொல்கிறார் என்பதை நன்றாக அறிந்திருந்தார்கள். அதனால் தான் அவர் மீது அவர்கள் அவ்வளவு வெறியாக இருந்தார்கள். அவரிடம் வாதாடும் அவருடைய எதிரிகளான யூதர்களிடம் ஆபிரகாம் இருப்பதற்கு முன்பாக நான் இருந்தேன் என்று சொல்கிறார் (யோவான் 8.58). அவர் தூதராக இருந்தாலும் அவர் ஆபிரகாமுக்கு முன்பாக இருந்திருக்கலாம். ஆனால் அவர் உபயோகப்படுத்திய வார்த்தை அப்படிப்பட்டதல்ல். எகோ எய்மி என்ற அந்த கிரேக்கச் சொல் யேகோவா என்று அர்த்தம். அவர் தம்மை கடவுள் என்பதையே சொல்லுகிறார். யூதர்களும் இதை உடனே புரிந்துகொண்டார்கள். ஆகவே தான் அவர்கள் இதைக் கேட்டவுடன் இயேசுவைக் கொல்ல கல் எடுத்தனர். 
அவருடைய எதிராளிகள் அவர் மீது அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டு – தேவதூஷணம். அவர்களிடம் இயேசு, “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்” (யோவான் 10:28). அதைக் கேட்டவுடன், “யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்” (யோவான் 10:29-33).  அவர்களுடைய குற்றச்சாட்டு எல்லாம் ‘நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லுகிறாயே’ என்பதே. அவருடைய எதிராளிகளுக்கும் கூட அவர் கடவுள் என்பது தெரிந்திருந்தது. ஆனால் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்களுக்கு இயேசு கடவுள் என்று தெரியாமலிருக்கிறது. சாத்தானுடைய வஞ்சனையும் மனிதனுடைய இருதயத்தின் இருளையும் என்னவென்று சொல்வது. 
தேவன் பாவிகளாகிய நம்மை மீட்க, பாவத்தினால் பிரிக்கப்பட்ட நம்மை ஒப்புரவாக்க தம்முடைய அளவில்லாத ஞானத்தினால் ஒரு வழியை உருவாக்கியிருக்கிறார். அது தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாகவே. மீண்டும் படியுங்கள், தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே அந்த வழி. இயேசு கிறிஸ்து பிதாவினுடைய குமாரன், தேவதூதர் கிடையாது. அந்தக் குமாரனாகிய கடவுளை விசுவாசித்தால் மட்டுமே நமக்கு பாவ மன்னிப்பும் நித்திய ஜீவனும் உண்டு. பரிசுத்த மனிதர்களையோ தேவதூதர்களையோ விசுவாசித்தால் ஏமாற்றம் தான் கிடைக்கும், “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று” (யோவான் 3:16-18).
கிறிஸ்து கடவுள் என்பதற்கு ஒரு சில வசனங்களை மட்டுமே ஆதாரமாக கொடுத்துள்ளேன். இதுமட்டுமல்ல இன்னும் அநேக ஆதாரங்களை வேதாகமத்திலிருந்து நாம் சொல்லிக்கொண்டே போகலாம். யோவான் சொல்வது போல இந்த பூமியில் அவரைப் பற்றி சொல்ல புத்தகங்கள் போதாது. பழைய ஏற்பாட்டிலே ஆதாமுடன் ஏதேன் தோட்டத்தில் நடந்தது, ஆபிரகாமுடன் பேசியது, இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வழிநடத்தியது, ஏசாயா மற்றும் மற்ற தீர்க்கதரிசிகளுக்கு தரிசனமாகியது, அடையாளங்கள், சின்னங்கள், பஸ்கா, ஆட்டுக்குட்டி, பலிகள், இரத்தம், தானியேல் கண்ட மேசியா, அப்போஸ்தலர்கள் பின்பற்றியது, வெளிப்படுத்தின விசேஷத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று சொல்லிக்கொண்டே போகலாம். நம்முடைய வேதாகமம் முழுவதும் திரியேக கடவுளின் நாமம் நிரம்பியுள்ளது. எனக்கு வேண்டிய மாதிரி, நான் நினைக்கும் விதத்தில் ஒரு வாக்கியம் இருக்கவேண்டும், வேறு எந்த வேதாகம வசனங்களையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று சொல்வது, கடவுளுக்கு மேலாக தன்னையே உயர்த்திக்கொள்வதாகும். இப்படியாக உங்கள் மனதிலே நீங்கள் யோசனை செய்தால், காலம் சமீபமாக இருக்கும் போதே மனந்திரும்பி, மன்னிப்பு கேட்டு, விசுவாசித்து, கடவுளோடு ஒப்புரவாகுங்கள்.  
திருச்சபை வரலாற்றிலே அநேக கள்ளப் போதனைகள் உண்டு. அதிலும் கிறிஸ்துவைப் பற்றிய கள்ளப் போதனைகள் ஏராளம். இது இன்றைக்கு தோன்றிய புதிய போதனை கிடையாது, ஆதி திருச்சபையில் இருந்தே இந்தக் கள்ளப் போதனைகள் உண்டு. அதாவது இயேசு கிறிஸ்து மனிதன் கிடையாது என்பது, இயேசு கிறிஸ்து கடவுள் கிடையாது என்பது, இயேசு கிறிஸ்து மனிதனும் கடவுளும் சேர்ந்த ஒரு கலவை என்பது, இயேசு கிறிஸ்து தேவனுடைய ஒரு தூதர் என்று பல கள்ளப் போதனைகள் உண்டு. இவைகளை எல்லாம் திருச்சபை மிக பலமாக சந்தித்து மேற்கொண்டுள்ளது. மீண்டும் அந்தக் கள்ளப் போதனைகளில் விழுவது புத்திசாலித்தனம் கிடையாது. அப்போஸ்தலர் விசுவாசப் பிரமாணம், நேசியா விசுவாசப் பிரமாணம், அதநேசியஸ் விசுவாசப் பிரமாணம் போன்ற விசுவாச அறிக்கைகள் எதற்காக உருவாக்கப்பட்டது என்று நினைக்கிறீர்கள்.  இவ்வளவு ஏன் கொலோசேயர் நிருபத்தை பவுல் எதற்காக எழுதினார் என்று நினைக்கிறீர்கள். 
பிரியமானவர்களே, வேதாகமத்தின் அடிப்படையில் நாம் விசுவாசிப்பது, இயேசு கிறிஸ்து முற்றிலும் கடவுள், இயேசு கிறிஸ்து முற்றிலும் மனிதன். அவர் பாவிகளாகிய நம்மை விடுவிக்க மனிதனாக அவதரித்தார், நீதியாக வாழ்ந்தார், பாடுபட்டார், சிலுவையில் மரித்தார், உயிர்த்தெழுந்தார், கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே மத்தியஸ்தராக இருக்கிறார். நம்முடைய திரியேக கடவுள் மூன்று நபர்களாக இருக்கிறார். பிதாவாகிய கடவுள், குமாரனாகிய கடவுள், பரிசுத்த ஆவியாகிய கடவுள். மூன்று நபர்களாக இருப்பதால் மூன்று கடவுள்கள் கிடையாது. ஒரே கடவுள் மூன்று நபர்கள். இதுவே நம்முடைய விசுவாசம். தேவன் தாமே உங்களை இந்த கடைசி காலத்திலே இப்படிப்பட்ட கள்ளப் போதனைகளிலிருந்து காத்துக்கொள்வாராக.
நன்றி: கிருபையின் மகிமை
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum