இப்படி ஒரு மாற்றம் வந்தால் நன்று
Tue Oct 21, 2014 8:26 pm
கதையல்ல; நிஜம்தான்யா, நம்புங்க:..........
அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது துணைவியார் மிஷேல் ஒபாமாவும் சென்ற மாதம் நியூயார்க் உணவு விடுதிக்கு சென்று உணவருந்திய பின்னர்,
அதற்குரிய கட்டணம் செலுத்த, ஒபாமா தனது கிரிடிட் கார்டை உணவு பரிமாறிய பெண் மணியிடம் கொடுத்தார். திரும்பி வந்த பெண்மணி, உங்கள் கிரிடிட் கார்டு உங்களுடையதுதானா என்பதற்கு எந்தவித உறுதியும் இல்லை; அதனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என திருப்பி தந்துவிட்டார். அந்த பெண்மணியிடம், இது தனது கிரிடிட் கார்டு தான் என ஒபாமா எடுத்துச் சொல்லியும், அந்த பெண்மணி, அதனை ஏற்க மறுத்த நிலையில், தனது துணைவியாரின் கிரிடிட் கார்டை தந்து, உணவுக்கான கட்டணத்தை செலுத்திவிட்டு வந்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
இந்த தகவலை, கிரிடிட் கார்டு சம்பந்தமாக மக்களுக்கு ஏற்படும் அடையாளத் திருட்டு (IDENTITY THEFT) பிரச்சினைகள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட, அமெரிக்க அதிபர் ஒபாமா, அங்கே, இந்த தகவலைக் கூறியுள்ளார். அமெரிக்க நாட்டில் ஏறத்தாழ பத்து கோடி மக்களுக்கு இந்த அடையாளத் திருட்டின் காரணமாக, பல இடங்களில், இந்த கிரிடிட் கார்டு மறுக்கப்படும் பிரச்சினை உள்ளது. இதில் நானே, பாதிக்கப் பட்டுவிட்டேன் என்றார் உலக வல்லரசு நாட்டின் அதிபராக திகழும் பாரக் ஒபாமா.
இதுவே, நமது “பாரத தேசம்’’ என்றால், இந்த கதி இருக்குமா? முதலில், பிரதமரோ, முதல்வரோ, இது போன்று ஒரு உணவு விடுதியில் தனது குடும்பத்துடன் தனியே அமர்ந்து சாப்பிடும் நிலை கிடையாது. அப்படியே, அவர்கள் சென்றாலும், அந்த பகுதி முழுக்க, தோரணம் கட்டி, வாசலில் பூரண கும்ப மரியாதையுடன், அந்த உணவு விடுதியின் உரிமையாளர் சகிதம் நின்று வரவேற்பார்கள். அவர் சாப்பிடுவது இருக்கட்டும், அவரிடத்தில் யார் போய், நீங்கள் பணம் தாருங்கள் என சொல்லப்போகிறார்கள். நீங்கள் இங்கே, வந்ததே எங்கள் பாக்கியம் என விளம்பரம்படுத்தி விடுவார்கள். அப்படியே, பணம் தருவதற்கு முன்வந்து, இது போல், கிரிடிட் கார்டு செல்லாத நிலை ஏற்பட்டாலும், உணவு பரிமாறியவர், இது போல் காரணத்தைச் சொல்லி, திருப்பி தரும் தைரியம் வருமா? அவ்வாறு சொல்லிவிட்டு, பிறகு அவர் அங்கே வேலைதான் பார்க்க முடியுமா?
ஆனால், அமெரிக்காவில் முடியும். அங்கே, அதிபரும் சரி, சாதாரணக் குடிமகனும் சரி, பொது இடத்தில் எல்லோரும் ஒன்றுதான். அலுவலகத்தில், ஒபாமா அதிபர். அவ்வளவுதான். வெளி இடத்தில் எங்கு வந்தாலும், மற்ற குடிமகன்போல, அவர் நடந்து கொள்ள வேண்டும். நடந்து கொள்வார்கள்.
இதுபோல் வாழ்ந்த தலைவர்களும் நமது மண்ணில் இருந்தார்கள். ஆனால், இப்போது, இன் றைய இளம் தலைமுறை காணும் முக்கிய மனி தர்கள், அப்படி இல்லையே.
இங்கே, சென்னை விமான நிலையத்தில், கார் நிறுத்தக்கூடாத இடத்தில் நிறுத்தப்பட்ட அமைச்சரின் காரினை, காவல்துறை அதிகாரி, அப்புறப்படுத்தி, தனது கடமையை செய்ததற்கு, அவரை பாராட்டாமல், அந்த அதிகாரி, எப்படி அமைச்சரின் காரை அப்புறப்படுத்தலாம் என சொல்லி, அவருக்கு மாற்றல் உத்தரவு பிறப்பித்த, நமது ஊரில், ஒபாமாவிற்கு நடந்த சம்பவம் கதைபோல் தான் தெரியும்.
ஏனென்றால், இது ‘’பாரத தேசம்’’; பாரம்பரியம் மிக்கது; உலகத்துக்கே போதனை சொன்னது. பாரத் மாதாகி ஜே.
