தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
அனைவரையும் கொள்ளைகொண்ட பேஸ்புக் உருவான சுாவரஸ்யமான கதை! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அனைவரையும் கொள்ளைகொண்ட பேஸ்புக் உருவான சுாவரஸ்யமான கதை! Empty அனைவரையும் கொள்ளைகொண்ட பேஸ்புக் உருவான சுாவரஸ்யமான கதை!

Sat Jun 29, 2013 8:50 am
அனைவரையும் கொள்ளைகொண்ட பேஸ்புக் உருவான சுாவரஸ்யமான கதை! 404523_658300270863034_2125331219_n


இன்றைய சமூகவலைதள உலகின் ராஜா என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் இணையதளம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

இன்று இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு தெரிந்த இவ்வளவு பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் உருவான கதையை பார்க்கலாம்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் (Mark Zuckerberg)என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக்(FACEBOOK).

தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த எண்ணம் அவருக்கு வந்தது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது.

அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார். தனது சக மாணவர்களான எட்வர் டோ சவேரின், டஸ்டின் மொஸ்கோவிட்ஜ், கிறிஸ் ஹ்யூக்ஸ் ஆகியோரை சேர்த்துக் கொண்டு இணையதளம் ஒன்றை அவர் உருவாக்கினார்.

முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

பின்னர் மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

தற்போதோ 13 வயதுக்கும் மேற்பட்ட எவரும் இதில் உறுப்பினராக முடியும். அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும்.

2005ம் ஆண்டு காதலில் மனம் உடைந்த இளைஞனால் விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணையதளம், தற்போது அவனை உலகின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி இருக்கிறது.

அது நம் காலத்தின் (காதலின்?) அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஆறே வருடங்களில் இந்த பிரமாண்ட அதிசயம் நடந்திருக்கிறது.

இன்று இந்த இணைய தளத்தை வாங்குவதற்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் போட்டி போடு கின்றன. வணிகரீதியில் மதிப்பு வாய்ந்த எம்.டி.வி. நிறுவனத்துக்கு இணையாக வாங்குவதற்கு போட்டி போடப்படும் நிறுவனங்களில் ஒன்றாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதில் உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது.

இவ்வளவுக்கும் ஃபேஸ்புக் லாபம் குவிக்கும் நிறுவனமாக இல்லை. 2009ம் ஆண்டில்தான் முதன்முதலாக அது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. ஆனால், அதற்கு முன்பிருந்தே இவ்வளவு போட்டி.

தற்போது ஃபேஸ்புக் கைபேசி தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது.

மக்கள் ஏன் விரும்புகிறார்கள்?

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை மக்கள் ஏன் விரும்புகிறார்கள்? மனித உறவுகள் பலவீனம் அடைந்து வரும் இன்றைய உலகில் மனிதர்கள் தீவுகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.

பழைய காலத்தைப்போல குடும்பம் என்பது வலுவான அமைப்பாக தற்போது இல்லை. குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதனால், தனித்து விடப்பட்ட மனிதர்கள் உறவுகளைத் தேடி அலைகிறார்கள்.

உறவின் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல், பயன்களை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற நவீன மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்தான் இத்தகைய இணையதளங்கள்.

இவற்றில் நீங்கள் உங்களது உணர்வுகளை நினைத்த நேரத்தில், நினைத்த விதமாக வெளிப்படுத்தலாம். புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ளலாம். அவர்களோடு அரட்டை அடிக்கலாம், ஆவேசப்படலாம். புகைப் படங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.


நன்றி: சுபா
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அனைவரையும் கொள்ளைகொண்ட பேஸ்புக் உருவான சுாவரஸ்யமான கதை! Empty Re: அனைவரையும் கொள்ளைகொண்ட பேஸ்புக் உருவான சுாவரஸ்யமான கதை!

Sun Jul 07, 2013 5:39 am
பேஸ்புக்கும் அதன் விளைவுகளும்..!!

உணவு, உடை மற்றும் இருப்பிடம் இம்மொன்றும் மனிதனின் வாழ்விற்கு
இன்றியமையாததாக இருப்பது போல இணையதளமும் அத்தியாவசியமாகிவிட்டது இன்றைய
உலகில்.

அமெரிக்கர்களால் கண்டறியப்பட்ட இனைதளமானது தற்போது பட்டிதட்டிஎல்லாம்
பரவிக்கிடப்பதை நாம் பார்த்துகொண்டிருக்கிறோம். உலகில் நடக்கும் அத்துனை
நிகழ்வுகளையும் அமர்ந்த இடத்திலிருந்தே அறிந்துகொள்ள இணைத்தளம்
வழிவகுக்கிறது. உலகம் உன் கையில் என்ற வாசகம் இணையதளத்திற்கும் பொருந்தும்.

என்னதான் இணையத்தில் பற்பல விடயங்கள் இருந்தாலும் பெரும்பாலானோர்
(குறிப்பாக இளைகர்கள்) சமூக வலைதளங்களின் முகவரியையே பயன்படுத்துகின்றனர்.

சமூக வலைதளமானது உலகில் அனைத்து பகுதி மக்களிடமும் தொடர்புகொள்ளவும் தம்
உணர்வுகளையும் கருத்துக்களையும் வேண்டிய நபரிடம் பகிர்ந்துகொள்ளவும்
பழகவும் பயன்படுத்தபடுகிறது.

Orkut, Hi5, iBibo, facebook, myspace, twitter முதலிய இணையதள முகவரிகள் சமூக
வலைத்தளங்களில் அளப்பெரும் பங்குவகிக்கிறது. அதிலும் குறிப்பாக பேஸ்புக்
முகவரியில் தான் மற்ற சமூக வலைதள இணைய முகவரியை காட்டிலும் கணக்கு வைத்திருப்பவர்களின்
எண்ணிக்கை அதிகம்.

பேஸ்புக் இணையதளமானது 2003ஆம் ஆண்டு அக்டோபர் எட்டாம் நாள் மார்க் ஜுக்கர்பர்க் மற்றும் அவருடைய
நண்பர்கள் மூவரால் உருவாக்கப்பட்டது. இருவருடங்களிலேயே 5.5 மில்லியன் மக்கள் இணைந்தனர். 2010ன்
முடிவில் 608 மில்லியனாகவும் சென்ற ஆண்டின் முடிவில் சரசரவென உயர்ந்து 1.06 பில்லியனாகவும் உயர்ந்துள்ளது.
[Source: Associated Press – Wed, May 1, 2013]
இன்று உலகில் அனைத்து பகுதி மக்காளாலும் இது உபயோகப்படுத்தபடுகிறது.

இந்தியாவில் மட்டும் 70 மில்லியனுக்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்கு
உபகபடுத்தபடுகிறது. (இந்தியாவில் தான் போலி கணக்கு வைத்திருப்பவர்களின்
எண்ணிக்கை அதிகம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது)

பேஸ்புக்கால் விளையும் பயன்கள்:

நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நாம் தொடர்புகொள்ள விரும்பும் நபர்களை அவர்கள் எங்கிருந்தபோதிலும்
தொடர்புகொண்டு தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவுகிறது. இதற்க்கு பயணம் செய்யவோ பணம் செலவு செய்யவோ
வேண்டியதில்லை.

இப்படி பல பகுதி மக்களோடும் தொடர்பை ஏற்படுத்திகொள்வதால் அவர்களிடம் தனிப்பட்ட செய்தி வாயிலாகவும்
அவர்கள் இடும் பதிவுகள் வாயிலாகவும் அங்கு நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள உதவுகிறது.

பேஸ்புக்கில் இணைய விளையாட்டு விளையாடவும், நண்பர்களோடு கதைக்கவும், நண்பர்களின்
புகைப்படத்தையும் வீடியோக்களையும் பார்த்து மகிழ்வதற்கும் பொழுதுபோக்கு கருவியாகவும் இருக்கிறது.
வீடியோ அழைப்பு வசதி அமைந்திருப்பதால் ஒரு நபரை அவர் எங்கிருந்தபோதிலும் நம் அருகில் அமர்ந்து
நேரடியாக உரையாடியது போல உணர்வுகளை தருகிறது.

நாம் சொல்லவிரும்பும் கருத்துக்களை பலருக்கு கொண்டுசெல்லக்கூடிய கருவியாகவுன் பயன்படுத்தலாம்.
பேஸ்புக்கில் தமக்கென்று துவங்கிகொண்டு அதன் மூலம் நம் கருத்துக்களை பிறருக்கு எத்திவைக்க உதவுகிறது.
பேஸ்புக் சக்திவாய்ந்த கருவி. சமூக பிரச்சினைகளை எதிர்க்கொள்ளக்கூடிய ஊடக வலிமைபெற்றது. மக்கள் மத்தியில் ஒரு
செய்தியை பரப்பிவதில் பேஸ்புக் அனைத்து பத்திரிக்கைகளையும் தொலைகாட்சிகளையும் கூட விஞ்சிவிடும்.
(இதனுடைய ஊடக வலிமையை அரபு வசந்தம் மூலம் அறிந்துகொள்ளலாம்)

மேலே சொல்லப்பட்டது போல பல நன்மைகள் இருந்தாலும் இதில் பல தீங்குகளும் இருக்கவே செய்கிறது.

பேஸ்புக்கால் விளையும் தீங்குகள்:

பேஸ்புக்கில் நம் சுயவிவரத்தையும் நம்முடைய புகைப்படத்தையும் நம் குடும்ப விவரங்களையும் பகிர்ந்துகொள்வதால்
சில சமயங்களில் அதை பிறர் துஸ்பிரயோகம் செய்யவும் வாய்ப்புகளுள்ளது.
தம் சொந்த விடயத்தை காட்டிலும் பிறருடைய விடயத்தில் ஆர்வம்காட்டுவது மனிதனின் இயல்பு. இது பேஸ்புக்கிர்க்கும் பொருந்தும்.
தம்முடைய சொந்த விடயங்களை பேஸ்புக்கில் பகிர்ந்துகொள்வதால் பிறர் கவனத்தை ஈர்க்ககூடியதாக அமைகிறது.
ஒருவரின் அனைத்து நிகழ்வுகளையும் பொதுவாக வெளிபடுத்துவது அபாயகரமான ஒன்றாகும்.

பேஸ்புக் நண்பர்கள் வட்டத்தில் இருப்பவர்கள் பகிர்ந்துகொள்ளக்கூடிய தகவல்கள் பயனற்றதாக இருந்தால்
அது நேரத்தை பாழ்படுத்தக் கூடியதாக அமைகிறது. ஏனென்றால் சில செய்திகள் பயனற்றதாக இருக்கும்
ஆனால் அது பிறருடைய கவனத்தை ஈர்க்கும் (உதாரணமாக சினிமா செய்திகளை சொல்லலாம்)

இதை அதிகளவு பயன்படுத்துவதின் விளைவாக நண்பர்களையும் உறவினர்களையும் நேரடியாக சந்தித்து பழகும் வழக்கம் சரிந்துவருகிறது.
இளைகர்கள் ஓடி விளையாடுவதும் குறைந்துவிட்டது. இதுபோல சில சிக்கல்களால் உடலும் மனமும் பாதிக்கபடுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக நாம் கவனிக்கவேண்டியது பேஸ்புக் சிலரை அடிமையாக்குகிறது என்பதுதான்.
சிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் பிசினஸ் பள்ளி இதுதொடர்பாக ஒரு ஆய்வை நடத்தியது. அதில் பேஸ்புக், டிவிட்டர், பிளாக்பெர்ரி
உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் நபர்களை வைத்து ஆய்வு நடத்தினர். 7 நாட்கள் இந்த ஆய்வு நடந்தது. ஆன்லைன் மூலமாக நடந்த
இந்த சர்வேயில் 250 பேர் கலந்து கொண்டனர். அதில் செக்ஸ், சிகரெட் பழக்கத்தை விட மிக மோசமான முறையில் பேஸ்புக், டிவிட்டர்
உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு மக்கள் அடிமையாகிக் கிடப்பது தெரிய வந்ததாம். ஒரு நாளைக்கு சராசரியாக 7 முறையாவது பேஸ்புக்,
டிவிட்டர் பக்கம் போய் விடுகின்றனராம் அதற்கு அடிமையானவர்கள். சிகரட் பழக்கத்திற்கு கூட இப்படி மெனக்கெடுவதில்லையாம்.

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், சிகரெட், போதைப் பழக்கம், விளையாட்டு என அனைத்தையும் தகர்த்து்த் தரைமட்டமாக்கும் அளவுக்கு இந்த பேஸ்புக், டிவிட்டர் பழக்கம் விஸ்வரூபம் எடுத்து நிற்பதாக கூறியுள்ளனர்.

முடிவுரை:

கத்தி என்பது ஒரு ஆயுதம் அதை பயன்படுத்தி ஆப்பிளும் வெட்டலாம் கொலையும் செய்யலாம் என்பார்கள் அதுபோல
பேஸ்புக்கை நாம் எப்படி பயன்படுத்திகொல்கிறோம் என்பதில் தான் அதனுடைய நன்மைகளும் தீமைகளும் அமைந்திருக்கிறது.



நன்றி: சுபா
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum