புழு வெட்டு
Mon May 16, 2016 8:22 pm
ஒரு சிலருக்கு தலைப் பகுதியில் கொத்துக் கொத்தாக முடி உதிர்ந்து மறுபடி அந்த இடங்களில் முடி வளர்ச்சி காணாமல் அரிப்பு ஏற்படும் அந்த இடங்களை சொரிந்து விட சொரிந்து விட முடி கொட்டுதல் மற்ற இடங்களுக்கும் பரவும் தலையர் வழுக்கையாகி விடும் நிலையம் ஏற்படும்
அத்தகைய நிலை மாறி முடி வளர
நீரடி முத்து விதை அரைத்த பொடி இருபது கிராம்
வெள்ளை வெங்காயச் சாறு .......... இருபது மில்லி
எலுமிச்சைச் சாறு ........... இருபது மில்லி
மூன்றையும் கலந்து பசையாக்கி புழு வெட்டு இருக்கும் இடங்களில் இரவில் பூசி மறுநாள் காலை வேப்பிலை போட்டுக் காய்ச்சிய நீரை இளம் சூட்டில் தலைக்குக் குளித்து வர புழு வெட்டுப் புண்கள் ஆறி முடி வளரும்
இது அற்புதமான வலிமையான மருந்து ஆகையால் முடி வளர்வதைக் கண் கூடாகப் பார்க்கலாம்
குறிப்பு
நீரடி முத்து விதைகள் நாட்டு மருந்துக் கடைகளில் தாராளமாகக் கிடைக்கிறது
இது ஒரு எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்
மற்றொரு முறை :-
ஆற்றுத்தும்மட்டி(கொம்மட்டிகாய்)
ஆப்பிரிக்கா, இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. தமிழகமெங்கும் மணற்பாங்கான இடங்களில் வளர்கிறது. மிகவும் வெட்டப்பட்ட இலைகளையுடைய தரையோடு வேர்விட்டுப் படரும் கொடி. பச்சை, வெள்ளை நீள வரிகளையுடைய காய்களையுடையது. காய்கள் சிறிய பந்து போல் இருக்கும். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை வண்ணத்திலும் இருக்கும். இதில் அமிலத் தன்மை அதிகம் இருக்கும். விதைகள் மூலம்இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதற்கு கொம்மட்டி, வரித்தும்மம் மற்றும் பேய்கும்மட்டி என்ற வேறுப் பெயர்களும் உண்டு.
#புழுவெட்டினால் முடி கொட்டும் இடங்களில் கொம்மட்டிகாயை நறுக்கித் தேய்த்து வரப் புழு வெட்டு நீங்கும். முடி வளரும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|