வேதவசனமும் இனி வரப்போகும் சூரிய புயலும்
Sat Feb 20, 2016 5:39 pm
உலகின் கடைசி நாட்களில் சூரியன் கருப்பாகி இருண்டுபோய் ஒளிகொடாதிருக்கும் என பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது.
இன்றைய நாட்களில் நடைபெறும் வான ஆராய்ச்சியும் அதையே தான் சொல்லிக்கொண்டிருக்கிறது. சூரியனில் உண்டாகி பெரிதாகிக்கொண்டிருக்கும் கரும் புள்ளிகள் பற்றி விஞ்ஞானிகள் கவலை கொண்டிருக்கிறார்கள்.
யோவேல் 2:31 "கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். "
ஏசாயா 13:10 "வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகளும் ஒளி கொடாதிருக்கும்; சூரியன் உதிக்கையில் இருண்டுபோம்; சந்திரன் ஒளி கொடாதிருக்கும்."
மத்தேயு 24:29 "அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும்,"
மாற்கு 13:24 "அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் அந்தகாரப்படும்."
வெளி 6:12 "அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம்போலாயிற்று."
வெளி 16:8 "நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனுஷரைக் தகிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது."
சூரியனில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைத் தாக்குதலால் பூமியின் தொலைத்தொடர்புகள் முற்றிலுமாக அஸ்தமிக்கும் ஆபத்து இருப்பதாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் அதாவது 2020 அல்லது 2022ம் ஆண்டுகளில் இந்தத் தாக்குதல் நடக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு பூமிக்கு இதே போன்ற ஆபத்து ஒன்று பூமியை அச்சுறுத்தியது. ஆனால், அப்போது அதிர்ஷ்டவசமாக பூமி அதிலிருந்து தப்பியது. ஆனால், இம்முறை இந்த ஆபத்திலிருந்து பூமி தப்புவது கடினம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்த மின்காந்த அலைத் தாக்குதல் நடக்க 12 சதவீதம் மட்டுமே வாய்ப்பிருப்பதாக கூறினாலும், தாக்குதல் நடந்தால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே தொடங்கி விட்டது அமெரிக்கா.
ஏற்கனவே கடந்த 1959ம் ஆண்டு இதே போன்ற தாக்குதல் சம்பவம் ஒன்றை பூமி சந்தித்தது. அப்போது தொலைத்தொடர்புகள், மின்சார வசதி ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டன. மின்சார நிலையங்கள், டிரான்ஸ்பார்மர்கள் ஆகியவை தீப்பற்றி எரிந்து நாசமாயின. அமெரிக்கா, மொரக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் இந்த தாக்குதலில் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. ஆனால், அப்போது இருந்ததைக் காட்டிலும் தற்போது தொழில்நுட்பம் மேலும் முன்னேறி விட்டது. இதனால் அப்போதை விட தற்போது பாதிப்பு மேலும் பல மடங்கு இருக்கும் என அஞ்சப்படுகிறது. அதிலும் குறிப்பாக மற்ற நாடுகளை அமெரிக்கா இந்த தாக்குதலால் பெரும் அழிவைச் சந்திக்கும் எனக் கூறப்படுகிறது. இதன் பாதிப்புகளை சரி செய்ய பல மாதங்கள் ஆகும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எனவே முன்கூட்டியே அந்த மின்காந்த அலைத் தாக்குதல் எப்போது நடைபெறும் என்பதைச் சரியாக கணிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அதோடு, அப்படிப்பட்ட நெருக்கடியான நிலையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் அது ஆலோசித்து வருகிறது. இதற்கென அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட துறைகளுடன் அமெரிக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். இத்தகைய மின்காந்த அலைத்தாக்குதல்கள் வழக்கமாக நார்வேக்கு மேலே வடக்கு திசையில் ஒளி வெள்ளமாக நடைபெறுவது வழக்கம் தான். இதனை அரோரா மோரியாலிஸிஸ் என்கிறார்கள். அதாவது வடதிசை வெளிச்சம் என இதற்கு பொருள்.
இந்த மின்காந்த அலைத் தாக்குதல் நடந்தால் உலகம் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கும். அதுவும் சில நாட்கள் அல்ல, பல மாதங்கள். செல்போன் முதற்கொண்டு நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் எதையும் பயன்படுத்த முடியாது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவைகளைக் கூட பயன்படுத்த முடியாது. டிரான்ஸ்பார்மர்கள் எரிந்து போகும். மின் நிலையங்கள் பஸ்பமாகி விடும். இந்த காந்த புயலால் உலகின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும் என்கிறார்கள். பரிசுத்த வேதாகமத்தின் தீர்க்கத்தரிசனங்கள் நிறைவேறிக்கொண்டிருக்கிறது. அதை மறுத்துக் கூற ஒருவரும்மில்லை.
இன்றைய நாட்களில் நடைபெறும் வான ஆராய்ச்சியும் அதையே தான் சொல்லிக்கொண்டிருக்கிறது. சூரியனில் உண்டாகி பெரிதாகிக்கொண்டிருக்கும் கரும் புள்ளிகள் பற்றி விஞ்ஞானிகள் கவலை கொண்டிருக்கிறார்கள்.
யோவேல் 2:31 "கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். "
ஏசாயா 13:10 "வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகளும் ஒளி கொடாதிருக்கும்; சூரியன் உதிக்கையில் இருண்டுபோம்; சந்திரன் ஒளி கொடாதிருக்கும்."
மத்தேயு 24:29 "அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும்,"
மாற்கு 13:24 "அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் அந்தகாரப்படும்."
வெளி 6:12 "அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம்போலாயிற்று."
வெளி 16:8 "நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனுஷரைக் தகிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது."
சூரியனில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைத் தாக்குதலால் பூமியின் தொலைத்தொடர்புகள் முற்றிலுமாக அஸ்தமிக்கும் ஆபத்து இருப்பதாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் அதாவது 2020 அல்லது 2022ம் ஆண்டுகளில் இந்தத் தாக்குதல் நடக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு பூமிக்கு இதே போன்ற ஆபத்து ஒன்று பூமியை அச்சுறுத்தியது. ஆனால், அப்போது அதிர்ஷ்டவசமாக பூமி அதிலிருந்து தப்பியது. ஆனால், இம்முறை இந்த ஆபத்திலிருந்து பூமி தப்புவது கடினம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்த மின்காந்த அலைத் தாக்குதல் நடக்க 12 சதவீதம் மட்டுமே வாய்ப்பிருப்பதாக கூறினாலும், தாக்குதல் நடந்தால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே தொடங்கி விட்டது அமெரிக்கா.
ஏற்கனவே கடந்த 1959ம் ஆண்டு இதே போன்ற தாக்குதல் சம்பவம் ஒன்றை பூமி சந்தித்தது. அப்போது தொலைத்தொடர்புகள், மின்சார வசதி ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டன. மின்சார நிலையங்கள், டிரான்ஸ்பார்மர்கள் ஆகியவை தீப்பற்றி எரிந்து நாசமாயின. அமெரிக்கா, மொரக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் இந்த தாக்குதலில் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. ஆனால், அப்போது இருந்ததைக் காட்டிலும் தற்போது தொழில்நுட்பம் மேலும் முன்னேறி விட்டது. இதனால் அப்போதை விட தற்போது பாதிப்பு மேலும் பல மடங்கு இருக்கும் என அஞ்சப்படுகிறது. அதிலும் குறிப்பாக மற்ற நாடுகளை அமெரிக்கா இந்த தாக்குதலால் பெரும் அழிவைச் சந்திக்கும் எனக் கூறப்படுகிறது. இதன் பாதிப்புகளை சரி செய்ய பல மாதங்கள் ஆகும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எனவே முன்கூட்டியே அந்த மின்காந்த அலைத் தாக்குதல் எப்போது நடைபெறும் என்பதைச் சரியாக கணிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அதோடு, அப்படிப்பட்ட நெருக்கடியான நிலையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் அது ஆலோசித்து வருகிறது. இதற்கென அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட துறைகளுடன் அமெரிக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். இத்தகைய மின்காந்த அலைத்தாக்குதல்கள் வழக்கமாக நார்வேக்கு மேலே வடக்கு திசையில் ஒளி வெள்ளமாக நடைபெறுவது வழக்கம் தான். இதனை அரோரா மோரியாலிஸிஸ் என்கிறார்கள். அதாவது வடதிசை வெளிச்சம் என இதற்கு பொருள்.
இந்த மின்காந்த அலைத் தாக்குதல் நடந்தால் உலகம் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கும். அதுவும் சில நாட்கள் அல்ல, பல மாதங்கள். செல்போன் முதற்கொண்டு நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் எதையும் பயன்படுத்த முடியாது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவைகளைக் கூட பயன்படுத்த முடியாது. டிரான்ஸ்பார்மர்கள் எரிந்து போகும். மின் நிலையங்கள் பஸ்பமாகி விடும். இந்த காந்த புயலால் உலகின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும் என்கிறார்கள். பரிசுத்த வேதாகமத்தின் தீர்க்கத்தரிசனங்கள் நிறைவேறிக்கொண்டிருக்கிறது. அதை மறுத்துக் கூற ஒருவரும்மில்லை.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|