இயேசுநாதரை இப்பூமிக்கு அனுப்பின கடவுளின் நோக்கம் என்ன?
Wed Jan 13, 2016 5:33 am
ஒரே மந்தையும், மனிதர்களின் ஏகசிந்தையும், அவர்களில் தேவமகிமையும் உருவாக்கவே.
அவரை தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கடவுள் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
அவர்கள் நிலையோ மிகவும் பரிதாபமாகயிருந்தது இப்படி.....
""கடவுள் இல்லை என்று மதிகெட்டவர்கள் தங்கள் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள், நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள், நன்மைசெய்கிறவன்இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள், அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது,
அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது,
அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது,
சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்,
அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை!
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி நின்றார்கள்!""
கடவுள் கதறினார், ஐயோ! ஐயோ! நான் இவர்களை செம்மையானவர்களாக படைத்தேனே! இவர்களோ அநேக உபாயதந்திரங்களை தேடிக்கொண்டார்களே!
யோசித்தார், யோசித்தார். என்ன செய்ய இப்படி கெட்டுப்போன மனிதர்களை?!அப்போழுது, அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போலிருந்த, நம்ம இயேசப்பா தான், கடவுளுக்கு ஞாபகமாக வந்தாங்க!
"பிதாவே! பிதாவே! உம் சித்தம் செய்யவே, நான் உம்மோடு இருக்கிறேன்! நீர் எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ?, இப்போதிருக்கிற, நீர் எனக்குத் தந்த மகிமையைக்கூட இழந்து, என்னையே வெறுமையாக்கி அடிமை ரூபமெடுக்க இப்போதே தயார்" என்றார்.
கடவுள் சொன்னார் இப்படி " இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன், என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்."
பாவிகளை காப்பாற்ற கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமானது.
நாம் இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
நம்ம இயேசப்பா பூமியிலயிருக்கும்போது, பிதாவிடம் நமக்காக இப்படி ஜெபித்தாங்க!
"ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்."
இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையிலே காத்திருக்கிறோம்.
தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
இந்தத் தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன், மரணபரியந்தம் நம்மை நடத்துவார். அப்படியே ஆகட்டும்!
நன்றி: http://jesusfreedmefromsins.blogspot.in/
அவரை தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கடவுள் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
அவர்கள் நிலையோ மிகவும் பரிதாபமாகயிருந்தது இப்படி.....
""கடவுள் இல்லை என்று மதிகெட்டவர்கள் தங்கள் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள், நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள், நன்மைசெய்கிறவன்இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள், அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது,
அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது,
அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது,
சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்,
அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை!
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி நின்றார்கள்!""
கடவுள் கதறினார், ஐயோ! ஐயோ! நான் இவர்களை செம்மையானவர்களாக படைத்தேனே! இவர்களோ அநேக உபாயதந்திரங்களை தேடிக்கொண்டார்களே!
யோசித்தார், யோசித்தார். என்ன செய்ய இப்படி கெட்டுப்போன மனிதர்களை?!அப்போழுது, அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போலிருந்த, நம்ம இயேசப்பா தான், கடவுளுக்கு ஞாபகமாக வந்தாங்க!
"பிதாவே! பிதாவே! உம் சித்தம் செய்யவே, நான் உம்மோடு இருக்கிறேன்! நீர் எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ?, இப்போதிருக்கிற, நீர் எனக்குத் தந்த மகிமையைக்கூட இழந்து, என்னையே வெறுமையாக்கி அடிமை ரூபமெடுக்க இப்போதே தயார்" என்றார்.
கடவுள் சொன்னார் இப்படி " இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன், என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்."
பாவிகளை காப்பாற்ற கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமானது.
நாம் இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
நம்ம இயேசப்பா பூமியிலயிருக்கும்போது, பிதாவிடம் நமக்காக இப்படி ஜெபித்தாங்க!
"ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்."
இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையிலே காத்திருக்கிறோம்.
தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
இந்தத் தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன், மரணபரியந்தம் நம்மை நடத்துவார். அப்படியே ஆகட்டும்!
நன்றி: http://jesusfreedmefromsins.blogspot.in/
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|