தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
நம் ஃபேஸ்புக் பதிவுகள் யாருக்குச் சொந்தம்? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

நம் ஃபேஸ்புக் பதிவுகள் யாருக்குச் சொந்தம்? Empty நம் ஃபேஸ்புக் பதிவுகள் யாருக்குச் சொந்தம்?

Wed Jul 06, 2016 9:23 am
இணைய உலகில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மோசடிகளுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும் இலக்காக வேண்டியிருக்கும். வைரஸ் தாக்குதலும், தாக்காளர்கள் (hackers) கைவரிசையும், ஊடுருவு மென்பொருள் (malware) பாதிப்புகளும் மட்டுமல்ல, வைரலாகப் பரவும் பொய்யான தகவல்களும் கூட இணையவாசிகளை ஏமாற்றக் காத்திருக்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணமாக, ஃபேஸ்புக்கில் பயனாளிகளின் தனியுரிமையைப் பாதுகாப்பது தொடர்பாகப் பரவிய அறிவிப்பைச் சொல்லலாம்.


தகவல்களுக்குப் பாதுகாப்பு இல்லையா?


ஃபேஸ்புக்கில் நிலைத்தகவலாக இந்த அறிவிப்பைப் பார்த்தவர்கள் திடுக்கிட்டுப் போயிருப்பார்கள். ஏனெனில், ஃபேஸ்புக்கில் பயனாளிகள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் மற்றும் ஒளிப்படங்கள் அனைத்தும் பொதுவெளியில் வர உள்ளன, ஏற்கெனவே அழித்துவிட்ட தகவல்களுக்கும் இது பொருந்தும் என்றும், இதற்கேற்ற வகையில் ஃபேஸ்புக் தனது தனியுரிமை (பிரைவஸி) கொள்கையை மாற்றியிருக்கிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக சேனல்13-ல் செய்தி வெளியாகியிருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததோடு, ஃபேஸ்புக் உங்கள் தகவல்கள் மற்றும் ஒளிப்படங்களைப் பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால், ஃபேஸ்புக்குக்கு எதிராக ஒரு சட்ட அறிவிப்பை உங்கள் ஃபேஸ்புக் சுவரில் வெளியிட வேண்டும் எனவும் அந்த அறிவிப்பு அமைந்திருந்தது.

இது போன்ற அறிவிப்பை வெளியிடாவிட்டால், உங்கள் தகவல்கள் மற்றும் ஒளிப்படங்களை ஃபேஸ்புக் பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பதுபோல ஆகிவிடும் என்ற எச்சரிக்கையும் அதில் இடம்பெற்றிருந்தது. இந்த அறிவிப்பைப் பகிர்ந்துகொள்வதால் பயனில்லை, அப்படியே காபி பேஸ்ட் செய்து வெளியிடவும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த மாத இறுதியில் ஃபேஸ்புக்கிலும் இணையத்திலும் பரவலாக வலம்வந்த இந்த அறிவிப்பு அப்பாவிப் பயனாளிகளிடம் பலவிதமான குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. “என்னடா இது, நம் ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படி ஒரு சட்ட அறிவிப்பை வெளியிட்டால்தான் நமக்குப் பாதுகாப்பா?” என்றுகூட பலர் கவலைப்பட்டிருக்கலாம்.

வெறும் வதந்தி


நல்ல வேளையாக, அதே வேகத்தில் இது உண்மையான அறிவிப்பு அல்ல, ஏமாற்று வேலை என்பது தெரியவந்தது. ஃபேஸ்புக் நிறுவனத் தரப்பிலும் இது தொடர்பாக அதிகாரபூர்வமான விளக்கம் அளிக்கப்பட்டது. ஃபேஸ்புக்கில் வலம்வரும் தனியுரிமை தொடர்பான பதிவு பொய்யானது.

ஃபேஸ்புக்கில் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் உங்களுக்கே சொந்தம், அவை எப்படிப் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன என்பதையும் பிரைவசி செட்டிங்படி நீங்கள் தீர்மானிக்கலாம் என ‘You’re In Control’ என்ற பதிவில் ஃபேஸ்புக் தெளிவுபடுத்தியது. (https://www.facebook.com/fbfacts/1573108242983244)
ஃபேஸ்புக் பயனாளிகளை ஏமாற்றப் பார்க்கும் இந்த பொய்யான அறிவிப்புகூட ஏற்கெனவே கடந்த ஆண்டு உலா வந்ததுதான். அதன் வேறுபட்ட வடிவம்தான் இப்போது மீண்டும் தலை தூக்கியிருக்கிறது, இதைப் பார்த்து யாரும் ஏமாற வேண்டாம் என்று இணைய நோக்கர்களும் கூறியுள்ளனர்.
அது மட்டுமல்ல, 2012-ல் இதேபோன்ற பொய்யான பதிவு வலம்வந்திருக்கிறது. அத்தோடு ஃபேஸ்புக் பயனாளிகள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால், கட்டணச் சேவை அறிமுகம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கும் பொய்யான அறிவிப்பும் உலா வந்திருக்கிறது.

ஆக, பயனாளிகள் ஃபேஸ்புக் சுவரில் எந்த அறிவிப்பையும் வெளியிட்டுத் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியதில்லை. இந்த அறிவிப்பைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம், காபி பேஸ்ட் செய்யுங்கள் எனும் வேண்டுகோளிலிருந்தே இதன் பொய்யான தன்மையை புத்திசாலி இணையவாசிகள் புரிந்துகொண்டிருக்கலாம். ஏனெனில் அப்போது அதைப் பார்க்கும் மற்றவர்களும் ஏமாந்துபோவார்கள் அல்லவா!

