தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
நோவா பேழை நிஜமாகிறதா? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

நோவா பேழை நிஜமாகிறதா? Empty நோவா பேழை நிஜமாகிறதா?

Tue Sep 20, 2016 5:29 am
நோவா பேழை நிஜமாகிறதா? Nova_3015552f
வார்த்தைகளுக்கும் நிலப் பரப்புகளுக்கும் இடையிலான தொடர்பைப் பற்றிய தனது ‘லேண்ட்மார்க்ஸ்’ புத்தகத்தில் சுவாரஸ்யமான அதேசமயம் அதிர்ச்சியூட்டும் விஷயத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் பிரிட்டிஷ் எழுத்தாளர் ராபர்ட் மெக்ஃபார்லேன். ஏழு வயதுக் குழந்தைகளுக்கான ஆக்ஸ்ஃபோர்டு ஜூனியர் அகராதியின் சமீபத்திய பதிப்புகளில், நவீன யுகக் குழந்தைகளுக்குப் பொருத்தமில்லாதவை என்று கருதி, இயற்கை தொடர்பான பல வார்த்தைகளை அகராதியின் ஆசிரியர்கள் நீக்கியிருப்பதை அவர் குறிப்பிட்டிருக்கிறார். ‘acorn’ (ஓக் மரக் கொட்டை), ‘dandelion’ (சீமைக் காட்டு முள்ளங்கி), ‘nectar’ (பூந்தேன்), ‘otter’ (நீர்நாய்), உள்ளிட்ட வார்த்தைகள் நீக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்குப் பதிலாக, ‘broadband’ (பிராட்பேண்ட்), ‘MP3 player’(எம்.பி.-3 பிளேயர்), ‘voice-mail’ (வாய்ஸ் மெயில்) போன்ற சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன என்கிறார் ராபர்ட் மெக்ஃபார்லேன்.


சிதையும் இயற்கை


2015-ல் வெளியான இந்தத் தகவலை, ராபர்ட் மெக்ஃபார்லேனின் புத்தகத்தில் படித்தபோது, அதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் விஷயம் தந்த அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை. ஆனால், அமேசான் (காடு) தொடர்பான வார்த்தைகளுக்குப் பதிலாக ‘அமேசான்.காம்’ தொடர்பான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பதற்கு ஆக்ஸ்போர்டு ஆசிரியர்களை யார் குற்றம் சொல்ல முடியும்? நமது இயற்கை உலகம் வேகமாக மறைந்துவருகிறது. ஹவாயில் உள்ள ஹோனோலுலுவில், சமீபத்தில் நடந்த சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் கூட்டத்தில், பிரதானத் தலைப்பாக அதுதான் இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்தக் கூட்டத்தில், இந்த முறை 8,000 விஞ்ஞானிகள், இயற்கைப் பாதுகாப்பு நிபுணர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் நானும் கலந்துகொண்டேன்.

பனி உருகுதல், உயிரினங்கள் அழிந்துவருவது, வெப்பநிலை, காடுகள், பெருங்கடல்கள் போன்ற விஷயங்களில் நாம் எல்லை மீறுவது பற்றிய விவாதம்தான் இந்தக் கூட்டங்களில் பிரதானமாக இடம்பெற்றது. இந்தப் பாதிப்புகளின் விளைவாக, இயற்கை அன்னையால் ஒருபோதும் மீண்டு வர முடியாது. பவளங்களும் யானைகளும் அழிந்துவிட்ட பின்னர், முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் மூலம் அவற்றை மீண்டும் உருவாக்க முடியாது.

சுருக்கமாகச் சொன்னால், விவிலியக் கதையில் ஊழிப் பெருவெள்ளத்துக்கு முன்பாக, பூமியில் உள்ள உயிரினங்களில் ஒவ்வொரு ஜோடியாகப் பாதுகாத்த ‘நோவா’வின் தலைமுறையாக நாமும் நமது குழந்தைகளும் வேகமாக மாறிவருகிறோம்.
சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்க நிகழ்ச்சிகளுடன், ‘ஈஸ்ட்-வெஸ்ட் சென்டர்’ எனும் அமைப்பு ஹோனோலுலுவில் நடத்திய கருத்தரங்கில் புகழ்பெற்ற கடல் ஆய்வு நிபுணர் சில்வியா இயர்லே இதை அழுத்தமாக முன்வைத்தார். தனது வாழ்நாளில், பூமியின் வரலாற்றில் கண்டுபிடிப்பின் மகத்தான யுகத்துக்கும், அழிவின் மாபெரும் யுகத்துக்கும் ஒரு சாட்சியாகத் தான் உணர்வதாக இயர்லே சொன்னார். “நாம் இப்போது முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். நாம் இப்போது செய்யப்போகும் அல்லது செய்யத் தவறும் விஷயங்கள்தான், நமது எதிர்காலத்தை மட்டுமல்ல, பூமியின் அனைத்து உயிர்களின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும்” என்கிறார் அவர்.

