பெற்றவர்கள் மனசை நோகடிக்கும் எவனும்
Tue Aug 11, 2015 12:39 am
தகப்பனை வெறுக்கும் மகன் ஒருவன் இருந்தான். தன்னுடைய வயதான தந்தையைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு வெறுப்பாக இருக்கும். பல முறை அவரை அடித்து நொறுக்குவதும் உண்டு. தகப்பனுக்கோ வேறு ஆதரவு ஏதுமில்லை. திட்டினாலும், அடித்தாலும் சத்தம் போடாமல் வாங்கிக் கொள்ளுவார்.
தகப்பன் என்றைக்கு செத்துப் போவார், என்றைக்கு இந்த ஆளின் தொல்லை ஒழியும் என்று மகன் பல நாட்கள் பொறுத்துப் பார்த்தான்.ஆனால் அவர் சாவதாகஇல்லை.
ஒரு நாள் பொறுமை இழந்த அவன் அவரை முன்பை விட அதிகமாக அடித்து, உதைத்து , அவரது தலைமுடியைப் பிடித்து தரதரவென்று வாசலுக்கு இழுத்துச் சென்றான். வாசல் படி வரை அவர் வழக்கம் போலவே எந்த சத்தமும் போடாமல் அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டார்.
மகன் அவரை வாசல் படியையும் தாண்டி இழுக்க முற்பட்ட போது முதல் முறையாகக் கதறி அழுது, " ஐயய்யோ! வேண்டாம் மகனே, இதற்கு மேல் என்னை வெளியே இழுத்துச் செல்லாதே" என்று கெஞ்சினார்.
மகனுக்கு இப்போது கோபம் மறைந்து வியப்பு மேலிட்டது. "என்னய்யா, இது. இதைவிட மோசமா ரத்தம் வர்ர மாதிரியெல்லாம் அடிச்சிருக்கேன், அப்பல்லாம்வாய்திறக்கவேயில்லை. இப்ப எதுக்கு இழுக்க வேண்டாம்னு கதர்ற?" என்றான்.
தகப்பன் சொன்னார். " இல்லப்பா மகனே , நான் என்னோட அப்பாவை இந்த வாசல் படி வரைக்கும் தாம்ப்பா அடிச்சி இழத்துட்டு வந்தேன். ஆனா நீ வாசப்படியையும் தாண்டி இழுக்குறியே" என்று அழுதார்.
செல்லமே! பெற்றவர்கள் மனசை நோகடிக்கும் எவனும் அதுக்கான தண்டனையை அனுபவிச்சுதான் ஆகணும்.
தன் தகப்பனையும் தன் தாயையும் துர்ஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக, ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
உபாகமம் 27 :16
தகப்பன் என்றைக்கு செத்துப் போவார், என்றைக்கு இந்த ஆளின் தொல்லை ஒழியும் என்று மகன் பல நாட்கள் பொறுத்துப் பார்த்தான்.ஆனால் அவர் சாவதாகஇல்லை.
ஒரு நாள் பொறுமை இழந்த அவன் அவரை முன்பை விட அதிகமாக அடித்து, உதைத்து , அவரது தலைமுடியைப் பிடித்து தரதரவென்று வாசலுக்கு இழுத்துச் சென்றான். வாசல் படி வரை அவர் வழக்கம் போலவே எந்த சத்தமும் போடாமல் அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டார்.
மகன் அவரை வாசல் படியையும் தாண்டி இழுக்க முற்பட்ட போது முதல் முறையாகக் கதறி அழுது, " ஐயய்யோ! வேண்டாம் மகனே, இதற்கு மேல் என்னை வெளியே இழுத்துச் செல்லாதே" என்று கெஞ்சினார்.
மகனுக்கு இப்போது கோபம் மறைந்து வியப்பு மேலிட்டது. "என்னய்யா, இது. இதைவிட மோசமா ரத்தம் வர்ர மாதிரியெல்லாம் அடிச்சிருக்கேன், அப்பல்லாம்வாய்திறக்கவேயில்லை. இப்ப எதுக்கு இழுக்க வேண்டாம்னு கதர்ற?" என்றான்.
தகப்பன் சொன்னார். " இல்லப்பா மகனே , நான் என்னோட அப்பாவை இந்த வாசல் படி வரைக்கும் தாம்ப்பா அடிச்சி இழத்துட்டு வந்தேன். ஆனா நீ வாசப்படியையும் தாண்டி இழுக்குறியே" என்று அழுதார்.
செல்லமே! பெற்றவர்கள் மனசை நோகடிக்கும் எவனும் அதுக்கான தண்டனையை அனுபவிச்சுதான் ஆகணும்.
தன் தகப்பனையும் தன் தாயையும் துர்ஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக, ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
உபாகமம் 27 :16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|