நடிகர்களை போல அலங்காரம் செய்யாமல்...
Sat Oct 22, 2016 7:45 am
Samuel Wilson
March 20, 2015 ·
அன்புள்ள கர்த்தருடைய வார்த்தைகளை போதிக்கும் ஊழியர்களே, போதகர்களே, சுவிசேஷகர்களே,
மேய்ப்பர்களே,
தீர்க்கதரிசிகளே,
பாடகர்களே,
டிவி தொகுப்பாளர்களே,
இசை கருவிகளை வாசிக்கிறவர்களே,
விசுவாசிகளே,
உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுக்கோள் தயவு செய்து உங்கள் முகத்தை அலங்காரம் அதாவது சினிமா நடிகர்களை போல அலங்காரம் செய்யாமல் இருக்கவும் ஏனென்றால் நீங்கள் சினிமா நடிகர்கள் அல்ல இயேசுவின் ஊழியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரைமுறை ஆண்டவர் இயேசுவை குறித்து பேசும் ஊழியர்களாகிய உங்களுக்கு உள்ளது அதாவது மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் நீங்கள் இந்த உலகத்திற்கே முன் மாதிரியாக இருந்தவர் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவரை குறித்து பொது இடங்களில் டெலிவிஷனில் பேசும் போது உங்கள் முகம் மற்றும் உடைகள் கவர்ச்சியாக காட்டப்படுகிறது அது மட்டுமா அருவருக்கத்தக்க உடைகள் (சினிமா கலைஞர்கள் போல்) அணிந்து வந்து பிரசங்கம் செய்வது பாடுவது ஆராதனை செய்வது இதையெல்லாம் இயேசுவை அறியாதவர்கள்.
புறமதத்தினர். பார்த்து இவர்களெல்லாம் சினிமாக்காரர்களா? இல்லை கிருஸ்தவ ஊழியர்களா ?என்று கேட்கிறார்கள் இப்படி இருந்தால் ஆண்டவர் மகிமை அடைவாரா ?
உங்கள் நிமித்தம் கிறிஸ்தவம் தூசிக்கப்படாதபடிக்கு கவனமாக இருக்கவும் மனிதன் முகத்தை பார்க்கிறான் என்பதை மறவாதீர்கள் அழிந்துப்போகும் பூமிக்குறிய சரீர அழகை மனிதர்கள் பார்க்க வேண்டும் என்று இதில் கவனம் செலுத்தி ஆத்துமாவை கறைப்படுத்தி பரலோக வாழ்வை நீங்களும் உங்கள் சபைகளும் உங்கள் குடும்பமும் இழந்து விடாதீர்கள் மற்றவர்களின் அழிவுக்கு காரணமாகவும் இருக்காதீர்கள்...அதனால் தான் ஆண்டவர் இந்த பூமியில் வாழும் போது பல காரியங்களில் மனிதர்களுக்கு முன் மாதிரியாக இருந்தார் இயேசுவின் சீடர்களும் அப்படியே இருந்தார்கள் தேவனுடைய ஆவி
உங்களிடம் இருப்பது உண்மையானல் இதை குற்றமாக கருதாமல் இந்த சத்தியத்திற்கு கிழ்படிந்து
1. முழு தாடி வைக்கவும்.
2. முழு ஷேவ் செய்யவும்.
3. நாகரிகமான முறையில் உடைகள் அணியவும்.
4. தலை முடியை நாகரிகமான முறையில் வெட்டிக்கொள்ளவும்
5. நீளமாக முடி வளர்ப்பதை தவிர்க்கவும்
6. விக் வைப்பதையும் கலரிங் செய்வதையும் தவிர்க்கவும்.
7. பச்சை குத்திக்கொள்ளுவதை தவிர்கவும்.
ஆகவே உங்களை அல்ல இயேசுவையே கனம்பண்ணுங்கள் அப்பொழுது உங்கள் ஊழியத்திற்கு பரலோகத்தில் மிகுந்த பலன் நிச்சயம் கிடைக்கும். இந்த சத்தியத்திற்கு செவிக்கொடாமல்
இதை தொடர்வீர்கள் என்றால் நீங்கள் சாத்தானின் ஆவியுள்ளவர்கள் என்றும் போலி உலக கிருஸ்தவர்கள் என்றும் வெகு விரைவில் உண்மை கிருஸ்தவர்களுக்கு அடையாளம் காட்டப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்கிறார்
நீதி 15:10 வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
இந்த சத்தியம் சொல்வதினால் நான் ஒரு குறிப்பிட்ட TPM சபையை சார்ந்தவன் என்று சிலர் குருட்டு கற்பனை செய்துக்கொள்கிறார்கள் அவர்கள் அறியவேண்டியது நிறைய உள்ளது..
நான் சர்வ வல்ல தேவனுடைய சபையை சார்ந்தவன் இதற்கு என் பதிவுகளே சாட்சி....
[குற்றப்படுத்துவதற்கும், தவறை சுட்டிகாட்டுவதற்கும்,
நியாயத்தீர்ப்பதற்கும்,
வித்தியாசம் தெரியாதவர்கள் மீண்டும் தேவ ஆவியில் வேதத்தை படிக்கவும்.]
[ltr]#வேத[/ltr] ஆதாரம்
உங்கள் தலைமயிரைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,
செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்..[ltr]#லேவி[/ltr]-19:26.27
சேனைகளின் கர்த்தர் நீதியுள்ளவர் ஆமென் அல்லேலூயா .....!!!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|