சபை மாறும் விசுவாசிகள்
Mon Sep 12, 2016 9:24 pm
இயேசு நடந்துபோகிறதை அவன் (யோவான்) கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள்.(யோவான் 1:[url=tel:3637]36-37[/url])
யோவானின் சீஷர்கள் யோவானின் வார்த்தைகளைக் கேட்டு, யோவானை விட்டுவிட்டு, இயேசுவுக்குப் பின்சென்றதைத்தான் மேலே வாசிக்கிறோம். இன்று அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருக்குமேயானால், சபைக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்று பழி வந்திருக்கும். ஆனால் யோவான் அந்த சீஷர்களை திரும்ப தன்னோடிருக்கும்படி அழைக்காமல், கிறிஸ்துவோடு இருக்கும்படி விட்டுவிட்டார். யோவான் உட்பட நிறையப்பேர் "மேசியா" வருவார் என காத்திருந்தனர். மேசியா இவர்தான் என்று உணர்ந்த அவ்விருவரும் யோவானின் அனுமதியின்றி கிறிஸ்துவை பின்பற்றினர்.
அன்றைக்கு தனக்கான குருவைத் தேர்வுசெய்து பின்பற்றும் சுதந்திரம் ஒவ்வொரு சீஷனுக்கும் இருந்தது. எனவே அவர்கள் சென்றது ஒரு பிரச்சனையுமில்லை. இன்று சபைக் கட்டுப்பாடுகள். அடுத்த சபைக்கூட்டங்களுக்குச் செல்லாதீர்கள் என்று பகிரங்க அறிவிப்புக்கள். காரணம், பயம். எங்கெ சபையைவிட்டு ஓடிவிடுமோ ஆடுகள் என்ற பயம்..
அப்படி பயப்படும் ஊழியரா நீங்கள்?
1.நல்ல வசன உணவு கொடுக்கிற
2.ஜீவத்தண்ணீர் அருகில் நடத்துகிற
3.நன்றாய்ப் பராமரிக்கிற
4.பூரண அன்பு காட்டப்படுகிற
5.ஒரே மேய்ப்பராம் இயேசுவை மட்டும் பின்பற்ற கற்றுக்கொடுக்கப்படுகிற
6.விசுவாசத்தில் நிலைத்து நிற்கச் செய்கிற
7.அபிஷேகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிற
8.காணிக்கைக்காக அடிக்கடி திட்டங்கள் தீட்டாத
9.ஒருமனதின் ஆவியோடுகூட உள்ள
10.வேதவார்த்தையில் மட்டும் நிலைப்படுத்துகிற....
- சபைகளைவிட்டு எந்த ஆடும் (விசுவாசியும்) ஓடிவிடாது. கவலை வேண்டாம். அதையும் தாண்டிச் செல்லும் ஆத்துமாக்களுக்கு அப்படிப்பட்ட ஊழியர்கள் உத்தரவாதம் அல்ல..
அடிக்கடி சபை மாறும் விசுவாசிகளா நீங்கள்?
அடிக்கடி பிடுங்கப்பட்டு, வேறிடத்தில் நடப்படுகிற செடி, செழித்து வளர வாய்ப்பே இல்லை. எந்த விஷயத்தில் குறையுள்ளதாக நீங்கள் உணருகிறீர்களோ, அதை ஊழியரிடம் அன்பாகச் சொல்லுங்கள். அவருக்காக குடும்பமாய் ஜெபியுங்கள். எந்த சபையும் உங்களைப் பரலோகம் அழைத்துச் செல்லாது. உங்கள் பரிசுத்த வாழ்வும், கிறிஸ்துவின் கிருபையுமே அதற்குத் தகுதிபடுத்தும் என்பதால், நீங்கள் இருக்கும் சபையில் நிலைத்திருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். சபை ஆராதனை, பரலோகத்துக்கு நிழல். நிழலிலேயே நாம் சரியில்லையென்றால், நிஜத்துக்கு எப்படி தகுதிப்படமுடியும்? சகலமும் அன்போடும், பக்திவிருத்திக்கேதுவாகவும், கிரமமாகவும், நல்லொழுக்கமாகவும் செய்யப்படக்கடவது! ஆமென்.
________________________
GRACE INDIA MINISTRIES
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|