தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
விலைக்கிரயம் ... Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

விலைக்கிரயம் ... Empty விலைக்கிரயம் ...

Fri Feb 12, 2016 9:44 am
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.

விலைக்கிரயம் என்ற உடனே எனக்கு ஞாபகம் வந்தது அந்த கவிதை தான்!

தேய தேய வாசம் வீசம் சந்தனத்தைப் போல்…

உருகி உருகி வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தியைப்; போல்...

ஓரு பொருளை வாங்க வேண்டுமானால் அதற்குரிய கிரயம் செலத்திதான் அதை வாங்க வேண்டும் என்று நாம் அறிவோம். அந்தகாரத்திலிருந்தும், சாத்தான் பிடியிலும் இருந்தும் நம்மை மீட்கும்படியாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கிரயம் செலுத்தினார். அது என்ன கிரயம் என்று நீங்கள் ஒருவேளை கேட்கலாம்? கீழே உள்ள வேத வசனங்களை படிப்போம்.  

மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங் களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. லேவி 17:11

அல்லாமலும், காளை வௌ;ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே எபி 10: 4
இயேசுகிறிஸ்துவினுடைய சரிரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கி றோம். எபி 10: 10
குற்றமில்லாத அவருடைய இரத்தத்தை சிந்தி நம்மை மீட்டுக் கொண்டார்.

அருமையானவர்களே அதுபோலதான் மற்ற ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்குள் நடத்த நாம் விலைக்கிரயம் செலுத்துவது அவசியமே!
அருமையானவர்களே அன்பினால் கிரியை செய்கிற விசுவா சமே உதவும். கலா 5:6ன்படி
இரட்சிக்கப்பட்ட நம் அனைவருக்குமே குடும்பம் இரட்சிக் கப்பட வேண்டும். நாம் வசிக்கும் கிராமம், பட்டணம் இரட்சிக்கப்பட வேண்டும்;;. தேசம் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற பாரம் காணப்படும். ஆம். நம் ஆண்டவருடைய வாஞ்சையும் அது தானே.

தேசம் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக நாம் ஜெபிப்பது அவசியம். அதே சமயத்தில் நமது வீட்டாரின் இரட்சிப்பைக் குறித்ததான கரிசனை இல்லாதபடிக்கு, தேசத்திற்காய் திறப்பின் வாசலில் இருந்து பாரத்தோடு ஜெபித்துக் கொண்டிருப்போமானால், இது தேவன் கொடுத்த உண்மையான பாரமாயிருக்காது. காரணம், தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிருக்கிறவன் தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூருவான்?. அது போலத்தான்.

தான் காண்கின்ற, பழகுகின்ற சொந்த இன, ஜனமக்களின் ஆத்துமாவைக் குறித்ததான கரிசனை இல்லாதவன் எப்படி தேசத்தைக் குறித்தும், தேசத்தின் ஜனங்களைக் குறித்ததான உண்மையான பாரம் காணப்படும்.

ஆம். நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, ஒவ்வொருவடைய இரட்சிப்பின் மூலமாக அவர்கள் வீட்டாரனைவரது இரட்சிப்பையும் எதிர்பார்க்கிறார்.

நான் உங்கள் நாயகர் நான் உங்களை ஊரில் ஒருவனும், வம்சத்தில் இரண்டுபேருமாகத் தெரிந்து, உங்களைச் சீயோ னுக்கு அழைத்துக்கொண்டுவந்து, எரே-3:14

ஆம். நம்மை முதலாவதாக தெரிந்தெடுக்கிறார். பின்பு வீட்டிலும் ஊரிலும் நாட்டிலும் நம்மூலமாக இரட்சிப்பைக் கொண்டுவர கர்த்தர் நம்மேல் நம்பிக்கை வைத்து அதற்கு பாத்திரவானாக மாற்றுகிறார்.

பரிசுத்த வேதாகமத்தில் நம்முடைய ஆண்டவர் வீட்டாரின் இரட்சிப்பைக் குறித்து மிகவும் கரிசனையோடு காணப்பட்டார் என்பதை சில எடுத்துக்காட்டுகளோடு பார்ப்போம்.

லீதியாளின் இரட்சிப்பு

அப் 16-ம் அதிகாரத்தில் 14,15-ல் தியத்தீரா ஊராளாகிய லீதியாளுக்கு பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படிக்கு கர்த்தர் அவள் இருதயத்தை திறந்தருளினார். அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றனர்.
 
சிறைச்சாலைக்காரனின் இரட்சிப்பு (அப் 16:30-33)

ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட சிறைச்சாலைக்காரனின் இரட்சிப்பும் நிறைவானது. ஆப்பொழுது அவன் வீட்டாரனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
 
அசுத்த ஆவியுள்ள மனிதனின் இரட்சிப்பு

மாற்கு 5:1-20 வரையுள்ள வசனங்களில் அசுத்த ஆவியுள்ள மனிதனுக்கு விடுதலை அளித்தவுடன் பிசாசு பிடித்திருந்தவன் அவர் படகில் ஏறுகிற போது அவரோடே கூட இருக்கும் படி தனக்கு உத்தரவு கொடுக்க அவரை வேண்டிக்கொண்டான். இயேசு அவனுக்கு உத்தரவு கொடாமல், நீ உன் இனத்தாரிடத்திற்கும் உன் வீட்டிற்கும் போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்கு செய்தவைகள் எல்லாம் அவர்களுக்கு அறிவி என்றார்.
 
கொர்நேலியுவின் இரட்சிப்பு

அப் 10-ம் அதிகாரத்தில் கொர்நேலியு என்ற நூற்றுக்கதிபதியைக் குறித்து கூறப்படும் போது அவன் தன் வீட்டபரனை வரோடும் தேவனுக்கு பயந்தவனுமாயிருந்தான். தேவன் பரிசுத்த வேயை அவன் வீட்டாரனைவருக்கும் பொழிந்தருளினார். அன்று தன் வீட்டாரனைவரோடும் கூட ஞானஸ் நானம் பெற்றான்.

அருமையானவர்களே, ஒருவேளை இதை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் பரிசுத்த ஆவியானவரே என் வீட்டார் இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? ஏன்று கேட்டால் தேவன் நமக்கு தரும் பதில் அப் 16:31 “அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்”

உங்கள் வீட்டாரை இரட்சிப்புக்குள் நடத்த ஏற்கனவே அவரை தங்கள் வாழ்வில் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற மாதிரியை உங்களுக்கு இதிலிருந்து கற்றுத்தர ஆசையாக இருக்கிறேன்.

தன்னுடைய வீட்டை இரட்சிப்புக்குள் நடத்த ஆசையா யிருக்கிறவர்களுக்கு நிச்சயமாக நம் வீட்டாரைக் குறித்ததான ஆத்தும பாரம் இருக்கும். ஐசுவரியவான் அன்று நரகத்திற்கு சென்ற பிறகுதான் அந்த பாரம் வந்தது. ஆனால் தேவனுடைய சபையில் பிரவேசித்த நாமோ இப்பொழுதே அந்த பாரத்தால் நிரம்ப வேண்டும்.

அவர்கள் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் அவர்களை மாற்றுவதும், தேவனுக்குள் வரவழைப்பதும் மனுஷனால் கூடவே கூடாது. ஆனால் தேவனால் எல்லாம் கூடும் என்ற விசுவாசப்பார்வை நமக்கு வேண்டும்.

ஜெபத்தோடு….

ஒரு ஊழியக்காரர், தன் குடிகார கணவனின் மனமாற்றத்துக்காக 15 வருடங்களாய் ஜெபித்துக் கொண்டிருந்த ஒரு சகோதரியை சந்திக்க நேர்ந்தது. தனது கணவனைக் குறித்தான பாரத்தை அவ்வூழியக்காரரோடு பகிர்ந்து கொண்டார்கள். அப்போது அந்த ஊழியக்காரர் சரி, இப்பொழுது நாம் இருவரும் சேர்ந்து, ஒரு மனதோடு உங்கள் கணவருக்காக ஜெபிக்கலாம் என்றாராம். உடனே அந்த சகோதரியும் முழங்காற்படியிட்டார்கள். முழங்காலிடும் போதே அந்த சகோதரி இந்த மனுஷன் திருந்தவே மாட்டார்….. சகோதரனே நான் பண்ணாத ஜெபமா? அவர் மாறவே மாட்டார் என்றார் களாம்.

உடனே அந்த ஊழியக்காரர் சொன்னாராம், உங்கள் கணவருடைய இரட்சிப்புக்கு தடையே நீங்கள் தான். விசுவாச மில்லாமல் ஜெபித்ததால் தான் உங்கள் கணவருடைய இரட்சிப்பை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றார்.

விசுவாசத்தோடு...

ஆம், அவர்கள் இருக்கும் நிலையை பார்த்து இது எப்படி சாத்தியமாகுமோ என்று விசுவாசம் இல்லாமல் பல மணிநேரம் ஜெபித்தாலும் பிரயோஜனமிராது. எனவே எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் அவரால் ஆகும். யாரையும் அவர் புறக்கணியாத தேவன். எப்படிப்பட்ட கல்லான நெஞ்சையும் மாற்றக்கூடிய வல்லமை அவருடைய வார்த்தைக்கு உண்டு என்பதனை மனதினில் நன்கு பதித்து, விசுவாசத்தோடு நாம் ஜெபிக்க வேண்டும்.

கிரியைகளோடு….

கிரியைகளில்லாத விசுவாசம் செத்தது என்று வேதம் கூறுகிறது. ஆம், நம் குடும்பத்தினரை இரட்சிப்புக்குள் கொண்டு வருவதற்கு விசுவாசமுள்ள ஜெபம் மாத்திரம் போதாது. ஏனென்றால் நம் கிரியைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? சரி, என்ன கிரியை, எப்படிப்பட்டது? கிரியைகள் அவர்கள் இரட்சிப்ப டைவதற்கு வழிவகுக்கும் என்பதனை இரண்டு உதாரணங்களை வைத்துப் பார்ப்போமா?

1. இயேசுகிறிஸ்து

ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டு வந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது. ஏபி 2:10-ல்
எனவே நம் எல்லாருடைய இரட்சிப்புக்காகவும் இயேசு சிலுவைப்பாதையை கடந்து செல்வது பிதாவின் சித்தமாக இருந்தது.
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.(பிலி 2:Cool.

அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை. அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.  1பேது2:22,23
அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப் போயிற்று; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும் என்பதே. (அப் 8:33).

பாவமே செய்யாத அவர் வீணான பழிச்சொற்கள், நிந்தையான பேச்சுக்கள், அவமானங்களையும் சுமக்க வேண்டியதாயிருந்தது. அவரோடு கூட இருந்து பழகின சொந்த இன ஜன மக்களால் தான் இவை யாவுமே. நம்முடைய இரட்சிப்புக்காக ஆண்டவர் செய்த கிரியைகள் தான் இவையாவுமே. நம் எல்லாருடைய இரட்சிப்புக்காக சிலுவையில் விலைக்கிரயமானார்.

இன்றைக்கு நம் குடும்பத்தினர் மத்தியிலும், சொந்த இன ஜன பந்தங்கள் இரட்சிக்கப்படுவதற்கு நம் கிரியைகள் இப்படிப்பட்ட பாதையைத் தான் கடக்க வேண்டி உள்ளது. நம்முடைய அந்தஸ்து, நியாயம் இவை யாவற்றையும் பார்த்துக் கொண்டு சுயநலத்தோடு காணப்படுவோமானால் இரட்சிப்பு வராது.

வீண் பழிச்சொற்களை சுமக்க நேரிடும். இது என்ன நியாயம் என்று கேட்டு வழக்காட முடியாது. நிந்தனைச் சொல், அவமானங்கள் சுமக்க நேரிடும். நம்மை தாழ்த்த வேண்டியது வரும்.

நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப்பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்கு கனமுண்டாகும்  (லூக்14:10)
ஆம், பிறருக்கு இரட்சிப்பைக் கொண்டு வரும் பாத்திரங்களாய் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

அருமையானவர்களே நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரை யொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள். (எபே 4:1-3).

சுயநலத்தை பெரிதுபடுத்தி, உலகப்பிரகாரமாய் நமக்கு கிடைக்க வேண்டிய நன்மையையும், பலனையும் பெரிதாய் எண்ணி வாழ்வோமானால், பரலோகத்திலிருந்து வரும் நன் மையையும், பலனையுமே இழக்க நேரிடும். மாத்திரமல்ல பிறருடைய இரட்சிப்புக்கும் நாம் தடையானவர்களாகி விடு வோம்.

2. பவுலும், சீலாவும்

அப் 16-ம் அதிகாரத்தில் சிறைச்சாலைக்காரன் இரட்சிப்பு எப்படி பெற்றுக் கொண்டான் என்று பார்ப்போமானால் பவுலும், சீலாவும் செய்த கிரியைகள் தான்.

பவுலும் சீலாவும் தேவனுடைய நாமத்தினிமித்தமாக அனுபவித்த பாடுகளின் நிமித்தமாக அநேக அடிகள் அடிக்கப் பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். சிறைச்சாலைக்காரன் அவர்களை உட்காவலறையிலே அழைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டி வைத்தான். அவர்கள் அதனைக் குறித்து சிறிதும் கவலை கொள்ளாமல் தேவனை பாடித் துதித்துக் கொண்டிருந்தனர்.

தேவனுடைய நாமத்தினிமித்தம் பாடுகளை அனுபவிக்கும் போது ஆண்டவர் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்கமாட்டார். ஆம்! பாடனுபவிக்கும் நம்முடனே கூட இருக்கிறார் என்பதனை தேவனுடைய கிரியைகள் மூலம் வெளிப்படுத்துவார். தேவப்பிரசன்னம் இறங்கின போது பூமி மிகவும் அதிர்ந்தது. எல்லாருடைய கட்டுகளும் கழன்று போயிற்று.

இவையெல்லாம் நடந்தவுடன் பவுலும், சீலாவும் கர்த்தர் நம்மை விடுவித்து விட்டார் என்று பெருமை கொள்ளாமல் அந்த நேரத்தில் கூட தேவனுடைய இரட்சிப்புக்கு ஏது வாகும் படி கிரியையை நடப்பித்தனர். ஆம். பூமி அதிர்ந் ததை குறித்துக் கூட சிறைச்சாலைக்காரனின் மனது மாறவில்லை. கட்டுகள் விலக்கப்பட்ட நிலை அறிந்தவுடன், ஓடிப் போனார்களென்று எண்ணி பட்டயத்தை உருவித் தன்னை கொலை செய்து கொள்ளப் போனான். பவுல் மிகுந்த சத்தமிட்டு, நீ உனக்கு கெடுதி ஒன்றும் செய்து கொள்ளாதே, நாங்கள் எல்லாரும் இங்கே தான் இருக்கிறோம் என்றான்.

இந்தக் கிரியை தான் சிறைச்சாலைக்காரனின் உள்ளத்தைத் தொட்டது. ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு தேவனுடைய இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டான். அன்று பவுலும், சீலாவும் அவனுக்கும் அவன் வீட்டாருக்கும் தேவ வசனத்தைப் போதித்து, ஞானஸ்நானத்திற்கு நேராக வழி நடத்தினார். சுயநலத்தை பெரிதாக எண்ணி பவுலும் சீலா வும் அன்று ஓடியிருப்பார்களானால் அன்று சிறைச்சாலைக் காரனுக்கு இரட்சிப்பு வந்திருக்காது.

விலைக்கிரயத்தோடு…..

பவுலும் சீலாவும் சுயநலத்தை நோக்காதபடிக்கு அதாவது தான் சிறையிலிருந்து விடுதலை அடைவதை பெரிதாக எண்ணாமல் சிறைச்சாலைக்காரன் இரட்சிக்கப்படுவதை நோக்கமாக கொண்டிருந்த பவுலும் சீலாவும் அதற்கு செலுத்தின விலைக்கிரயத்தின் பலன் சிறைச்சாலைக்காரன் இரட்சிக்கப்பட்டது மாத்திரமல்ல முடிவில் அவர்களை விடுதலையாக்கும் படிக்கு அதிகாரிகள் மூலம் கட்டளை அனுப்பப்பட்டது. சிறையிலிருந்து தானாகவே விடுவிக்கப் பட்டார்கள். இதுவும் கர்த்தருடைய செயலே.

இயேசுகிறிஸ்துவும் நமக்காய் சிலுவையில் விலைக்கிரய மானதால்தான் இன்று நீங்களும், நானும் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி வாழ்கின்ற ஜனங்களுக்காய் வீட்டாருக்காய் இன்று நாம் விலைக்கிரயம் செலுத்த ஆயத்தமாயிருக்கின்றோமா?
யோவான் 12:24-ல் மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.

எனக்கு அருமையானவர்களே! விலைக்கிரயம் என்றாலே அதை செலுத்துபவர்க்கு எந்த வகையிலும் இலாபம் இல்லாத ஒன்று. அதைப் பெற்றுக் கொள்ளப்படும் நபர் பெருத்த லாபத்தை அடைவர். கர்த்தருடைய நாமத்தினி மித்தமும், அவருடைய வார்த்தையின் நிமித்தமும் செலுத்தப்படும் விலைக்கிரயத்தை உலகம் மதிக்காமல் அதின் மதிப்பை உணராமல் விட்டு விடலாம். ஆனால் நம் தேவன் ஒரு போதும் அவர் நிமித்தம் நாம் செலுத்தும் விலைக்கிரயத்தை அசட்டை செய்யவே மாட்டார்.

பிறருடைய இரட்சிப்பிற்காக நாம் செலுத்துகின்ற விலைக் கிரயத்தின் நிமித்தம் கிருபை நம்மீது பெருகிக் கொண்டேயிருக்கும். தேவனுடைய கிரியைகளும் இயற்கைக்கு மேற்பட்ட விதங்களில் மனிதனுடைய மூளைக்கு அப்பாற் பட்ட விதங்களில் வெளிப்படுவதோடு முடிவில் கனத்தையும் மகிமையையும் கொண்டு வந்து சேர்க்கும். தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum