தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
அப்பாவின் பாசம்... Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அப்பாவின் பாசம்... Empty அப்பாவின் பாசம்...

Wed Jul 03, 2013 6:15 am
ஒரு ஊரில் ஒரு பணக்கார தந்தைக்கும் தன் ஒரே மகனுக்கும் ஓவியங்களை தங்கள் வீட்டில் சேர்த்து வைப்பதே வழக்கமாக இருந்தது.அவர்களிடம் பிகாசோ ஓவியங்களில் இருந்து ரப்ஹேல் ஓவியங்கள் வரை இருந்தது.

அவர்கள் வீட்டிற்கு யார் வந்தாலும் தாங்கள் சேர்த்து வைத்து இருக்கும் ஓவியங்களை அவர்களுக்கு காட்டி மகிழ்வர்.

வியட்னாம் போர் அப்போது ஆரம்பமானது,தன் ஒரே மகனை போருக்கு அனுப்பி வைத்தார்.போரில் தன் நண்பன் உயிரை காப்பாற்றுவதற்காக தன் உயிரை விட்டான் அவருடைய மகன்.

தன் மகன் இறந்த துயரத்தில் அவர் நோய்வாய் பட்டு கிடந்தார்.ஒரு மாதம் கழித்து ஒரு இளைஞன் வந்தார்.ஐயா என்னை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ,ஆனால் உங்கள் மகனுக்கு நான் நண்பன்.போரில் என் உயிரை காப்பாற்றுவதற்காக தன் உயிரை கொடுத்தான் உங்கள் மகன்.

அவன் எப்போதும் உங்களை பற்றியே பேசி கொண்டு இருப்பான்.நீங்கள் ஓவியத்தின் மேல் தீராத ஆசை கொண்டவர் என்று சொல்லி கொண்டே இருப்பான்.அவன் நினைவாக நான் உங்கள் மகனின் படத்தை உங்களுக்காக வரைந்து எடுத்து வந்துள்ளேன்,தயவு செய்து வாங்கிகொள்ளுங்கள் என்றான்.

நான் பெரிய ஓவியன் கிடையாது எதோ எனக்கு தெரிந்தவரை வரைந்து உள்ளேன் பிரித்து பாருங்கள் என்றான்.அவர் பிரித்து பார்த்தார்,தன் மகனின் படத்தை நெஞ்சோடு இறுக அணைத்து கொண்டு கண்ணீர் விட்டார்.

தம்பி இந்த படத்துக்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும் என்று கேட்டார்.ஐயா போரில் என் உயிரையே காப்பாற்றினான் உங்கள் மகன் அவனுக்காக நான் வரைந்த படம் இதை உங்களுக்கு பரிசாக தரவே எடுத்து வந்தேன் என்றார்.

தன் மகனின் ஓவியத்தையும் மற்ற ஓவியங்களோடு சுவற்றில் மாட்டி வைத்தார்.வருவோர் போவோரிடம் எல்லாம் தன் மகனின் ஓவியத்தை காட்டி மகிழ்ந்தார்.

சிறிது வருடத்தில் அவரும் இறந்து போனார்.அவரது உறவினர் அவர் சேமித்து வைத்த ஓவியங்களை ஏலத்தில் விற்க முடிவெடுத்து விளம்பரம் செய்தார்.ஏலம் விடும் அன்று பிரபலங்களின் ஓவியங்களை வாங்க ஏகப்பட்ட கூட்டம் கூடியது.

முதலில் அவரது மகனின் ஓவியத்தை விற்பதற்காக ஆரம்ப விலை 5000 ரூபாய் சொன்னார்.யாரும் ஏலம் கேட்கவில்லை.எல்லோரும் பிரபலங்கள் வரைந்த ஓவியத்தை முதலில் ஏலம் விடுங்கள் என்று கூச்சலிட்டனர்.

ஏலம் விடுபவர் அதை காதில் வாங்காமல் இந்த ஓவியத்தின் விலை 5000 ரூபாய் என்று மீண்டும் சொன்னார்.யாரும் ஏலம் கேட்கவில்லை .சரி உங்களால் எவ்வளவு பணம் இதற்கு தர முடியும் என்று நீங்களே சொல்லுங்கள் என்றார்.மீண்டும் கூட்டத்தில் இருந்து நாங்கள் இந்த படத்தை வாங்க வரவில்லை மற்ற பிரபலங்களின் ஓவியத்தை முதலில் ஏலம் விடுங்கள் என்றார்கள்.

ஒரு பெரியவர் மட்டும் எழுந்து நின்று ஆயிரம் ரூபாய் என்றார்.அவர் வேறு யாரும் இல்லை அதே வீட்டில் சமையல் வேலை பார்த்தவர் தான் ,இந்த இளைஞன் சிறுவனாக இருந்தபோது இவர் அவணை தூக்கி வளர்த்தவர், அவனோடு விளையாடியவர், அவன் விரும்பும் சமையலை சமைத்து போட்டவர்.அவன் அப்பாவுக்கு இனையாணவர்.

ஏலம் விடும் நபர் 1000 ஒரு தரம் என்றார்,யாரும் அதிகப்படுத்தி ஏலம் கேட்கவில்லை.,இரண்டு தரம்,மூன்று தரம் என்று சொல்லி ஏலத்தை முடித்தார்.

ஏலம் முடிந்து விட்டது எல்லாரும் செல்லலாம் என்றார்.ஏலத்திற்கு வந்தவர்களுக்கு கோபம் வந்துவிட்டது.ஒரு ஓவியம் மட்டும் தான் ஏலம் விட்டீர்கள் மற்ற ஓவியங்களையும் ஏலத்தில் விடுங்கள் என்றனர்.

ஏலம் விட்டவர் சொன்னார் இறந்து போனவரின் உயில்படி, தன் மகனின் ஓவியத்தை யார் வாங்குகிறார்களோ அவர்களுக்கே மற்ற ஓவியங்களும் இந்த பங்களாவும் மற்றும் அவருடைய சொத்துக்கள் அனைத்தும் போய் சேரும் என்று எழுதியுள்ளார் என்றார்.

அவரது மகனை வாங்கிய அவர் தோட்டக்காரனுக்கே இந்த சொத்துக்கள் எல்லாம் போய் சேரும் என்றார்.

நண்பர்களே நீங்கள் ஒரு சிலவற்றை ஒரு பொருளாக பார்ப்பீர்கள் ஆனால் அது வேறு சிலருக்கு அது உயிராக தெரியும்.அடுத்தவர்கள் மனநிலையில் இருந்து பாருங்கள் ,யாரையும் எதையும் உதாசினப்படுத்தாதீர்கள்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum