கல்லறைகளுக்கு முன்பாக அல்ல.......!
Tue Nov 21, 2017 9:42 pm
கணக்கில் எடுக்கப்படுமா கல்லறை ஆசீர்வதிப்பு?...
-----------------------
"ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்."
(2 கொரிந்தியர் 5:10)
"உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது."
(பிரசங்கி 9:5)
"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்"
(யோவான் 11:25)
"ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனே கூடப்பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்."
(ரோமர் 6:
"மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்."
(சங்கீதம் 115:17)
"சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை."
(1கொரிந்தியர் 15:50)
"எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்."
(1 கொரிந்தியர் 15:52)
"இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும்,தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
(யோவான் 5:29)
"நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்."
(யோவான் 14:3)
"ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்."
(1தெசலோனிக்கேயர்4:16)
மரித்தவர்களைக் குறித்து வேதம் தெளிவாக விளங்கியிருக்கிறது! இங்கு கல்லறைகளில் அடக்கம் பண்ணப்பட்ட ஆத்துமாக்கள், ஆண்டொன்றுக்கு ஒருதடவை கல்லறை ஆசீர்வதிப்பு நடைபெறுவதினால் பரலோகம் போகமுடியாது! ஆசீர்வதிக்கிறவர்களும் போக முடியாது! இறந்தவரின் உறவுகளும் இங்கேதான் வருவார்கள்! கல்லறைகளை அலங்கரித்து அந்தஸ்தை உயர்த்திக் காட்டலாமே தவிர, அதனுள் உள்ள ஆத்துமாவை பரலோகம் அனுப்புவது முடியாத காரியம்! அது இயேசுவின் சித்தம்! இறந்தவர்களைக்குறித்து பிரிவுத் துயர் இருந்தாலும், அவர்களும் ஒருநாள் உயிர்ப்பிக்கப் படுவார்கள் என்ற நிச்சயத்தில் எம்மை தேற்றிக்கொள்ள வேண்டும்! அதைவிடுத்து மரித்தவர்களின் கல்லறைகளை ஆசீர்வதிப்பதும், அவர்கள் உருவங்களுக்கும், கல்லறைகளுக்கும் படைப்பதும், உயிரோடிருக்கும் உங்களையும் ஆவிக்குள்ளாக மரித்துப் போகச் செய்யுமே தவிர கிறீஸ்துவுக்குள்ளாக நிலைப்படுத்தாது என்பதை கவனத்தில் கொள்ளல் அவசியம்!
கடவுளுக்கு முன்பாக தலைதாழ்த்துவோம்!
கல்லறைகளுக்கு முன்பாக அல்ல!.......
(Guyde Dunstan அவர்களுக்கு நன்றி)
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|