- குடந்தை கருணா ViduthalaiEpaper
அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது துணைவியார் மிஷேல் ஒபாமாவும் சென்ற மாதம் நியூயார்க் உணவு விடுதிக்கு சென்று உணவருந்திய பின்னர்,
அதற்குரிய கட்டணம் செலுத்த, ஒபாமா தனது கிரிடிட் கார்டை உணவு பரிமாறிய பெண் மணியிடம் கொடுத்தார். திரும்பி வந்த பெண்மணி, உங்கள் கிரிடிட் கார்டு உங்களுடையதுதானா என்பதற்கு எந்தவித உறுதியும் இல்லை; அதனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என திருப்பி தந்துவிட்டார். அந்த பெண்மணியிடம், இது தனது கிரிடிட் கார்டு தான் என ஒபாமா எடுத்துச் சொல்லியும், அந்த பெண்மணி, அதனை ஏற்க மறுத்த நிலையில், தனது துணைவியாரின் கிரிடிட் கார்டை தந்து, உணவுக்கான கட்டணத்தை செலுத்திவிட்டு வந்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
இந்த தகவலை, கிரிடிட் கார்டு சம்பந்தமாக மக்களுக்கு ஏற்படும் அடையாளத் திருட்டு (IDENTITY THEFT) பிரச்சினைகள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட, அமெரிக்க அதிபர் ஒபாமா, அங்கே, இந்த தகவலைக் கூறியுள்ளார். அமெரிக்க நாட்டில் ஏறத்தாழ பத்து கோடி மக்களுக்கு இந்த அடையாளத் திருட்டின் காரணமாக, பல இடங்களில், இந்த கிரிடிட் கார்டு மறுக்கப்படும் பிரச்சினை உள்ளது. இதில் நானே, பாதிக்கப் பட்டுவிட்டேன் என்றார் உலக வல்லரசு நாட்டின் அதிபராக திகழும் பாரக் ஒபாமா.
இதுவே, நமது “பாரத தேசம்’’ என்றால், இந்த கதி இருக்குமா? முதலில், பிரதமரோ, முதல்வரோ, இது போன்று ஒரு உணவு விடுதியில் தனது குடும்பத்துடன் தனியே அமர்ந்து சாப்பிடும் நிலை கிடையாது. அப்படியே, அவர்கள் சென்றாலும், அந்த பகுதி முழுக்க, தோரணம் கட்டி, வாசலில் பூரண கும்ப மரியாதையுடன், அந்த உணவு விடுதியின் உரிமையாளர் சகிதம் நின்று வரவேற்பார்கள். அவர் சாப்பிடுவது இருக்கட்டும், அவரிடத்தில் யார் போய், நீங்கள் பணம் தாருங்கள் என சொல்லப்போகிறார்கள். நீங்கள் இங்கே, வந்ததே எங்கள் பாக்கியம் என விளம்பரம்படுத்தி விடுவார்கள். அப்படியே, பணம் தருவதற்கு முன்வந்து, இது போல், கிரிடிட் கார்டு செல்லாத நிலை ஏற்பட்டாலும், உணவு பரிமாறியவர், இது போல் காரணத்தைச் சொல்லி, திருப்பி தரும் தைரியம் வருமா? அவ்வாறு சொல்லிவிட்டு, பிறகு அவர் அங்கே வேலைதான் பார்க்க முடியுமா?
ஆனால், அமெரிக்காவில் முடியும். அங்கே, அதிபரும் சரி, சாதாரணக் குடிமகனும் சரி, பொது இடத்தில் எல்லோரும் ஒன்றுதான். அலுவலகத்தில், ஒபாமா அதிபர். அவ்வளவுதான். வெளி இடத்தில் எங்கு வந்தாலும், மற்ற குடிமகன்போல, அவர் நடந்து கொள்ள வேண்டும். நடந்து கொள்வார்கள்.
இதுபோல் வாழ்ந்த தலைவர்களும் நமது மண்ணில் இருந்தார்கள். ஆனால், இப்போது, இன் றைய இளம் தலைமுறை காணும் முக்கிய மனி தர்கள், அப்படி இல்லையே.
இங்கே, சென்னை விமான நிலையத்தில், கார் நிறுத்தக்கூடாத இடத்தில் நிறுத்தப்பட்ட அமைச்சரின் காரினை, காவல்துறை அதிகாரி, அப்புறப்படுத்தி, தனது கடமையை செய்ததற்கு, அவரை பாராட்டாமல், அந்த அதிகாரி, எப்படி அமைச்சரின் காரை அப்புறப்படுத்தலாம் என சொல்லி, அவருக்கு மாற்றல் உத்தரவு பிறப்பித்த, நமது ஊரில், ஒபாமாவிற்கு நடந்த சம்பவம் கதைபோல் தான் தெரியும்.
ஏனென்றால், இது ‘’பாரத தேசம்’’; பாரம்பரியம் மிக்கது; உலகத்துக்கே போதனை சொன்னது. பாரத் மாதாகி ஜே.
- குடந்தை கருணா ViduthalaiEpaper
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|