"ச & சா" வில் தொடங்கும் பழமொழிகள்
Mon Aug 29, 2016 8:48 am
"ச & சா" வில் தொடங்கும் பழமொழிகள் - தெரிந்துகொள்வோம்
* சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
* சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
* சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
* சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
* சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா
* சர்க்கரை என்றால் தித்திக்குமா?
* சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.
* சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
* சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
* சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
* சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
* சாண் ஏற முழம் சறுக்கிறது.
* சாது மிரண்டால் காடு கொள்ளாது.
* சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.
* சாதுரியப்பூனை மீன் இருக்க, புளியங்காயத் திங்கிறதாம்
* சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.
Re: "ச & சா" வில் தொடங்கும் பழமொழிகள்
Mon Aug 29, 2016 8:50 am
சிந்தனை துளிகள்.....
* மண்ணுக்குள் மறைந்தால்தான் செடியாக முளைக்க முடியும். - மு.வ
* மௌனமாக இருப்பது கோழைத்தனம் என்று நினைத்துவிடக் கூடாது. - மொரார்ஜி தேசாய்
* ஆற்றலை வெளிப்படுத்தும் ஆற்றல் இல்லாவிட்டால் அந்த ஆற்றல் மதிப்பற்று போய்விடுகிறது. - நெப்போலியன்
* இனிமையாக பேசுபவனுக்கு பகைவர்கள் இருக்கமாட்டார்கள். - கிருபானந்த வாரியார்.
* துன்பமும் ஏழ்மையும் போதிப்பதுபோல் வேறொன்றும் போதிக்கமுடியாது. - விவேகானந்தர்.
*உங்களுக்கு அவசியமில்லாததை நீங்கள் வாங்கினால் சீக்கிரமே உங்களுக்கு அவசியமானவற்றை விற்க நேரிடும். - ரிச்சர்ட் சாண்டர்ஸ்.
* மண்ணுக்குள் மறைந்தால்தான் செடியாக முளைக்க முடியும். - மு.வ
* மௌனமாக இருப்பது கோழைத்தனம் என்று நினைத்துவிடக் கூடாது. - மொரார்ஜி தேசாய்
* ஆற்றலை வெளிப்படுத்தும் ஆற்றல் இல்லாவிட்டால் அந்த ஆற்றல் மதிப்பற்று போய்விடுகிறது. - நெப்போலியன்
* இனிமையாக பேசுபவனுக்கு பகைவர்கள் இருக்கமாட்டார்கள். - கிருபானந்த வாரியார்.
* துன்பமும் ஏழ்மையும் போதிப்பதுபோல் வேறொன்றும் போதிக்கமுடியாது. - விவேகானந்தர்.
*உங்களுக்கு அவசியமில்லாததை நீங்கள் வாங்கினால் சீக்கிரமே உங்களுக்கு அவசியமானவற்றை விற்க நேரிடும். - ரிச்சர்ட் சாண்டர்ஸ்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|