மத நல்லிணக்கத்து ஊறு விளைவித்ததாக பஜ்ரங் தள் அமைப்பினர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு
Thu May 26, 2016 9:03 am
அயோத்யா,
பஜ்ரங் தள் அமைப்பினர் கடந்த மே 10 ஆம் தேதி ”சுய பாதுகாப்பு” என்ற பெயரில் முகாம் ஒன்றை நடத்தினர். இந்த முகாமில் கலந்து கொண்ட பஜ்ரங் தள் அமைப்பினர் துப்பாக்கிகள், வாள்கள் மற்றும் லத்திகள் கொண்டு பயிற்சி எடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகின.இந்த நிலையில், மத நல்லிணக்கம் மற்றும் அமைதியை மீறியதாக பஜ்ரங் தள் அமைப்பினர் 50 பேர் மீது பைசபாத் போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
ஆனால், இந்த பயிற்சி குறித்து பஜ்ரங் தள் அமைப்பின் வட்டாரங்கள் கூறும் போது, இந்து சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது போலீஸ் மற்றும் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால், பல்வேறு விளையாட்டு கலை பயிற்சியும் ஆயுதப்பயிற்சியை எடுத்துக்கொள்வது அவசியமானது என்றும் அயோத்தியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆண்டு பயிற்சி முகாம், சுல்தான்பூர், கோரக்பூர், பிலிபட், நொய்டா பேட்பூர் ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக கலவரங்கள் மற்றும் வன்முறையை தூண்டுவதாக பஜ்ரங்தள் அமைப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது ஆனாலும், தனது செயலை நியாயப்படுத்தி வரும் பஜ்ரங் தள் அமைப்பு, இளைஞர்கள் மத்தியில் தேசிய உணர்வை உருவாக்க இந்த பயிற்சி தேவையான ஒன்று என கூறி வருகிறது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|