50 ஆண்டு காலமாக தீபாவளியைப் புறக்கணிக்கும் கிராமங்கள்
Fri Nov 06, 2015 9:45 pm
50 ஆண்டு காலமாக தீபாவளியைப் புறக்கணிக்கும் கிராமங்கள்.........................
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுக்காவைச் சேர்ந்த எஸ். மாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, தும்பைப் பட்டி, சந்திராபட்டி, எம். வலையப்பட்டி, கச்சாப்பட்டி, தொப்பம்பட்டி, கிலுகிலுப்பைப்பட்டி, இடைப்பட்டி, திருப்பதிப்பட்டி, கலுங்குப்பட்டி மற்றும் இந்திரா நகர் ஆகிய 12 கிராமங்கள் கடந்த 50 ஆண்டுகளாக ஆரியப் பண்டிகையான தீபாவளியைக் கொண்டாடுவதில்லை.
அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் விவசாயப் பணிகள் தீவிரமாக நடைபெறுவதால் பெரும் தொகை செலவு செய்யப்பட வேண்டிய சூழ்நிலையில் மேலும் தீபாவளி கொண்டாடுவது கூடுதல் சுமை என்பதால் அதை புறக்கணிப்பதாக மக்கள் கருத்து உள்ளது.
இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும்கூட தீபாவளி கொண்டாடுவதில்லை. தீபாவளிச் சீரும் வழங்கப்படுவதில்லை. மாறாக அறுவடைத் திருவிழாவான பொங்கல் விழா ஒரு வார காலத்திற்கு பண்பாட்டு, வீர விளையாட்டு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. வெளியூரில் வாழும் இக் கிராமத்து மக்கள் பொங்கல் விழாவிற்கு தங்கள் கிராமத்திற்கு வந்து உற்சாகத்துடன் கலந்து கொள் கின்றனர்.
நீங்களும் தீபாவளியைப் புறக்கணிக்க வேண்டாமா!
-
விடுதலை நாளிதழ் - Viduthalai Daily PaperPermissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|