அழியும் பேருயிர்


குழந்தைகளின் அகராதிகளிலிருந்து இயற்கை தொடர்பான வார்த்தைகள் நீக்கப்படுவதற்கு ஒரு காரணம் உண்டு. “ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை படுவேகமாகக் குறைந்துவருகிறது” என்று ‘தி டைம்ஸ்’ இதழ் சமீபத்தில் வெளியிட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 2007-ல் இருந்ததை விட, 2014-ல் அவற்றின் எண்ணிக்கை 30% குறைந்திருக்கிறது. “மனிதர்கள் உலகம் முழுவதும் பரவத் தொடங்குவதற்கு முன்பு இருந்ததைவிட, உயிரினங்களின் அழிவு விகிதம் இன்றைக்கு 1,000 மடங்கு வேகமாகியிருக்கிறது” என்று இந்தக் கூட்டத்தில் பேசிய பல்லுயிர் நிபுணர் இ.ஓ.வில்ஸன் விளக்கினார்.

1880-லிருந்து, அதாவது கடந்த 1,639 மாதங்களாக உலகின் நிலப்பரப்பு மற்றும் கடல் பரப்பின் சராசரி வெப்ப நிலையை நாம் கவனித்துவருகிறோம் என்று ‘டிஸ்கவர்’ இதழ் குறிப்பிட்டிருக்கிறது. புவிவெப்பமயமாதலின் விளைவாக, கடந்த 1,639 மாதங்களில், 2016-ம் ஆண்டின் ஜூலை மாதம்தான் மிகவும் வெப்பமான மாதம் என்று ‘நேஷனல் ஓஷியானிக் அண்ட் அட்மாஸ்பியரிக் அட்மினிஸ்ட்ரேஷன்’ அமைப்பு தெரிவிக்கிறது.

அதனால்தான், சர்வதேச இயற்கைப் பாது காப்புச் சங்கத்தின் நல்லெண்ணத் தூதராக இருக்கும் நடிகை அலிஸன் சுடோல், நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கும்போது சொன்னார்: “கடல்களும் காடுகளும் பூமியின் நுரையீரல்கள். நாம் அவற்றை அழிக்கிறோம். விஷயம் கைமீறுவதற்குள் யாரேனும் ஏதாவது செய்வார்கள் என்று நாம் ஆழமாக, தீவிரமாக நம்புகிறோம். அப்படி நாம் நம்பியிருப்பது உங்களைத்தான்!”

பாதி பூமி


நம்மிடம் அப்படி ஒரு திட்டம் இருக்கிறதா? வில்ஸனிடம் பெரிய, துணிச்சலான திட்டம் இருக்கிறது. ‘ஹாஃப் எர்த்’ (பாதி பூமி). அவரது சமீபத்திய புத்தகத்தின் தலைப்பு அதுதான். பூமியின் பரப்பில் - நிலப்பரப்புகள் மற்றும் கடல்களில் பாதியைப் பாதுகாப்பட்ட பகுதிகளாக மாற்றுவதுதான் அவரது திட்டம்.

இன்றைய தேதியில், பூமியின் நிலப்பகுதிகளில் கிட்டத்தட்ட 15%மும், கடல் எல்லைகளில் 10%மும் தேசியப் பூங்காக்களையும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளையும் கொண்டிருக்கின்றன என்கிறது சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பூமியின் பரப்பில் பாதியைப் பாதுகாப்பதன் மூலம், 85% உயிரினங்களைப் பாதுகாக்கலாம் என்றும், அதன் மூலம் மனிதர்கள் உட்பட பூமியின் உயிர்களைப் பாதுகாப்பான பகுதியில் வைத்திருக்கலாம் என்றும் வில்ஸன் சொல்கிறார்.

அப்பாவித்தனம் என்கிறீர்களா? அப்படி யொன்றும் இல்லை. ஆரோக்கியமான இயற்கை அமைப்பு இல்லாமல் மனிதர்களால் உயிர்வாழ முடியும் என்று நம்பியதுதான் அப்பாவித்தனம். அப்பாவித்தனம் ஒரு புதிய யதார்த்தம். இல்லையென்றால், மனித இனம் இன்னுமொரு மோசமான உயிரியல் பரிசோதனையாகிவிடும்!

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’ தமிழில்: வெ.சந்திரமோகன்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum