வீடு சந்திப்பு ஊழியம் இப்படி செய்யக் கூடாது
Thu Jul 09, 2015 11:52 pm
வீடு சந்திப்பு ஊழியம் என்று விசுவாசிகளின் வீடுவீடாக போய் ஊஊஊழியம் பண்ணுகிறவர்கள் இப்படியெல்லாம் செய்யக்கூடாது ...
1. * வீடு வீடாகப் போய் தீர்க்கதரிசனம் சொல்லுவது, அல்லது "தீர்க்கதரிசனம் சொல்லுகிறேன்" என்று ஜனங்களை தங்களிடம் வரவழைப்பது.
2. * படிப்பறிவில்லாத விசுவாசிகளின் வீடுகளுக்குப் போய் " உங்களுக்கு யாரோ செய்வினை செய்து வைத்திருக்கிறார்கள் அதை முறிக்க ’விசேஷ உபவாசகூட்டம்’ இந்த வெள்ளிக்கிழமை உங்கள்
வீட்டில் நடத்தவேண்டும், இல்லாவிட்டால் பிசாசு உங்களை அலைக்கழித்து அழித்துவிடுவான்" என்று மிரட்டுவது.
3. * ஜனங்களையெல்லாம் முழங்கால்படியிடவைத்து அவர்கள் தலையில் கைவைத்து காட்டுக்கூச்சல் போட்டபடி அவர்களை பின்னுக்கு தள்ளிக்கொண்டே போய் கீழே விழவைப்பது.
4.* பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்டதற்கு அடையாளமாக பரலோகம் போய் இயேசுவைப் பார்த்தே ஆகவேண்டும், பரலோக தரிசனத்தைப்பார்க்காவிட்டால் பரிசுத்த ஆவியை நீங்கள் பெறவில்லை என்று அர்த்தம் என்று சொல்லி வீடுவீடாகப்
போய் "பரலோகத்தரிசன" கூட்டம் நடத்துவது ...
5.* அக்கினி அபிஷேகம் பெறவேண்டும், இல்லாவிட்டால்
பாவத்திலிருந்து விடுதலை பெறமுடியாது, பரலோகமும் போகமுடியாது என்று வேறு சபை அங்கத்தினர்களை அச்சபை ஊழியருக்குத் தெரியாமல் அக்கினி அபிஷேகத்தின் ’மொத்த குத்தகையாளர்கள்’ நடத்தும் கூட்டங்களுக்கு திருட்டுத்தனமாய் அழைத்துக்கொண்டு போவதும் கூட்டத்திற்குப்போய் வந்தபின் அந்த கும்பலுக்கு இவரே தலைவராக செயல்படுவதும்.
6.* "சிஸ்டர்! ராத்திரி உங்களைப்பற்றி கர்த்தர் என்னிடம்
பேசினார்" என்று ஆண்கள் இல்லாத சமயம் பார்த்து வேறொரு சபை அங்கத்தினர்கள் வீடுகளுக்குப்போய் ’தான் செய்த அற்புதங்கள், அதிசயங்கள்’ பற்றி மணிக்கணக்காய் பேசிக்கொண்டிருப்பது.
7. * திருமணமாகாத பெண்கள் உள்ள வீடுகளுக்கு’ இடைவிடாத விசிட்டிங்’ செய்து, ஊர்கதைகளை பேசிவிட்டு ’ ஆண்டவரே! சீக்கிரத்தில் மாப்பிள்ளையைக் கொண்டு வாரும்’ என்று இடைவிடாமல் ஜெபிப்பது.
8.* ’ இந்த வாரம் என்ன பிரசங்கம் உங்கள் சபையில்?’ என்று அரைகுறை விசுவாசிகள் வீட்டிற்குப்போய் விசாரித்துவிட்டு, ’அப்படியில்லை இப்படி பிரசங்கம் செய்யவேண்டும், இப்படியில்லை அப்படி பிரசங்கம் செய்யவேண்டும், அய்யய்யோ! எப்படியெல்லாம்
பிரசங்கம் செய்கிறார்கள் பாருங்கள். இந்த வசனத்துக்கு இப்படியா அர்த்தம் சொல்வது! உங்கள் பாஸ்டருக்கு சத்தியமே தெரியவில்லை" என்று சபையில் செய்த பிரசங்கத்தை கேலிசெய்வது.
9.* வீடு வீடாகப்போய் ’கனவுகளுக்கு அர்த்தம் சொலவது. அங்கேயே ’திடீர் வெளிப்பாடுகளை’ சொல்லி அந்த வீட்டாரை திகிலடையச் செய்வது.
10.* . ஆவியானவர் சொன்னார் என்று ரீல்விட்டு கரெக்டா சாப்பாட்டு நேரத்தில ஒரு வீட்டுக்குள்ள நுழைந்து அவர்களுடைய சாப்பாட்டை காலிபண்ணுவது..
இன்னும் வரும்..
நன்றி: பால்பி
1. * வீடு வீடாகப் போய் தீர்க்கதரிசனம் சொல்லுவது, அல்லது "தீர்க்கதரிசனம் சொல்லுகிறேன்" என்று ஜனங்களை தங்களிடம் வரவழைப்பது.
2. * படிப்பறிவில்லாத விசுவாசிகளின் வீடுகளுக்குப் போய் " உங்களுக்கு யாரோ செய்வினை செய்து வைத்திருக்கிறார்கள் அதை முறிக்க ’விசேஷ உபவாசகூட்டம்’ இந்த வெள்ளிக்கிழமை உங்கள்
வீட்டில் நடத்தவேண்டும், இல்லாவிட்டால் பிசாசு உங்களை அலைக்கழித்து அழித்துவிடுவான்" என்று மிரட்டுவது.
3. * ஜனங்களையெல்லாம் முழங்கால்படியிடவைத்து அவர்கள் தலையில் கைவைத்து காட்டுக்கூச்சல் போட்டபடி அவர்களை பின்னுக்கு தள்ளிக்கொண்டே போய் கீழே விழவைப்பது.
4.* பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்டதற்கு அடையாளமாக பரலோகம் போய் இயேசுவைப் பார்த்தே ஆகவேண்டும், பரலோக தரிசனத்தைப்பார்க்காவிட்டால் பரிசுத்த ஆவியை நீங்கள் பெறவில்லை என்று அர்த்தம் என்று சொல்லி வீடுவீடாகப்
போய் "பரலோகத்தரிசன" கூட்டம் நடத்துவது ...
5.* அக்கினி அபிஷேகம் பெறவேண்டும், இல்லாவிட்டால்
பாவத்திலிருந்து விடுதலை பெறமுடியாது, பரலோகமும் போகமுடியாது என்று வேறு சபை அங்கத்தினர்களை அச்சபை ஊழியருக்குத் தெரியாமல் அக்கினி அபிஷேகத்தின் ’மொத்த குத்தகையாளர்கள்’ நடத்தும் கூட்டங்களுக்கு திருட்டுத்தனமாய் அழைத்துக்கொண்டு போவதும் கூட்டத்திற்குப்போய் வந்தபின் அந்த கும்பலுக்கு இவரே தலைவராக செயல்படுவதும்.
6.* "சிஸ்டர்! ராத்திரி உங்களைப்பற்றி கர்த்தர் என்னிடம்
பேசினார்" என்று ஆண்கள் இல்லாத சமயம் பார்த்து வேறொரு சபை அங்கத்தினர்கள் வீடுகளுக்குப்போய் ’தான் செய்த அற்புதங்கள், அதிசயங்கள்’ பற்றி மணிக்கணக்காய் பேசிக்கொண்டிருப்பது.
7. * திருமணமாகாத பெண்கள் உள்ள வீடுகளுக்கு’ இடைவிடாத விசிட்டிங்’ செய்து, ஊர்கதைகளை பேசிவிட்டு ’ ஆண்டவரே! சீக்கிரத்தில் மாப்பிள்ளையைக் கொண்டு வாரும்’ என்று இடைவிடாமல் ஜெபிப்பது.
8.* ’ இந்த வாரம் என்ன பிரசங்கம் உங்கள் சபையில்?’ என்று அரைகுறை விசுவாசிகள் வீட்டிற்குப்போய் விசாரித்துவிட்டு, ’அப்படியில்லை இப்படி பிரசங்கம் செய்யவேண்டும், இப்படியில்லை அப்படி பிரசங்கம் செய்யவேண்டும், அய்யய்யோ! எப்படியெல்லாம்
பிரசங்கம் செய்கிறார்கள் பாருங்கள். இந்த வசனத்துக்கு இப்படியா அர்த்தம் சொல்வது! உங்கள் பாஸ்டருக்கு சத்தியமே தெரியவில்லை" என்று சபையில் செய்த பிரசங்கத்தை கேலிசெய்வது.
9.* வீடு வீடாகப்போய் ’கனவுகளுக்கு அர்த்தம் சொலவது. அங்கேயே ’திடீர் வெளிப்பாடுகளை’ சொல்லி அந்த வீட்டாரை திகிலடையச் செய்வது.
10.* . ஆவியானவர் சொன்னார் என்று ரீல்விட்டு கரெக்டா சாப்பாட்டு நேரத்தில ஒரு வீட்டுக்குள்ள நுழைந்து அவர்களுடைய சாப்பாட்டை காலிபண்ணுவது..
இன்னும் வரும்..
நன்றி: பால்பி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|