அச்சம் தவிர்க்க


எனவே, ஃபேஸ்புக் பயனாளிகள் இந்தப் பொய்யான பதிவுகள் குறித்துத் தூக்கத்தைத் தொலைக்க வேண்டியதில்லை. ஆனால், ஃபேஸ்புக் உள்ளிட்ட பிரபலமான சேவைகள் குறித்து இது போன்ற பொய்யான பதிவுகள் உருவாக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்வது அவசியம். இது தொடர்பான விழிப்புணர்வு அவசியம் என்பதோடு, இணையத்தில் சந்தேகப்படும்படியான தகவல்கள் உலா வரும்போது, ஸ்நோப்ஸ்.காம் (www.snopes.com/computer/facebook/privacy.asp) இணையதளத்தில் இதற்கான விளக்கத்தைத் தேடிப்பார்க்கலாம். இணையத்தின் ஆரம்ப காலம் முதல் இத்தகைய பொய்யான வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள் குறித்த ஆதாரபூர்வமான விளக்கத்தை இந்த தளம் அளித்துவருகிறது.

இந்த விழிப்புணர்வுடன் ஃபேஸ்புக் பயனாளிகள் தங்களின் தகவல்கள் பயன்படுத்தப்படும் விதம் குறித்துக் கொஞ்சம் அறிந்து வைத்திருப்பது நல்லது என தனியுரிமை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். ஃபேஸ்புக் தெரிவித்துள்ளபடி, பயனாளிகள் வெளியிடும் நிலைத்தகவல்கள் அவர்களுக்கே சொந்தமானவை. அவற்றுக்கு ஃபேஸ்புக் உட்பட யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால், அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பது தொடர்பாக அந்நிறுவனத்திற்குப் பரவலான உரிமை இருக்கிறது.

அந்தரங்கத்தின் மீதான ஊடுருவல்


ஃபேஸ்புக்கில் உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ளும்போது, பயனாளிகள் ஏற்றுக்கொள்ளும் அதன் விதிமுறைகள் மற்றும் ஒப்பந்தங்களின் ஷரத்துப்படி, தகவல்களை ஃபேஸ்புக் தனது விருப்பம்போலப் பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் அளிக்கின்றனர். ஏற்கெனவே ஒப்புக்கொண்ட இந்த விதிமுறையை எந்த ஒரு பயனாளியும் தனியே மறுபரிசீலனை செய்யக்கூட முடியாது. விதிமுறைகள் ஏற்புடையதாக இல்லை என்று நினைத்தால் ஃபேஸ்புக் கணக்கை டெலீட் செய்யலாம். ஆனால், அப்போதுகூடப் பழைய தகவல்களை நண்பர்கள் பகிர்ந்துகொண்டால் அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடியாது என்கின்றனர்.

இருந்தாலும், ஃபேஸ்புக்கில் தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படும் விதத்தைப் பயனாளிகள் ஓரளவு கட்டுப்படுத்தலாம். தங்கள் கணக்கில் பிரைவஸி செட்டிங் பகுதிக்குச் சென்று, தகவல்களை யார் பார்க்கலாம், யார் அணுகலாம் என்பது தொடர்பான கட்டுப்பாடுகளை உண்டாக்க முடியும். இது தொடர்பாக விளக்கம் தேவை என்றால் இணையப் பாதுகாப்பு வல்லுநரான கிராஹாப் குலுலே எழுதியுள்ள இந்த பதிவைப் பார்க்கலாம்: https://www.grahamcluley.com/2016/03/facebook-privacy-settings/

மறுபுறம், பயனாளிகளின் தகவல்கள் மற்றும் பகிர்வுகளை ஃபேஸ்புக் கண்காணித்து அவற்றை விளம்பர நோக்கில் பயன்படுத்துவதாகத் தனியுரிமை ஆர்வலர்கள் விமர்சித்துவருவதைக் கவனிக்க வேண்டியுள்ளது. விளம்பரங்கள் மட்டு மல்லாமல் நியூஸ்ஃபீட் பரிந்துரை உள்ளிட்டவை பயனாளிகளுடைய பதிவுகளின் உள்ளடக்கத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன என்றும், இவை அந்தரங்கத்தின் மீதான ஊடுருவல் என்றும் விமர்சனம் வலுப்பெற்றுவருகிறது. ஃபேஸ்புக் மட்டும் அல்ல, பொதுவாகவே இணையப் பயன்பாட்டைத் தனியுரிமை நோக்கில் புரிந்துகொள்வது காலத்தின் கட்டாயம்.

லேப்டாப் வெப்கேமராவை மூடியவர்


ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் சமீபத்தில் வெளியிட்ட ஒரு ஒளிப்படத்தில் தனது லேப்டாப்பின் வெப்கேமராவை டேப் போட்டு மூடியிருந்ததைச் சுட்டிக்காட்டும் செய்திகள் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தின. தாக்காளர்கள் (ஹாக்கர்ஸ்) மால்வேர் மூலம் வெப்கேமராவைக் கட்டுப்படுத்தி அதன் வழியாகக் காட்சிகளைப் படம்பிடித்து ஒளிபரப்புவதுபோன்ற ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள ஸக்கர்பெர்க் இப்படிச் செய்திருக்கிறார்.

இதேபோன்ற முன்னெச்சரிக்கை இணையப் பயனாளிகளுக்கும் தாங்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் மற்றும் அவை பயன்படுத்தப்படும் விதம் குறித்தும் தேவை என்கின்றனர் இணைய வல்லுநர்கள்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum