பிரதான தேவதூதர்கள்
Mon Feb 29, 2016 8:39 am
1. தேவதூதர்களை பற்றி வேதத்திலே மொத்தம் 273 குறிப்புகளை காணலாம். இவற்றில் பழைய ஏற்பாட்டில் 108 முறையும், புதிய ஏற்பாட்டில் 165 முறையும் வருகிறது. இதில் பஞ்சாகமத்தில் 32 முறையும், வெளிப்படுத்தின விசேஷத்தில் 65 முறையும் வருகிறது.
2. தேவதூதரை குறிக்க எபிரேய மொழியில் “மலாக்” என்ற வார்த்தையும் கிரேக்க மொழியில் “அங்கெலொஸ்” என்ற வார்த்தையும் அதிகமாக பயன்படுத்தியுள்ளனர்.
3. தேவதூதர்கள் தானாக உறுவானது கிடையாது. இவர்கள் நம்முடைய பூமியை தேவன் சீரமைக்கும் காலத்திற்கு முன்னதாகவே தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் – யோபு 38:4-6; சங் 148:5; கொலோ 1:16.
4. தேவதூதர்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவண்ணம் கோடிக்கணக்காக படைக்கப்பட்டுள்ளனர் – லூக் 2:13,14; சங் 68:17; வெளி 5:11; 2 இரா 6:17
5. தேவதூதர்களுக்கு நம்மை போல மாமிச சரீரம் கிடையாது. இவர்கள் விசேஷமாக சிருஷ்டிக்கப்பட்டவர்கள் – சங் 104:4; எபி 1:7,14
6. தேவதூதர்களை நம்முடைய மாமிச கண்களால் சாதாரணமாக பார்க்கமுடியாது. தேவன் வெளிப்படுத்த சித்தமானால் இவர்களை நாம் பார்க்கவும் இவர்களுடன் பேசவும் முடியும்
7. வேதத்திலே ஆதியாகமம் 3-ம் அதிகாரம் 24-ம் வசனத்தில் முதன் முதலாக தேவதூதர்களை பற்றிய குறுப்பு வருகிறது.
8. கேருபீன்கள், சேராபீன்கள், நான்கு ஜீவன்கள், பிரதான தூதர்கள், பணிவிடை ஆவிகள், ஆளக்கூடிய அதிகாரம் பெற்ற தூதர்கள், விழுந்து போன தூதர்கள் என்று பலவகை தேவதூதர்களை குறித்து வேதம் விளக்குகிறது – ஆதி 3:24; ஏசா 6:1-7; எசா 14:14; தானி 8:10; வெளி 5:8; கொலோ 1:16; ஏசா 14:12-15
9. ஒவ்வொரு வகை தேவதூதர்களும் வெவ்வேறு வகையான சரீர அமைப்பை கொண்டு வித்தியாச வித்தியாசமாக சிருஷ்டிக்கப்பட்டுள்ளனர் – ஆதி 3:24; ஏசா 6:1-7; எசா 14:14; தானி 8:10; வெளி 5:8; கொலோ 1:16
10. தேவதூதர்களுக்கு நம்மை போல அறிவாற்றலும், உணர்ச்சியும், முடிவெடுக்க கூடிய ஆற்றலும் உண்டு – மத் 28:5, யோபு 38:7; லூக் 2:13; ஏசா 14:12-15
11. பலத்த சவுரியவான்கள், பணிவிடைகாரர், ஊழியக்காரர், சேனை, இரதங்கள், காவலாளன், தேவபுத்திரர், பலவான்களின் புத்திரர், பரிசுத்தவான்கள், நட்சத்திரங்கள் என்று அநேக பெயர்களால் தேவதூதர்கள் அழைக்கபடுகிறார்கள் – சங் 103:20,21; சங் 104:4; ஆதி 32:1,2; சங் 68:17; தானி 4:13; யோபு 1:6; சங் 29:1, 89:6; தானி 8:13; யோபு 38:7
12. காபிரியேல் தூதனும் மீகாவேல் தூதனும் பிரதான தூதர்கள் ஆவர். இவர்களைபோலவே சாத்தானும் லூசிப்பர் என்ற பெயரில் பிரதான தூதனாக இருந்துவந்தான். இவன் தேவனுக்கு விரோதமாக கர்வம் கொண்டு எழும்பினபோது தேவன் இவனை பூமியின் மீது விழும்படி தள்ளிவிட்டார். இவனோடு இவனுடைய கூட்டமும் விழுந்தது. ஆகையால் தான் இவர்கள் தள்ளப்பட்ட தூதர்கள் என்றும் விழுந்துப்போன தூதர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்(ஏசா 14:12-15).
13. லூசிப்பர் என்ற பெயர் நம்முடைய தமிழ் வேதத்தில் இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. எபிரேய வேதத்தில் இவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் “ஹெலேல்”. ஆங்கல வேதமாகிய கேஜேவி மொழிபெயர்ப்பில் இவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர்தான் “லூசிப்பர்”. நீங்களே ஏசாயா 14:12ம் வசனத்தை கேஜேவி பைபிளில் படித்துப்பாருங்கள்.
14. விழுந்து போன தேவதூதர்களை, பேய்கள், பிசாசின் தூதர்கள், அசுத்த ஆவிகள், வஞ்சிக்கிற ஆவிகள், பொல்லாத ஆவிகள், பிசாசு, ஆதிமேன்மையை காத்துக் கொள்ளாத தூதர்கள், தேவர்கள் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள் – உபா 2:17, மத் 25:41, வெளி 12:9, மத் 10:1, 1 தீமோ 4:1, லூக் 11:26, மத் 4:24, 2 பேது 2:4, ஏசா 37:19
15. விழுந்து போன தேவதூதர்களில் ஒரு பங்கு சங்கிலியால் கட்டப்பட்டுள்ளன, மற்றவர்கள் அப்படியே விடப்பட்டுள்ளன – 2 பேது 2:4, சங் 78:49, எபே 6:12, வெளி 12:7-9 பிரதான தேவதூதர்கள்
2. தேவதூதரை குறிக்க எபிரேய மொழியில் “மலாக்” என்ற வார்த்தையும் கிரேக்க மொழியில் “அங்கெலொஸ்” என்ற வார்த்தையும் அதிகமாக பயன்படுத்தியுள்ளனர்.
3. தேவதூதர்கள் தானாக உறுவானது கிடையாது. இவர்கள் நம்முடைய பூமியை தேவன் சீரமைக்கும் காலத்திற்கு முன்னதாகவே தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் – யோபு 38:4-6; சங் 148:5; கொலோ 1:16.
4. தேவதூதர்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவண்ணம் கோடிக்கணக்காக படைக்கப்பட்டுள்ளனர் – லூக் 2:13,14; சங் 68:17; வெளி 5:11; 2 இரா 6:17
5. தேவதூதர்களுக்கு நம்மை போல மாமிச சரீரம் கிடையாது. இவர்கள் விசேஷமாக சிருஷ்டிக்கப்பட்டவர்கள் – சங் 104:4; எபி 1:7,14
6. தேவதூதர்களை நம்முடைய மாமிச கண்களால் சாதாரணமாக பார்க்கமுடியாது. தேவன் வெளிப்படுத்த சித்தமானால் இவர்களை நாம் பார்க்கவும் இவர்களுடன் பேசவும் முடியும்
7. வேதத்திலே ஆதியாகமம் 3-ம் அதிகாரம் 24-ம் வசனத்தில் முதன் முதலாக தேவதூதர்களை பற்றிய குறுப்பு வருகிறது.
8. கேருபீன்கள், சேராபீன்கள், நான்கு ஜீவன்கள், பிரதான தூதர்கள், பணிவிடை ஆவிகள், ஆளக்கூடிய அதிகாரம் பெற்ற தூதர்கள், விழுந்து போன தூதர்கள் என்று பலவகை தேவதூதர்களை குறித்து வேதம் விளக்குகிறது – ஆதி 3:24; ஏசா 6:1-7; எசா 14:14; தானி 8:10; வெளி 5:8; கொலோ 1:16; ஏசா 14:12-15
9. ஒவ்வொரு வகை தேவதூதர்களும் வெவ்வேறு வகையான சரீர அமைப்பை கொண்டு வித்தியாச வித்தியாசமாக சிருஷ்டிக்கப்பட்டுள்ளனர் – ஆதி 3:24; ஏசா 6:1-7; எசா 14:14; தானி 8:10; வெளி 5:8; கொலோ 1:16
10. தேவதூதர்களுக்கு நம்மை போல அறிவாற்றலும், உணர்ச்சியும், முடிவெடுக்க கூடிய ஆற்றலும் உண்டு – மத் 28:5, யோபு 38:7; லூக் 2:13; ஏசா 14:12-15
11. பலத்த சவுரியவான்கள், பணிவிடைகாரர், ஊழியக்காரர், சேனை, இரதங்கள், காவலாளன், தேவபுத்திரர், பலவான்களின் புத்திரர், பரிசுத்தவான்கள், நட்சத்திரங்கள் என்று அநேக பெயர்களால் தேவதூதர்கள் அழைக்கபடுகிறார்கள் – சங் 103:20,21; சங் 104:4; ஆதி 32:1,2; சங் 68:17; தானி 4:13; யோபு 1:6; சங் 29:1, 89:6; தானி 8:13; யோபு 38:7
12. காபிரியேல் தூதனும் மீகாவேல் தூதனும் பிரதான தூதர்கள் ஆவர். இவர்களைபோலவே சாத்தானும் லூசிப்பர் என்ற பெயரில் பிரதான தூதனாக இருந்துவந்தான். இவன் தேவனுக்கு விரோதமாக கர்வம் கொண்டு எழும்பினபோது தேவன் இவனை பூமியின் மீது விழும்படி தள்ளிவிட்டார். இவனோடு இவனுடைய கூட்டமும் விழுந்தது. ஆகையால் தான் இவர்கள் தள்ளப்பட்ட தூதர்கள் என்றும் விழுந்துப்போன தூதர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்(ஏசா 14:12-15).
13. லூசிப்பர் என்ற பெயர் நம்முடைய தமிழ் வேதத்தில் இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. எபிரேய வேதத்தில் இவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் “ஹெலேல்”. ஆங்கல வேதமாகிய கேஜேவி மொழிபெயர்ப்பில் இவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர்தான் “லூசிப்பர்”. நீங்களே ஏசாயா 14:12ம் வசனத்தை கேஜேவி பைபிளில் படித்துப்பாருங்கள்.
14. விழுந்து போன தேவதூதர்களை, பேய்கள், பிசாசின் தூதர்கள், அசுத்த ஆவிகள், வஞ்சிக்கிற ஆவிகள், பொல்லாத ஆவிகள், பிசாசு, ஆதிமேன்மையை காத்துக் கொள்ளாத தூதர்கள், தேவர்கள் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள் – உபா 2:17, மத் 25:41, வெளி 12:9, மத் 10:1, 1 தீமோ 4:1, லூக் 11:26, மத் 4:24, 2 பேது 2:4, ஏசா 37:19
15. விழுந்து போன தேவதூதர்களில் ஒரு பங்கு சங்கிலியால் கட்டப்பட்டுள்ளன, மற்றவர்கள் அப்படியே விடப்பட்டுள்ளன – 2 பேது 2:4, சங் 78:49, எபே 6:12, வெளி 12:7-9 பிரதான தேவதூதர்கள்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|