நிலத்தில் விழுந்த கோதுமை மணிகள்
Thu Mar 21, 2013 9:35 am
இது ஓர் தொடர்கதை...
இவர்களுக்காக ஜெபிப்போமா?
ஈரான்..... கிறிஸ்தவர்களின் மரணம் ஓர் அன்றாட வாடிக்கை..... இங்கு வாழும்
ஒவ்வொரு போதகர்களும், சபை அங்கத்தினர்களும் மனதில் கலக்கத்தோடு, வாழ்ந்து
வரும் கொடிய காலங்கள். இவர்களுக்காக நாம் ஜெபிப்போமா?
Re: நிலத்தில் விழுந்த கோதுமை மணிகள்
Thu Mar 21, 2013 9:37 am
சகோதரி Yubelina .... இந்தோனேஷியா தேசத்திலிருந்து....
இந்தோனேசியா தீவிரவாதிகள் இவரின் முகத்தை, உடலும் ஓர் பகுதியை எரிக்க முடிந்தது.. ஆனால் இவரின் விசுவாசத்தை அல்ல....
துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும் அவர்களுக்குச் சாம்பலுக்குப்
பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும்,
ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை
அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள். ஏசாயா 61:3
இவரின் முகம் இப்பொழுது ரத்த நிறமும், வெள்ளை நிறமுமாய் மாறி விட்டது..
ஆனால் இவரின் முகத்தில் ஓர் இனம் புரியாத சிரிப்பு.. கண்களில் ஓர்
மகிழ்ச்சி... உலகம் தரக்கூடாத சமாதானத்தை முழுவதுமாக உணர்ந்துவிட்டதாக ஓர்
அழகிய சிரிப்பு... இவரின் சிரிப்பு இயேசு கிறிஸ்துவின் அன்பை
வெளிப்படுத்துகிறதல்லவா???
குழந்தைகள் கூட பார்ப்பதற்கு பயப்படும்
ஓர் முகம்... ஆனால், அழகிய உடைகள் அணிய முடியாது.. இவ்வுலகம் இவருக்காக
பரிதாபப்படவில்லை.... தலை வாரிக்கொள்ளவோ, முக அலங்காரம் செய்து கொள்ள
முடியாது... சாதாரண பெண் செய்யும் வேலையை கூட செய்ய முடியாது..
அனாலும் சகோதரி Yubelina அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளார்.. மரணமோ, ஜீவனோ..
வாழ்வோ... சாவோ... எதுவும் என்னை தேவனின் அன்பில் இருந்து பிரிக்க முடியாது
என்று சூளுரைக்கும் இவரின் எதிர்காலத்திற்காக ஜெபிப்போமா?
தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்..
நன்றி: கிறிஸ்துவின் ஊழியங்கள்
Re: நிலத்தில் விழுந்த கோதுமை மணிகள்
Thu Mar 21, 2013 9:37 am
"என்னை
பலர் பூச்சிகொல்லி என்று தான் அழைப்பார்கள். நான் கிறிஸ்தவர்களை
கொல்வதற்கு திட்டம் போடுபவன். "கிறிஸ்தவர்களை கொல்ல வேண்டும் என்றால்
என்னிடம் சொல்லுங்கள், நான் அவர்களை திட்டம் போட்டு கொல்வேன்" ---
இப்படித்தான் என் கடந்த கால வாழ்க்கை இருந்தது."
ஆனால் இப்பொழுது
இவர் (Babasola ) வாழ்க்கை முற்றிலும் மாறி விட்டது.. தேவன் இவரின்
வாழ்க்கையை தலைகீழாக மாற்றி போட்டு விட்டார். Babasola இப்பொழுது முகமதியர்கள் மத்தியில் நம் பரிசுத்த தேவனுக்காக ஊழியம் செய்து வருகிறார்.
ஆதியில் தேவன் சவுலை பவுலாக மாற்றினது போல் இப்பொழுதும் செயல்பட்டு
கொண்டிருக்கிறார். இவரோடு இன்னும் 7 சவுல்களை தேவன் மாற்றியிருக்கிறார்.
இவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களை கொன்று குவித்தவர்கள்.
இவர்களின்
அனைவரின் சாட்சியும் "Saul to Paul" என்ற ஆங்கில சாட்சி புத்தகத்தில்
உள்ளது. விருப்பவுள்ளவர்கள் வாங்கி படித்து பயன் பெறலாம்.
http://bit.ly/YuUlS5.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|