வீணாய்ப்போன இருபது ஆண்டுகள்..
Mon Sep 05, 2016 8:25 pm
அமெரிக்காவில் ஒரு கைப்பிரதி ஊழியர் உள்நாட்டு ஆறுகளில் ஓடும் சிறிய கப்பலில் கைப்பிரதிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். உயர்தர ஆடைகள் அணிந்த ஒரு செல்வந்தன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஊழியர் அந்த செல்வந்தருக்கும் ஒரு கைப்பிரதியைக் கொடுத்தார். கோபமடைந்த செல்வந்தர் ஊழியரைப் பார்த்து, “நானும் கிறிஸ்தவன் தான். இதை ஏன் கொடுத்துக் கொண்டிருகின்றீர். இதினால் எவ்வித பயனும் இல்லை” என்றார். அதற்கு ஊழியர், “நீங்கள் ஒரு போதும் அப்படி சொல்லாதீர்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு பாவ வாழ்வில் மூழ்கிக் கிடந்த நான், நியூயார்க் பட்டணத்தின் வீதி ஒன்றில் நடந்து போய்க்கொண்டிருந்தேன். அந்த தெருவில் இருக்கின்ற ஆலயத்திற்கு முன்பாக வந்த போது, ஒரு வாலிபன் அந்த ஆலய வாசற்ப்படியில் நின்றுகொண்டு வருவோர் போவோரிடம் கைப்பிரதிகளைக் கொடுத்து, நடந்து கொண்டிருக்கும் ஆராதனையில் பங்குபெறும்படி ஒவ்வொருவரையும் வருந்தி அழைத்துக் கொண்டிருந்தான்.
அவ்வாலிபன் பேசிய அன்பாலும் பரிவாலும் ஈர்க்கப்பட்ட நானும் அவனிடம் கைப்பிரதியை வாங்கிக்கொண்டு ஆலயத்திற்குள் சென்றேன். அங்கே போதகர் யாவரும் இரட்சிக்கப்ட வேண்டியதின் அவசியத்தைம், இயேசு தன்னிடம் வருவோரை ஒருநாளும் புறம்பே தள்ளுவதில்லை என்று பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். நான் பாவி என்ற உணர்வு எனக்குள் அதிகமாக ஏற்படவே அந்த ஆலயத்தில் இருந்து வீட்டிற்கு சென்று விட்டேன். ஆயினும் நான் பாவி என்ற உணர்வு என்னை அதிகம் வாட்டியது. அப்பொழுது அந்த வாலிபன் கொடுத்த கைப்பிரதியை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (I யோவான் 1:9), “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவான் 1:12.) என்ற அந்த கைப்பிரதியிலிருந்த வசனங்கள் என் உள்ளதை வெகுவாய் அசைத்தன. உடனே நான் எனது பாவங்களை அறிக்கையிட்டு, இயேசு கிறிஸ்துவால் கிடைக்கப்பெறும் பாவமன்னிப்பை பெற்றுக்கொண்டேன். நான் பெற்ற இந்த இரட்ச்சிபின் அனுபவத்தை மற்றவரும் பெற்றனுபவிக்க கடந்த இருபது ஆண்டுகளாக இந்த கைப்பிரதி ஊழியத்தை செய்து வருகின்றேன் என்று ஊழியர் அந்த செல்வந்தரிடம் கூறினார்.
அதைக்கேட்ட அந்த செல்வந்தர் கண்களில் கண்ணீர் ததும்ப, “கடந்த இருபது ஆண்டுகளுக்குமுன், உனக்கு கைப்பிரதியை கொடுத்த அந்த வாலிபன் நான்தான். இவ்விதமாய் கைப்பிரதிகளைக் கொடுத்து பெரிய மாற்றத்தை காணாததினால் அந்த ஊழியத்தை கைவிட்டு இருபது ஆண்டுகள் வீணாய்க் கழித்துவிட்டேன். ஆனால் உன்னைப்போல எத்தனை பேர்கள் அந்த கைப்பிரதியினால் இரட்சிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை உன்னைப் பார்த்து நான் அறிந்து கொண்டேன் நான் நியூயார்க் பட்டணம் சென்றபிறகு மீண்டும் இந்த கைப்பிரதி ஊழியத்தை தொடர்வேன்” என்றார். நாம் விதைகளை விதைக்கும் பொழுது எந்த விதை விளையும், எது விளையாது என்று நமக்கு தெரியாது. ஆனால் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவனே அதை விளையச்செய்வார். நீங்கள் கைப்பிரதி கொடுத்து ஊழியம் செய்ய முன்வருவீர்களா?
அவ்வாலிபன் பேசிய அன்பாலும் பரிவாலும் ஈர்க்கப்பட்ட நானும் அவனிடம் கைப்பிரதியை வாங்கிக்கொண்டு ஆலயத்திற்குள் சென்றேன். அங்கே போதகர் யாவரும் இரட்சிக்கப்ட வேண்டியதின் அவசியத்தைம், இயேசு தன்னிடம் வருவோரை ஒருநாளும் புறம்பே தள்ளுவதில்லை என்று பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். நான் பாவி என்ற உணர்வு எனக்குள் அதிகமாக ஏற்படவே அந்த ஆலயத்தில் இருந்து வீட்டிற்கு சென்று விட்டேன். ஆயினும் நான் பாவி என்ற உணர்வு என்னை அதிகம் வாட்டியது. அப்பொழுது அந்த வாலிபன் கொடுத்த கைப்பிரதியை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (I யோவான் 1:9), “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவான் 1:12.) என்ற அந்த கைப்பிரதியிலிருந்த வசனங்கள் என் உள்ளதை வெகுவாய் அசைத்தன. உடனே நான் எனது பாவங்களை அறிக்கையிட்டு, இயேசு கிறிஸ்துவால் கிடைக்கப்பெறும் பாவமன்னிப்பை பெற்றுக்கொண்டேன். நான் பெற்ற இந்த இரட்ச்சிபின் அனுபவத்தை மற்றவரும் பெற்றனுபவிக்க கடந்த இருபது ஆண்டுகளாக இந்த கைப்பிரதி ஊழியத்தை செய்து வருகின்றேன் என்று ஊழியர் அந்த செல்வந்தரிடம் கூறினார்.
அதைக்கேட்ட அந்த செல்வந்தர் கண்களில் கண்ணீர் ததும்ப, “கடந்த இருபது ஆண்டுகளுக்குமுன், உனக்கு கைப்பிரதியை கொடுத்த அந்த வாலிபன் நான்தான். இவ்விதமாய் கைப்பிரதிகளைக் கொடுத்து பெரிய மாற்றத்தை காணாததினால் அந்த ஊழியத்தை கைவிட்டு இருபது ஆண்டுகள் வீணாய்க் கழித்துவிட்டேன். ஆனால் உன்னைப்போல எத்தனை பேர்கள் அந்த கைப்பிரதியினால் இரட்சிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை உன்னைப் பார்த்து நான் அறிந்து கொண்டேன் நான் நியூயார்க் பட்டணம் சென்றபிறகு மீண்டும் இந்த கைப்பிரதி ஊழியத்தை தொடர்வேன்” என்றார். நாம் விதைகளை விதைக்கும் பொழுது எந்த விதை விளையும், எது விளையாது என்று நமக்கு தெரியாது. ஆனால் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவனே அதை விளையச்செய்வார். நீங்கள் கைப்பிரதி கொடுத்து ஊழியம் செய்ய முன்வருவீர்களா?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|