தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
தமிழகத்தில் அடையாள ஆவணங்களுக்காக ஏங்கும் ஆதரவற்ற குழந்தைகள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தமிழகத்தில் அடையாள ஆவணங்களுக்காக ஏங்கும் ஆதரவற்ற குழந்தைகள் Empty தமிழகத்தில் அடையாள ஆவணங்களுக்காக ஏங்கும் ஆதரவற்ற குழந்தைகள்

Mon Sep 15, 2014 8:35 am
தமிழகத்தில் அடையாள ஆவணங்களுக்காக ஏங்கும் ஆதரவற்ற குழந்தைகள் Orphanchildren_2107197f
கோப்பு படம்
தமிழகத்தில் உள்ள காப்பகங் களில் வளரும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் முதல் ஜாதி சான்றிதழ் வரையிலான ஆவணங்கள் பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

தமிழகத்தில் பெற்ற தாய், தந்தையரால் கைவிடப்பட்ட குழந்தைகளும், தாய், தந்தை உறவுகளை இழந்த குழந்தைகளும் ஆதரவில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். இதுபோன்ற குழந்தைகள், அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வளர்க்கப்படுகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் 68 ஆதர வற்ற குழந்தைகள் காப்பகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1934 ஆண் குழந்தைகளும், 2734 பெண் குழந்தைகளும், தொட்டில் குழந்தை திட்டம் மூலம் பெறப்பட்ட 1030 குழந்தைகள், சைல்டு லைன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதுபோல ஒவ்வொரு மாவட் டத்திலும் 5 ஆயிரம் குழந்தைகள் வரை ஆதரவற்ற சூழலில் வளர்ந்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஆதரவற்ற நிலையில், காப்பகங்களில் வளர்க் கப்படுகின்றனர்.

உறவினர்கள் உள்ள குழந்தை களை தவிர்த்து, யாருமே இல்லாத ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதரவற்றவர் சான்றிதழ், இருப் பிடச் சான்றிதழ், வருமான சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை என அரசு ஆவணங்கள் பெறுவதில், நடைமுறை சிக்கல் களால் காப்பகங்கள் அவதியுற்று வருகின்றன.

பெற்றோரால் கைவிடப்பட்ட மற்றும் அனாதை குழந்தைகள் பிறப்பு அறிய முடியாத நிலையில், அவர்கள் கண்டெடுக்கப்பட்ட நாளை, அரசு காப்பகங்களில் பதிவு செய்கின்றனர். இவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெறும்போது, சட்டரீதியான பல்வேறு நடை முறைகளை பின்பற்ற வேண்டி யுள்ளது. ஆதரவற்ற குழந்தை களை தத்தெடுப்பவர்கள் குழந்தை பிறப்பு சான்றிதழ் வாங்கிட வேண்டுமெனில் நீதிமன்றங்கள் மூலம் தீர்வு காண வேண்டியுள்ளது. அதன்பின், காப்பகத்தில் வைக்கப் பட்ட பெயரை மாற்றி, தத்தெடுப் பவர்கள் வைக்கும் பெயரை மாற்றம் செய்கின்றனர். தத்தெடுக்கப்படாத குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெறப்படுவதில்லை. அவர்களை நேரடியாக பள்ளிகளில் சேர்த்து, கல்வி நிறுவனம் அளிக்கும் மாற்று சான்றிதழையே பிறந்த தேதி அடையாளமாக கொண்டு வளர்க்கின்றனர்.
தாய், தந்தையர் இல்லாத ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஜாதி குறிப்பிடுவதிலும், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பெறுவதிலும் நடை முறை சிக்கலை காப்பகங்கள் தினம்தோறும் சந்தித்து வருகின் றன. பிறப்பு சான்றிதழ் பெற மட்டும் ஒரு குழந்தைக்கு வழக்கறிஞர் கட்டணம் உள்பட 4 ஆயிரம் ரூபாய் வரை காப்பகங்கள் செலவு செய்ய வேண்டியுள்ளதால், பிறர் நிதியில் காப்பகம் நடத் தும் நிலையில், அதற்கான ஆவணங்களை வாங்குவதற்கு நிதி பற்றாக்குறையால் தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவகி கூறியதாவது:

ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் நீதிமன்ற நடை முறையை பின்பற்றி அளிக்கப் படுகிறது. இதுசம்பந்தமாக காப்பகத்தில் உள்ளவர்கள் முறை யிட்டால், அவர்களுக்கு உதவி செய்யப்படும். ஆதார் அட்டை வழங்குவது சம்பந்தமான நடவடிக்கையை அரசு விரைந்து எடுக்கவுள்ளது. இதன் மூலம் அவர் களுக்கு அடையாள ஆவணங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சேலம் மாவட்ட குழந்தைகள் நலக்குழும தலைவர் சேவியர் கூறியதாவது:

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் குழந்தைகளிடம் எவ்வித ஆவணங்களையும் வாங்காமல், அவர்களை பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விதி வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்வி நிறுவனங்கள் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங் களை கேட்கிறது. சமீபத்தில் சேலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆவணங் கள் இல்லாத காரணத்தைக் காட்டி, குழந்தைகள் சிலரை 14 நாள்கள் வகுப்பறைக்கு வெளியே நிறுத்தி வைத்துள்ளனர். காப்பகங்களில் உள்ள குழந்தைகளுக்கு ரேஷன் அட்டை வழங்குவதன் மூலம் அவர்கள் உணவு தேவை பூர்த்தி அடையும். இதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். பிறப்பு சான்றிதழ் வழங்குவதில் உள்ள தற்போதைய நடைமுறைகளில் இருந்து, ஆதரவற்ற குழந்தை களுக்கு விலக்கு அளித்து, சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். அரசின் ஆவணங்கள் ஏதுவும் இல்லாமல் குழந்தைகள் வளர்வதால், அவர்களுக்கான குடியுரிமை கேள்விகுறியாகும் என்பதால், ஆதரவற்ற குழந்தைகள் நிலைமையை கருத்தில் கொண்டு அரசு கருணை காட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி: தி இந்து

குறிப்பு: படத்தில் இருக்கும் குழந்தைகளின் முகத்தைப் பாருங்கள்... அதன் ஏக்கத்தைப் பாருங்கள்... இப்படிப்பட்ட குழந்தைகள் நலனுக்காக ஜெபியுங்கள்.

தவறான உறவுகளில் ஈடுபட்டு குழந்தைகளை அநாதைகளாக விடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்... இந்த நிலை எவ்வளவு பெரிய வேதனை என்பது புரிகிறதா? இந்த மழலைகள் என்ன பாவம் செய்தார்கள்? தயவுசெய்து இப்படிப்பட்டவர்கள் கொஞ்சமாவது திருந்தப்பாருங்கள்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum