மனைவி திருதிரு’வென விழித்தாள்
Fri Feb 02, 2018 6:42 pm
போதகரை விருந்துக்கு அழைத்திருந்தார்கள். விருந்து முடிந்து போதகர் சென்றதும் பார்த்தால் டேபிளில் இருந்த அழகிய ஸ்பூனைக் காணவில்லை. மனைவி தன் கணவனிடம் பாருங்கள், போதகர் தான் அந்த ஸ்பூனை களவாடிக் கொண்டு சென்று விட்டார் என்பதாக சொன்னாள். ஒரு வருடமாகியும் இதனை மனதில் அடக்கி வைக்கவோ மறக்கவோ அவளால் முடியவில்லை. அடுத்த வருடமும் விருந்துக்கு வந்திருந்த போதகரிடம் பளிச்’சென்று கேட்டுவிட்டாள், பாஸ்டர் நீங்கள் தான் அந்த ஸ்பூனை களவாடினீர்களா ? என்பதாக. போதகர் சற்றும் தாமதியாமல் சொன்னார், அதை நான் எடுத்துச் செல்லவில்லை, உங்கள் பைபிளில் தான் வைத்திருக்கிறேன், சென்று பாருங்கள், என்பதாக.
**இப்போது மனைவி திருதிரு’வென விழித்தாள்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|